சனி

வெள்ளாடு வளர்ப்பு

 வெள்ளாடு வளர்ப்பு

வெள்ளாடு வாங்குவது எப்படி
உள்ளூர் இனங்களையே வாங்கவேண்டும். காலம்காலமாக அந்த
பகுதியில் வளர்ந்து, சூழ்நிலைக்கு ஏற்ப வாழப்பழகி இருக்கும் உள்ளூர் ரகங்களை வாங்கி வளர்ப்பதே சிறந்தது.
பலமுறை குட்டிபோட்டவயதான ஆடுகளை வாங்கவேண்டாம். மாடுகளைப் போல ஆடுகளையும் பல்பார்த்து வாங்க வேண்டும். அதாவது கீழ்தாடை முன்பற்கள் விழுந்து முளைப்பதாகும். ஓராண்டு வரை 8 பால்பற்கள் இருக்கும். பின் இரண்டாண்டு பற்களாக விழுந்துமுளைக்கும். ஓராண்டு முடிந்தபின் இரு பற்கள் விழுந்து முளைக்கும். தோராயமாக எளிதாக நினைவில் வைத்துக்கொள்ள கீழ்க்கண்டபடி பல் பார்த்து வயது கணக்கிட்டு வாங்க வேண்டும். ஆடுகளுக்கு 2 பல் இருந்தால் 1 வயது. 4 பல் இருப்பின் 2 வயது. 6 பல் என்றால் 3 வயது. 8 பல் என்றால் 4 வயது என்று கொள்ளலாம். எனவே இளம் ஆடுகளையே வாங்க வேண்டும்.
ஓரிரு ஆடுகளை வாங்குபவர்கள் 3, 4 குட்டி போடும் ஆடுகளை அறிந்து வாங்க வேண்டும். முதுகு பிடித்து பார்த்து ஆட்டின் முதுகெலும்பின் தசை செழிப்பாக வளர்ச்சியடைந்திருக்கிறதா என்று பார்த்து வாங்க வேண்டும். பாலுக்கென்று ஆடு வாங்குவதானால் கால் சற்று குட்டையாகவும், மடி திரட்சியாகவும் இருக்க வேண்டும். நோயற்ற ஆடுகளைப் பார்த்து வாங்க வேண்டும். பட்டிகளில், பண்ணைகளிலிருந்து வாங்குவது சிறந்தது
சிறந்த இந்திய இனங்கள்
1.கன்னி ஆடுகள்  2.ஜம்நாபாரி  3.பீட்டல் 4.பார்பரி 5. தலைச்சேரி 6.மலபாரி 7.சுர்தி 8.காஷ்மீரி 9.வங்காள ஆடு 10.கலப்பின ஆடுகள்

1.கன்னி ஆடுகள்
காணப்படும் இடங்கள்: விருதுநகர் (சாத்தூர், வெம்பக் கோட்டை, ராஜ பாளையம்), தூத்துக்குடி (புதூர், கயத்தார், கோவில்பட்டி), திருநெல்வேலி (குருவிகுளம், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், மேலநீலிதநல்லூர்) முதலிய பகுதிகளில் அதிக அளவில் காணப்படுகிறது. தற்சமயம் பிற மாவட்டங்களிலும் இந்த கன்னி ஆடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. அதிகமான அளவில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் மற்றும் குருவிகுளத்திலும் விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர், வெம்பக்கோட்டையிலும் காணப்படுகிறது.
சந்தை நிலவரம்: கன்னி ஆடுகளை கோவில்பட்டி அருகில் உள்ள திருவேங்கடம் என்ற கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெறும் சந்தையில் வாங்கலாம்.

