வியாழன்

வேப்பங்குச்சி, கரி தூள், மாட்டு வரட்டி மூலம் சம்பாதிக்கும் தொழில்

எந்த தொழில் செய்யலாம் உங்களிடம் நிலம் இல்லை, பெரிய முதலீடு இல்லை என்றாலும் கவலை விடுங்கள். கிராமத்தில் அங்கங்கு என்னென்ன பொருட்கள் கேட்பாரற்று இருக்கும் என ஆராயுங்கள். அவைகளில் எந்தெந்த பொருட்கள் பயன்படுத்தக்கூடியதாக இருக்கிறது என்றும் பட்டியலிடுங்கள். நான் தேடிய வரைக்கும் மாட்டு சாணம், தேங்காய் சிரட்டைகள், வேப்பங்குசிகள், வேப்ப இலைகள் மற்றும் சில இலைகள், ஒரு சில மரக்கட்டை இது போன்ற இன்னும் சில. ஒரு சில பொருட்களில் உங்களின் வேலைப்பாட்டை காட்டுவதன் மூலம் கொளுத்த லாபம் அடையலாம். நான் அறிந்த சில வழிமுறைகளை எடுத்துரைக்கிறேன். முருங்கை இலை பௌடர் முருங்கை மரங்களை கண்டிருப்பீர்கள். கிராமங்களில் அவற்றின் இலைகளை அல்லது இலை பொடிகளை யாரும் கடைகளில் சென்று வாங்க மாட்டார்கள். ஏனென்றால் அவைகள் எளிதாக கிடப்பதால். ஆனால் நகரங்களிலோ அல்லது வெளிநாடுகளிலோ நிலைமையே வேறு. இவைகள் எளிதில் கிடைக்காது. இங்குதான் உங்களின் அறிவை பயன்படுத்த வேண்டும். முருங்கை இலையில் மதிப்பு கூட்டு செய்தால் நல்ல லாபத்திற்கு விற்கலாம். அதாவது முருங்கை இலையை அலசி காயவைத்து பொடியாக்கி பொட்டலம் போட்டு விற்கலாம். அதற்கென்ற ஒரு சிறு விலையை நிர்ணயம் செய்து விற்கலாம். இதற்கான மூலப்பொருளுக்கு நீங்கள் பெரிதாக எந்த வித செலவும் செய்ய தேவையில்லை. நன்றாக விற்றால் லாபம் மட்டுமே. இது முருங்கை இலைக்கு மட்டும் உரியதல்ல. மேலும் உங்களுக்கு கிடைக்கும் மூலிகை சார்ந்த, உண்பதற்கு தகுந்த இலைகளை பொடி செய்து விற்கலாம். மாட்டு வரட்டி மாட்டு சாணம் கிராமத்தில் எளிதில் தென்படும் ஒரு பொருள். மேலும் மாட்டு சாணத்தை மொத்தமாக பேசியும் கிராமத்தில் யாரிடமிருந்தும் வாங்கி வரலாம். இதில் வறட்டியை செய்து விற்கலாம். அட என்னடா இது. இதை யார் வாங்குவார்கள் என்றுதானே நினைகிறீர்கள். “buy cow dung” என்று கூகிள் சித்து பாருங்கள். பளபள வென்று பாக்கெட்டுகளில் வறட்டிகள் அடுக்கப்பட்ட படத்துடன் இணையதள விற்பனை காணக்கிடைக்கும், இதை ஏன் நீங்கள் செய்யா கூடாது. இதற்கான மூலப்பொருளும் எளிதாகவே கிடைக்கும். உழைத்தால் மட்டும் போதும். வேறெந்த முதலீடும் இல்லை. லாபம் மட்டுமே. கரி தூள் ஒன்றுக்கும் உதவாததை நாம் குப்பை என நினைத்து எரித்துவிடுவோம். வெந்து தனித்த அந்த சாம்பல் மற்றும் கரியை நாம் சீண்ட கூட மாட்டோம். ஒரு சில சமயம் நாம் “காசை ஏன்டா கரி ஆக்குற” என்று திட்டுவதுகூட உண்டு. ஆனால் நாம் அந்த கரியையும் காசாக மாற்றலாம். இதே எப்படி என்று கேட்போருக்கு இதோ அதற்கான பதில்.

ஞாயிறு

இலவச மின்சாரத்தோடு, விவசாயிகளுக்கு வருமான வாய்ப்பு

வருமான வாய்ப்பு சூரியசக்தி மின்சாரத்தை விற்பதன் வாயிலாக, விவசாயிகளுக்கு வருவாய் கிடைக்கும் திட்டத்தை செயல்படுத்த, ‘டெடா’ எனப்படும், தமிழக அரசின் எரிசக்தி மேம்பாட்டு முகமைக்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (Electricity Regulatory Authority) அனுமதி வழங்கியுள்ளது. மின்சாரம் வாயிலாக வருவாய்: மத்திய அரசு, விவசாயிகளுக்கு, மின்சாரம் வாயிலாக வருவாய் கிடைக்க, ‘பிரதான் மந்திரி கிசான் உர்ஜா சுரக் ஷா (Prime Minister Kisan Urja Surak Shah)’ என்ற, திட்டத்தை செயல்படுத்தி உள்ளது. இத்திட்டத்தின் கீழ், விவசாய நிலங்களில், சூரியசக்தி மின் நிலையம் (Solar Power Station) அமைக்கப்படும். அவற்றில் கிடைக்கும் மின்சாரத்தை பயன்படுத்தி, மோட்டார் பம்ப் (Motor pump) இயக்கி, விவசாயத்திற்கு தேவைப்படும் தண்ணீரை எடுத்துக் கொள்ளலாம். விவசாயி பயன்படுத்தியது போக, உபரி மின்சாரத்தை, மின் வாரியத்திற்கு விற்கலாம். இதனால், மழை இல்லாத காலங்களில், பயிர் சாகுபடி பாதித்தாலும், மின்சார விற்பனை வாயிலாக வருவாய் (Revenue) கிடைக்கும். செலவில்லாமல் வருமானம்: பிரதமரின் திட்டத்தின் கீழ், தமிழகத்தில், டெடா நிறுவனம், மின் வாரியத்துடன் இணைந்து, 20 ஆயிரம் விவசாய மின் இணைப்புகளில், தலா, 7.50 குதிரை திறன் (7.50 Horse Power) மோட்டார் பம்ப் இயங்கும் வகையில், 11 கிலோ வாட் திறனில், சூரியசக்தி மின் நிலையம் அமைக்க உள்ளது. இதற்கான மொத்த செலவில், மத்திய, மாநில அரசுகள், தலா, 30 சதவீதம் மானியம் (Subsidy) வழங்கும். விவசாயிகள் ஏற்க வேண்டிய, 40 சதவீத செலவு தொகையை, டெடா நிறுவனமே ஏற்கும். விவசாயிகள், 1 ரூபாய் கூட செலவு செய்ய வேண்டியதில்லை. இதனால், செலவு பணத்தை ஈடுகட்ட, சூரியசக்தி மின்சாரத்தை, 1 யூனிட், 4.53 ரூபாய்க்கு வாங்க, மின் வாரியத்திற்கு உத்தரவிடுமாறு, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம், டெடா மனு செய்தது. மனுவை விசாரித்த ஆணையம், 1 யூனிட், 2.28 ரூபாய் என்ற விலையில், 25 ஆண்டுகளுக்கு வாங்க, மின் வாரியத்திற்கு (Electricity Board) உத்தரவிட்டுள்ளது. சூரியசக்தி மின்சாரம் கிடைக்காத சமயங்களில், விவசாயிகள், வழக்கம் போல, மின் வாரியத்தின் இலவச மின்சாரத்தை பயன்படுத்தலாம். விவசாயிகள் வழங்கும் உபரி மின்சாரத்திற்கு, ஆரம்பத்தில், 1 யூனிட்டிற்கு, 50 காசு ஊக்கத்தொகை (Incentive) வழங்கவும், பின், படிப்படியாக அதிகபட்சம், 1 ரூபாயாக வழங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விரைவில், இத்திட்டத்திற்கான பயனாளிகள், விருப்ப அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

