சனி

பெண்கள் உடல் எடை அதிகரிப்பதை தவிர்க்க வழிகள்

பெண்கள் உடல் எடையினை எளிதாக குறைக்க முடியாது. எனினும், பெண்கள் இந்த வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் உணவு பழக்கத்தை செயல்படுத்தி நீங்கள் விரைவில் உங்கள் எடையை குறைக்க உதவும்!

– தொடர்ந்து ஒரு குறைந்த கால‌ உணவு திட்டம்
– பசிக்கும் போது மட்டும் உணவு. அதுவும் சரியான‌ இடைவெளியில்
– நல்ல‌ உணவு பழக்கம் மற்றும் தேவையற்ற‌ உணவு பழக்கத்தில் இருந்து விலகி இருத்தல்

– தினமும் எடையை பதிவு செய்து வைத்திருப்பது மற்றும் அதன் முன்னேற்றத்தை அளவிடுதல்
– மது மற்றும் காற்றடைக்கப்பட்ட‌ பானங்களை தவிர்ப்பது
– செயற்கை இனிப்பாலான‌ சர்க்கரைகளை தவிர்தல்

– தினமும் உடற்பயிற்சி– மருந்துகள் மறுஆய்வு
– குறைந்தது 8 மணி நேரம் தூக்க‌ம்– தியானம் செய்தல்
– பேக்கரி மற்றும் பால் பொருட்களை குறைவாக‌து உட்கொள்ளுவது

– போதுமான குடிநீர்
– கனிமங்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவுகள் அல்லது கூடுதல் உணவு
– இன்சுலின் அளவு குறைவாக உள்ள உணவுகள்
– அடிக்கடி ஹார்மோன்கள் சரிபார்க்கப்பட வேண்டும்.

பெண்களின் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு மற்றும் அதையொட்டிய உடல் எடையை அதிகரிப்பு இதை கொண்டே கண்டறியப்பட்டது. எனவே விரைவில் நீங்கள் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு அறிகுறிகளை கண்காணிக்கலாம்.

சிகிச்சை வாழ்க்கை முறை மாற்றங்கள், மருந்துகள் அல்லது செயற்கை ஹார்மோன்களும் இதில் அடங்கும். எடை அதிகரிப்பு மற்றும் ஹார்மோன் பிரச்சினைகளால் பெண்களுக்கு அதிக அளவில் பாதிப்படைவீர்கள்.

நீங்கள் உங்கள் ஹார்மோன் பிரச்சினை எல்லா இடத்திலும் இருக்கும் என்று சந்தேகம் இருந்தால்,மருத்துவரிடம் உங்கள் உடல் நிலையை காட்டி ஏற்படும் மாற்றங்களைக் கொண்டு விழிப்புடன் இருங்கள்.

சர்க்கரைவள்ளிக் கிழங்கின் மருத்துவப் பயன்கள்

சர்க்கரை வள்ளிக்கிழங்கு, ருசிக்க மட்டும் சுவையானதல்ல, இதயத்தின் செயல்பாட்டிற்கும் நன்மை பயக்கும். இதில் நிறைய ஸ்டார்ச்சத்தும், நோய் எதிர்பொருட்களும் உள்ளன.மாவுச் சத்து நிறைந்த சர்க்கரை வள்ளிக் கிழங்கு, சராசரியான ஊட்டம் தரக்கூடியது.

100 கிராம் கிழங்கில் 70 முதல் 90 கலோரி ஆற்றல் கிடைக்கும்.மிகமிக குறைந்த அளவே கொழுப்பு உள்ளது. சர்க்கரை வள்ளிக் கிழங்கில் நிறைய அளவு நார்ச்சத்து உள்ளது.ஆன்டி-ஆக்சிடென்டுகளும், வைட்டமின்கள் மற்றும் தாதுஉப்புக்களும் அதிகம் உள்ளது. மாவுச்சத்தில் கார்போஹைட்ரேட் மூலக்கூறுகளாக உள்ளது.

இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை மெதுவாகவே உயர்த்தும்.எனவே நீரிழிவு பாதிக்கப்பட்டவர்கள் குறைந்த அளவு உண்ணலாம். மற்ற கிழங்கு வகைகளைவிட இதில் அதிக அளவில் பீட்டா கரோட்டின் மூலக்கூறுகள் உள்ளது. இவை இயற்கை நோய் எதிர் பொருட்களாகும். உடலில் வைட்டமின் ஏ ஆக மாறி தேக ஆரோக்கியம் மற்றும் தோல் - நரம்பு மண்டல செயல்பாட்டிற்கு உதவும்.

நுரையீரல் மற்றும் தொண்டை புற்றுநோய்க்கு எதிர்ப்புத் தன்மை கொண்டது. இரும்பு, கால்சியம், மக்னீசியம், மாங்கனீசு,பொட்டாசியம் போன்ற உடலுக்கு அவசியமான தாது உப்புக்களும் உள்ளது. இவை புரதம் மற்றும் கார்போஹைட்ரேட்களின் வளர்ச்சிதை மாற்றத்தில் பங்கெடுக்கும்.

நொதிகளின் செயல்பாட்டிற்கும் உதவும்.கிழங்கைவிட அதன் இலைகள் அதிக ஊட்டச்சத்து நிறைந்தது. 100 கிராம் புதிய இலைகளில் அதிக அளவில் இரும்பு,வைட்டமின் சி, வைட்டமின் கே, பொட்டாசியம், சோடியம், போரேட் ஆகியவை அடங்கி உள்ளது.

பூசணி–வெள்ளரிக்காய் புற்று நோயை குணப்படுத்தும்: புதிய ஆய்வில் தகவல்

புற்று நோயை குணப்படுத்த பலவித மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. தற்போது வெள்ளரிக்காய், பூசணிக்காய், தர்பூசணி மற்றும் பழச்சாறு புற்று நோயை குணப்படுத்தும் தன்மை வாய்ந்தது. இவை நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் திறன் படைத்தது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஆய்வை கலிபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த வில்லியம் லூகாஸ் மற்றும் சைனீஸ் அகாடமியை சேர்ந்த டேவிஸ், சான்வென் ஹூயாஸ் ஆகியோர் நடத்தினர்.
வெள்ளரி வகையை சேர்ந்த இந்த காய்கறிகள் மற்றும் பழ வகைகள் அவற்றின் இலைகளை பல ஆயிரம் ஆண்டுகளாக தங்கள் மருந்துகளில் இந்தியர்களும், சீனர்களும் பயன்படுத்தி வருகின்றனர்.
அதன் அடிப்படையில் இவர்கள் வெள்ளரி வகை காய்கறிகளில் ஆய்வு மேற்கொண்டனர். இக்காய்களில் பி.ஐ., பி.டி. என்ற இருவகை மரபியல் மூலக்கூறுகள் சிறப்பு தன்மையுடன் உள்ளன. இவை ‘டி.என்.ஏ’வுடன் தொடர்பு கொண்டவை.
இவைகள், புற்று நோய் செல்களை அழிக்கும் திறன் படைத்தவைகள் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

வெள்ளி

இரவில் நெஞ்செரிச்சல் ஏற்படுவதை தடுப்பது எப்படி?

படுத்த நிலையில் இருப்பது ஆசிட் எளிதில் மேலே வர ஏதுவாகின்றது. தோள்பட்டை கீழே சிறிய தலையணை வைத்து உயர்த்திக் கொள்வதும், தலைக்கு சற்று உயர்த்தி தலையணை வைத்துக் கொள்வதும், இடது பக்கமாக திரும்பிப் படுப்பதும் இரவில் ஆசிட் மேலே ஏறாது இருக்க உதவும்.

* முழு வயிறு உணவோடு இரவு படுக்கைக்குச் செல்வது `ஆசிட்' சுரப்பதை அதிகரிக்கச் செய்யும். தூங்க செல்வதற்கு 2-3 மணிநேரம் முன்பாக உணவு உட்கொள்வதும், இரவில் `ஸ்நாக்ஸ்' எடுத்துக்கொள்ளாமல் இருப்பதும் `ஆசிட்' சுரப்பதை நன்கு கட்டுப்பாட்டில் வைக்கும்.

* சாக்லேட், கேக், காபி போன்றவை மாலைக்குப் பிறகு எடுத்துக்கொள்வது `ஆசிட்' சுரப்பதை அதிகரிக்கச் செய்யும். எலுமிச்சை, நெல்லி, தக்காளி, பாட்டிலில் அடைக்கப்பட்ட செயற்கை பானங்கள், கொழுப்புசத்து மிகுந்த உணவுகளை இரவு உணவில் கண்டிப்பாய் தவிர்த்து விடுங்கள்.

* இரவில் உடற்பயிற்சி செய்யாதீர்கள். இரவு உணவிற்குப் பிறகு மெல்ல நடையும், அமைதியும் `ஆசிட்' சுரப்பதை வெகுவாய் கட்டுப்படுத்தும்.

* அதிக உணவு `அசிடிடி'க்கு ஒரு காரணம். சிறு சிறு உணவாக அவ்வப்போது எடுத்துக் கொள்ளுங்கள்.

* வாரத்திற்கு இருமுறைக்கு மேல் `அசிடிடி' இருந்தால் உடனடி மருத்துவரை அணுகுங்கள்.

* இரவில் ஆல்கஹால் மிகவும் கெடுதலே.

* முட்டியை மடக்கி கீழே குனியுங்கள். உடலை முன் மடித்து குனியாதீர்கள்.

* இதற்கான மாத்திரைகளை மருத்துவ ஆலோசனையுடன் பயன்படுத்துங்கள்

புற்றுநோயை தடுக்கும் எலுமிச்சை

எலுமிச்சையின் மருத்துவ குணங்கள் ஏராளம், அவற்றில் சில:-

* எலுமிச்சை விட்டமின் சி சத்து நிறைந்துள்ளதால் ஸ்கர்வி என்னும் நோயைப் போக்க வல்லது. (விட்டமின் `சி' குறைவால் பற்களுக்கும், ஈறுகளுக்கும் இடையே இடைவெளி ஏற்பட்டு ரத்தம் கசிகிற நிலையாகும். மேலும் இது ரத்த சோகையை உண்டு பண்ணுவதாகும். கணுக்கால் மற்றும் காலிலுள்ள தசைகளில் சற்று சிவந்த வீக்கத்தையும் தருகிற நோய்).

* வயிற்றிலுள்ள வாயுவைப் போக்கி சீரண உறுப்புகளை பலப்படுத்தக் கூடியதாகும்.

* வயிற்றுக் கோளாறுகள் அத்தனையும் எலுமிச்சையால் போகும்.

* ஒவ்வாமையால் வரும் நோய்களைத் தடுக்க கூடியது.

* தொற்று நோய்க் கிருமிகளை அழிக்க வல்லது.

* யுனானி மருத்துவர்கள் இதன் சர்பத்தை நீரிழிவுக்கு பரிந்துரை செய்வார்கள்.

* இருமல், கக்குவான், சளி, காய்ச்சல், பித்த சம்பந்தமான நோய்கள் எலுமிச்சையால் விலகும்.

எலுமிச்சை சாற்றை மேல் பூச்சாகப் பூச தேமல் தொழு நோய் வெண்ம நிறத்தோல் ஆகியன குணமாகும்.

* எலுமிச்சையின் இலைகளும், காம்புகளும் தொற்று நோய்க் கிருமிகளைப் போக்க வல்லது.

* 100கிராம் எலுமிச்சம் பழச்சாற்றில் 4 முதல் 50மி.கி வரையிலான விட்டமின் சி சத்து இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் "கரோட்டின்'' விட்டமின் `பி' சத்துக்களும் உள்ளன.

* எலுமிச்சையில் உள்ள "பைப்ளேவனாய்ட்'' என்னும் சத்து ரத்த நாளங்களின் உட்சுவர்ப் பகுதியை பலப்படுத்துகிறது. குறிப்பாக சிறைகள், தமனிகள் ஆகியவற்றை செம்மைப்படுத்துகிறது. இதனால் நரம்புச் சுற்று தவிர்க்கப்படுகிறது. மேலும் "ஆர்ட்டிரியோ செலிரோஸிஸ்'' என்னும் ரத்த நாளங்களின் அடைப்பையும் தடுத்து தடையற்ற குருதி ஓட்டத்தைத் தருகின்றது. மேலும் ஈரல் வயிறு, குடல் பகுதிகளில் ஏற்படும் நோய்த் தொற்றினைப் போக்க வல்லது.