 கன்னி ஆட்டின் சிறப்பியல்புகள்

இவை கருமை நிறத்துடனும் முகத்திலும் காதுகளிலும் வெள்ளை அல்லது பழுப்புநிற கோடுகளுடனும், மேலும் அதன் அடிவயிறு, தொடைப்பகுதி, வால்பகுதி மற்றும் கால்களில் வெள்ளை அல்லது பழுப்பு நிறமுடன் காணப்படும். கருப்பு நிறத்தில் வெள்ளைநிற கோடுகள் காணப்பட்டால் அவை "பால்கன்னி' என்றும் பழுப்பு நிற கோடுகள் காணப்பட்டால் "செங்கன்னி' என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் இவற்றின் காது மற்றும் நெற்றியில் கோடுகள் காணப்படுவதால் இதனை வரி ஆடுகள் என்று அழைக்கிறார்கள். மற்ற நம்நாட்டு வெள்ளாடுளைவிட அதிகமான அளவில் 2 அல்லது மூன்று குட்டிகளை ஈனும் திறன் பெற்றவை. குட்டிகளை நன்றாக பேணி பாதுகாக்கும் பண்புடையவை. உயரமாகவும், திடகாத்திரமாகவும், ஒரே நிறமுடன் இருப்பதும் கூட்டமாக நடக்கும்பொழுது ஒரு "ராணுவ அணிவகுப்பு' போல கண்ணை கவரும் இந்த கன்னி ஆடுகள். இது இறைச்சிக்காக வளர்க்கப்படும் ஆடு ஆகும். கிடா மற்றும் பெட்டை ஆடுகளுக்கு கொம்புகள் உண்டு. பிறந்த கிடா குட்டிகள் 2.1 கிலோவும், பெட்டை குட்டிகள் 2.05 கிலோ உடல் எடையுடன் இருக்கும். ஒரு வருட வயதில் கிடாக்கள் 21.70 கிலோவும், பெட்டை ஆடுகள் 20.90 கிலோ எடையுடன் இருக்கும். மேலும் ஒரு வருட வயதில் கிடாக்கள் 76 செ.மீ. உயரமும், பெட்டை ஆடுகள் 72 செ.மீ. உயரத்துடனும் காணப்படும். கன்னி ஆடுகள் அதிக அளவில் 2 (46.36%), 3(3.43%) மற்றும் 4(0.37%) குட்டிகளை ஈனும் திறன் பெற்றவை. கன்னி ஆட்டிலிருந்து 48 சதவீத இறைச்சியை பெறலாம்.

கொட்டகை

ஆட்டுக் கொட்டகையை மேட்டுப்பாங்கான இடத்திலும் காற்றோட்டமுள்ள இடத்திலும் அமைக்க வேண்டும். கொட்டகையின் தரைப்பகுதி ஈரத்தினை உறிஞ்சக் கூடியதாகவும், எளிதில் உலரும் தன்மையுடையதாகவும், பள்ளமோ அல்லது குழியோ இல்லாமல் மணல் கொண்டு நிரப்பி சமமாக வைக்க வேண்டும். மேலும் ஆடுகளுக்கு தேவையான அளவில் அதாவது குட்டி ஆடுகளுக்கு (4 முதல் 5 சதுரடி), பெட்டை ஆடுகளுக்கு (10 முதல் 15 சதுரடி), வளர்ந்த கிடாக்களுக்கு (15 முதல் 20 சதுரடி) இடவசதி அளிக்க வேண்டும்.

இனப்பெருக்கம்

ஆடுகள் 21 நாட்களுக்கு ஒரு முறை சினைக்கு வரும். சினைக்கு வரும் ஆடுகள் வாலை ஆட்டிக்கொண்டும், கத்திக்கொண்டும், பிறப்புறுப்பு வீங்கியும் காணப்படும். அந்த சமயத்தில் பெட்டை ஆடுகளுடன் கிடாக்களை சேர்க்கலாம். 20 பெட்டை ஆடுகளுக்கு ஒரு கிடாவை கண்டிப்பாக பண்ணையில் வைக்க வேண்டும். பெட்டை ஆடுகளின் சினைக்காலம் 150 நாட்களாகும். வெள்ளாடுகள் 8 மாதத்திற்கு ஒரு முறை குட்டிகளை ஈனும். அதாவது 2 வருடத்தில் 3 குட்டிகளை ஈனும்.
நல்ல உயரமானவை
காதுகள் மிக நீளமனவை
ரொமானிய மூக்கமைப்பு கொண்டவை.
கிடா 65-85  கிலோ பெட்டை - 45-60 கிலோ.
பெரும்பாலான ஆடுகள் ஒரு குட்டியே மட்டும் ஈனும்
6 மாத குட்டிகளின் எடை 15 கிலோ.
தினம் 2- 2.5 லிட்டர் பால் கொடுக்கும் திறன்


தலைச்சேரி / மலபாரி

வெள்ளை , பழுப்பு மற்றும் கருப்பு நிறங்கள்
2-3 குட்டிகளை போடும் திறன்
கிடா - 40-50 கிலோ பெட்டை - 30 கிலோ.