வேப்பங்குச்சி, கரி தூள், மாட்டு வரட்டி மூலம் சம்பாதிக்கும் தொழில்

ஒரு சில பொருட்களில் உங்களின் வேலைப்பாட்டை காட்டுவதன் மூலம் கொளுத்த லாபம் அடையலாம். முருங்கை இலை பௌடர் முருங்கை மரங்களை கண்டிருப்பீர்கள். கிராமங்களில் அவற்றின் இலைகளை அல்லது இலை பொடிகளை யாரும் கடைகளில் சென்று வாங்க மாட்டார்கள். ஏனென்றால் அவைகள் எளிதாக கிடப்பதால். ஆனால் நகரங்களிலோ அல்லது வெளிநாடுகளிலோ நிலைமையே வேறு. இவைகள் எளிதில் கிடைக்காது. இங்குதான் உங்களின் அறிவை பயன்படுத்த வேண்டும். முருங்கை இலையில் மதிப்பு கூட்டு செய்தால் நல்ல லாபத்திற்கு விற்கலாம். அதாவது முருங்கை இலையை அலசி காயவைத்து பொடியாக்கி பொட்டலம் போட்டு விற்கலாம். அதற்கென்ற ஒரு சிறு விலையை நிர்ணயம் செய்து விற்கலாம். இதற்கான மூலப்பொருளுக்கு நீங்கள் பெரிதாக எந்த வித செலவும் செய்ய தேவையில்லை. நன்றாக விற்றால் லாபம் மட்டுமே. இது முருங்கை இலைக்கு மட்டும் உரியதல்ல. மேலும் உங்களுக்கு கிடைக்கும் மூலிகை சார்ந்த, உண்பதற்கு தகுந்த இலைகளை பொடி செய்து விற்கலாம். மாட்டு வரட்டி மாட்டு சாணம் கிராமத்தில் எளிதில் தென்படும் ஒரு பொருள். மேலும் மாட்டு சாணத்தை மொத்தமாக பேசியும் கிராமத்தில் யாரிடமிருந்தும் வாங்கி வரலாம். இதில் வறட்டியை செய்து விற்கலாம். அட என்னடா இது. இதை யார் வாங்குவார்கள் என்றுதானே நினைகிறீர்கள். “buy cow dung” என்று கூகிள் சித்து பாருங்கள். பளபள வென்று பாக்கெட்டுகளில் வறட்டிகள் அடுக்கப்பட்ட படத்துடன் இணையதள விற்பனை காணக்கிடைக்கும், இதை ஏன் நீங்கள் செய்யா கூடாது. இதற்கான மூலப்பொருளும் எளிதாகவே கிடைக்கும். உழைத்தால் மட்டும் போதும். வேறெந்த முதலீடும் இல்லை. லாபம் மட்டுமே. கரி தூள் ஒன்றுக்கும் உதவாததை நாம் குப்பை என நினைத்து எரித்துவிடுவோம். வெந்து தனித்த அந்த சாம்பல் மற்றும் கரியை நாம் சீண்ட கூட மாட்டோம். ஒரு சில சமயம் நாம் “காசை ஏன்டா கரி ஆக்குற” என்று திட்டுவதுகூட உண்டு. ஆனால் நாம் அந்த கரியையும் காசாக மாற்றலாம். இதே எப்படி என்று கேட்போருக்கு இதோ அதற்கான பதில். கறியை வைத்து நாம் பல் துலக்கலாம், முக பொலிவிற்கு பயன்படுத்தலாம். இதில் “Activated Carbon” உள்ளதால் இதை பற்றிய விழிப்புணர்வு வந்திருக்கிறது. இணையத்தில் இதை தேடினால் இதுவும் விற்பனையில் உள்ளதை காணலாம். இதன் விலையை கண்டால் உங்களுக்கு சிரிப்பு வரும் அளவிற்கு இருக்கும். இதேல்லாம இந்த விலைக்கு விற்கிறார்கள், இதையெல்லாம் யார் வாங்குவார்கள் என்றெல்லாம் நீங்கள் நினைக்கலாம். ஆனாலும் இதை தொழிலாக செய்வோரும் இருக்கும்போது, கிராமத்தில் உள்ளவர்கள் இதை கையில் எடுத்தால் என்ன தவறு. நீங்கள் கரி தூளை பொட்டலம் போட்டு, அதற்கான விலையை நீங்களே நிர்ணயம் செய்து இணைய சந்தையில் விற்பனை செய்யலாமே. தேங்காய் சிரட்டை தென்னை மரங்கள் அதிகம் உள்ள ஊர்களில், தேங்காய் சிரட்டைகள் எளிதில் கிடைக்கலாம். தேங்காய் சிரட்டைகளை நேரடியாக யாரும் வாங்க மாட்டார்கள். ஆனால் அதில் உங்களின் கை வண்ணங்களை காண்பித்து ஒரு புதிய உபகரணமாக மாற்றுவதன் மூலம், உள்ளூரிலேயே விற்கலாம். முழுக்கு முழுக்க உங்களின் கற்பனையை தூண்டும் வேலையாகும் இது. அதுவும் பெண்களுக்கு உகந்த வேலையாகும். பெண்கள் சுய முன்னேற்ற குழுக்களுக்கு இது போன்றதொரு கலையை கற்றுகொடுத்தாலே போதும், அவர்களுக்கு இது பெரும் லாபத்தை கொடுக்கும். “Coconut Shell Products” என்று கூகிள் பண்ணி பாருங்கள். நீங்களே கற்பனை செய்து பார்த்திருக்க மாட்டீர்கள். தேங்காய் சிரட்டைகளில் எத்துனை எத்துனை பொருட்கள் இருக்கின்றன. தேங்காய் சிரட்டையில் வளையல்கள், குடுவைகள், கரண்டிகள், சிறு பாத்திரம் இன்னும் ஏராளம். வேப்பங்குச்சி “ஆலும் வேலும் பல்லுக்குறுதி” என்பது போல் வேப்பங்குச்சியால் பல் துலக்கினால், பற்கள் கற்கள் போல் வலுவாகும். கடினமான அந்த குச்சியை கடித்து, பிழிந்து, மென்று பல் விளக்குவதால் பற்களுக்கு நல்ல பயிற்சியாகி நாளடைவில் வலுவடையும் ஆனால் தற்காலத்தில் அப்படியொரு வலுவான பயிற்சியை யாரும் செய்வதில்லை. மிருதுவாக இருக்கும் பற்பசை மற்றும் தூரிக கொண்டு லேசாக தேய்த்து விடுவதால் பற்கள் தூய்மை அடைய மட்டும் செய்கிறதே தவிர, வலுவடைவதில்லை. இந்த வேப்பங்குச்சியை விரும்புவோருக்கு எளிதில் கிடைப்பதில்லை. எளிதாக கிடைக்குமிடத்தில் உள்ள மக்களுக்கு இதன் அருமை தெரிவதில்லை. அதனால் சற்று பருத்த வேப்பங்குச்சிகளை சிறு சிறு துண்டுகளாக சரி சமமாக வெட்டி அதனை பாக்கெட் செய்து விற்றால், நல்லதொரு லாபத்தை அடையலாம். கூடவே அதன் மருத்துவ குணத்தை பாக்கெட் மீது ஒரு காகிதத்தில் எழுதியும் விற்பனை செய்யலாம். அதனால் வாங்குவோருக்கு நல்ல விழிப்புணர்வாகவும் அமையும் சந்தை படுத்துதல் அதெல்லாம் சரி, இனி இந்த பொருட்களை எவ்வாறு சந்தை படுத்தி லாபம் ஈட்டுவது? என்று சிந்திகிறீர்களா? வாழ்த்துக்கள். உங்களின் சிந்தனையை தட்டிவிடுங்கள். இதுவரை சொன்ன எனக்கு, அதற்கான வழிமுறைகளையும் சொல்லாமல் விடுவேனா. கவலை கொள்ள வேண்டாம். தற்போதைய காலத்தில் சந்தை படுத்துதல் எளிமையாகிவிட்டது. எனக்கு தெரிந்த ஒரு சில சந்தைப்படுத்தும் வழிகள். Amazon Selling Program Flipkart Facebook Sale சந்தை படுத்துதலுக்கு முன், உங்களிடம் ஒன்றை கூற விழைகிறேன். உங்களுக்கு நிச்சயம் இன்றைய காலத்தில் இணையத்தை பயன்படுத்தும் அறிவு நிச்சயம் இருக்க வேண்டும். அப்போதுதான் நான் கூற இருக்கும் இந்த வழிமுறைகளை நீங்கள் எளிதில் கற்றுக்கொண்டு செய்ய எதுவாக இருக்கும். மேலும் லட்சங்களில் லாபம் எட்டும் உத்தியும் கற்றுகொள்வீர்கள். Amazon Selling Program Amazon பற்றி நிச்சயம் நீங்கள் கேள்விபட்டிருக்கக்கூடும். ஏதேனும் பொருட்கள வாங்கியிருக்கவும் கூடும். ஆனால் அந்த பொருட்களை விற்பவர்கள் யார் என்று தெரியுமா? நிச்சயமாக அமேசான் இல்லை. ஆம். சிறு தொழில் செய்வோர்கள், பொருட்களை தயாரிப்போர்கள், வாங்கி விற்கும் தரகர்கள் போன்றோர்களே அந்த பொருட்களை விற்கிறார்கள். அமேசான் அந்த பொருட்களுக்கான சந்தையை மட்டும் உருவாகியிருக்கிறது. மேலும் அந்த பொருட்களை இடம் மாற்றும் வேலையே மட்டும் செய்கிறது. அதுவும் நேரடியாக இல்லாமல், அதற்கும் வேலையாட்கள் இருக்கிறார்கள். ஆக, பொருட்களை விற்பவர் ஒருவர், அதை வாங்குபவர் ஒருவர், அதை கொண்டு சேர்பவர் ஒருவர். தற்போது இங்கு உங்களின் நிலை என்ன? பொருள் விற்பவராக மாறி, உங்களின் படைப்புகளை விற்கவேண்டியதுதானே. அதற்கான விளம்பரம் மற்றும் சந்தையை அமேசானே கவனித்துகொள்ளும். நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றுதான். அமேசானில் விற்பவராக இணைந்து, பொருட்களின் ஆணை வரும்போது அதை பொட்டலம் செய்து அனுப்ப வேண்டியது மட்டும்தான். கொண்டு சேர்பவர் நேரடியாக உங்களிடம் இருந்து அதை பெற்றுக்கொண்டு சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்துவிடுவார். பணம் உங்கள் கணக்கில் வந்துவிடும். Flipkart இதுவும் அமேசான் போன்றதே. அமேசான் மூலம் உங்கள் பொருட்களை உலகம் முழுதும் விற்பனை செய்யலாம். ஆனால் ப்ளிப்கார்ட் மூலம் இந்தியாவில் மாட்டுமே விற்பனை செய்யலாம். மாற்றபடி மற்றம் எதுவுமில்லை. Facebook Sale | Markeplace Facebook அறியாதோர் தற்போது யாரும் இல்லை என்றுதான் கூறவேண்டும். ஆனால் இதில் விற்பனை பொருட்களை செய்யலாம் என்பது எத்தனை பேருக்கு தெரியும். Facebook சென்றால் Marketplace என்ற Option இருக்கும். இங்கு சென்று உங்கள் பொருட்களை விற்பனை செய்யலாம். மாத வருமானம் எவ்வளவு உங்களின் மாத வருமானம் எவ்வளவு வரலாம் என்பதை ஒரு சிறு கணக்கு மூலம் காண்போம். ஆனால் இது முழுக்க முழுக்க உங்களின் திறமை சார்ந்தது என்பதை மனதில் கொள்ள வேண்டும். நீங்கள் உற்பத்தி செய்த ஒரு பொருள்(உதாரணமாக: ஏதேனும் ஒரு இலை பொடி, வற்றல் பொட்டலம்) ஒன்றின் விலை 30 ருபாய் என்று கொள்வோம். உங்களுக்கு தினமும் 250 ஏதேனும் பொட்டலங்கள் Order வருகிறதென்றால், ஒரு நாளைக்கு உங்களுக்கு 7500 ருபாய் வருமானம் வரும். 250 என்பது சற்று பெரிய எண் தான். ஆனால் நீங்கள் தொடங்கிய முதல் நாளிலேயே இவ்வளவு பெரிய அளவுக்கு வாடிக்கையாளர்கள் வரமாட்டார்கள். காலபோக்கில், உங்களின் தரம் அதை செய்யவேண்டும். தினமும் 7500 என்றால், ஒரு மாதத்திற்கான வருமானம் 2,25000 ருபாய். சந்தைப்படுத்துதலுக்கான தரகு நீக்கினால் நிச்சயம் 200000 மாதம் ஈட்டலாம். உற்பத்தி செலவு என்று பார்க்கும்போது, இது மாதிரியான பொருட்களுக்கு குறைந்த செலவு மட்டுமே ஆகும். ஒரு 50000 உற்பத்தி செலவு என்று வைத்துக்கொள்ளலாம். ஏனெனில் தினமும் 250 பேருக்கு உற்பத்தி செய்ய இவ்வளவாவது ஆகும். இது ஒன்றும் பெரிய விடயமல்லவே. மேலும் வாடிக்கையாளரின் எண்ணிக்கை அதகரிக்கும் போது உங்களின் வருமானமும் அதற்கேற்ப அதிகரிக்கும். உங்களின் தரத்தை மட்டும் எப்போதும் விட்டுகொடுத்து விடாதீர்கள். அதுவே உங்களின் அடையாளம். உங்களின் கிராமத்திலேயே இப்படி ஒரு வாய்ப்பை நீங்கள் உருவாக்கி விட்டால், பிறகு நீங்களே ராஜா, நீங்களே மந்திரி. யாரிடமும் உங்களின் வருமானத்திற்காக நிற்க வேண்டாம், வேலை வேண்டி ஓட வேண்டாம். விடுப்பு எடுக்க யாரின் அனுமதிக்காகவும் காத்திருக்கு வேண்டாம். மாறாக நீங்கள் ஒரு நான்கு பேருக்கு வேலை கொடுக்கலாம்.