* பழச்சாற்றுடன் போதிய தேன் கலந்து பருகி வந்தால் உற்சாகத்தை தருவதோடு உடலிலுள்ள அனைத்து தாதுக்களும் பலம் பெறுகின்றன.

* நகச் சுற்று என்னும் கொடும் நோய் குணமாக எலுமிச்சம் பழத்தை நகத்துக்கு செருகி வைப்பது பன்னெடுங்காலமாகப் பழக்கத்தில் உள்ளது.

* எலுமிச்சை சாறு பருகுவதால் மார்பகப் புற்று நோயை உண்டாக்கும் செல்கள் பரவுவது தடுக்கப்படுவதோடு, புற்றுநோய் வருவதையும் தடுக்கிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

* சிறுநீரகக் கற்கள் உருவாவதை எலுமிச்சை தடுக்கிறது. அன்றாடம் எலுமிச்சை சாறு பருகுவதால் "யூரினரி சிட்ரேட்'' என்னும் தாதுப் பொருள் உற்பத்தியாகி சிறுநீரில் படிகங்கள் உருவாகி அவை பின்னர் சிறுநீரகக் கற்களாக மாறுவதைத் தடுக்கிறது.

* எலுமிச்சை சாற்றில் பொட்டாசியம் சத்து மிகுந்திருப்பதால் மானுடர்க்கு ஏற்படும் அதிக ரத்த அழுத்தத்தை குறைப்பதோடு வாந்தி, குமட்டல், மயக்கம் ஆகியவற்றைத் தணிக்க வல்லது.

* எலுமிச்சைசாறு நுண் கிருமிகளை விரட்ட வல்லது. பூஞ்சைக் காளானைப் போக்க வல்லது. துர்நாற்றத்தை நீக்கக் கூடியது.

* தொண்டைக்கட்டு ஏற்பட்ட போது அல்லது தொண்டையில் தொற்று நோய் கண்ட போது உப்புத் தண்ணீரால் வாய் கொப்பளிப்பது வழக்கம். அதற்குப் பதிலாக எலுமிச்சை சாற்றை சிறிது நீரில் கலந்து வாய் கொப்பளிப்பதால் விரைவில் குணம் தெரியும்.

* எலுமிச்சை சாற்றை சிறிது நேரம் வாயில் அடக்கி வைப்பதால் பல்வலி போவதோடு ஈறுகளினின்று ரத்தம் கசிவது நிற்கும்.

100 கிராம் எலுமிச்சம் பழத்தில் அடங்கியுள்ள மருத்துவ சத்துக்கள்:

100 கிராம் எலுமிச்சம் பழ ரசத்தில் 50 கிராம் நீர்சத்து, 1.0 கிராம் கொழுப்புச்சத்து, 1.4 கிராம் புரதச்சத்து , 11கிராம் மாவுச்சத்து , 0.8கிராம் தாதுப்பொருட்கள் , 1.2 கிராம் நார்ச்சத்து , 0.80 மி.கிராம் சுண்ணாம்புச்சத்து, 0.2மி.கிராம் பாஸ்பரஸ், 0.4மி.கி இரும்புச்சத்து, 12மி.கிராம் கரோட்டீன், 0.2 மி.கி தயாமின், 0.1 மி.கி நியாசின், 1.8 மி.கி விட்டமின் ஏ, 1.5மி.கி விட்டமின் பி, 63.0 மி.கி விட்டமின் சி ஆகிய சத்துக்கள்

கழுத்து வலி வராமல் தவிர்க்க வழிகள்

தற்போது கழுத்துவலி இளம் வயதினரை அதிகமாக பாதிக்கிறது. இதற்கு என்ன காரணம் என்றால் இன்றைய இளைஞர்களின் உணவுப்பழக்க வழக்கம் மற்றும் நவீன வாழ்க்கை முறை, பைக், கார் போன்றவற்றில் மோசமான ரோட்டில் பயணம் செய்வது,அதிகநேரம் குனிந்து அமர்ந்து கம்ப்யூட்டர் வேலை செய்வது, எடையுள்ள பொருட்களை திடீரென தூக்குவது, உயரமான தலையணை வைத்து அதிக நேரம் படிப்பது, டிவி பார்ப்பது போன்ற செயல்களால் கழுத்து பகுதியில் சவ்வு பலகீனமடைந்து வலி ஏற்படுகிறது.

கழுத்துவலி வராமல் இருக்க உயரமான தலையணை, சமன் இல்லாத படுக்கையை உபயோகப்படுத்தக்கூடாது. இருசக்கர வாகனங்கள், கார், ஆட்டோவில் நீண்டதூர பயணங்களை தவிர்க்க வேண்டும்.

அதிக எடை தூக்க கூடாது. மருத்துவரின் ஆலோசனைப்படி சில உடற்பயிற்சிகள் செய்யலாம். இது கழுத்தை சுற்றியுள்ள தசைகளை பலப்படுத்தும்.அதிக நேரம் ஒரே இடத்தில் குனிந்து வேலை செய்வதை தவிர்க்க வேண்டும். எங்கள் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சையில் கழுத்து வலியை முற்றிலும் குணப்படுத்த முடியும்.

சர்க்கரை நோயா? பயம் வேண்டாம்

சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள டாக்டர் கமலிஸ்ரீபால் இங்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்குகிறார்.

* எப்பொழுதுமே ரத்தத்தில் சர்க்கரையின் அளவு உணவினைப் பொறுத்தே அமைகின்றது. என்ன சாப்பிடலாம் என்ன சாப்பிடக்கூடாது என்பதனை நீங்கள் அறிந்தால் மிக ஆரோக்கியமான வாழ்க்கை உங்கள் கையில்தான். உங்கள் குடும்பத்தில் தாய், தந்தையருக்கு சர்க்கரை நோய் தாக்குதல் இருந்தாலோ அல்லது சர்க்கரை நோய் அறிகுறிகள் உங்களுக்கு இருந்தாலோ நீங்கள் `டயட்' முறையினை பின்பற்ற வேண்டும்.

* நல்ல நார்ச்சத்து, கொழுப்பில்லாத பால், மோர், பரிந்துரைக்கப்பட்ட பழங்கள், பச்சைக் காய்கறிகள், கீரைகள் இவற்றினை அளவோடு உண்டாலே நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

* ஒரு டீஸ்பூன் வெந்தயத்தினை இரவில் 100 மி.லி., தண்ணீரில் ஊற வைத்து, காலை அந்த நீரினையும், வெந்தயத்தினையும் எடுத்துக்கொள்ள இன்று மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகின்றது.

* 60:20:20 என்ற விகிதத்தில் நார்ச்சத்து மிகுந்த கார்போ ஹைடிரேட், புரதம், நல்ல கொழுப்பு இருக்கவேண்டும். 1500-1800கலோரி சத்து அவரது வயது, உழைப்பினைப் பொறுத்து கூறப்படுகின்றது.

* உலர்ந்த பழங்கள் உடலுக்கு நல்லது என்றாலும், சர்க்கரை அளவை கூட்டி விடும். ஆனால், பாதாம் 4-6 வரை எடுத்துக் கொள்ளலாம்.

* தக்காளி ஜுஸ் எடுத்துக் கொள்ளுங்கள்.

* முழு தானியம், ஓட்ஸ், சிறு தானியங்கள், முளை தானியங்கள் இவையே பிரதான உணவாக இருக்கவேண்டும்.

* கொழுப்பற்ற பால் தினமும் 2 கிளாஸ் எடுத்துக் கொள்ளுங்கள்.

* பட்டாணி, பீன்ஸ், பசலை, பயறு வகைகள் மிக மிக சிறந்தவை.

* ஒமேகா-3 என்ற சத்து மாத்திரையாவது எடுத்துக் கொள்ளுங்கள். மீன் உண்ணும் பழக்கம் இருந்தால் அவர்கள் நன்றாக மீன் எடுத்துக் கொள்ளலாம்.

* பப்பாளி, ஆப்பிள், கொய்யாப்பழம், பேரிக்காய், ஆரஞ்சு இவைகளை அளவோடு எடுத்துக் கொள்ளலாம்.

* பெரிய உணவாக ஒரே நேரத்தில் எடுத்துக் கொள்ளாமல் சிறு சிறு உணவாக நாள் ஒன்றுக்கு 5 முறை எடுத்துக்கொள்ளுங்கள்.

* மூன்று வேளை உணவு அவசியம். 4-5 மணிக்கொரு முறை உணவு எடுத்துக் கொள்வது சர்க்கரை அளவினை சீராய் வைக்கும். எப்போதுமே குறைந்த கார்போஹைடிரேட் கொண்ட ஏதாவது ஒரு உணவினை வெளியில் செல்லும்போது உடன் எடுத்துச் செல்லுங்கள்.

* உங்கள் சர்க்கரை அளவினை நீங்களே தெரிந்துக் கொள்ளும் உபகரணத்தினை கண்டிப்பாய் உடன் வைத்திருங்கள். இதில் நீங்களே உங்களை பரிசோதித்துக் கொள்ளலாம்.

* உடலுக்குச் சத்தான உணவை தேர்ந்தெடுங்கள். சர்க்கரை, உப்பு இரண்டுமே குறைவாக இருப்பதே நல்லது.

* வேக வைத்த உணவுகள், நார்ச்சத்து உணவு, கொழுப்பில்லாத பால், பால் சார்ந்த பிரிவுகள், முழுதானிய உணவு, காய்கறி, பழ உணவுகள் மிக சிறந்தது.

* 3-4 மாதத்தில் உங்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு என்பதனை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

* பிதீ கி1சி எனப்படும் இந்த பரிசோதனையில் 6-7சதவீதம் என்ற அளவு முறையானது. அதற்கு கூடுதலாக இருப்பின் கடந்த சில மாதங்களாக சர்க்கரை அளவு அதிகரித்து உள்ளது என்பதனையும் அதன் எண்ணைக் கொண்டு (உ-ம் 10.5 சதவீதம்) எந்த அளவு அதிகரித்து உள்ளது என்பதனையும் தெரிந்து உடனடி சீர்ப்படுத்த முயல வேண்டும்.

* ஆல்கஹால் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் ஆபத்தானது. இதில் எந்த சத்தும் இல்லை. ஆனால் கலோரி சத்து மட்டுமே அதிகமாக உள்ளது. மது, நீரிழிவு மருந்துடன் இணைந்தால் பிரச்சினைகளை உருவாக்குகின்றது. வெறும் வயிற்றில் ஆல்கஹால் எடுத்துக் கொண்டால் நீரிழிவு நோயாளிகளுக்கு கூடுதல் ஆபத்தை விளைவிக்கும்.

* உடற்பயிற்சி மூலம் எடை குறைப்பு செய்யுங்கள்.

* வருடத்திற்கு 4 முறையாவது ரத்த அழுத்தத்தினை பரிசோதனை செய்து பாருங்கள்.

* பாதங்களை அன்றாடம் கவனியுங்கள். அடி, காயம் இவை இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். பாதங்களை சாக்ஸ் அணிந்து கூட சிறிது வெது வெதுப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.

* முறையான சர்க்கரை அளவு இல்லாவிடில் சிறு சிறு ரத்தக்குழாய்கள் பாதிப்பிற்குள்ளாகும். குறிப்பாக, கண்கள் பாதிக்கப்படும்.எனவே, வருடம் ஒருமுறை கண் பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்.

* நீரிழிவு பல், ஈறு இவற்றினை பாதிக்கும். கவனம் தேவை.

* பிரிவு 2 வகை நீரிழிவு நோயாளிகளுக்கு உணவில் மாற்றமும், உடல் உழைப்பு கூடுதலும் 80 சதவீதம் வரை சர்க்கரை அளவை சீராக்கி விடும்.

* ஆப்பிள் சுமாரான அளவு ஒன்று 21கி கார்போ ஹைடிரேட், 3.7 நார்ச்சத்து, .5கி கொழுப்பு, .3கி புரதம், கலோரி 81 உடையது.

* ஒரு சாதரண சிறிய வாழைப்பழம் 23.7கி கார்போ ஹைடிரேட், 2.4கி நார்ச்சத்து, .5கி கொழுப்பு, 1.0கி புரதம், 93 கலோரி சத்து உடையது.