 

இறைச்சிக்காக உலகம் முழுவதும் வளர்க்கப்படுகிறது.
வேகமான வளர்ச்சி திறன் கொண்டவை.
கிடா - 110-135 கிலோ பெட்டை - 90-100 கிலோ.  
குட்டிகள் 90 நாட்களில் 20-30 கிலோ இருக்கும்


 

வெள்ளாடுகளை தேர்வு செய்தல்

பெட்டை ஆடுகள்
2-3 குட்டிகள் ஈனும் திறன்
6-9 மாதங்களில் பருவமடையும் தன்மை
கிடாக்கள்
தோற்றத்தில் உயரமாகவும், நெஞ்சு பாகம் அகன்றதாகவும், உடல் பாகம் நீண்டதாகவும் இருக்கவேண்டும்
9-12 மாதங்களில் பருவமடையும் தன்மை
நல்ல எடையுள்ள குட்டிகளை 6 மாத வயதில் தேர்வு செய்யவேண்டும்
2-3 குட்டிகளை ஈனும் பெட்டையாட்டிலிருந்து
வெள்ளாடு மேய்ச்சல் மற்றும் அடர்தீவனம் கொண்டு பராமரித்தால் அதிக பட்சம் வளர்ச்சி கிடைக்கும்.
கொளுக்கட்டை புல் , ஸ்டைலோ மற்றும் கோ ரகத் தீவன பயிர்களை அளிக்கலாம்.
தீவன மர இலைகளான அகத்தி, சூபாபுல், கிளைரிசிடியா போன்றவற்றை வயல் ஓரங்களில் வளர்த்து அளிக்கலாம்.
ஒரு ஏக்கரில் வளரும் தீவன மரம் மற்றும் தீவனப் பயிர்களை கொண்டு 15-30 ஆடுகள் வரை வளர்க்கலாம்

அடர் தீவனம்


 

குட்டி தீவனம்
வளரும் ஆட்டு தீவனம்
பால் கொடுக்கும் ஆட்டு தீவனம்
சினை ஆட்டு தீவனம்
மக்காசோளம்
37
15
52
35
பருப்பு வகைகள்
15
37
---
---
புண்ணாக்கு
25
10
8
20
கோதுமை தவிடு
20
35
37
42
தாது உப்பு
2.5
2
2
2
உப்பு
0.5
1
1
1
மொத்தம்
100
100
100
100

குட்டிகளுக்கு தினம் 50-100 கிராம் வரை அடர் தீவனம் 10 வாரங்களுக்கு அளிக்க வேண்டும்
வளரும் ஆடுகளுக்கு தினம் 100-150 கிராம் வரை அடர் தீவனம் 3-10 மாதங்களுக்கு கொடுக்க வேண்டும்
சினை ஆடுகளுக்கு தினம் 200 கிராம் அடர்தீவனம் கொடுக்க வேண்டும்
தினம் ஒரு கிலோ பால் கொடுக்கும் ஆடுகளுக்கு 300 கிராம் வரை அடர்தீவனம் கொடுக்கலாம்.
அதிகம் தாமிர சத்து உள்ள வெள்ளாடுகளுக்கான தாது உப்பு கட்டிகள் கொட்டிலில் தொங்கவிட வேண்டும்

கலப்புத் தீவனத்தின் சிறப்பம்சங்கள்


எளிதில் செரிக்கக்கூடியது. சிறந்த தீவன மாற்றத்திறன். அதிகமான தினசரி வளர்ச்சி விகிதம். ஆடுகளின் உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது. அனைத்து ஊட்டச்சத்துக்களும், தாது உப்புக்களும் நிறைந்துள்ளதால் எளிதில் கருத்தரிக்க உதவுகிறது. மிருதுவான மற்றும் பளபளப்பான தோல் உற்பத்தி. கலப்புத்தீவனம் நாளொன்றுக்கு ஒரு ஆட்டிற்கு 200 கிராம் முதல் 400 கிராம் வரை அளிக்க வேண்டும். இது தவிர உலர்தீவனம் ஒரு கிலோ வரையிலும், பசுந்தீவனம் 5 கிலோ வரையிலும் தவறாமல் தினசரி ஆடுகளுக்கு கிடைக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்