செவ்வாய்

செக்கு எண்ணெய் தயாரிக்கும் தொழில்

சமையலின் முதல் இடத்தை பிடித்திருப்பது எண்ணெய். அதிலும் செக்கு எண்ணெய் என்றாலே அனைவரும் விரும்பி வாங்கக்கூடிய ஒன்று. செக்கு எண்ணெய் என்றாலே நம் அனைவரின் மனதில் நினைவுக்கு எழுவது கலப்படம் இல்லாத தூய்மை பெற்ற எண்ணெய் என்பதுதான்.

செக்கு எண்ணெய் இயந்திரம்:

Marachekku Oil Business Plan

செக்கு எண்ணெய் தயாரிப்பு தொழில் துவங்குவதற்கு முதலில் நாம் இந்த ஆட்டோமேட்டிக் செக்கு எண்ணெய் இயந்திரத்தினை வாங்க வேண்டும். இந்த இயந்திரத்தில் எண்ணெய் தயாரிக்க போகும் மூலப்பொருளை அந்த இயந்திரத்தின் நடு பகுதியில் சேர்த்து சுவிட்ச் ஆன் செய்தால் போதும்.

மூலப்பொருளானது நன்கு அரைத்து எண்ணையாக இயந்திரம் மூலம் நமக்கு கிடைத்துவிடும். இந்த இயந்திரமானது 1 லட்சம் முதல் 2 லட்சம் வரையிலும் ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோரில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றனர்.

செலவு:

இந்த செக்கு எண்ணெய் தயாரிப்பு தொழில் பொறுத்தவரை வேலையாட்கள் 1 நபர் இருந்தால் போதுமானது. அவர்களுடைய கூலி செலவானது ரூ.10,000/-. அடுத்ததாக மின்சார சம்மந்த செலவுகள் ரூ.20,000/- முதல் 30,000/- வரை வரும்.

தேவைப்படும் மூலப்பொருள்:

செக்கு எண்ணெய் தயாரிப்பு தொழிலில் தேங்காய் எண்ணெய் தயாரிப்பு தொழில் செய்ய போகிறீர்கள் அதற்கேற்ற மூலப்பொருட்கள் தேவைப்படும். கடலை எண்ணெய் தயாரிப்பு தொழில் என்றால் அதற்கேற்ற பொருள் தேவைப்படும். பொருளுக்கு ஏற்றவாறு விலையினை நாம் கணக்கீடு செய்து கொள்ளலாம்.

விற்பனை முறை:

இரண்டு விதமாக செக்கு எண்ணெய் தயாரிப்பு தொழில் மூலம் விற்பனை செய்து வரலாம். முதலில் சொந்தமாக மில் தொடங்கி செக்கு இயந்திரம் மூலம் நீங்களே வருபவர்களுக்கு எண்ணெய் தயாரித்து கொடுக்கலாம்.

இன்னொரு முறை எண்ணெயினை நீங்களே தயார் செய்து உங்கள் தொழிலுக்கென்று ஒரு ப்ராண்ட் பெயர் வைத்து மார்க்கெட்டுகளில் தயாரித்த எண்ணெயினை விற்பனை செய்து வந்தால் அதிக லாபம் கிடைக்கும்.

தொழில் லாபம்:

உதாரணத்திற்கு கடலை எண்ணெய் 20 கிலோவிற்கு 10 லிட்டர் எண்ணெய் நமக்கு கிடைக்கும்.

20 கிலோவிற்கு சராசரியாக ரூ. 1,500/- முதல் 2,000/- வரை ஆகும்.

சந்தை லாபம்:

பெரிய மார்க்கெட்டுகளில் செக்கு எண்ணெயானது 1 லிட்டர் ரூ.300/- முதல் ரூ.400/- வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதே செக்கு எண்ணெயானது மொத்த விற்பனைக்கு ரூ.250/- முதல் ரூ.275/- வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

செக்கு எண்ணெய் தயாரிப்பு தொழிலை மொத்தம் விற்பனை செய்வதோடு இல்லாமல் வாடிக்கையாளர்களை நிறைய வைத்து அதன் மூலம் தொழிலை துவங்கினால் தினமும் நிறைய லாபம் அடையலாம்.

குறிப்பாக ஒரு ப்ராடக்டில் மட்டும் எண்ணெய் தயாரித்து விற்பனை செய்யாமல் பல ப்ராடக்ட்களில் எண்ணெயினை தயாரித்து விற்பனை செய்தால் தினமும் இந்த தொழில் மூலம் ரூ.5,000/- முதல் ரூ.7,000/- வரையிலும் லாபத்தினை பார்க்கலாம்.

குறைவான முதலீட்டில் அதிக லாபம் பெறக்கூடிய அருமையான பிசினெஸ். புதிதாக தொழில் தொடங்க நினைப்பவர்கள் இந்த தொழிலை தாராளமாக தொடங்கி நிறைய லாபம் பெற  வாழ்த்துக்கள்..!

டைனிங் டேபிள் பேப்பர் ரோல் தயாரிப்பு..!

 இந்த டைனிங் டேபிள் பேப்பர் ரோல் தயாரிப்பு தொழில் பொறுத்தவரை மக்களிடம் அதிகம் வரவேற்கப்படுகிறது அதாவது ஒரு நல்ல காரியமாக இருந்தாலும் சரி, கெட்ட காரியமாக இருந்தாலும் சரி அந்த நாளில் உணவு பரிமாறும் போது டைனிங் டேபிளில் பேப்பர் ரோல் விரித்து உணவுகளை பரிமாறுகின்றன. டைனிங் டேபிளில் இந்த பேப்பரினை விரித்து உணவுகளை பரிமாறிவதினால் தூய்மையாகவும், உணவருந்திய பிறகு டேபிளினை சுத்தம் செய்யும் வேலை குறைக்கப்படுகிறது என்பதற்க்காக இப்பொழுது அனைத்து விசேஷங்களுக்கும் இந்த டைனிங் பேப்பர் ரோலினை 95% மக்கள் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். எனவே இது வர யாரும் அதிகம் செய்யாத தொழில் என்பதால், புதிதாக தொழில் துவங்க நினைப்பவர்கள் இந்த டைனிங் டேபிள் பேப்பர் ரோல் தயரிப்பு தொழிலை செய்து இதன் மூலம் அதிக வருமானம் பெறலாம்.

தேவைப்படும் மூலப்பொருட்கள்:-

பெரிய அளவில் பேப்பர் ரோல் (paper roll), Dining table paper roll making machine, Ink போன்றவை மூலப்பொருட்களாக தேவைப்படும்.

