சனி

பெண்கள் உடல் எடை அதிகரிப்பதை தவிர்க்க வழிகள்

பெண்கள் உடல் எடையினை எளிதாக குறைக்க முடியாது. எனினும், பெண்கள் இந்த வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் உணவு பழக்கத்தை செயல்படுத்தி நீங்கள் விரைவில் உங்கள் எடையை குறைக்க உதவும்!

– தொடர்ந்து ஒரு குறைந்த கால‌ உணவு திட்டம்
– பசிக்கும் போது மட்டும் உணவு. அதுவும் சரியான‌ இடைவெளியில்
– நல்ல‌ உணவு பழக்கம் மற்றும் தேவையற்ற‌ உணவு பழக்கத்தில் இருந்து விலகி இருத்தல்

– தினமும் எடையை பதிவு செய்து வைத்திருப்பது மற்றும் அதன் முன்னேற்றத்தை அளவிடுதல்
– மது மற்றும் காற்றடைக்கப்பட்ட‌ பானங்களை தவிர்ப்பது
– செயற்கை இனிப்பாலான‌ சர்க்கரைகளை தவிர்தல்

– தினமும் உடற்பயிற்சி– மருந்துகள் மறுஆய்வு
– குறைந்தது 8 மணி நேரம் தூக்க‌ம்– தியானம் செய்தல்
– பேக்கரி மற்றும் பால் பொருட்களை குறைவாக‌து உட்கொள்ளுவது

– போதுமான குடிநீர்
– கனிமங்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவுகள் அல்லது கூடுதல் உணவு
– இன்சுலின் அளவு குறைவாக உள்ள உணவுகள்
– அடிக்கடி ஹார்மோன்கள் சரிபார்க்கப்பட வேண்டும்.

பெண்களின் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு மற்றும் அதையொட்டிய உடல் எடையை அதிகரிப்பு இதை கொண்டே கண்டறியப்பட்டது. எனவே விரைவில் நீங்கள் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு அறிகுறிகளை கண்காணிக்கலாம்.

சிகிச்சை வாழ்க்கை முறை மாற்றங்கள், மருந்துகள் அல்லது செயற்கை ஹார்மோன்களும் இதில் அடங்கும். எடை அதிகரிப்பு மற்றும் ஹார்மோன் பிரச்சினைகளால் பெண்களுக்கு அதிக அளவில் பாதிப்படைவீர்கள்.

நீங்கள் உங்கள் ஹார்மோன் பிரச்சினை எல்லா இடத்திலும் இருக்கும் என்று சந்தேகம் இருந்தால்,மருத்துவரிடம் உங்கள் உடல் நிலையை காட்டி ஏற்படும் மாற்றங்களைக் கொண்டு விழிப்புடன் இருங்கள்.

சர்க்கரைவள்ளிக் கிழங்கின் மருத்துவப் பயன்கள்

சர்க்கரை வள்ளிக்கிழங்கு, ருசிக்க மட்டும் சுவையானதல்ல, இதயத்தின் செயல்பாட்டிற்கும் நன்மை பயக்கும். இதில் நிறைய ஸ்டார்ச்சத்தும், நோய் எதிர்பொருட்களும் உள்ளன.மாவுச் சத்து நிறைந்த சர்க்கரை வள்ளிக் கிழங்கு, சராசரியான ஊட்டம் தரக்கூடியது.

100 கிராம் கிழங்கில் 70 முதல் 90 கலோரி ஆற்றல் கிடைக்கும்.மிகமிக குறைந்த அளவே கொழுப்பு உள்ளது. சர்க்கரை வள்ளிக் கிழங்கில் நிறைய அளவு நார்ச்சத்து உள்ளது.ஆன்டி-ஆக்சிடென்டுகளும், வைட்டமின்கள் மற்றும் தாதுஉப்புக்களும் அதிகம் உள்ளது. மாவுச்சத்தில் கார்போஹைட்ரேட் மூலக்கூறுகளாக உள்ளது.

இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை மெதுவாகவே உயர்த்தும்.எனவே நீரிழிவு பாதிக்கப்பட்டவர்கள் குறைந்த அளவு உண்ணலாம். மற்ற கிழங்கு வகைகளைவிட இதில் அதிக அளவில் பீட்டா கரோட்டின் மூலக்கூறுகள் உள்ளது. இவை இயற்கை நோய் எதிர் பொருட்களாகும். உடலில் வைட்டமின் ஏ ஆக மாறி தேக ஆரோக்கியம் மற்றும் தோல் - நரம்பு மண்டல செயல்பாட்டிற்கு உதவும்.

நுரையீரல் மற்றும் தொண்டை புற்றுநோய்க்கு எதிர்ப்புத் தன்மை கொண்டது. இரும்பு, கால்சியம், மக்னீசியம், மாங்கனீசு,பொட்டாசியம் போன்ற உடலுக்கு அவசியமான தாது உப்புக்களும் உள்ளது. இவை புரதம் மற்றும் கார்போஹைட்ரேட்களின் வளர்ச்சிதை மாற்றத்தில் பங்கெடுக்கும்.

நொதிகளின் செயல்பாட்டிற்கும் உதவும்.கிழங்கைவிட அதன் இலைகள் அதிக ஊட்டச்சத்து நிறைந்தது. 100 கிராம் புதிய இலைகளில் அதிக அளவில் இரும்பு,வைட்டமின் சி, வைட்டமின் கே, பொட்டாசியம், சோடியம், போரேட் ஆகியவை அடங்கி உள்ளது.

பூசணி–வெள்ளரிக்காய் புற்று நோயை குணப்படுத்தும்: புதிய ஆய்வில் தகவல்

புற்று நோயை குணப்படுத்த பலவித மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. தற்போது வெள்ளரிக்காய், பூசணிக்காய், தர்பூசணி மற்றும் பழச்சாறு புற்று நோயை குணப்படுத்தும் தன்மை வாய்ந்தது. இவை நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் திறன் படைத்தது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஆய்வை கலிபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த வில்லியம் லூகாஸ் மற்றும் சைனீஸ் அகாடமியை சேர்ந்த டேவிஸ், சான்வென் ஹூயாஸ் ஆகியோர் நடத்தினர்.
வெள்ளரி வகையை சேர்ந்த இந்த காய்கறிகள் மற்றும் பழ வகைகள் அவற்றின் இலைகளை பல ஆயிரம் ஆண்டுகளாக தங்கள் மருந்துகளில் இந்தியர்களும், சீனர்களும் பயன்படுத்தி வருகின்றனர்.
அதன் அடிப்படையில் இவர்கள் வெள்ளரி வகை காய்கறிகளில் ஆய்வு மேற்கொண்டனர். இக்காய்களில் பி.ஐ., பி.டி. என்ற இருவகை மரபியல் மூலக்கூறுகள் சிறப்பு தன்மையுடன் உள்ளன. இவை ‘டி.என்.ஏ’வுடன் தொடர்பு கொண்டவை.
இவைகள், புற்று நோய் செல்களை அழிக்கும் திறன் படைத்தவைகள் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.