* காபி குடித்த பிறகு பலருக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடுகின்றது. பால் இல்லாத காபி குடித்தாலும் சிலருக்கு இது இருக்கின்றது. சிலருக்கு க்ரீன் டீ, சத்து பானம் போன்றவைக் கூட சர்க்கரையின் அளவினை கூட்டுகின்றது.காபியின் சில ரசாயனங்கள் பிரிவு 2 நீரிழிவினை தடுக்கவும் செய்கின்றன. பொதுவில் அவரவர் உடல் வாகினை தெரிந்து இவற்றினை எடுத்துக்கொள்வது நல்லது.

* சர்க்கரை இல்லாதது என எழுதப்பட்ட உணவினாலும் ஏன் இதனை எடுத்துக்கொண்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு ஏறுகின்றது என சிலர் எண்ணலாம். அந்த உணவில் மாவுச்சத்து, கொழுப்புச்சத்து கூடுதலாக இருக்கலாம். கவனம் தேவை.

* நோய் காலத்தில் உடல் அந்த நோயினை எதிர்த்துப் போராடும் பொழுது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடும். நன்கு தண்ணீர் குடியுங்கள். மருந்துகள் எடுத்துக்கொள்ளும் பொழுது இவை சர்க்கரையின் அளவினை கூட்டுபவையா என்ற மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள்.

* அதிக மன உளைச்சல் உள்ள பொழுது உடலில் வெளியாகும் ஹார்மோன்களால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடலாம்.இது பிரிவு 2 வகை நீரிழிவு நோயாளிகளிடையே சாதாரணமாகக் காணப்படும் ஒன்று. எனவே, பிராணாயாமம், யோகா, தியான முறையில் மனதினை அமைதியாய் வைத்திருங்கள்.

* பச்சை நிற காலிப்ளவர், பசலைக் கீரை, பீன்ஸ் இவை நிறைய நார்ச்சத்து கொண்டவை. மாவுச்சத்து குறைவாகக் கொண்டவை.

* சைவ உணவும், காய்கறிகளை அதிகமும் உட்கொண்ட 43 சதவீதம் மக்கள் (பிரிவு 2-வைச் சார்ந்த நீரிழிவு நோயாளிகள்)மருந்திலிருந்தே வெளிவர முடிந்தது என அமெரிக்க நீரிழிவு ஆய்வகக் குறிப்பு கூறுகின்றது.

* நீரிழிவு நோயாளிகள் எளிதில் இருதய நோய்க்கு ஆட்படுவர். ஆகவே மேற்கூறிய உணவுமுறை அவர்கள் எடையை குறைத்து, கெட்ட கொலஸ்டிராலையும் குறைக்க பெரிதும் உதவுகின்றது.

பொருத்தமான உணவு :

ஓட்ஸ் போல் சர்க்கரை அளவினை கட்டுப்படுத்தி, சீராக்கும் ஒரு உணவுக்கு நிகர் ஓட்ஸ் மட்டுமே. ஓட்ஸ் உணவும் கார்போ ஹைடிரேட் வகையினைச் சேர்ந்ததுதான். இருப்பினும், இது நல்ல கார்போ ஹைடிரேட். செரிக்க கூடுதல் நேரம் எடுத்துக்கொள்ளும். எளிதில் ரத்தத்தில் சர்க்கரை அளவினை ஏற்றாது.

அடிக்கடி அல்லது அன்றாடம் ஓட்ஸ் உணவினை எடுத்துக்கொள்ள ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படும். இதிலுள்ள நார்சத்து வயிற்றினை நிறைவாக வைப்பதோடு எடை குறைப்பிற்கும் உதவும். டைப் 2 நீரிழிவு பிரிவினரின் எடை குறைப்பிற்கு உதவும்.
 

தலை முடி கொட்டுவது ஏன்? கூந்தலை வளர்ப்பது எப்படி?

முடி கொட்டுதல் ஏன்?.

1. நமது உடம்பில் பித்தம் அதிகரித்து காணப்பட்டால், முடிக் கொட்டுதல் உண்டாகும்.
2. அடிக்கடி காபி, டீ0 போன்ற பானங்கள் பருகுவதாலும் அதிக அளவில் மதுபானங்களை உபயோகிப்பதாலும், அடிக்கடி அசைவம் உண்பதாலும், புகைப்பிடிப்பதாலும் தலைமுடி வெகுவாகப் பாதிக்கப்படுகிறது.
3. எண்ணெய்யில் வறுத்த உணவுகள் (fried foods)
என்ணெய் பதார்த்தங்கள்(oily food)
புளிப்பு உணவுகள் (acidic food )
இவைகளை அடிக்கடி அதிக அளவில் உண்பதாலும் தலைமுடி கொட்டுதல், நரை போன்ற குறைபாடுகள் காணும்.
4. அடிக்கடி ரசாயன மருந்துகளை (chemical medicines) உட்கொள்வதாலும் முடிகொட்டுதல் உண்டாகும்.
5. உடம்பில் இரத்தம் குறைந்து உண்டாகும் இரத்த சோகை (anemia) நோயினாலும் உடம்பில் காணும் பொதுவான பலஹீனத்தாலும் (general debility), மனச்சோர்வு, மன உளைச்சல், கோபம் போன்ற காரணங்களினாலும் தலைமுடி சார்ந்த குறைகள் உண்டாகும்.
6. டைபாய்டு காய்ச்சல் மிக முற்றிய நிலையிலும், பொடுகு மற்றும் பேன் அதிகரித்த நிலையிலும் ஹார்மோன் பற்றாக்குறை (hormonal imbalance) நிலையிலும் முடிக் கொட்டுதல் உண்டாகும் .
7. அடிக்கடி ரசாயனம் கலந்த ஷாம்பு மற்றும் சோப்புகளை உபயோகிப்பதாலும் முடிக்கொட்டுதல், முடி வெடித்தல், முடி செம்பட்டையாதல் ஆகியன உண்டாகலாம்.


கூந்தல் வளர்ச்சியில் அரோமா எண்ணெய்கள்:

1. ரோஸ்மேரி எண்ணெய் (rosemarry oil ): 100 கிராம் தேங்காய் எண்ணெயைக் கலந்து தினசரி தலைக்கு தேய்த்துவர முடி அடர்த்தியாக வளரும்.
2. காஸ்டஸ் எண்ணெய் (costous oil ) : 100 கிராம் தேங்காய் எண்ணெய்யுடன் 5 துளி காஸ்டஸ் என்ணெய் கலந்து, தினசரி தலைக்குத் தேய்த்துவர-பொடுகுத் தொல்லை முற்றிலும் நீங்கி முடி அடர்த்தியாய் வளரும் .

3. ஜூனிஃபர் பெரி (junifer berry) –5 சொட்டு
எலாங் எலாங்(yalang yalang) –7 சொட்டு
நல்லெண்ணெய் –100 மி.லி
ஆமணக்கு எண்ணெய் -10மி.லி

இவையனைத்தையும் ஒன்றாகக் கலந்து தலை முழுவதும் பூசி மசாஜ் செய்ய வேண்டும் . மசாஜ் செய்து 6 மணி நேரம் கழித்து குளிக்க, முடி உதிரல் குறைபாடு உடனே நீங்கும்.

4. லாவண்டர் எண்ணெய்(lavener oil ) -5 சொட்டுகள்
லெமன் எண்ணெய் (lemon oil ) -10 சொட்டுகள்
ரோஸ்மேரி எண்ணெய்(rosemerry oil) -10 சொட்டுகள்
டீடிரி எண்ணெய்(tea tree oil ) –10சொட்டுகள்
தேங்காய் எண்ணெய் -100மி.லி

இவைகளை ஒன்றாகக் கலந்து வைத்துக்கொண்டு தினசரி தலைக்கு தேய்த்துவர அடர்த்தியுடன் கருமையாய் முடி வளரும்.

5. ஸ்பெக்நாட் எண்ணெய்(spicknade oil) –8சொட்டுகள்
டீ டிரி எண்ணெய் (tea tree oil) -8சொட்டுகள்
லெமன் கிராஸ் எண்ணெய்(lemongrass oil ) -8 சொட்டுகள்
லெமன் எண்ணெய்(lemon oil) -8சொட்டுகள்
சிடார்வுட் எண்ணெய்(cidarwood oil ) -8சொட்டுகள்
நல்லெண்ணெய் -20 மில்லி

இவைகளைக் கலந்து வாரம் இருமுறை மசாஜ் செய்து குளித்து வர, தீராத பொடுகும் தூர ஓடும்.

கூந்தல் மசாஜ் செய்ய சில எண்ணெய்கள்:
1. தேங்காய் எண்ணெய்
2. ஆமணக்கு எண்ணெய்
3. கருஞ்சீரக எண்ணெய்
4. ஆலிவ் எண்ணெய்
5. நெல்லிக்காய் எண்ணெய்
6. செம்பருத்தி எண்ணெய்
7. கரிசலாங்கண்ணி எண்ணெய்
8. பொன்னாங்கண்ணி எண்ணெய்
9. கற்றாழை எண்ணெய்
10. சவுரிப்பழ தைலம்

மேற்படி எண்ணையை கிண்ணத்தில் தேவையான அளவில் எடுத்து, வாயகன்ற பாத்திரத்தில் நீரை கொதிக்கவிட்டு, கிண்ணத்தில் நீரில் அமிழ்த்தி எண்ணையை சூடு செய்து உபயோகிக்க வேண்டும்.