Dining table paper roll making machine

Dining table paper roll making machine விலை 2,00,000/- ரூபாயில் இருந்து அனைத்து ஆன்லைன் ஸ்டோரிலும் கிடைக்கின்றது. எனவே மிக எளிதில் ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்தும் பெற்று கொள்ளலாம்.

பேப்பர் ரோல் தயாரிக்கும் முறை:-

Dining table paper roll

பேப்பர் ரோலினை எம்டியாக விற்பனை செய்வதற்கு பதில் ஏதேனும் டிசைன் செய்து விற்பனை செய்தால் மக்களிடம் அதிக வரவேற்பை பெறலாம். எனவே பேப்பர் ரோல் மற்றும் Ink இவை இரண்டியும் Dining table paper roll making machine-யில் செட் செய்து இயந்திரத்தை இயக்கினால் பேப்பர் ரோலில் டிசைன்கள் பதியப்பட்டு பேப்பர் ரோல் ஆகும். இதனை விற்பனை செய்யலாம்.

சந்தை வாய்ப்பு:-

இந்த டைனிங் டேபிள் பேப்பர் ரோலினை அனைத்து வகை விசேஷங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது என்பதால், சந்தையில் இதன் தேவை அதிகம் வரவேற்கப்படுகிறது. சிறிய மளிகை கடையில் இருந்து அனைத்து வகை டிபார்மண்ட் ஸ்டோரிலும் இந்த பேப்பர் ரோலினை விற்பனை செய்யலாம்.

தயாரிப்பு செலவு:-

பேப்பர் ரோல் தயார் செய்ய 500 கிலோ பேப்பர் ரோல் வாங்க வேண்டியதாக இருக்கும், இந்த பேப்பர் ரோல் தரத்தை பொறுத்து 1 கிலோ ரூபாய் 25 முதல் 28 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ டைனிங் டேபிள் பேப்பர் ரோல் தயார் செய்ய மின்சார செலவு 5 ரூபாய் ஆகும் என்று வைத்து கொள்வோம். எனவே ஒரு கிலோ டைனிங் டேபிள் பேப்பர் ரோல் தயார் செய்ய ஆகும் செலவு 30 ரூபாய் ஆகும். இதனை சந்தையில் 45 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விற்பனை செய்யலாம். இதன் மூலம் ஒரு கிலோ டைனிங் டேபிள் பேப்பர் ரோலில் இருந்து 20 ரூபாய் இலாபம் பெறலாம். ஒரு நாளிற்கு 50 கிலோ வரை தயார் செய்து விற்பனை செய்தால் 1000 ரூபாய் வரை இலாபம் பெறலாம்.

லாபம் தரும் டிஷ்யூ பேப்பர் தயாரிப்பு தொழில்..! Tissue Paper Making Business Idea..!

 

இந்த டிஷ்யூ பேப்பர் தயாரிப்பு தொழில் துவங்க 10-க்கு 10 அளவு கொண்ட ஒரு சிறிய அறை இருந்தால் போதும்.





டிஷ்யூ பேப்பர் தயார் செய்வதற்கு மேல் படத்தில் காட்டப்பட்டுள்ள Tissue Paper Making machine அவசியம் தேவை. இந்த இயந்திரன் விலை குறைந்தபட்சம் ரூபாய் 4 லட்சத்தில் இருந்து விற்கப்படுகிறது. இந்த மிஷினை தாங்கள் ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோரில் கூட ஆர்டர் செய்து பெற்று கொள்ளலாம்.

தேவைப்படும் மூலப்பொருட்கள்:-

தேவைப்படும் மூலப்பொருட்கள் என்று பார்த்தால் Jumbo Roll Paper என்ற மூலப்பொருள்தான் டிஷ்யூ பேப்பர் தயார் செய்வதற்கு பயன்படுத்துகின்றனர். இதனை தாங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்து பெற்று கொள்ளலாம். Jumbo Roll Paper தரத்திற்கு ஏற்றது போல் ஒரு கிலோ ரூபாய் 50 முதல் 70 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதனை தாங்கள் மொத்தமாக வாங்கிக்கொள்ளலாம்.

டிஷ்யூ பேப்பரின் வகை:-

டிஷ்யூ பேப்பர் தயாரிப்பு தொழில் பொறுத்தவரை நான்கு வகையான டிஷ்யூ பேப்பர் தயார் செய்யப்படுகிறது. அதாவது சமையல் அறைக்கு மற்றும் கேட்டரிங் பயன்படுத்தும் டிஷ்யூ பேப்பர், பேசியல் செய்வதற்கு பயன்படுத்தும் டிஷ்யூ பேப்பர், ஹேண்ட் கர்ச்சீப் ஆக பயன்படுத்தும் டிஷ்யூ பேப்பர் மற்றும் Toilet roll paper என்று நான்கு வகையான டிஷ்யூ பேப்பர் உற்பத்தி செய்யப்படுகிறது.

முதலீடு:-

இந்த தயாரிப்பு தொழில் பொறுத்தவரை இடம் வாடகை, இயந்திரம், மூலப்பொருட்கள், மின்சாரம் செலவு மற்றும் இதர செலவுகள் என்று குறைந்தபட்சம் முதலீடாக ரூபாய் 6 லட்சம் தேவைப்படும்.

அரசு வழங்கு மானியம்:-

பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் மாநில அரசின் ‘நீட்ஸ்’ திட்டம் அல்லது பொது மானியத் திட்டம் என ஏதாவது ஒன்றில் இயந்திரம் வாங்கும் தொகைக்கு மானியம் பெற வாய்ப்பு உண்டு. இந்தத் தொழிலுக்கு நடைமுறை மூலதனமாக ஒரு மாதத்துக்கு ரூ.2.50 லட்சம் தேவைப்படும். இதற்கு தனியாக வங்கிக் கடன் கிடைக்கும்.

சந்தைவாய்ப்பு:-

இன்றைக்கு அதிகம் பயன்படும் பொருட்களில் ஒன்றாக டிஷ்யூ பேப்பர் உள்ளது என்பதால். அதனை சின்ன ஹோட்டல் முதல் அனைத்திற்கும் பயன்படுத்துகின்றன, எனவே மார்க்கெட்டிங் செய்வதற்கு நாம் அதிகம் அலைய வேண்டிய அவசியம் இருக்காது. எனவே சிறிய மல்லிகை கடை முதல் பெரிய ஷாப்பிங் ஸ்டோரில் நேரடியாக சென்று தாங்கள் தயார் செய்த டிஷ்யூ பேப்பரை விற்பனை செய்யலாம்.

விற்பனை விவரம்:-

பேப்பர் ரோல் உற்பத்திக்குப்பிறகு பாக்கெட் என்கிற கணக்கில் கணக்கிடப்படும். இதன்படி 1 கிலோ பேப்பர் ரோலில் உற்பத்திக்குப்பின் 12 பாக்கெட்டுகள் டிஷ்யூ பேப்பர் கிடைக்கும். ஒரு பாக்கெட்டை தரத்திற்கு தகுந்தது போல் ரூபாய் 50 முதல் 150 வரை ரூபாய் வரை விற்கலாம். இதன் மூலம் மாதம் 60 ஆயிரம் வரை வருமானம் பார்க்கலாம்.

தேவைப்படும் ஆவணங்கள் for Registration:-

  1. R.O.C
  2. Trade License
  3. Uam
  4. No Objection Certificate
  5. Sales tax
  6. Factory license
  7. I.e code registration

ஒற்றை தலைவலி குறைய:

 

ஒற்றை தலைவலி குறைய: ஒற்றைத் தலைவலி என்பது தலையின் ஒரு பக்கம் மட்டும் வலி ஏற்படுவதாகும். பொதுவாக தலைவலி என்பது தலையின் முழுப்பகுதியும் வலி ஏற்படும். ஆனால் ஒற்றைத் தலைவலி சற்றே வித்தியாசமானது. தலையின் ஒரு பக்கம் வலி ஏற்பட்டாலும் மறு பக்கம் எந்த ஒரு வலியும் இருக்காது.  

ஒற்றை தலைவலி அறிகுறிகள் (Migraine Symptoms):

  • உடல் உணர்வுகளில் மாற்றங்கள், தலைவலி, குமட்டல் போன்ற (migraine symptoms) பிரச்சனைகள் ஏற்படும்.
  • ஆண்களைவிட பெண்களுக்கு அதிகமாக இந்த ஒற்றை தலைவலி தாக்கும்.
  • இந்த நோய் கண் புலத்தில் மாற்றம் தெரியும், கால் மூட்டுகள் மற்றும் கழுத்து பகுதிகளில் ஊசியால் குத்துவது போல் உணர்வு (migraine symptoms) தோன்றும்.
  • உடல் சமநிலை குழம்புதல் மற்றும் பேச்சில் தடுமாற்றம் ஏற்படுதல்.
    உணவின் மணம் நுகர முடியாமை போன்ற உணர்வு தொடர்பான மாற்றங்கள் ஏற்படுதல் போன்ற அறிகுறிகள் (migraine symptoms) நம்மில் நிகழும்.

ஒற்றை தலைவலி காரணங்கள் :-

1. ஒற்றை தலைவலி காரணங்கள் :- மன அழுத்தம், கோபம், பதற்றம் மற்றும் அதிர்ச்சி போன்ற மனவியல் காரணமாக ஒற்றை தலைவலி  ஏற்படுகிறது 

பாதாம் பிசின் நன்மைகள்

 பாதாம் பிசினில் தாதுகள் அதிகம் நிறம்பியுள்ளது எனவே அவை உடலின் எலுப்புகள் மற்றும் தோலிற்கு மிகவும் முக்கிய மானதாகும்.

உடல் சூட்டினால் அவதிப்படுவேற்கு இது மருந்தாகும். பாதாம் பிசினை தண்ணீரில் ஊற வைத்து சிறுது நேரம் கழித்து அதை சாப்பிட்டால் உடல் சூடு தணியும்.

தற்போது பலரும் அதிகமாக கூறும் நெஞ்செரிச்சல் உணவு செரிமான பிரச்சனை(அசிடிட்டி) போன்றவைகளுக்கு பாதாம் பிசினை ஊற வைத்து சாப்பிட்டால் அவை நீங்கும்.

சிறுநீரகத்தில் ஏற்படும் கற்கள் மற்றும் சிறுநீர் பாதையில் வளரும் சதைகளை பாதாம் பிசின் கரைக்கும் என்று சித்த மருத்துவத்தில் நம்பப்படுகிறது.

பாதாம் பிசினை பாலில் கலந்து சாப்பிட்டால் உடல் எடை கூடும். வாந்தி, மயக்கம், பித்தம் போன்ற நோய்களுக்கு பாதாம் பிசின் தீர்க்கும்.

வெள்ளி

வெந்நீரில் இவ்வளவு விஷயம் இருக்கா…?

நெஞ்சு எரிச்சல் போகணுமா‬?

ஏதாவது எண்ணெய்ப் பலகாரம், சுவீட், அல்லது பூரி சாப்பிட்ட பிறகு நெஞ்சு கரித்துக் கொண்டிருக்கிறதா? உடனே எடுங்கள் ஒரு டம்ளர் வெந்நீரை…. மெதுவாகக் குடியுங்கள். கொஞ்ச நேரத்தில் நெஞ்சு எரிச்சல் போயே போச்சு!
சதை குறையணுமா‬?
வெந்நீர் குடித்தால் உங்கள் உடலில் போடும் அதிகப்படி சதை குறையவும் வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள்.
‪காலையில்_சரியாக_மலம்‬ கழிக்க முடியவில்லை என்று ஃபீல் பண்ணுகிறீர்களா?


எடுங்கள் வெந்நீரை! குடியுங்கள் உடனே! இம்மீடியட் எஃபெக்ட் கிடைக்கும். (நிறையப் பேர், ”அட, காலையில் எங்க வீட்டில் காபி என்று பெயர் சொல்லி தினம் அதைத்தானே கொடுக்கிறார்கள்” என்று புலம்புவது கேட்கிறது!)

உடம்பு_வலிக்கிறதா‬?
உடம்பு வலிக்கிற மாதிரி இருக்கிறதா? உடனே வெந்நீரில் கொஞ்சம் சுக்குத்தூள், பனங்கற்கண்டு போட்டு குடியுங்கள். இதன் மூலம் பித்தத்தினால் வரும் வாய்க்கசப்பு மறைந்து விடும். மேலும், உடல் வலிக்கு, நன்றாக வெந்நீரில் குளித்துவிட்டு, இந்த சுக்கு வெந்நீரையும் குடித்துவிட்டுப் படுத்தால், நன்றாகத் தூக்கம் வருவதோடு, வலியும் பறந்துவிடும்.
‪‎
கால் பாதங்கள் வலிக்கிறதா‬?
எங்காவது அலைந்துவிட்டு வந்து கால் பாதங்கள் வலிக்கிறது என்றால், அதற்கும் நமது வெந்நீர்தான் ஆபத்பாந்தவன். பெரிய பிளாஸ்டிக் டப்பில் கால் சூடு பொறுக்குமளவுக்கு வெந்நீர் ஊற்றி அதில் உப்புக்கல்லைப் போட்டு, அதில் கொஞ்ச நேரம் பாதத்தை வைத்து எடுங்கள். காலில் அழுக்கு இருப்பது போல் தோன்றினால், வெந்நீரில் கொஞ்சம் டெட்டால் ஊற்றி அதில் பாதத்தை வைத்தால், கால் வலி மறைவதோடு, பாதமும் சுத்தமாகிவிடும்.
மூக்கு அடைப்பா‬?
மூக்கு அடைப்பா? நம்ம வெந்நீர்தான் டாக்டர்! வெந்நீரில் விக்ஸ் அல்லது அமிர்தாஞ்சனம் போட்டு அதில் முகத்தைக் காண்பித்தால், மூக்கடைப்பு போயிந்தி! வீட்டில் வேலைக்கு ஆட்கள் இல்லாமல் தாங்களே பாத்திரம் தேய்த்து, துணி துவைக்கும் பெண்கள், வாரத்திற்கு ஒரு முறையேனும் உங்கள் கைகளை வெந்நீரில் கொஞ்ச நேரம் வைத்திருங்கள். இதன் மூலம் நக இடுக்கில் இருக்கும் அழுக்குகள் போய், உங்கள் கைகள் ஆரோக்கியமாக இருக்கும்.
வெயிலில்‬ அலைந்து தாகம் எடுக்கும் போதுவெயிலில் அலைந்து விட்டு வந்து உடனே சில்லென்று ஐஸ்வாட்டர் அருந்துவதைவிட, சற்றே வெதுவெதுப்பான வெந்நீர் அருந்துவது, தாகம் தீர்க்கும் நல்ல வழி. ஈஸினோபீலியா, ஆஸ்துமா போன்ற உபாதைகள் இருப்போர், உங்களுக்கு தாகம் எடுக்கும் போதெல்லாம் கண்டிப்பாக வெதுவெதுப்பான வெந்நீர் குடியுங்கள்.
திருமணம் மற்றும் பார்ட்டிகளில் நாம் நன்றாக சாப்பிட்டு விட்டு குளிர் பானங்கள் குடிக்காமல் ஒரு கிளாஸ் வெந்நீர் குடியுங்கள் அது உங்களுக்கு உடம்புக்கு நல்ல பலனை தரும்.
ஜலதோஷம்‬ பிடித்தவர்களுக்கு அதுபோலவே, ஜலதோஷம் பிடித்தவர்களும் வெந்நீர் குடித்தால், அது அந்த நேரத்துக்கு நல்ல இதமாக இருப்பதோடு சீக்கிரம் குணமாகும். இதையெல்லாம் தவிர, வீட்டில் நெய், எண்ணெய் பாட்டில் இருந்த பாத்திரங்களைக் கழுவும்போது கொஞ்சம் வெந்நீரை ஊற்றி ஊற வைத்து, அப்புறம் கழுவினால் பிசுக்கே இல்லாமல் பளிச்சென்று சுத்தமாகும்.
‪தரையை_துடைக்கும்‬ போது அதுபோலவே தரை துடைக்கும் போது, குறிப்பாக குழந்தைகள், நோயாளிகள் இருக்கும் வீட்டின் தரைகளை வெந்நீர் உபயோகப்படுத்தி துடையுங்கள். கிருமி இல்லாத சுத்தமான தரை உங்களுடையதாகும்!
திடீரென்று_கடுமையான தலை வலியா‬?
தலைவலியை உணர்ந்தவுடன் 200 மி.லி அளவு வெந்நீர் அருந்துங்கள். சில நேரங்களில் அஜீரணம் அல்லது குடலில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் கூட தலை வலி ஏற்பட வாய்ப்புண்டு. எனவே இளஞ்சூட்டில் வெந்நீர் குடித்தால், உடனடியாக ஜீரணத்தை தூண்டி தலைவலி நீங்கும். அல்லது சூடான காபியை குடியுங்கள். தலைவலிக்கு இதமான மருந்தாக காபி அமையும்.
சுறுசுறுப்புக்கு சுக்கு வெந்நீர்‬’
தமிழகத்தைப் பொருத்தவரை நகர்ப்புறங்களிலும், கிராமங்களிலும் பெரும்பாலான வீடுகளில் வாரம் ஒருமுறை சுக்கு வெந்நீர் தயாரித்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வீட்டில் உள்ள அனைவருக்கும் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.சென்னை போன்ற பெருநகரங்களிலும், மைக்ரோ ஃபேமிலி (micro family) எனப்படும் 3 அல்லது 4 பேரைக் கொண்ட தனிக்குடித்தனங்களிலும் சுக்கு வெந்நீர் என்பது கானல் நீர் எனலாம். விருந்து, விழாக்கள், அலுவலகப் பார்ட்டி என்று பல இடங்களிலும், பல்வேறு விதமான உணவு வகைகளைச் சாப்பிட்டு அஜீரணத்திற்கு உள்ளாவோர் இந்த சுக்கு வெந்நீரை 200 மி.லி அளவுக்கு வாரம் ஒரு முறை அருந்தி வந்தால், உடலில் தேவையற்ற கொழுப்புகள் சேராமல் தவிர்ப்பதோடு புத்துணர்ச்சியையும், சுறுசுறுப்பையும் தரும்.
சுக்கு வெந்நீரானது கிராமங்களில் சிறு ஹோட்டல் போன்ற கடைகளில் கிடைக்கும். அல்லது வீட்டிலும் நாமே தயாரித்து பருகலாம்.
சிறிதளவு சுக்கினை சிறுசிறு துண்டுகளாக்கியோ அல்லது பொடித்தோ தண்ணீரில் கொதிக்க வைத்து, வெல்லம், பனங்கற்கண்டு அல்லது கருப்பு கட்டி (பனைவெல்லம்) ஆகிய ஏதாவதொன்றை தேவையான அளவுக்கு சேர்த்து வடிகட்டி குடிக்கலாம்.
சுக்கு உடன் சேர்த்து சாரணவேர், மிளகு, திப்பிலி ஆகியவற்றையும் சேர்த்து கஷாயம் தயாரித்தும் அருந்தி வந்தால் சளி, இருமல் போன்றவே நம்மை அண்டாமல் போயே போய் விடும்.

பாய் போட்டுப் படுத்தால் நோய் விட்டுப் போகும்!

‘பாய்’ என்ற இந்த வார்த்தைக்குப்பின்னால் எத்தனை விதமான தகவல்கள் இருக்கின்றன என்பதை மட்டும் இந்தக் கட்டுரையின் மூலம் பதிவு செய்கிறேன்.

வீட்டில் சாணம் மெழுகிய வெற்றுத் தரையில் படுத்து உறங்கிய ஆதிதமிழன், சற்று சுகமாகப் படுத்து உறங்க வேண்டி பாய்களைப் பின்ன ஆரம்பித்தான்

முதன்முதலில் தென்னை ஓலையில் இருந்துதான் பாய்களைத் தயாரித்தார்கள். முற்றாத இளம் தென்னை ஓலையை வெட்டி எடுத்து, நடுவில் உள்ள தண்டு போன்ற மட்டையை இரண்டாக வெட்டிப்பிளந்துவிட்டால் மட்டையுடன் கூடிய இரண்டு துண்டு ஓலைகள் கிடைக்கும்.

இரண்டு துண்டுகளில் மட்டைப்பகுதிகளும், வெளிப்புறமாக வரும்படி வைத்து ஓலைகளைப் பின்னினால் நமக்கு தென்னம் பாய் கிடைக்கும்.

இளம்பச்சை (தென்னை) ஓலைகளால் பின்னப்பட்ட இந்தத் தென்னம்பாய் படுப்பதற்கு சுகமாக இருக்கும். குளிர்ச்சியாகவும் இருக்கும்.

படுக்கைகள் பலவிதம். எத்தகைய படுக்கையில் படுத்து உறங்கினால் என்ன பலன் ஏற்படும் என்பதை "மருத்துவ திறவுகோல்’ என்னும் சித்த மருத்துவ நூல் விளக்கியுள்ளது.

* கம்பளிப் படுக்கை - குளிருக்கு இதம். குளிர் சுரம் நீங்கும்.

* கோரைப்பாய் - உடல் சூடு, மந்தம், சுரம் போக்கும், உடலுக்குக் குளிர்ச்சியும், உறக்கமும் ஏற்படும்.

*பிரம்பு பாய் - சீதபேதி, சீதளத்தால் வரும் சுரம் நீங்கும்.

* ஈச்சம்பாய் - வாதநோய் குணமாகும். உடல் சூடு, கபம் இவை
அதிகரிக்கும்.

* மூங்கில் பாய் - உடல் சூடும், பித்தமும் அதிகரிக்கும்.

* தாழம்பாய் - வாந்தி, தலை சுற்றல், பித்தம் நீங்கும்.

* பேரீச்சம்பாய் - வாதகுன்மநோய், சோகை நீங்கும். ஆனால் உடலுக்கு அதிக உஷ்ணம் தரும்.

* இலவம்பஞ்சு படுக்கை - உடலில் ரத்தம், தாது பலம் பெறும். தலை முதல் பாதம் வரையிலான அனைத்து நோய்களும் நிவாரணம் பெறும்.

* மலர்ப்படுக்கை - ஆண்மை அதிகரிக்கும். நன்றாகப் பசியெடுக்கும்.

* இரத்தினக் கம்பளம் - நஞ்சுகளின் பாதிப்பால் ஏற்படும் நோய்களை நீக்கும்.

புதன்

பசுந்தீவனம் பதப்படுத்தும் முறைகள்🥗

 கால்நடைகளுக்கு பசுந்தீவனத்தை ஆண்டு முழுவதும் தொடர்ந்து அளிப்பதன் மூலம் சீரான உற்பத்தியினை பெறலாம். பசுந்தீவனத்தில் ஊட்டச் சத்துக்கள் இயற்கையான தன்மையிலேயே உள்ளதால் அவற்றின் செரிமானத் தன்மை அதிகம். மழைக்காலங்களில் தேவைக்கு மேல் கிடைக்கும் பசுந்தீவனத்தை பதப்படுத்தி கோடையில் கால்நடைகளுக்கு அளிப்பதன் மூலம் பசுந்தீவனப் பற்றாக்குறையையும் கால்நடைகளின் உற்பத்தி இழப்பையும் தவிர்க்கலாம்.

பசுந்தீவனத்தை இரண்டு முறைகளில் பதப்படுத்தி சேமித்துக் கொள்ளலாம்.

(i) காய்ந்த புல் அல்லது உலர் புல்

(ii) சைலேஜ் அல்லது ஊறுகாய்ப்புல்

உலர் புல் தயாரிப்பு

பசுந்தீவனப் பயிரை அதன் பூ பூக்கும் தருணத்தில் அறுவடை செய்து சூரிய ஒளியில் உலர வைத்து அதன் ஈரப்பதத்தை 15 சதவிகிதத்திற்கு குறைவாக குறைத்து சேமித்து வைத்துக் கொள்ளலாம். காலையில் பனி விலகியவுடன் தீவனப் பயிரை அறுவடை செய்து அந்த நிலத்திலேயே சூரிய ஒளியில் உலர வைக்க  வேண்டும். சூரிய ஒளியின் தன்மையைப் பொறுத்து 3 முதல் 5 மணி நேரத்திற்கு ஒரு முறை தீவனப் பயிரை தலைகீழ்  திருப்பி வைக்க வேண்டும். மாலையில்  அதன் ஈரப்பதம் சுமார் 30  முதல் 40 சதவிகிதமாக இருக்கும். அவற்றை சிறு கட்டுகளாக கட்டி அடுத்த நாள் காலையில் மீண்டும் பிரித்து உலர வைக்க வேண்டும். நல்ல சூரிய ஒளியிருந்தால் மாலையில் அதன் ஈரப்பதம் 20 சதவிகிதமாக குறைந்திருக்கும். மூன்றாவது நாள் காலையில் கூம்பு வடிவத்திலோ அல்லது குதிர் போட்டு சேமித்து வைக்க வேண்டும். தரமான உலர்புல் வெளிறிய பச்சை நிறத்தில் பூஞ்சை காளான் இல்லாமல் இருக்கும்.

சைலேஜ் தயாரிப்பு

பசுந்தீவனங்களை அவற்றின் பசுமை மாறாமல் மிகவும் குறைந்த ஊட்டச்சத்து இழப்புடன் சைலோ எனப்படும் காற்றுப் புகா குழியில் பதப்படுத்தி சேமிக்கும் முறைக்கு சைலேஜ் அல்லது ஊறுகாய்ப்புல் தயாரிக்கும் முறை என்பது பெயர்.

சைலேஜ் தயாரிக்க அறுவடை செய்ய வேண்டிய தருணம்:

வீரிய புல் வகைகள் – பூக்கும் தருணம்

பயறுவகைத் தீவனங்கள் – 25 முதல் 30 சதவிகிதம் பூக்கும் தருணம்.

சோளம் கம்பு தானியங்கள் – பால் பிடிக்கும் தருணம்

மக்காச்சோளம் தானியங்கள் – பால் பிடித்த பிறகு

சைலோ

சைலேஜ் தயாரிக்க பசுந்தீவனங்களை காற்று புகாத இடத்தில் மூடி வைத்து சேமிக்க வேண்டும். இதற்கு பயன்படும் அமைப்புகள் சைலோ எனப்படுகின்றன. குழி சைலோ, கோபுர சைலோ, சரிவு சைலோ அல்லது காண்கிரீட் வளையங்கள், குதிர் மற்றும் பாலிதீன் பைகள் ஆகியவற்றையும் இதற்காகப் பயன்படுத்தலாம். குழி சைலோவை நீர் புகாத மேட்டுப் பகுதியில் பக்க வட்டில் மண் சரிவு ஏற்படாமல் அமைக்க வேண்டும். குழியின் சூலம் விட்டத்தைப் போல் இரு மடங்கு இருக்க வேண்டும்.

சைலேஜ் தயாரிக்கும் முறை

பசுந்தீவனத்தை சுமார் 2 முதல் 3 மணி நேரம் சூரிய ஒளியில் உலர்த்தி ஈரப்பத அளவை 75 முதல் 80 சதவிகிதத்திலிருந்து 60 முதல் 65 சதவிகிதம் குறைத்து அவற்றை 2 – 3 அங்குலம் கொண்ட சிறு சிறு துண்டுகளாக வெட்டி சைலோவில் இட்டு அடுக்கடுக்காக அடுக்கி வர வேண்டும்.

சுமார் 20 முதல் 30 செ மீ அடுக்கிய தீவனத்தை நன்கு அழுத்தி இடையே உள்ள காற்றை வெளியேற்றி பிறகு அதன் மீது 2 சதவிகிதம் சர்க்கரை பாகு கரைசலையும் 1 சதவிகிதம் சாதாரண உப்புக் கரைசலையும் தெளிக்க வேண்டும். பிறகு மீண்டும் பசுந்தீவனத்தை அடுக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து அடுக்கி சைலோவின்  மேல் மட்டத்தை விட 1 முதல் 1 .5 மீ உயரம் வரை நிரப்ப வேண்டும். அதன் மேல் பகுதியில் வைக்கோல் அல்லது உபரியாகக் கிடைக்க கூடிய புல் போன்றவற்றைக் கொண்டு மூடி அதன் மேல் ஈர மண்ணை பூசி காற்று மற்றும் நீர் புகாமல் செய்ய வேண்டும். பாலிதீன் பைகளையும் பயன்படுத்தலாம். இதன் பிறகு 20 நாட்களில் தரம் மிக்க சைலேஜ் உருவாகி விடும். சைலோவை திறக்கும் முன்பாக மேற்பகுதியில் உள்ள பயன்படாத பதம் குறைந்த தீவனத்தை அகற்றி விட வேண்டும்.

தரமான சைலேஜ் பழ வாசனையுடன் கூடிய நறுமணம் உடையதாகவும் பசுமை நிறத்துடனும் சாறு கலந்தும் இருக்கும். அமில தன்மை 3.5 முதல் 4.2 வரை இருக்கும்.

பூஞ்சை பாதித்த சைலேஜை கால்நடைகளுக்கு அளிக்க கூடாது. அதிக புளிப்புச் சுவையுடனுள்ள சைலேஜை ஆடுகளுக்கு கொடுக்கக் கூடாது. நாள் ஒன்றிற்கு கால்நடைகளுக்குத் தேவைப்படும் சைலேஜின் அளவு கறவை மாடு – 15 – 20 கிலோ, கிடேரி- 5 – 8 கிலோ, வளர்ந்த ஆடு – 200 – 300 கிராம். பசுந்தீவனம் பற்றாக்குறை ஏற்படும் கோடை காலத்தில் இவ்வாறு பதப்படுத்திய தீவனத்தை அளிக்கலாம்.

கட்டுரையாளர்கள்: ஜெ.சுபாஷினி மற்றும் வை.ஹரிஹரசுதன், உதவி பயிற்றுநர்கள், வேளாண்மைக் கல்வி நிறுவனம், குமுளூர்,  திருச்சி. மின்னஞ்சல்: tnauhari@gmail.com

மியாவாக்கி எனும் குறுங்காடு மர வளர்ப்பு

 உலகில் மக்கள் தொகைப் பெருக்கத்தாலும், தொழிற்சாலை பெருக்கம் மற்றும் பருவநிலை மாற்றத்தாலும் மக்கள் நகரங்களை நோக்கி தங்கள் வாழ்வாதாரத்திற்காக வருகின்றனர். ஆதலால் நகரங்கள் விரிவடைகிறது. இதன் காரணமாக வாகனப் போக்குவரத்து அதிகரிப்பு மற்றும் மக்கள் நெருக்கமாக வாழ வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர்.

வாகனப்பெருக்கத்தால் காற்று மாசுபாடு ஓர் முதன்மை பிரச்சனையாக எழுந்துள்ளது. 2019-ம் ஆண்டு கணக்கின் படி இந்தியாவில் 16.7 லட்சம் மக்கள் காற்று மாசுப்பாட்டால் இறந்துள்ளனர். இப்படிப்பட்ட சூழலில் காற்று மாசை கட்டுப்படுத்த பல சட்டங்கள் விதிகள் இயற்றப்பட்டாலும். 100 சதவீதம் தடுக்க முடியாத சூழலே உள்ளது. ஆதலால் மரங்களே ஓர் நிரந்தர தீர்வாக உள்ளன. நகரமயமாதலால் திடக்கழிவும் பெரும் பிரச்சனையாக உள்ளது. திடக்கழிவு மேலாண்மை முதன்மையாக தேவைப்படுகிறது. எனவே திடக்கழிவு மேலாண்மை, காற்று மாசு குறைக்க, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த ஓர் சிறந்த வழியாக மியாவாக்கி எனும் குறுங்காடு மர வளர்ப்பு முறை உள்ளது.

மியாவாக்கி எனும் குறுங்காடு மர வளர்ப்பு முறையில் ஒரு சதுர அடிப்பரப்பளவில் 8 முதல் 10 மர / தாவர வகைகள் நடவு செய்து வளர்க்கப்படுகிறது. குறிப்பாக உள்நாட்டு மர வகைகள்  ( Native Tree Species)  மட்டும் நடவு செய்யப்படுகிறது. இந்த மியாவாக்கி முறை குறுங்காடு வளர்ப்பு நகரங்களுக்கு மிகவும் ஏற்றதாகும். தற்போதைய சூழலில் குறைந்த இடத்தில் அதிக மரங்களை நடவு செய்து பராமரிக்க ஏற்றமுறை. இந்த முறையில் பரப்பளவு அதிகம் தேவையில்லை. குறைந்த இடத்தில் அதிக மரங்கள் நடவு செய்யப்படுகிறது. இந்த முறையில் மரம் நடவுசெய்ய நிலத்தில் உள்ள மேற்பகுதியில் 2 முதல் 3 அடி உயரம் வரை உள்ள மண்ணை அகற்றிவிட்டு எளிதில் மட்கக்கூடிய இலைகள், மர துண்டுகள், மரத்தூள் மற்றும் எளிதில் மட்கக்கூடிய பொருட்களால் 75% குழியை நிரப்பிவிட்டு மீதமுள்ள 25% குழியை மரத்தூள் அல்லது இலை தழைகள் கலந்த மேல் மண் கொண்டு நிரப்ப வேண்டும். முழுமையாக நிரப்பிவிட்டு ஒரு சதுர அடி பரப்பளவில் 8 முதல் 10 மர/ செடி நாற்றுக்கள் நடவு செய்ய வேண்டும். இதில் உயரமாக வளரக்கூடிய மரங்கள், மூலிகை செடிகள், புதர் செடிகள்,  உயரம் குறைவாக வளரும் மர வகைகள் என அனைத்தும் கலந்து நடவுச்செய்ய வேண்டும். மியாவாக்கி முறையில் அனைத்து மரங்களும் கலந்து நடவுச்செய்ய வேண்டும். மியாவாக்கி முறையில் அனைத்து மரங்களும் கலந்து நடவுச்செய்தால் 2 முதல் 3 ஆண்டுகளிலேயே மனிதர்கள் நுழைய முடியாத அளவுக்கு அடர்ந்த காடு போல் வளர்ந்துவிடும். மூன்றாண்டுக்கு மேல் பராமரிப்பு தேவையில்லை. 10 ஆண்டுகள் வளர்ச்சியை இந்த முறை நடவு மூலம் 2 முதல் 3 ஆண்டுகளில் பலனை கண்கூடாக காணலாம்.

மியாவாக்கி என்னும் குறுங்காடு மர நடவு முறையில் மரங்களின் வளர்ச்சி அபரிவிதமாக உள்ளது. மண் வளம் மற்றும் மண்ணில் நுண்ணுயிர் பெருக்கம் அதிகமாக உள்ளது. அதே சமயம் மண்புழுக்கள் வளர ஏதுவாக உள்ளது. மியாவாக்கி எனும் குறுங்காடு மர நடவு முறை ஓர் ஆக்சிஜன் பூங்காவாக வேலை செய்கிறது.

 

பூ வகை மரங்கள் மற்றும் மூலிகை தாவரங்கள் கலந்து நடப்படும் போது மக்கள் நடைப்பயிற்சிக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். மனித உடலுக்கு தேவையான சுத்தமான ஆக்ஸிஜன் கிடைக்கும். மியாவாக்கி என்னும் குறுங்காடு மர நடவு முறையானது பட்டாம்பூச்சி மற்றும் பல வகை பறவைகளை அதிகம் ஈர்கின்றது. இந்த முறைக்கு மண் தயார்படுத்துதல் மழைக்காலங்களில் மழைநீர் பூமிக்குள் செலுத்த ஓர் அருமையான முறையாக மியாவாக்கி முறை செயல்படுகிறது.

நகரப்பகுதிகளில் பசுமைப் பரப்பை பராமரிக்க மியாவாக்கி முறை ஓர் சிறந்த மரம் நடவும் முறையாகும். அதேபோல் பசுமைப் பரப்பை அதிகரிக்க மற்றும் காற்று மாசை கட்டுப்படுத்த புங்கன், பூவரசு, அரசு, நீலத்திருவத்தி, தாந்தோன்றி, நீர்மருது ஆகியவை கலந்த மியாவாக்கி முறையிலான மர நடவு முறை நகர்ப்புறப் பகுதிகளில் மிகவும் பொருத்தமாக இருக்கும் மரம் நடும் முறை. நகர்ப்புறப் பகுதிகளில் மிகவும் நல்ல முறையில் பலன் தரும். ஒளி மாசு குறைக்க ஒரு சிறந்த நடமாடவும் முறையாக இந்த மியாவாக்கி முறை அமைந்துள்ளது.

 

முனைவர்.அ.ச.கோவேந்தன்,

சுற்றுச்சூழல் அறிவியல் துறை,

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்.

கோவை- 641 003

 

திரு.ஆ.ரமேஷ்,

முதுநிலை ஆராய்ச்சியாளர்,

சுற்றுச்சூழல் அறிவியல் துறை,

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்.

கோவை- 641 003

மரங்களும் மற்றும் அதன் பயன்கள்

 மரங்கள் பல வகைகள் உள்ளன. ஒவ்வொருவரின் விருப்பத்திற்கேற்ப, பலப்பல சூழ்நிலைகளுக்கேற்ப, அவரவருக்குத் தேவையான மரங்களைத் தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். எந்தெந்த மரங்கள் நமது சூழ்நிலைக்கேற்ப மற்றும் நாம் தேவைக்கு ஏற்ப வளர்க்கலாம் என்பதை பார்ப்போம் வாருங்கள்.

கோடை நிழலுக்கு வேம்பு, தூங்குமூஞ்சி, புங்கன், பூவரசு, மலைப்பூவரசு, காட்டு அத்தி, வாத மரம். 
பசுந்தழை உரத்திற்கு புங்கம், வாகை இனங்கள், கிளைரிசிடியா, வாதநாராயணன், ஒதியன், கல்யாண முருங்கை, காயா, சூபாபுல், பூவரசு. 
கால்நடைத் தீவனத்திற்கு ஆச்சா, சூபாபுல், வாகை, ஒதியன், தூங்குமூஞ்சி, கருவேல், வெள்வேல். 
விறகிற்கு சீமைக்கருவேல், வேலமரம், யூகலிப்டஸ், சவுக்கு, குருத்தி, நங்கு, பூவரசு, சூபாபுல். 
கட்டுமான பொருட்கள் கருவேல், பனை, தேக்கு, தோதகத்தி, கருமருது, உசில், மூங்கில், விருட்சம், வேம்பு, சந்தனவேங்கை, கரும்பூவரசு, வாகை, பிள்ளமருது, வேங்கை, விடத்தி. 
மருந்து பொருட்களுக்கு கடுக்காய், தானிக்காய், எட்டிக்காய் 
எண்ணெய்க்காக வேம்பு, பின்னை, புங்கம், இலுப்பை, இலுவம் 
காகிதம் தயாரிக்க ஆனைப்புளி, மூங்கில், யூகலிப்டஸ், சூபாபுல் 
பஞ்சிற்கு காட்டிலவு, முள்ளிலவு, சிங்கப்பூர் இலவு 
தீப்பெட்டித் தொழிலுக்கு பீமரம், பெருமரம், எழிலைப்பாலை, முள்ளிலவு. 
தோல்பதனிடவும், மை தயாரிக்கவும் வாட்டில், கடுக்காய், திவி – திவி, தானிக்காய் 
நார் எடுக்க பனை, ஆனைப்புளி 
பூச்சி மருந்துகளாகப் பயன்படுத்த வேம்பு, புங்கம், ராம்சீதா, தங்க அரளி 
கோயில்களில் நட வேம்பு, வில்வம், நாகலிங்கம், தங்க அரளி, மஞ்சளரளி, நொச்சி, அரசு 
குளக்கரையில் நட மருது, புளி, ஆல், அரசு, நாவல், அத்தி, ஆவி, இலுப்பை 
பள்ளிகளில் வளர்க்க நெல்லி, அருநெல்லி, களா, விருசம், விளா, வாதம், கொடுக்காப்புளி, நாவல் 
மேய்ச்சல் நிலங்களில் நட கருவேல், வெள்வேல், ஓடைவேல், சீமைக்கருவேல், தூங்குமூஞ்சி
சாலை ஓரங்களில் நட புளி, வாகை, செம்மரம், ஆல், அத்தி, அரசு, மாவிலங்கு 
அரக்கு தயாரிக்க குசும், புரசு மற்றும் ஆல் 
நீர்ப்பரப்பில் (கண்மாய்) பயிரிட கருவேல், நீர்மருது, நீர்க்கடம்பு, மூங்கில், வேலிக்கருவேல், நாவல், தைல மரம், ராஜஸ்தான் தேக்கு, புங்கன், இலுப்பை மற்றும் இலவமரம். 

விவசாயக்கருவிகள் வாங்க மானியம் !

 பல்வேறு இயந்திரங்கள் மற்றும் கருவிகளுக்கான மானிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

வரிசை எண்கருவிகள் பெயர்சிறு குறு விவசாயிகள், பெண் விவசாயிகள், பழங்குடியின விவசாயிகளுக்கு வழங்கப்படும் அதிகபட்ச மானியம் (ரூபாய் மதிப்பில்)இதர விவசாயிகளுக்கு வழங்கப்படும் அதிகபட்ச மானியம் (ரூபாய் மதிப்பில்)
1.டிராக்டர் (8 முதல் ஹெச்.பி மற்றும் 15 முதல் 20 ஹெச்.பி)1 லட்சம்75,000
2.டிராக்டர் (20 முதல் 40 ஹெச்.பி மற்றும் 40 முதல் 70 ஹெச்.பி வரை1.25 லட்சம்1 லட்சம்
3.பவர் டில்லர் (8 ஹெச்.பி-க்கு கீழ்)50,00040,000
4.பவர் டில்லர் (8 ஹெச்.பி-க்கு மேல்)75,00060,000
5.நெல் நாற்று நடவு செய்யும் கருவி (4 வரிசை)94,00075,000
6.நெல் நாற்று நடவு செய்யும் கருவி (4 வரிசைக்கு மேல்)2 லட்சம்2 லட்சம்
7.சுழற்கலப்பை (ரோட்டோவேட்டர்)63,00050,000
8.விதை விதைக்கும் கருவி, உரமிடும் உழவில்லா விதைப்புக் கருவி, உரத்துடன் விதை விதைக்கும் கருவி44,00035,000
9.டிராக்டரால் இயங்கக்கூடிய வரப்பு அமைக்கும் கருவி63,00050,000
10.டிராக்டரால் இயங்கும் வைக்கோல் கட்டும் கருவி63,00050,000
11.புதர் அகற்றும் கருவி (பிரஸ் கட்டர்)25,00020,000
12.நெற்பயிரில் களையெடுக்கும் கருவியினை உள்ளடக்கிய விசை களையெடுக்கும் கருவி19,00015,000
13.தட்டை வெட்டும் கருவி (3 ஹெச்.பிக்கும் குறைவான இயந்திரம் / மின்மோட்டாரினால் இயங்க கூடியது மற்றும் 20 ஹெச்.பிக்கும் குறைவான டிராக்டர் மற்றும் பவர் டிரில்லரால் இயங்கும்)20,00016,000
14.தட்டை வெட்டும் கருவி (3 ஹெச்.பிக்கும் மேல் 5 ஹெச்.பிக்கும் குறைவான டிராக்டர் மற்றும் பவர் டிரில்லரால் இயங்கும்)25,00020,000
15.விசைத் தெளிப்பான் (பவர் ஸ்பிரேயர், பேட்டரி ஸ்பிரேயர்)10,0008,000
16.டிராக்டரால் இயங்கக்கூடிய பூம் விசைத் தெளிப்பான்கள்63,00050,000

 

      குறிப்பு: கருவிகளின் விலைக்கேற்ப மானியத்தொகை வேறுபடும். மேற்கண்டவற்றில் அதிகபட்சமான விலை குறிப்பிடப்பட்டுள்ளது. 5 ஏக்கருக்குள் நிலம் வைத்திருப்பவர்கள் சிறு குறு விவசாயிகள். அதற்குமேல் நிலம் வைத்திருப்பவர்கள் இதர விவசாயிகள்.

கம்பின் அற்புத மருத்துவப் பலன்கள்

 

சிறுதானியங்களில் அதிகம் பயிரிடப்படுவது கப்பு தான். உலகில் கப்பு மட்டும் இது 55% இடத்தை பிடித்திருக்கிறது. ஆப்ரிக்க கண்டத்தில் தான் கப்பு முதல் முறையாக பயிர் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது ஆசிய, ஆப்பிரிக்க என 40க்கும் அதிகமான நாடுகளில் கப்பு விளைவிக்கப்படுகிறது. உலகில் கப்பு கால்நடை தீவனமாகவும் மனிதனுக்கு உணவு பொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கம்பில் உள்ள உயிர்ச்சத்துகள்

சிறுதானியங்களிலேயே 11.8 சதவிகிதம் புரோட்டீன் கம்பில் மட்டும் தான் உள்ளது. வைட்டமின் ஏ சத்துகள் கம்பில் அதிகம் நிறைந்துள்ளது.

100 கிராம் கம்பில்
42 கிராம் கால்சியம் சத்து,

1 முதல் 12 மில்லி கிராம் இரும்புச் சத்து,

பி 11 வைட்டமின் சத்து 0.38 மில்லி கிராம்,

ரைபோபிளேவின் 0.21 மில்லி கிராம்,

நயாசின் சத்து 2.8 மில்லி கிராம் உள்ளது.

மற்றும் 5 சதவிகிதம் அளவு எண்ணெய் உள்ளது. இதில் உடலுக்கும் தேவையான 70 சதவிகிதம் கொழுப்பு அமிலம் நிறைந்து உள்ளது.

கம்பு பயன்கள்

நாம் தாத்தா பாட்டி காலத்தில் காலையில் தினமும் வயல்களுக்கு சென்று வேலை செய்வர்கள். அவர்களுக்கு தினமும் காலை உணவு கம்பங்கூழ் அல்லது கம்பங்களி தான். அதனால் தான் அவர்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொள்ள உதவியது. நீரிழிவு நோய் உள்ளவர்கள் சர்க்கரை சத்துக்கள் நிறைந்த அரிசி போன்றவற்றை சாப்பிட கூடாது. அதற்கு பதிலாக கம்பங்கூழ் அல்லது கம்பங்களி போன்றவற்றை சாப்பிட்டு ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும்.

கம்பில் (Bajra in Tamil) நாம் உடலுக்கு தேவையான வேதிப்பொருள்கள், வைட்டமின்கள் நிறைந்துள்ளது. கம்பை தினமும் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நாம் உடலில் நோய் எற்படமால் நம்மை பாதுகாத்து கொள்ள உதவும்.

கம்பில் நார்சத்து அதிகம் இருப்பதால் வயிற்றில் புண் செரிமான கோளாறு உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வயிறு சம்பந்தமான அத்தனை பிரச்சனைகளும் நீங்கும்.

உடல் எடை அதிகம் இருப்பவர்கள் பசி எடுக்கிறது என்பதற்காக எதையாவது வாங்கி தின்று கொண்டே இருப்பர்கள். இதனால் உடல் எடை அதிகரித்து கொண்டே போகும். தினமும் உணவில் கம்பு சேர்த்து சாப்பிட்டு வந்தால் பசியை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்க உதவும்.