இனபெருக்கப் பாரமரிப்பு


இலாபகரமாக இருக்க ஆடுகள் 2 வருடத்தில் 3 முறை குட்டிகள் ஈன வேண்டும்
வேகமாக வளரும் தன்மை மற்றும் அதிக எடை கொண்ட ஆடுகளை இனபெருக்கத்திற்கு பயன்படுத்தவேண்டும்
பெட்டை ஆடுகளை 1 வருட வயதில் இனபெருக்கத்திற்கு பயன்படுத்தவேண்டும்
குட்டி போட்ட 3 மாதத்திற்கு பிறகு இனச்சேர்க்கை செய்யவேண்டும். அப்போது தான் 2 வருடத்தில் 3 முறை குட்டிகள் ஈனும்
சினை பருவ காலம் 18-21 நாட்கள் இடைவெளியில் வரும். அது 24-72 மணி காலம் நீடிக்கும்.
சினை பருவ காலத்தில் பெட்டை ஆடுகள் வலி இருக்க மாதிரி ஓங்கி கத்தும். மேலும் வாலை ஆட்டி கொண்டிருக்கும். இனப்பெருக்க உறுப்புகள் சிறிது வீங்கியும் சிவந்தும் காணப்படும். இனப்பெருக்க உறுப்பிலிருந்து திரவம் ஒழுகவதால் வாலை சுற்றி ஈரமாகவும் அழுக்காகவும் காணப்படும்.சில ஆடுகள் தீனி திங்காமலும் சிறுநீர் அடிக்கடி கழித்து கொண்டு இருக்கும். சில சமயங்களில் மற்ற ஆடுகள் மீது ஏறும் அல்லது ஏற அனுமதிக்கும்
சினை பருவ அறிகுறிகள் தென்பட்ட 12-18 மணி நேரத்தில் கிடாவுடன் சேர்க்கவேண்டும்.
சில ஆடுகளில் சினைபருவ காலம் 2-3 நாட்கள் இருக்கும் எனவே அவற்றை இரண்டாவது தடவையாக 1 நாட்கள் கழித்து மீண்டும் கிடாவுடன் சேர்க்கவேண்டும்
சினை காலம் 145-150 நாட்கள்

குடற் புழு நீக்கம்


ஒல்லியான மற்றும் பொலிவற்ற தோற்ற கொண்ட ஆடுகளில் குடற் புழு தாக்கம் இருக்கும். எனவே அந்த ஆடுகளை இனபெருக்கத்திற்கு முன் குடற் புழு நீக்கம் செய்யவேண்டும்.
சினை ஆடுகளை முதல் 2 மாத சினையில் குடற்புழு நீக்க செய்தால் கரு சிதைவு ஏற்பட வாய்ப்புண்டு.
சினை ஆடுகளை குட்டி போடுவதற்கு 2-3 வாரத்திற்கு முன் குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும்.
குட்டிகள் பிறந்த 30 நாட்களிலும் பிறகு 60 நாளிலும் குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும்

நோய்களும் தடுப்பு முறைகளும்

ஆடுகளை கொட்டகையில் அளவுக்கு மீறி அடைத்துவைப்பது, ஈரமிகுந்த சகதியான நிலத்தில் மேய்ப்பது, திடீரென மாறும் தட்பவெப்பநிலை, தீவனத்தில் ஏற்படும் திடீர் மாற்றம் இவைகளே ஆடுகளுக்கு வரும் நோய்களுக்கு முக்கிய காரணமாகும். சுத்தமான காற்றோட்டமான இடத்தில் வைத்து தேவையான தீவனங்களைத் தேவைக்கேற்ப அளிப்பதுடன் ஆடுகளுக்குப் போட வேண்டிய உரிய தடுப்பூசிகளை அதன் வயதுக்கேற்ப போடவேண்டிய காலத்தில் கால்நடை மருத்துவர் கொண்டு போட்டால் ஆடுகளை நோய்களிலிருந்து காப்பாற்றலாம். ஒட்டுண்ணிகளிலிருந்து ஆடுகளைக் காக்க ஒட்டுண்ணி நீக்க மருந்தை தண்ணீரில் கரைத்து ஆடுகளின் உடம்பை கால்நடை மருத்துவர் ஆலோசனைப்படி நனைக்க வேண்டும். மூன்று மாதத்திற்கு ஒரு முறை குடற்புழு நீக்க மருந்தை கால்நடை மருத்துவர் உதவிகொண்டு கொடுக்க வேண்டும். ஆடுகளுக்கு வரும் பிற நோய்களான வயிற்று போக்கு, சளி, அஜீரணக் கோளாறுகளுக்கு கால்நடை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மருத்துவம் செய்ய வேண்டும்

ஆடுகளுக்கான தடுப்பூசி அட்டவணை



ஒன்றரை மாதம் கோமாரி நோய்
3 மாதம் துள்ளுமாரி நோய்
நாலரை மாதம் கோமாரி நோய்
5 மாதம் அடைப்பான் நோய்
6 மாதம் தொண்டை அடைப்பான் நோய்
12 மாதம் கோமாரி நோய்            

கிடாக்களுக்கு வருடம் ஒரு முறை துள்ளுமாரி நோய் மற்றும் டெட்னஸ் தடுப்பூசிகளை போடவேண்டும்
இதையடுத்து கோமாரி நோய்க்கான தடுப்பூசியை ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒரு முறையும், மற்ற நோய்களுக்கான தடுப்பூசிகளை ஒவ்வொரு வருடமும் மீண்டும் போட்டுக்கொள்ள வேண்டும்.