தலைமுடி தாராளமாய் வளர சில குறிப்புகள்

1. சாதம் வடித்த நீருடன் (வடிகஞ்சி) சிகைக்காய் பவுடரைக் கலந்து தேய்து வாரம் இருமுறை குளித்துவர, முடி அடர்த்தியாக வளரும்.
2. ஆலிவ் எண்ணெய் சிறிது சூடாக்கி, தினசரி தேய்த்து 6 மணி நேரம் கழித்து குளித்துவிடவும். முடி பளபளப்பாகவும் அடர்த்தியாகவும் வளரும்.
3. கூந்தல் வளர்ச்சிக்கு உடல் போஷாக்கு மிகமிக முக்கியம். விதவிதமான கூந்தல் தைலங்களை உபயோகிப்பதைவிட சத்தான ஆகாரங்கள் கூந்தல் வளர்ச்சிக்கு மிகவும் ஏற்றது.
4. கறிவேப்பிலை உணவில் தாராளமாய் சேர்த்துக்கொள்ளுங்கள் தலைமுடி செழிப்பாய் வளரும்.
5. சப்பாத்திக் கள்ளிப் பூவை சேகரித்து விழுதாய் அரைத்து தேங்காய் எண்ணெயிலிட்டுக் காய்ச்சி உபயோகித்து வர முடி அடர்த்தியாய் வளரும். முடி கொட்டுதல் நீங்கும்.
6. செம்பருத்திப்பூவை கசக்கிச் சாறு எடுத்து முடி உதிர்ந்து சொட்டையாகியுள்ள இடத்தில் தேய்த்துவர முடி வளர ஆரம்பிக்கும்.
7. ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய்யில் மூன்று ஸ்பூன் தேயிலையை கலந்து சூடாக்கி, தைலப் பதத்தில் இறக்கிவிடவும்,. இதனை தினசரி பயன்படுத்திட முடி கருமையாய் செழித்து வளரும் .
8. வேப்பம்பூவை அடுப்பில் சிறிது வதக்கி, கசக்கி இளஞ்சூட்டுடன் உச்சந்தலையில் தேய்த்துவர முடி தாராளமாய் வளரும்.
9. தாமரை இலையை அரைத்துச் சாறெடுத்து நல்லெண்ணெய்யுடன் கலந்து தைலமாக காய்ச்சிக் கொள்ளவும் . இதனை தலை சொட்டையான இடத்தில் தேய்த்துவர, அந்த இடத்தில் முடி கருகருவென வளர்ந்துவிடும்.
10. மருதாணி இலையை தேங்காய் எண்ணெயிலிட்டு காய்ச்சி வடிகட்டி வைத்துகொள்ளுங்கள் . இதனை தினசரி தலைக்குத் தடவிவர செம்பட்டை மாறி முடி கருமையாகும்.
11. வெந்தயத்தை தண்ணீர்விட்டு விழுதாய் அரைத்து தலையில் தேய்த்து, அரைமணிநேரம் வைத்திருந்து குளித்துவிடுங்கள் . அடிக்கடி பயன்படுத்திவர ,முடி வளரும், முடி கொட்டுதல் நீங்கும் .
12. 1 ஸ்பூன் இஞ்சில்ச் சாற்றில் சிறிது தேன் கலந்து அதிகாலையில் சாப்பிட்டுவர, பித்த நரை, மற்றும் இளநரை மறையும்.
13. பாதாம் எண்ணெய்யினால் தினசரி தலையில் வேர்க்காலில் (scalp) குறைந்தது 15 நிமிடங்கள் மசாஜ் செய்துவர முடி வளர்ச்சி அதிகமாகும் .
14. வேப்பிலையை தண்ணீர்லிட்டு கொதிக்க வைத்து அந்த நீரில் தலையைக் கழுவி வர முடி வளர்ச்சி அடர்த்தியாகும்.
15. பச்சைக் காய்கறிகளை நிறைய சாப்பிடுவதும் பால், பழங்கள், முளைக்கட்டிய தானியங்கள், வெண்ணெய், கோதுமை உணவுகள், சோயாபீன்ஸ், பருப்பு வகைகளை நிறைய உணவாகக் கொள்வதும் முடியை நன்கு வளர்த்திட ஏதுவாகும்.
16. முடி நன்கு வளர முடி சார்ந்த பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க, இயற்கை முறை ஷாம்புகளையே (natural shampoo) உபயோகியுங்கள்.
17. தலைமுடியை நெல்லிக்காய் பொடி அல்லது சிகைக்காய் கொண்டு மசாஜ் செய்து அலசிவாருங்கள். முடி வளர்ச்சி உண்டாகும்.
18. அடிக்கடி ஆயில் மசாஜ், முடியின் வேர்க்காலுக்கு (scalp) செய்து வாருங்கள்.
19. மஹா பிருங்கராஜ தைலம்’ அல்லது ‘நெல்லிக்காய் தைலம் இவைகளைக் கொண்டு தலைமுடிக்கு மசாஜ் செய்திட, முடி தாராளமாக வளரும்.
20. உடம்பில் மலச்சிக்கல் உண்டானால், உடல் உஷ்ணம் அதிகமாகி, உடம்பில் பித்தம் அதிகரித்து, தலைமுடி கொட்ட ஆரம்பித்துவிடும். எனவே மலசிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
21. தினசரி செய்துவரும் எளிய உடற்பயிற்சியும் தலைமுடி வளர துணை செய்யும்.
22. கீரைசூப், காய்கறி சூப், கேரட் சாறு இவைகளை அடிக்கடி சாப்பிடுவர தலைமுடி நன்கு வளரும்.
23. கொத்தமல்லி இலைச்சாற்றினைக் கொண்டு, தலைமுடியின் வேர்க்காலில் (scalp) மசாஜ் செய்துவர தலைமுடி கருமையாய் வளரும்.
24. தேங்காய் எண்ணெய்யுடன் சிறிது எலுமிச்சைச்சாறு கலந்து தலையில் மசாஜ் செய்துவர, முடி நன்கு வளரும்.
25. பெருஞ்சீரகத்தை(சோம்பு) விழுதாய் அரைத்து, வாரம் மூன்றுமுறை தலையில் தேய்த்துக் குளித்துவர, முடி கருமையாய் வளரும்.

இது வரை முடி உதிர்தலையும், அதை தடுப்பது பற்றியும், முடி வளர்ப்பது பற்றியும் பார்த்து வந்தோம். அடுத்து வழுக்கை தலையில் முடி வளர்ப்பது எப்படி என்பதை பார்ப்போமா...

கூந்தலின் வகைகளும் அதை பராமரிக்கும் வழிமுறைகளும்

உங்கள் கூந்தல் எத்தகையது?.

உங்கள் கூந்தலை நான்காக பிரிக்கலாம். உங்கள் கூந்தல் எந்தவகையைச் சார்ந்தது என்று கண்டுகொண்டீர்களானால், அதைப் பராமரிப்பது சுலபம்.

1. சாதாரண கூந்தல்(Normal hair)
2. வறண்ட கூந்தல்(dry hair)
3. எண்ணெய்ப் பசையுள்ள கூந்தல்(oil hair)
4. பலவீனமான கூந்தல்(weak hair)

சாதாரண கூந்தல் (normal hair)

நன்கு அடர்த்தியாகவும், சுத்தமாகவும், பளபளப்பாகவும், வளமையாகவும் இருக்கும் இத்தகைய கூந்தல் நன்கு வளரும் தன்மையுடையது .

வறண்ட கூந்தல் (dry hair)

இத்தகைய கூந்தல் நிறம் மங்கிய நிலையில் காணப்படும். முடியின் நுனிப்பகுதியில் வெடிப்பு காணப்படும். முடியின் நடுபகுதியில் உண்டாகும் முடிச்சுகளால் முடி அடிக்கடி உடைந்து உதிரும். மயிர்க்கால்கள் மற்றும் முடி வறண்டு காணப்படுவதால், அடிக்கடி எண்ணெய் மசாஜ் செய்து பராமரித்து வரவேண்டும் .

எண்ணெய்ப் பசையுள்ள கூந்தல் (oil hair )

கூந்தலில் அளவுக்கதிமான எண்ணெய்ப்பசை காணப்படும். முடி மிகவும் மெலிந்து உறுதியற்று காணப்படும். எண்ணெய்ப் பசை அதிகமிருப்பதால் விரைவில் அழுக்கு மற்றும் தூசிகள் சேர்ந்து பொடுகு மற்றும் அரிப்பு உண்டாகி முடி கொட்டல் ஏற்படும்.

பலவீனமான கூந்தல் (weak hair)

நமது தவறான அணுகுமுறைகளினால் மட்டுமே பலவீனமான கூந்தல் உண்டாகிறது என்பதை உறுதியாகச் சொல்லலாம்.

1. அடிக்கடி உப்புத்தண்ணீரில் குளிப்பது.
2. தலைமுடிக்கு அடிக்கடி பிளீச் செய்வது
3. தலைமுடிக்கு அடிக்கடி சாயம் போடுதல் (colouring)

நெடுநேரம் வெயிலில் அலைவது போன்ற காரணங்களால் பலவீனமான கூந்தல் உண்டாகிறது.

பலவீனமான கூந்தலை பராமரிக்க வழிமுறைகள் :

1. பலவீனமான கூந்தலை உடையவர்கள் ஈர்த்தலையில் அல்லது எண்ணெய் பூசியவுடன் தலையை வாரக்கூடாது .
2. இரசாயனக் கலவை கொண்ட ஷாம்புகளைவிட, இயற்கை மற்றும் ஆயுர்வேத முறைகளில் தயாரிக்கப்படும் சீயக்காய் அல்லது ஷாம்புகளை உபயோகியுங்கள் .
3. சீயக்காய் தூளை சாதம் வடித்த கஞ்சியுடன் கலந்து தேய்த்தால் வறட்சித் தன்மை இல்லாதிருக்கும் .
4. கூந்தலை சுத்தம் செய்யும்போது மயிர்க்கால்களையும் கவனம் கொண்டு விரல் நுனிகளால் சுத்தம் செய்ய வேண்டும் .
5. மாதத்திற்கு மூன்று முறையாவது எண்ணெய் மசாஜ் செய்வதால் பலவீனமான கூந்தல் பலமான கூந்தலாகும்.
6. தலையில் மசாஜ் செய்ய கேரட் சாறு மிகவும் நல்ல பலனைத்தரும்.
7. அதிக சூடுள்ள நீரில் குளிக்கக்கூடாது.
8. கூந்தலை டவலால் அடித்து காய வைக்கக்கூடாது.
9. பலகீனமான கூந்தலில் வெடிப்பு ஏற்பட்டு, முடிகொட்டுதல் உண்டானால், தேங்காய்ப் பாலை தேய்த்து ஊறவைத்துக் குளித்தால் முடி கொட்டுதல் நீங்கும் .
10. பிரசவத்திற்குப் பின் பெண்களுக்கு முடிகொட்டுதல் உடல் பலவீனத்தாலேயே என்பதை உணர்ந்து, சத்தான ஆகாரங்களை உண்டு கூந்தல் பலவீனத்தை சரிபடுத்திக்கொள்ள வேண்டும் .

கூந்தல் மசாஜ்

1. மயிர்க்கால்களில் (scalp) விரல் நுனிகளைக் கொண்டு நன்கு அழுத்தி தலைமுழுவதையும் தேய்க்க வேண்டும் .
2. கூந்தலை வரிவரியாகப் பிரித்து, பஞ்சில் எண்ணெய்யை நனைத்து, மயிர்க்கால்கள் முழுவது நன்கு தேய்க்க வேண்டும்.
3. மசாஜ் செய்யும்பொழுது தலையின் முன் பக்கத்திலிருந்து பின்பக்கமாய் செய்வது சிறந்த பலனைத் தரும்.
4. கப்பிங் முறையில் விரல்களை ஒன்றாக இணைத்து, குவித்து தலை முழுவதும் தட்டிவிட வேண்டும் .
5. இரண்டு உள்ளங்கைகளையும் ஒன்றாக இணைத்து, சுண்டுவிரலால் டேப்பிங் முறையில் மெதுவாக தலையில் தட்டி விடவேண்டும் .
6. விரல்நுனிகளை மயிர்க்கால்களில் வைத்து லேசாகக் கிள்ளுவதுபோல் பின்சிஸ் முறையில் தலைமுழுவதும் மசாஜ் செய்தல் வேண்டும்.

கூந்தலைப் பராமரிக்க ஆவிப்பிடித்தல்(steaming)

மசாஜ் குறைந்தபட்சம் 20 நிமிடங்கள் செய்யப்பட வேண்டும் . பின்னர் ஒரு பாத்திரத்தில் நீரை கொதிக்க வைக்க வேண்டும் . அதில் ஒரு பெரிய துண்டினை நனைத்து, பொறுக்கும் அளவு சூட்டுடன் தலையில் சுற்றிட வேண்டும் . இதேபோல் நான்கு முறை செய்ய வேண்டும் .

ஆவி பிடித்த பின் ,தலைக்கு மூலிகை பூச்சு செய்தால் மிகவும் நல்லது . கூந்தலை பராமரிப்பது பற்றி இதுவரை பார்த்த நாம் தலைமுடி ஏன் கொட்டுகிறது என்பதை நாளை பார்ப்போமா...

சித்த மருத்துவத்தில் கூந்தலை பராமரிக்க எளிய வழிமுறைகள்

கூந்தல் என்பது தலைசார்ந்தது மட்டுமல்ல, தலையாயதும் இதுதான். ஆண்களுக்கும் பெண்களுக்கும் அழகுக் கிரீடமாய் இருப்பது கூந்தல்தான். பெண்களின் பேரழகு கூந்தலை வைத்துதான் நிர்ணயிக்கப்படுகிறது.

அழகான முகம், சிறிய கண்கள், மலர்ந்த விழிகள், மாறாத புன்னகை, சிவந்த மேனி, சித்திரம் போல் மங்கை இவள். ஆறடி கூந்தல் தரையில் படரும் அழகோ தனிதான்.அழகின் அத்தனை அம்சங்கள் இருந்தாலும், கூந்தல் வளர்ச்சி குறைவென்றால் பெண்களைப் பொறுத்தவரை, அது ஓர் பேரிழப்புதான்.

கருப்பாய் இருக்கிறாள். ஆனால் கூந்தலின் நெடிய வளர்ச்சி அவளை மிடுக்காய் அல்லவா நடைபோட வைக்கிறது.நானும் எடுப்பாய் இருக்கிறேன். ஆனால் கூந்தல் மட்டுமோ அரைத்து வழித்த துவையல் போல கையளவு உள்ளதே... என்றும் ஏக்கமுறும் பெண்கள்தான் எத்தனை எத்தனை?.

கூந்தலை வளர்க்க ஆசைப்பட்டு 100-க்கும் மேற்பட்ட கூந்தல் தைலங்களை வாங்கி வெறுத்துப்போன மங்கையர்கள் எத்தனை எத்தனை?.இன்று இந்தியா முழுமையும் கணக்குப் பார்த்தால் 3000-க்கும் அதிகமாக தலைமுடிக்கான தைலங்கள் (hair oil) தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

அனைத்தும் தனக்கே உரிய வாடிக்கையாளர்களை கொண்டு விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. கூந்தல் தைலம் மட்டுமே, முடிக்கொட்டுதலை நிறுத்தவோ, முடி வளர்ச்சியை அதிகப்படுத்திடவோ முடியாது.

கூந்தல் உதிர்வதற்கு பல்வேறு உடல்நலக் காரணங்களும், உணவுப் பிரச்சினைகளும் உள்ளன. எனவே ஒரு பாட்டில் தைலத்தை (hair oil) தேய்த்துவிட்டு ஓரடி கூந்தல் உடனே வளரவில்லையே என ஏங்கவேண்டாம்.ஆடவரைவிட பெண்டிரை வெகுவாய் வாட்டும் தலைமுடி உதிர்தல், இளநரை, வழுக்கை ஆகியவை தீர சிறப்பான மருந்துகளையும், இனிவரும் பக்கங்களில் பட்டியலிட இருக்கிறேன்.

எதுவுமே உடனே வளர்ந்துவிடுவதில்லை. முடியும்தான். கொஞ்சம் பொறுமையாய் இருந்து, மயிர் வளமாகும் வரை காத்திருங்கள்.

முடிப்பிரச்சினை எதனாலெல்லாம் உண்டாகும்?.

1. வயதுமுதிர்ச்சி, போஷாக்கு குறைந்த உணவு, நெடுநாள் பட்டினி இவைகளால் முடிகொட்டலாம்.

2. அடிக்கடி தலைக்கு குளிக்காமல், தலையில் அழுக்கு சேர்வதாலும் அழுக்கு சீப்புகளை உபயோகிப்பதாலும் தலைமுடி கொட்டலாம்

3. அதிக வீரியமுள்ள நவீன மருந்துகளை (western) உபயோகிப்பதால் உண்டாகும் ஒவ்வாமையினால் (allergy) தலைமுடி உதிரலாம்.

4. பெண்களின் கர்ப்பக்காலத்தில் கொடுக்கப்படும் மருந்துகளினாலும் முடிகொட்டுதல் உண்டாகும்

5. அதிக உஷ்ணத்தில் அலைதல், வெப்பம் மற்றும் நெருப்பு சார்ந்த தொழில்களில் ஈடுபடுதல், தலைமுடியை உலரவைக்க, மின்சாரத்தில் இயங்கும் முடி உலர்த்தியை (hair dyer) அடிக்கடி உபயோகித்தல் போன்றவற்றாலும் தலைமுடி கொட்டும்.

6. உப்பு தண்ணீரில் (salt water) அடிக்கடி குளிப்பதாலும், பொடுகு (dandruft) உண்டாகி முடி கொட்டலாம்.

இதுவரை தலைமுடி பிரச்சினைகள் பற்றி பார்த்து வந்த நாம் கூந்தலின் வகைகளையும் அதை பராமரிக்கும் வழிமுறைகளையும் நாளை காண்போமா...

சனி

சோலார் பம்பு செட் அமைக்க தமிழக அரசு 80% மானியம்!!!-----

சோலார் பம்பு செட் அமைக்க தமிழக அரசு 80% மானியம்!!!-----
இந்த செய்தியை அதிக அளவில் பகிர்ந்து விவசாயிகளுக்கு தெரிய படுத்துங்கள் நண்பர்களே!!!
சோலார் பம்பு செட் அமைத்துக் கொள்ள விரும்பும் விவசாயிகளுக்கு தமிழக அரசு மானியம் அளிக்க முடிவெடுத்துள்ளது. தங்களது நிலங்களில் உள்ள ஆழதுளை கிணறுகளிலிருந்து நீர் இறைக்க தற்போது மின்சாரத்தையே நம்பி இருக்கும் விவசாயிகள் இந்த திட்டத்திற்கு மாறிக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் சோலார் பம்பு செட் அமைத்துக் கொள்ளும் விவசாயிகளுக்கு 80 சதவிகிதம் மானியம் வழங்கப்படும். 20 சதவிகித தொகையை மட்டும் விவசாயி தனது பங்களிப்பாக செலுத்தினால் போதும். ஆழ்துளை கிணறுகள் மற்றும் திறந்த வெளி கிணறுகள் வைத்துள்ள விவசாயிகள் இந்த திட்டத்தின் மூலம் பயன் பெறலாம்.
ஆழ்துளை கிணற்றில் அமைக்க ரூ.4,39,950, திறந்த வெளி கிணற்றில் அமைத்துக் கொள்ள ரூ.5,01,512 எனவும் விலை நிர்ணயித்துள்ளது. இந்த தொகையில் 20 சதவிகிதம் மட்டும் விவசாயிகள் கட்டினால் போதுமானது. தவிர இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறும் விவசாயிகள் சொட்டுநீர் பாசனம, தெளிப்பு நீர் பாசனம் என்கிற முறைகளை மட்டுமே கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
இதற்கு ஏற்கனவே அரசு மானியம் அளித்து வருவது குறிப்பிடத்தக்கது. பயன்பெற விரும்பும் விவசாயிகள் அதற்கான ஆதாரங்களுடன் வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, அல்லது வேளாண்மை பொறியியல் துறை அலுவலகங்களை அணுக வேண்டும். அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து அனுமதி அளிப்பார்கள் என தெரிவிக்கபட்டுள்ளது.
மின்வெட்டு பிரச்னையிலிருந்து இனி விவசாயயிகளுக்கு விடுதலைதான்.
கூடுதல் தகவல்களுக்கு:
Agricultural Engineering Department,
487, Anna Salai, Nandanam,
Chennai - 600 035.
Phone - 044 - 2435 2686, 044- 2435 2622
email : aedce.tn@nic.in

ஐந்து கிராம் உப்பு!

உணவுக்கு சுவையூட்டுவதற்காக நாம் சேர்க்கின்ற உப்பு சோடியம், குளோரைடு என்ற இரு வேதிகளின் சேர்மமாகும். உடலுக்குத் தேவையான ஓரு சத்து என்றாலும் உப்பு அதிகமாகின்ற போது உடலுக்குக் கேடு விளைவிக்கிறது. நமது இரத்தத்திலும், உயிர்த் திரவங்களிலும் காணப்படும் இந்த உப்புச் சத்து உடலில் சரியானபடி இருக்கின்ற பணியை நமது சிறுநீரகங்கள் செய்கின்றன. உடலிலுள்ள உப்பைச் சிறுநீர் மூலமாக வெளியேற்றுகின்றன. உப்பில் 40 சதவிகிதம் சோடியம் என்னும் கனிமப்பொருள் இருக்கிறது. அளவில் மிகுந்த சோடியம் இதயத்திற்கும் சிறுநீரகங்களுக்கும் தீங்கு விளைவிக்கக் கூடியது.
குறிப்பாகச் சொல்லப்போனால் நாம் உண்ணுகின்ற உணவுப்பொருள்களில் இயற்கையாக இருக்கின்ற உப்பே நம் தேவைக்குப் போதுமானது. இருந்த போதிலும் நாவின் சுவை கருதி எல்லாவற்றிலும் மேலதிகமாக உப்பை நாம் சேர்த்துக் கொள்கிறோம். இது தவிர டப்பாக்களிலும், குப்பிகளிலும் அடைக்கப்பட்டு ஆயத்த உணவு, விரைவு உணவு என்று விற்பனைக்கு வருகின்ற உணவுகளில் தேவைக்கு அதிகமாகவே உப்பு சேர்க்கப்பட்டிருக்கிறது. இதில் கவலை தரக்கூடிய செய்தி என்னவென்றால் சராசரி தென்னிந்தியர் ஒருவர் தமது ஒவ்வொரு நாள் உணவிலும் தமது தேவையைப் போல் 4 மடங்கு (சுமார் 20 கிராம்) உப்பு சேர்த்துக் கொள்கிறார் என்பது தான்.
இயற்கையான உணவுகளிலிருந்து நாம் பெறும் உப்பைத் தவிர தனியாகச் சுவைக்கு என்று உப்பு எதுவும் சேர்க்க வேண்டிய தேவையே இல்லை. செயற்கை உப்பை நமது உணவிலிருந்து நீக்கி விடுவதால் கேடு எதுவும் இல்லை. உலகின் பல பகுதிகளில் உப்பின்றிச் சாப்பிடும் மக்கள் வாழ்கிறார்கள். இவர்கள் உடல் நலம் குறைந்தவர்களாக இல்லை. மாறாக இவர்கள் நீண்ட நெடுங்காலம் உயிர் வாழ்கின்றனர். இறப்பு விகிதம் மிக குறைவாக உள்ள ஜப்பான் நாட்டில் மிகப் பெரும்பான்மையோர் நாளன்றுக்கு 5 கிராமுக்கும் (ஒரு தேக்கரண்டி) குறைவான உப்பையே உட்கொள்கின்றனர். ஜப்பானியர் நீண்ட நாள் வாழ்வதற்கு இதுவே காரணம் என்று ஆய்வர்கள் கூறுகின்றனர்.
பொதுவாக நாளன்றிற்கு 3 முதல் 4 கிராம் உப்பு ஒருவருக்குப் போதுமானது என்று National Academy of Science கூறுகிறது. உடலில் உப்பு அதிகரிக்கும் போது உயர் இரத்த அழுத்தம், இதய நோய்கள், சிறுநீரக நோய்கள் தோன்றுகின்றன. கால்களும் கைகளும் வீங்கி விடுகின்றன. உப்பு நம் உடலில் இருப்பதற்காகத் தன்னோடு தண்ணீரையும் சேர்த்து வைத்துக் கொள்கிறது. இது உடல் எடையைக் கூட்டுகின்றது.
உடலில் இருந்து வெளியேறும் ஒவ்வொரு கிராம் உப்புடனும் 70 கிராம் தண்ணீரும் சேர்ந்து வெளியேற வேண்டிய தேவை ஏற்படுகிறது. இதன் காரணமாகவே எடை குறைக்க விரும்புவோருக்கு உப்பைக் குறைக்கும் படி ஆலோசனை கூறுகின்றனர்.
பிற நாடுகளில் குறைவான உப்பு உண்டு அதிக நாள் வாழ்கின்ற மக்களைக் கண்ட பிறகாகிலும் நாம் உப்பைக் குறைத்து நெடுநாள் வாழ்வதற்கு முயலுதல் வேண்டும். “உப்பில்லாப் பண்டம் குப்பையிலே” என்ற பழமொழியைக் குப்பையில் போடுங்கள். “உடலுக்கேற்றது உப்பில்லாப் பண்டம்” என்ற புதுமொழியை ஏற்படுத்துங்கள். உணவில் உப்பைக் குறைப்பது எளிது. சிறிது நாட்கள் பழகினால் போதும். உங்கள் நாக்கின் சுவை மொட்டுகள் அதற்குத் தங்களைப் பழக்கப்படுத்திக் கொண்டு விடும். பின்னர் சிறிது உப்புக் கூடினாலும் உங்களால் உண்ண முடியாது. உப்பைக் குறைத்தால் உங்கள் இதயமும் சிறுநீரகமும் வலுப்படும். சிறுநீரகங்களுக்குப் போதிய ஓய்வு கிடைக்கும். இரத்த அழுத்தம் குறையும். உடல் எடை குறையும். நீர் வேட்கை (தாகம்) குறையும். வியர்வையும் குறையும். எவ்வளவு நன்மைகள் பார்த்தீர்களா?
சிலவகைப் பச்சைக்காய் கறிகள் உண்ணும் போது உப்பிற்குப் பதிலாகக் கீழ்க்கண்டவற்றைத் தூவி உண்டு பாருங்கள். சுவையாக இருக்கும்.
கேரட் – புதினா, கொத்தமல்லி, எலுமிச்சை சாறு, மிளகுத்தூள்.
தக்காளி – வெங்காயம், மிளகுத் தூள்.
பீன்ஸ் – புதினா – ஜாதிக்காய் – வெங்காயம், எலுமிச்சை சாறு.
உருளைக்கிழங்கு (ஆவியில் அவித்தது) – மிளகுத் தூள்
முட்டைக்கோஸ் – எலுமிச்சை சாறு – புதினா
பீட்ரூட் (ஆவியில் அவித்தது) – எலுமிச்சை சாறு – மிளகுத் தூள்
தேங்காய், வெள்ளரிக்காய், பேரிக்காய், அவல், வறுகடலை, வேர்க்கடலை, பேரீச்சம்பழம் போன்றவற்றை விரும்பி உண்ணலாம். புளிக்காத தயிரில் வெள்ளரிக்காய் துருவல், தேங்காய் துருவல், கிஸ்மிஸ் பழம் சேர்த்துச் சாப்பிடலாம். முள்ளங்கி, வெங்காயத் தாள், வெங்காயம் போன்றவற்றில் எலுமிச்சை சாறு பிழிந்து மிளகுப் பொடி தூவி உண்ணலாம்.
வாழைத் தண்டு, முளைக்கீரை, சௌசௌ, நூல் கோல், பூசணி, சுரைக்காய் போன்றவற்றை ஆவியில் வைத்து லேசாக அவித்துப் பின்பு எலுமிச்சை சாறு பிழிந்து உணவோடு சேர்த்து உண்ணலாம்.
நன்றி; உணவு நலம்

வேளாண்மை

500 சதுர மீட்டர் பரப்பு வரை பசுமைக் குடில்கள் அமைத்திட ஒரு சதுர மீட்டருக்கு ரூ.530 தோட்டக் கலைத் துறை மானியம்
பாதுகாக்கப்பட்ட சூழலில் செடிகளை வளர்த்து, அதிக லாபம் பெறும் வகையில் விவசாயிகள் பலர் தற்போது பசுமைக் குடில்கள், நிழல் வலைக் குடில்கள் போன்றவற்றை அமைத்து சாகுபடி செய்து வருகின்றனர்.
வணிக ரீதியாக லாபம் தரும் மலர்கள், காய்கறிகள் உற்பத்தியைப் பெருக்க இதுபோன்ற குடில்கள் பயன் படுகின்றன. இத்தகைய குடில்களை அமைப்பதற்காக ஆகும் செலவில் சுமார் 50 சதவீதத் தொகையை தேசிய தோட்டக் கலை இயக்கத்தின் மூலம் தமிழ்நாடு அரசின் தோட்டக் கலைத் துறை விவசாயிகளுக்கு மானியமாக வழங்கி வருகிறது.
பசுமைக் குடில்கள்
குடில்களின் வெளியே தட்ப வெப்ப நிலை வேறுபட்டாலும், செடிகள் நன்கு செழித்து வளர்வதற்கு உகந்த வெப்ப நிலையை குடிலுக்கு உள்ளே பராமரிக்கும் பணிகளை பசுமைக் குடில்கள் செய்கின்றன. பெரும்பாலும் கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி, திண்டுக்கல், கோயம்புத்தூர் மாவட்டங்களில் அதிக அளவில் பசுமைக் குடில்கள் அமைக்கப்படுகின்றன.
இந்த மாவட்டங்களைத் தவிர ஈரோடு, கன்னியாகுமரி, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், தஞ்சாவூர், தேனி, திருச்சி, வேலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களிலும் பசுமைக் குடில்களை அறிமுகப்படுத்தும் பணியில் தோட்டக் கலைத் துறையினர் தற்போது ஈடுபட்டுள்ளனர். நடப்பாண்டில் 4 லட்சத்து 50 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பில் பசுமைக் குடில்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
500 சதுர மீட்டர் பரப்பு வரை பசுமைக் குடில்கள் அமைத்திட ஒரு சதுர மீட்டருக்கு ரூ.530 தோட்டக் கலைத் துறை மானியம் வழங்குகிறது.
1008 சதுர மீட்டர் பரப்பளவு வரை அமைத்திட சதுர மீட்டர் ஒன்றுக்கு ரூ.468, அதற்கு மேல் 2080 சதுர மீட்டர் வரையிலும் சதுர மீட்டருக்கு ரூ.445, இன்னும் கூடுதலாக 4000 சதுர மீட்டர் வரை பசுமைக் குடில் அமைப்போருக்கு சதுர மீட்டருக்கு ரூ.422 என்ற வகையில் அரசால் மானியம் வழங்கப்படுகிறது. இது குடில் அமைப்பதற்கான செலவில் சுமார் 50 சதவீதமாகும்.
நிழல் வலைக் குடில்
சூரிய வெப்பத்தின் கடுமையைக் குறைத்து, செடிகளுக்கு தேவையான அளவு மட்டும் சூரிய ஒளி கிடைக்கும் வகையில் நிழல் வலைக் குடில்கள் அமைக்கப்படுகின்றன. இந்தக் குடில்களை அமைத்திட 50 சதவீத மானியமாக சதுர மீட்டருக்கு ரூ.355 வரை தோட்டக் கலைத் துறையினர் வழங்குகின்றனர்.
ரோஜா, கார்னேஷன், ஜெர்பரா, சாமந்தி பூ போன்ற மலர்ச் செடிகளையும், வெள்ளரி, குடை மிளகாய், தக்காளி போன்ற காய்கறிச் செடிகளையும் சாகுபடி செய்யும் விவசாயிகள் இத்தகைய குடில்களை அமைத்து அதிக லாபம் பெறலாம் என தோட்டக் கலைத் துறையினர் தெரிவிக்கின்றனர்.
இத்தகைய குடில்கள் அமைப்பதற்கான மானிய உதவிகளை எவ்வாறு பெறுவது என்பது தொடர்பாக அருகிலுள்ள வட்டார தோட்டக் கலை உதவி இயக்குநர் அலுவலகங்களையோ அல்லது மாவட்ட அளவில் செயல்படும் தோட்டக் கலை இணை அல்லது துணை இயக்குநர் அலுவலகங்களையோ அணுகி விவசாயிகள் தேவையான விவரங்களைப் பெறலாம்.
நண்பர் சக்திவேல் Agriinfomedia மூலம் கிடைக்க பட்ட தகவல். மிக்க நன்றி.

காற்று இல்லாமலே மின்சாரம் தயாரிப்பு:

கிராமத்து இளைஞரின் அசத்தல் கண்டுபிடிப்பு
காற்று இல்லாமலே மின்சாரம்!
:""காற்று இருந்தால்தான், காற்றாலை இயங்கும். காற்று இல்லாமலே தன்னால் காற்றாலையை இயக்கி மின்சாரம் தயாரிக்க முடியும்,'' என, பத்தாம் வகுப்பு வரை
மட்டுமே படித்துள்ள கிராமத்து இளைஞர் கூறுகிறார்.
சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரத்தை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி விஸ்வநாதன், 38. இவர், பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். காற்றாலையை, காற்று இல்லாமல் இயக்க முடியும் என்பதை, இவர், சமீபத்தில் கண்டுபிடித்துள்ளார். தான் கண்டுபிடித்த தொழில் நுட்பத்தை, சென்னை கிண்டியில், மத்திய அரசுக்கு சொந்தமான காப்புரிமை நிறுவனத்தில் பதிவு செய்து, காற்றாலை செயல்படுவது குறித்து விளக்கமளித்துள்ளார். இதற்காக, இவர் காப்புரிமை பெற்றுள்ளார்.காற்று இருந்தால் தான், காற்றாலை இயங்கும். காற்று இல்லாமலே தன்னால் காற்றாலையை இயக்க முடியும் என, பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த கிராமத்து விசைத்தறி தொழிலாளி, நம்மிடம் பெருமையுடன் கூறினார்.
இரண்டு ஆண்டாக இதற்கான முயற்சியில் ஈடுபட்டதாக கூறும் அவர், மேலும் கூறியதாவது:சேலம் மாவட்டம், மேச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு வரை படித்தேன். குடும்ப சூழ்நிலை காரணமாக, மேலும் படிக்க முடியாமல், விசைத்தறி தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். எனக்கு திருமணமாகி, ஒரு பெண் குழந்தை உள்ளது. வாழ்க்கையில் பெயர் சொல்லும் வகையில் சாதனை செய்ய வேண்டும் என்ற எண்ணம், சிறு வயதில் இருந்தே இருந்தது.சில ஆண்டுக்கு முன், 25 மூலிகைகளை கொண்டு கூந்தல் பவுடர் தயார் செய்தேன். பின்னர், வேகத்தடையை தாண்டி வாகனங்கள் செல்லும் போது, அதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என கண்டுபிடித்தேன்.தற்போது காற்றாலையை, காற்று இல்லாமலே இயக்க முடியும் என கண்டுபிடித்துள்ளேன். இரண்டு ஆண்டாக இதற்காக முயற்சி எடுத்து, அதில் வெற்றியும் பெற்றுள்ளேன். நாகர்கோவில், உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி ஆகிய இடங்களில் காற்றாலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. காற்று வீசும் காலத்தில் மட்டுமே, காற்றாலையில் இருந்து, மின்சாரம் பெற முடியும். மற்ற காலங்களில் காற்றாலையில் உள்ள இறக்கைகள் சுற்றாது. தற்போது, காற்றாலையில், மூன்று இறக்கைகள் உள்ளது.
என்னுடைய தொழில்நுட்பப்படி, காற்றாலையில் நான்கு இறக்கைகள் பொருத்த வேண்டும். மேலும், கீழும் உள்ள இரண்டு இறக்கையின் நடுவில், ஹீலியம் வாயுவை நிரப்ப வேண்டும். காற்றாலையின் இரு பக்கமும் உள்ள இரண்டு இறக்கைகளின் அளவு ஒரே சீராக இருக்கும்படி வைத்துக் கொள்ள வேண்டும்.ஹீலியம் வாயு நிரப்பப்பட்டுள்ள ஒரு இறக்கையில் இருந்து, கீழுள்ள இறக்கைக்கு வாயு செலுத்தப்படும் போது, எடை தாங்காமல், கீழுள்ள இறக்கை மேல் நோக்கி தள்ளப்படும். இதனால், இறக்கைகள் ஒன்றன் பின் ஒன்றாக சுழலத்தொடங்கும். ஹீலியம் வாயு, தானியங்கி சென்சார் மூலம், இரண்டு இறக்கைகளிலும் மாறி மாறி செலுத்தப்படுவதால், இறக்கைகள் தொடர்ந்து சுழன்று கொண்டே இருக்கும். இதனால் காற்று இல்லாமலும், மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.ஹீலியம் வாயு ஆபத்து இல்லாதது. நான் கண்டுபிடித்த தொழில் நுட்பத்தை, சென்னை, கிண்டியில் உள்ள மத்திய அரசின் காப்புரிமை நிறுவனத்தில், வரை படங்களின் மூலமும், எழுதியும் காண்பித்தேன். என் கண்டுபிடிப்புக்கு, மத்திய அரசு காப்புரிமை கொடுத்துள்ளது.ஓராண்டுக்குள், நான் அவர்களுக்கு செய்முறை பயிற்சி அளித்து காட்டவேண்டும். நான் விசைத்தறி தொழிலாளியாக இருப்பதால், போதிய பணம் என்னிடம் இல்லை. காற்றாலை அதிபர்கள் என்னை நாடினால், காற்றாலையை காற்று இல்லாமல் இயக்கும் முறையை விளக்கிக் காட்டுவேன்.இவ்வாறு அவர் கூறினார்

463-வயது, 130-அடி உயரம் #கன்னிமாரா” #தேக்குமரம்

பல்லுயிர் பெருக்கத்தின் அமைவிடமாய் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலையின் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் வழியாக பரம்பிக்குளம் புலிகள் காப்பகத்திற்கு சென்றால், முழுவதும் தேக்குமரங்கள் நிரம்பிய மலைக்காடுகளை காணமுடியும்.
இந்த காடுகளில் தான் இந்தியாவின் மூத்த வயதுடைய மரங்களுள் ஒன்றான “கன்னிமாரா” தேக்கமரமும் உள்ளது. தூனக்கடவு, பெருவாரிப்பள்ளம், ஆழியாறு என்ற மூன்று அணைகளும் அமைந்துள்ள இந்த காட்டுப்பகுதியில், ஏராளமான புலிகளும், கரடிகளும் வசித்து வருகின்றது.
கேரளா அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த பகுதிக்கு கேரளாவிலிருந்து வர முடியாது. தமிழகத்திலுள்ள பொள்ளாச்சி, ஆனைமலை, டாப்சிலிப் ”Topslip” வழியாகத்தான் போக முடியும்.
கேரளா மாநில எல்லையிலுள்ள ஆனைப்பாடி என்ற இடத்திற்கு அந்தப் பக்கம் அங்கே குடியிருக்கும் மலைவாழ் மகளித்தவிர வேறு பொதுமக்கள் தனியாக செல்ல தடைசெய்யப்பட்டுள்ளது.
பரம்பிக்குளம் புலிகள் காப்பகத்தின் சார்பில் இயக்கப்படும் வேன்களில் சென்றால், தூனைக்கடவு அணையிலிருந்து வலதுபக்கம் எட்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது “கன்னிமாரா” தேக்கமரம்.
மலையாளத்தில் “கன்னிமாரா” என்பதை ஆங்கிலத்தில் virgin tree என்று கூறியுள்ளனர். Virgin என்பது இலத்தின் மொழியில், வான் மண்டலத்திலுள்ள ஆராவாது நட்சத்திர கூட்டத்தை குறிக்கும். கையில் நெற்கதிருடன் இருக்கும் பெண்ணின் படம் இதற்க்கு அடையாளமாகும். இதன்படி தமிழில் “இளமை மாறாத மரம்” என்று பொருள் கொள்ளலாம்.
2011-ம் ஆண்டு கணக்கின்படி இந்த மரத்திற்கு சுமார் 460- வயது இருக்கும் என கணக்கிட்டுள்ளனர். அப்போதைய உயரம் 39.98-மீட்டர். சுற்றளவு, 7.02-மீட்டர். அதற்கு பிறகும் மரம் குறைவான வேகத்தில்  வளர்ந்து கொண்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைகளில் கண்டுகொள்ளப்பட்ட மரங்களில் இதுதான் அதிக வயதுடைய மரம் என்று கூறும் வனத்துறையினர் இப்போது இந்த மரத்தின் உயரம்:- 130-அடிக்கு மேலிருக்கும் என்கின்றனர். மரத்தி சுற்றி நின்று ஐந்து பேர் கைகளையும் சேர்த்து பிடித்தால் தான் இந்த மரத்தை கட்டிப்பிடிக்க முடியும். மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள இயற்கையின் அதிசயங்களில் இதுவும் ஓன்று

ரூ300 செலவில் மூலிகைத் தோட்டம்

வெறும் ரூ.300 செலவில் வீட்டில் அமைக்கும் மூலிகைத் தோட்டத்தால் இந்த உடல் உபாதைகளுக்கு நாமே தீர்வு காணலாம் திருச்சி தில்லைநகரைச் சேர்ந்த அல்லிராணி.
மரக்கன்றுகளைப் பரிசாகத் தருவது பரவலாகிவரும் சூழ்நிலையில், தனக்குத் தெரிந்தவர்களுக்குப் பயன்மிக்க மூலிகைச் செடிகளை வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் திருச்சி தில்லைநகரைச் சேர்ந்த அல்லிராணி.
சுற்றுச்சூழல், சுகாதாரச் சீர்கேடுகள், உணவுப் பழக்கம் போன்றவற்றால் சளி, இருமல், காய்ச்சல், பூச்சிக்கடி, அஜீரணம் என நமக்கு அவ்வப்போது ஏற்படும் சிறுசிறு தொந்தரவுகளுக்குக்கூட மருத்துவரைத் தேடி ஓடுவது சாதாரணமாகிவிட்டது.
சின்ன இடம் போதும்
“வெறும் ரூ.300 செலவில் வீட்டில் அமைக்கும் மூலிகைத் தோட்டத்தால் இந்த உடல் உபாதைகளுக்கு நாமே தீர்வு காணலாம்.
வெற்றிலைச் செடி
அடுக்குமாடிக் குடியிருப்போ, தனி வீடோ-வரண்டா, மொட்டை மாடி, வாசல் படிக்கட்டு எனச் சூரியஒளி படும் இடம் கொஞ்சமாவது இருக்கும். மூலிகைச் செடிகளை வளர்க்க அந்த இடம் போதும். அதுவும் இல்லாவிட்டால் பரவாயில்லை, 5 அடிக்கு 5 அடி இடமிருந்தால்கூட போதுமானதே. துளசி, ஓமவல்லி, கற்றாழை, திருநீற்றுப் பச்சிலை, இன்சுலின் செடி, லெமன் கிராஸ், சிறிய நங்கை, தூதுவளை, வெற்றிலை, கீழாநெல்லி என அடிக்கடி பயன்படும் மூலிகைச் செடிகளைத் தேர்ந்தெடுத்து வளர்க்கலாம்” என்கிறார் அல்லிராணி.
மூலிகை பயன்கள்
துளசி: சளி, இருமல், காய்ச்சலுக்கு எளிய மருந்து. தினமும் இரண்டு இலைகளைப் பறித்துச் சாப்பிட்டு வரலாம்.
ஓமவல்லி அல்லது கற்பூரவல்லி: இலைச் சாறு எடுத்து அருந்தினால் சளி, இருமல் நிற்கும். சக்கையை நெற்றியில் பற்று போட்டால் தலைவலி நீங்கும். மருத்துவக் குணத்துக்காக இலைகளைத் துவையலாக அரைத்துச் சாப்பிடுபவர்களும் உண்டு.
சோற்றுக் கற்றாழை: தோலை நீக்கிவிட்டு நடுப்பகுதியில் இருக்கும் வழவழப்பான சோறை எடுத்துத் தலைக்குத் தேய்த்துக் குளிப்பதால் சூடு தணியும். முகத்தில் தேய்த்துக் கொண்டால் பொலிவான தோற்றம் கிடைக்கும். சாறை அருந்தினால் உடல் குளிர்ச்சி பெறும்.
திருநீற்றுப் பச்சிலை: முகப்பரு தொல்லையில் இருந்து தப்பிக்கவும், பூச்சி கடிக்கும் பயன்படும். பூச்சி கடித்த இடத்தில் இரண்டு சொட்டு சாறு விட்டால் போதும்.
இன்சுலின் செடி: இலை ஒருவித புளிப்புச் சுவையுடன் இருக்கும். இது நீரிழிவு பாதிப்பைக் குறைக்கும் என்று நம்பப்படுகிறது.
தான் வளர்க்கும் செடிகளுடன் அல்லிராணி
“இதெல்லாம் நாம மறந்து போன பாட்டி வைத்தியம்தான். இந்த மூலிகைச் செடிகளை பக்கத்துத் தோட்டங்களில் இருக்கலாம். இல்லையென்றால் அருகில் இருக்கும் நர்சரிகளில் கேட்டுப் பார்க்கலாம். ஒரு கன்றின் விலை அதிகபட்சம் ரூ. 20 இருக்கும். அத்தியாவசியமான 10 செடிகளைத் தேர்வு செய்தால், ரூ.300 மட்டுமே செலவாகும்” என்றார் அல்லிராணி.
ஆரோக்கியம் காக்கும் மூலிகைச் செடிகளை வளர்த்து உடல்நலம் காப்போம். தி ஹிந்து

மரங்கள் செய்யும் சமூக சேவை..

ஒரு மரம் சமூகத்திற்கு செய்யும் சேவையின் மதிப்பு ரூ. 15.90 லட்சங்களாகும்.
1. பத்து குளிர்சாதனப் பெட்டிகள் (ஏ.சி.) இருபத்து நாலு மணி நேரமும் தொடர்ந்து ஓடுவதால் ஏற்ப்படும் குளிர்ச்சியை ஒரே ஒரு மரம் தன் நிழல் மூலம் தந்து விடுகிறது
2. பதினெட்டுப் பேருக்கு ஒரு ஆண்டுக்கு சுவாசிக்கத் தேவையான பிராண வாயுவை ஒரு ஏக்கரில் வளர்ந்த மரங்கள் தருகின்றன.
3. பிராணவாயு உற்பத்தியின் மதிப்பு - ரூ.3 இலட்சங்கள்
4. காற்றினைச் சுத்தமாக்குவதின் மதிப்பு ரூ. 5 இலட்சங்கள்
பூமியின் மேலே இருக்கும் மண்சத்து- குறையாமல் பாதுகாக்க -
ரூ.2 இலட்சங்கள்.
5. காற்றில் இருக்கும் ஈரப்பதம் குறையாமல் பாதுகாப்பதின் மதிப்பு - ரூ 3 இலட்சங்கள்..
6. பறவைகளுக்கும்,விலங்குகளுக்கும் நிழல் கொடுப்பதின் மதிப்பு ரூபாய் 2.50 இலட்சங்கள்.
7. உணவுச் சத்துக் கொடுப்பதின் மதிப்பு ரூபாய் 20000
பூக்கள் மற்றவை வழங்குவதின் மதிப்பு ரூபாய் 20000
ஆக ஒரு மரத்தின் மொத்த மதிப்பு- ரூ.15.90.லட்சங்கள்..
இவ்வளவு பயன்களைத் தரும் மரங்களை ஏதேதோ காரணங்களுக்காக மனிதர்கள் வெட்டி சாய்த்துக்கொண்டிருக்கின்றார்கள்..
வெட்டிய மரங்களுக்கு இணையாக மரக்கன்றுகளை வளர்ப்பதினால் வருங்கால சந்ததியினர் பயனுறுவர்.. வாழும் காலங்களில் எதைச் செய்கின்றோமோ இல்லையோ அட்லீஸ்ட் ஒரு மரக்கன்றையாவது நட்டுவிட்டு செல்வோமே!
மரங்களை வளர்ப்போம்! வருங்கால சந்ததியினரைக் காப்போம்.
#மரம்_வளர்ப்போம்

வெள்ளி

மூடாக்கு மந்திரம்… முத்தான லாபம்!


 
ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள்… என காசை இறைத்து விவசாயம் செய்து, கண்ணீரை அறுவடை செய்வது ஒரு ரகம். கழிவுகளை இறைத்து, இயற்கை விவசாயம் செய்து காசை அறுவடை செய்வது இரண்டாவது ரகம்! இதில் இரண்டாவது ரகத்தைச் சேர்ந்தவர் – விசாகுமார். தீவிரமாக இயற்கை விவசாயம் செய்து வரும் இவர், தென்னைக்கு ஊடுபயிராக பல ரக வாழைகளையும் சாகுபடி செய்துவருகிறார்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் - குளச்சல் சாலையில் ஆசாரிப்பள்ளம் என்ற ஊரிலிருந்து, இரண்டாவது கிலோ மீட்டரில் இருக்கிறது, பாம்பன்விளை. தென்னை, வாழைகளுக்கு மத்தியில் பசுமையாகக் காட்சியளிக்கிறது, விசாகுமாரின் இயற்கைத் தோட்டம்.
பாடம் சொன்ன பசுமை விகடன்!
விவசாயம் எங்க குடும்பத்திற்கு பூர்விகத் தொழில், என் கூடப் பிறந்தவங்க எல்லோருமாக சேர்ந்து விவசாயம் செய்து கொண்டிருந்தோம். தனியாக வீட்டு மொட்டை மாடியிலும் தோட்டம் போட்டிருந்தேன். தோட்டத்தில் தெளிச்சது போக மிச்சமீதி இருக்கும் ரசாயனத்தை வீட்டுத் தோட்டத்தில் தெளிப்பேன். இதைப் பார்த்த என் மனைவிதான், ஏன் இப்படி ரசாயனத்தை வாரி கொட்டுறீங்க, இது உடலுக்கும் கேடில்லையா என்று அடிக்கடி கேப்பாங்க. அதனால்தான் இயற்கை விவசாயம் பற்றிய தேடல் உருவானது. அதை, யாரிடம் கற்றுக் கொள்வது என்று குழம்பிக் கொண்டிருக்கும் போதுதான் ‘பசுமை விகடன்’ அறிமுகமானது. எதார்த்தமாக ஒரு முறை பேருந்தில் போகும் போது படிக்க கிடைத்த ‘பசுமை விகடன்’ இன்றைக்கு என் சுவாசமாக மாறிப் போனது.
‘பசுமை விகடன்” நடத்திய சுபாஷ் பாலேக்கருடைய ஜீரோ பட்ஜெட் பயிற்சியிலும் கலந்து கொண்டேன். தொடர்ந்து பசுமை விகடனைப் படித்துவிட்டு, ஒவ்வொரு விஷயத்தையும் புதிதாக கத்துக் கொண்டேன். நாகர் கோவிலில் இருக்கும் ‘ரூரல் அப்லிஃப்ட் சென்டரிலும் இயற்கை விவசாயப் பயிற்சிகள் எடுத்துக் கொண்டேன். என்னதான் பயிற்சி எடுத்துக் கொண்டாலும், அனுபவ அறிவும் வேண்டுமே என்று இயற்கைக்கு மாற தீர்மானித்தேன். ஆனால், தொடக்கத்தில் கூட்டுக் குடும்பச் சொத்தாக இருந்ததால், இயற்கைக்கு மாறவேண்டும் என்று சொன்னதும், மற்றவர்கள் எல்லாம் பயந்தார்கள். பாகப் பரிவினை செய்ததும் என்னுடைய நான்கு ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பித்தேன். இப்போது முழுவதுமாக இயற்கை விவசாயத்திற்கு வந்து மூன்று வருடமாகிறது.
இந்த நான்கு ஏக்கரில், மூன்றரை ஏக்கரில் தென்னையும், அரை ஏக்கரில் முந்திரியும் போட்டிருக்கிறேன். தென்னைக்கு ஊடுபயிராக மூன்று ஏக்கரில் மட்டும் வாழை சாகுபடி செய்கிறேன். இதுபோக என் தோட்டத்தில் பப்பாளி -3 , கிராம்பு -7, பலா - 7, மா - 7, தேக்கு - 10, ஆரஞ்சு – 2, சப்போட்டா – 2 என்று மரங்கள் இருக்கு. கொஞ்சம் பனை மரங்களும் நிற்கிறது. என் தோட்டத்து தென்னை மரங்களுக்கு 35 வயது ஆகிறது. 25 அடி இடைவெளியில் மரங்கள் இருப்பதால், செவ்வாழை, படத்தி, ரஸ்தாளி, கற்பூரவள்ளி, மட்டி, ஏத்தன், பூங்கதளி வாழை ரகங்களைப் போட்டிருக்கிறேன்.
நீரை சிக்கனமாக்கும் கேணி!
வாழைக்கு எட்டு அடி முதல், பத்து அடி வரை இடைவெளி விட்டிருக்கிறேன். இரண்டு தென்னைகளுக்கு மத்தியில் (12 அடி இடைவெளியில்) மூன்றடி ஆழம், ஒன்றரை அடி அகலத்திற்கு கேணி (குழி) அமைத்திருக்கிறேன். தென்னை ஓலை, மடடை என்று கழிவுகளை கேணிக்குள் போட்டுவிடுவேன். இதனால், என்னதான் அடைமழை பெய்தாலும், ஒரு சொட்டு தண்ணீர் கூட தோட்டத்தை விட்டு வெளியே போகாது. கேணியில் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மட்டும் தண்ணீர் விடுவேன். நல்ல வெயில் அடிக்கும்போது தென்னை மர ஓலையின் நிழல், எதுவரை படுதோ, அதுவரை வேர் விட்டிருக்கும். இதனால், பனிரெண்டு அடி தள்ளியிருந்தாலும், கேணியிலிருந்து, தென்னை தண்ணீரை உறிந்து கொள்கிறது.
இந்தக் கேணிகளுக்கு பக்கத்தில்தான் வாழை இருக்கு. ஒரு ஏக்கர் என்று பார்த்தீர்கள் என்றால்… 85 தென்னையும், 125 வாழையும் இருக்கும். தோட்டம் முழுக்க சொட்டுநீர்ப் பாசனம்தான். தென்னைக்கு என்று தனியாக எந்தப் பராமரிப்பும் செய்வதில்லை. வாழைக்கு மட்டும்தான் பராமரிப்பு. தென்னையில் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை காய் பறிப்போம். மூன்றரை ஏக்கரில் ஒவ்வொரு வருடமும் 3 ஆயிரம் காயிலிருந்து 4 ஆயிரம் காய் வரைக்கும் மகசூல் கிடைக்கிறது.
விதைநேர்த்தி முக்கியம்!
வாழையில் எந்த ரகமாக இருந்தாலும், சாகுபடி காலம் வேண்டுமானால் மாறுமே தவிர, பராமரிப்பு ஒன்றுதான். 2 கிலோ தொழுவுரம், 16 லிட்டர் தண்ணீர், தலா 200 மில்லி சூடோமோனஸ், அசோஸ்பைரில்லம் ஆகியவற்றைக் கலந்து அதில் விதைக்கிழங்கை நனைத்து நடவு செய்ய வேண்டும். இந்த அளவு, 100 கிழங்களுக்கு சரியாக இருக்கும். நடவு செய்ததும், முதல் தண்ணீர் கொடுக்க வேண்டும். 3-ம் நாளில் ஒவ்வொரு வாழைக் கன்றுக்கும்… 100 கிராம் வேப்பம் பிண்ணாக்கு, 100 கிராம் கடலைப் பிண்ணாக்கு என்கிற கணக்கில் எடுத்துக் கொண்டு, ஒன்றாகக் கலந்து தூரைச் சுற்றி தூவி தண்ணீர் கொடுக்க வேண்டும். அதன் பிறகு, 5 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் கொடுக்க வேண்டும்.
களைகளே மூடாக்கு!
15-ம் நாளில் ஒவ்வொரு வாழைக் கன்றுக்கும் 20 கிலோ தொழுவுரம் போட்டு, சுற்றியுள்ள களைகளை வெட்டி மூடாக்காகப் போட வேண்டும். இதேபோல் 3,6,9 ம் மாதங்களிலும் களைகளை வெட்டி தொழுவுரத்தைச் சேர்த்து மூடாக்கிட வேண்டும். 5-ம் மாத இறுதியில், ஒவ்வொரு கன்றிற்கும் 100 கிராம் வேப்பம் பிண்ணாக்கு, 100 கிராம் கடலைப் பிண்ணாக்கு என்கிற கணக்கில் எடுத்துக் கொண்டு, ஒன்றாகக் கலந்து தூரைச் சுற்றி தூவி, தண்ணீர் கொடுக்க வேண்டும்.
பூச்சி, நோய் தாக்குவதில்லை!
முழுக்க இயற்கை விவசாயம் என்பதால், பூச்சி, நோய் தாக்குதல் அதிகம் இருக்காது. பழுப்பு நோய் சில நேரங்களில் எட்டிப் பார்க்கும். இந்த நோய் தாக்கிய வாழையின் இலை பழுத்துப் போயிருக்கும். இதைக் கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீரில், 50 மில்லி புளித்த மோர் சேர்த்து விசைத் தெளிப்பான் மூலமாக மரம் முழுவதும் தெளிக்க வேண்டும். இதற்கும் மட்டுப்படாவிட்டால், அடுத்த 15-ம் நாளில், ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 மில்லி வேப்பெண்ணெய், சிறிது காதி சோப் கலந்து தெளிப்பான் மூலமாக தெளித்தால்… பழுப்பு நோய் காணாமல் போய்விடும்.
செவ்வாழையில் ஆப்பிள் நோய் தாக்கும். இந்த நோய் குலை போடுவதற்கு முன்பு வந்தால்… அந்த மரத்தில் குலை தள்ளாது. குலை தள்ளிய பின்பு வந்தால்… காய் சிறுத்து போய்விடும். செவ்வாழைப் பழமும் நிறம் மாறி விடும். இதனால், 40% அளவிற்கு மகசூல் இழப்பு ஏற்படும். இலைகள் சிறுத்துப் போவதுதான் இந்த நோய்க்கான அறிகுறி. இந்த நோய், ரசாயன மருந்துகளுக்குக் கட்டுப்படுவதில்லை. இலை சிறுத்ததுமே தலா 100 கிராம் வேப்பம் பிண்ணாக்கு, கடலை பிண்ணாக்கு ஆகியவற்றைக் கலந்து, கலவையை வாழையின் தூரைச் சுற்றிப் போட்டு தண்ணீர்விட வேண்டும். அதில் மட்டுப்படாவிட்டால்… மீன் குணபம் (மீன் அமினோ அமிலம்) தயாரித்துத் தெளிக்கலாம். செவ்வாழை 10-ம் மாதத்தில் குலை தள்ளி, 12-ம் மாத இறுதியில் அறுவடைக்கு வரும். மற்ற ரகங்களைப் பொறுத்தவரை 9-ம் மாதத்தில் குலை தள்ளி, 11-ம் மாதத்தில் அறுவடைக்கு வரும்.
ஆண்டுக்கு ஆறு குலை!
பொதுவாக வாழைக்கு எட்டடி இடைவெளி இருந்தால் போதும். படத்தி ரக வாழைக்கு மட்டும் 15 அடி இடைவெளி விட்டிருக்கிறேன். இதில் பக்கக் கன்றை வெட்ட மாட்டேன். ஒவ்வொரு வாழையில் இருந்தும் எட்டு முதல் பத்து பக்கக் கன்றுகள் வரைக்கும் வரும். முதல் வாழையில் ஒன்பதாம் மாதம் குலை தள்ளும். அதிலிருந்து மூன்று மாதத்திற்கு ஒரு முறை என்று பக்கக் கன்றுகளில் குலை வெட்டலாம். தார் கொஞ்சம் சிறிதாக இருந்தாலும்… வருடத்தில் ஆறு தார் வரைக்கும் கிடைத்துவிடும். ஒரு தார் 250 ரூபாய் வரைக்கும் விலை போகிறது.
தார் வெட்டினதும், வாழையை அப்படியே விட்டுவிடுவேன். அது, தானா முறிந்து கீழே விழுந்து மூடாக்காகிடும். என்னுடைய தோட்டத்து மகசூலுக்கு மூடாக்குதான் மூல மந்திரம். வாழை குலை தள்ளிய உடனே, தோட்டத்துக்கே நேரடியாக வந்து விலை பேசி, ஒப்பந்தம் போட்டுகிறார்கள் வியாபாரிகள். செவ்வாழைக்கு எப்பவும் நல்ல விலை கிடைக்கிறது. ஒரு தார், 350 ரூபாயிலிருந்து 500 ரூபாய் வரைகூட விலை போகும். மற்ற ரகங்களில் ஒரு தார் 300 ரூபாய்க்கு குறையாமல் விலை போகும். எப்படிப் பார்த்தாலும்… லட்ச ரூபாய்க்கு மேல் லாபம் கிடைத்துவிடும். மூன்று ஏக்கரில் ஊடுபயிராக போடும் வாழையிலேயே இத்தனை லாபம் என்கிற… சந்தோஷமான விஷயம்தானே என்றார்.
தொடர்புக்கு
விசாகுமார், செல்போன் : 93605 - 97284
ஆதாரம்: பசுமை விகடன்

அத்திபழ ஹல்வா

அத்திபழம் – 150 கிராம்
பேரீத்தம்பழம் – 3
நெய் – 150 கிராம்
சீனி – 400 கிராம்
பாதாம் – 100 கிராம்
முந்திரி – 100 கிராம்
பிஸ்தா – 25 கிராம்
பால் – 1 1/2 லிட்டர்
பாதாம்,முந்திரி,பிஸ்தாவை பொடியாக நறுக்கி கொள்ளவும். அதில் பாதி பாதி பருப்புகளை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.
பாலை ஒரு நான்ஸ்டிக் பேனில் ஊற்றி காய்ச்சவும்.
அத்திபழம்,பேரீத்தம் பழத்தை சிறிய துண்டுகளாக்கி காய்ச்சிய பாலில் 1/2 மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளவும்.
பின் ஊறிய பழங்களை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
பின் அரைத்த விழுதையும் பாலில் போட்டு நன்கு காய்ச்சவும்.
பால் நல்ல வற்றி வரும் போது சீனியை சேர்த்து கிளறவும்.
பிறகு பொடியாக நறுக்கிய பருப்புகளை சேர்த்து கிளறவும்.
நல்ல கெட்டியாக வரும் போது தீயை மிதமானதாக வைத்து நெய்யை சேர்த்து கிளறி, நீளவாக்கில் நறுக்கிய பருப்புகளில் சிறிதை சேர்த்து கிளறி இறக்கவும்.
பின் ஒரு டப்பாவில் நெய் தடவி அதில் ஹல்வாவை கொட்டி பரத்தி விடவும். மேலே மீதி இருக்கும் பருப்புகளை தூவி அலங்கரிக்கவும். சுவையான,சத்தான அத்திப்பழ ஹல்வா தயார்
சில்வர் லீவ்ஸ் பேப்பர் இருந்தாலும் மேலே அலங்கரிக்கலாம். நெய் சேர்த்த பின்னாடி மேலே எல்லாம் தெரிக்கும் கவனமாக கிளறவும். தீயை மிதமானதாக வைத்தே செய்யவும்.அடிக்கடி அடியில் பிடித்துவிடாமல் கிளறி விடவும்.