கொட்டகை பாரமரிப்பு


1.ஆழ்கூள முறை
தரையில் 6 செ.மீ. உயரத்திற்கு கடலைப்பொட்டு, மரத்தூள் மற்றும் நெல் உமி ஆகியவற்றை இட்டு வளர்க்கலாம்.
இரண்டு வாரத்திற்கு ஒரு முறை புது கூளம் போடவேண்டும்.
இம்முறையில் உண்ணி மற்றும் பேன் தாக்கம் இல்லாமல் கவனித்துக் கொள்ளவேண்டும்
ஆடு ஒன்றுக்கு 15 சதுர அடி இடம் தேவைப்படும்



 
2.உயர் மட்ட தரை முறை

தரையிலிருந்து 3-4 அடி உயரத்தில் மர பலகை அல்லது கம்பி வலைகளை கொண்டு அமைக்கலாம்
ஒட்டுண்ணி தொல்லைகள் மிகவும் குறைவாக இருக்கும்
       

                 

வளர்ப்பு முறைகள்

1.மேய்ச்சலுடன் கூடிய கொட்டகை முறை.
மேய்ச்சல் நிலங்கள் குறைவாக உள்ள இடங்களில் மேய்ச்சலுக்கு பிறகு கொட்டகையில் வைத்து பசுந்தீவனங்களையும், அடர் தீவனைத்தையும் அளிக்கலாம்.
2.கொட்டகை முறை.
வெள்ளாடுகளை நாள் முழுவதும் கொட்டகைக்கு உள்ளேயே அடைத்து தீவனம் அளித்து வளர்க்கப்படுகிறது.
கொட்டகையை ஆழ்கூளம் அல்லது உயர் மட்ட தரை முறையினால் அமைக்கலாம்
தடுப்பூசி போடுதல்
ஒரு பகுதியிலுள்ள அனைத்து மாடுகள், ஆடுகள் மற்றும் பன்றிகளுக்கு கோமாரி நோய்க்கு ஒருங்கிணைந்த முறையில் தடுப்பூசி போட வேண்டும்
கன்றுகளுக்கு முதலாவது தடுப்பூசி நான்காவது மாத வயதிலும் பின்னர் இரண்டாவது தடுப்பூசி ஐந்தாவது மாத வயதிலும் பிறகு ஒவ்வொரு நான்கு முதல் ஆறு மாதத்திற்கொரு முறை பூஸ்டர் தடுப்பூசி தவறாமல் போட வேண்டும்

இந்நோய் நச்சுயிரியால் உண்டாகிறது. இந்நோய் உயிர்ச்சேதம் அதிகம் இல்லை என்றாலும் உற்பத்தித் திறன் மற்றும் உழைக்கும் சக்தியைக் குறைத்துவிடுவதால் பண்ணையில் அதிக பொருளாதார இழப்பினை ஏற்படுத்தும்.

நோய் தடுப்பு முறைகள்


நோய் பாதிப்புக்குள்ளாகும் கால்நடைகளை நோய் தாக்கியுள்ள பகுதிக்கு ஓட்ட செல்லக்கூடாது
நோய் தாக்கியுள்ள பகுதிகளிலிருந்து கால்நடைகளை வாங்கக்கூடாது
புதிதாக கால்நடைகளை வாங்கும் போது அவற்றினை 21 நாட்களுக்கு மற்ற கால்நடைகளிலிருந்து தனியே கட்டி பராமரிக்க வேண்டும்

ஆடு வளர்ப்பு நன்மைகள்


ஆடு வளர்ப்பு அனைத்துச் சூழலுக்கும் ஏற்றதாகும். அதிகப் பராமரிப்பு தேவையில்லை. சிறிய இடம் மற்றும் எளிய கொட்டகை போதுமானது.
குறைந்த முதலீடு மற்றும் உடனடி வருவாய்
வெள்ளாட்டிலிருந்து பால் மற்றும் கறி ஆகிய இரண்டிலிருந்தும் வருமானம் கிடைக்கிறது.
ஒரு ஆட்டிலிருந்து சராசரியாக 22-30 கிலோ கறி கிடைக்கின்றது. அனைத்து விதமான மக்களும் உண்ணக் கூடிய இறைச்சி.
அதிகமான குட்டிகளை ஈனும் விகிதம். ஒவ்வொரு முறையும் சராசரியாக 2-3 குட்டிகளை ஈனுகிறது
நல்ல எரு கிடைக்கிறது.
வருடம்முழுவதும்வேலை
போயர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக