செவ்வாய்

பாலில் எந்த மூலிகை சேர்த்தால் என்ன பயன்.?

 

  • பாலில் பூண்டு சேர்த்து குடிப்பதால் சளி மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட வியாதிகள் குணமாகும்.
  • தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பாலில் பூண்டு கலந்து குடித்தால் பால் சுரப்பு அதிகரிக்கும்.
  • நுரையீரல் அழற்சி உள்ளவர்கள் பூண்டு பால் குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
  • பாலில் இஞ்சி கலந்து குடித்தால் உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புகளை கரைக்கும்.
  • இஞ்சி பால் குடிப்பதால் இரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கப்படுவதுடன் இதய ஆரோக்கியம் மேம்படும்.
  • பாலில் மஞ்சள் கலந்து குடித்தால் புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கும்
  • மஞ்சள் பால் இரத்தத்தை சுத்தப்படுத்துவதுடன், ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
  • பெருஞ்சீரகம் கலந்த பாலை குடிப்பதால் மாதவிடாய் காலங்களில் வலி ஏற்படாமல் தடுக்கலாம்.
thanks Mr. Prasanth

வெந்தயத்தை ஊற வைத்து முளை கட்டி, சர்க்கரை நோயாளிகள் சாப்பிடுவது நல்லதா?

சர்க்கரை நோயாளிகள் இரவில் வெந்தயத்தை ஊறவைத்து காலையில் ஊற வைத்த வெந்தய தண்ணீரை குடிப்பது நல்லது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

சர்க்கரை நோயாளிகள் அதிகரித்து வரும் நிலையில் சர்க்கரை நோயாளிகளுக்கு தகுந்த மருத்துவ முறைகளும் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் சர்க்கரை நோய் உள்ளவர்கள் இரவில் ஊற வைத்த வெந்தயத்தை மறுநாள் காலை வெந்தய தண்ணீரை குடித்தால் மிகவும் நல்ல பயன் கிடைக்கும். 

வெந்தயத்தில் ஹைட்ராக்சி லியூஸின் என்ற வேதிப்பொருள் இருப்பதால் அது இன்சுலினை அதிக அளவு சுரக்கச் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் வெந்தயத்தை கர்ப்பமான பெண்கள் சாப்பிடக்கூடாது என்றும் அது எதிர் செயல் புரிவதால் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறி உள்ளர்

வெந்தயத்தில் உள்ள கேலக்ட்டோமேனான் என்ற நார்ச்சத்து செரிமானத்தை தாமதப்படுத்தி கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை உறிஞ்சுதலை வயிற்றில் குறைத்து குளுக்கோஸ் குறைபாடு வராமல் தடுப்பதாக கூறப்படுகிறது.

தைராய்டை குணமாக்கும் 7 அற்புதமான உணவுகள்..!

தைராய்டு பிரச்சினை உள்ளவர்கள் உணவு பழக்கங்களில் கட்டுப்பாடு பேணுவது அவசியம். சில உணவு வகைகள் எடுத்துக் கொள்வதன் மூலம் தைராய்டு பிரச்சினையை எளிதில் குணமாக்கலாம்.

தைராய்டு பிரச்சினை உள்ளவர்கள் அதற்கான மருந்துகளை உட்கொள்வதுடன், ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
காளான் உணவு சாப்பிடுவதால் உடலில் செலினியம் சத்து அதிகரிப்பதால் தைராய்டை கட்டுப்படுத்தும்.

பூண்டிலும் செலினியம் சத்து அதிகமாக உள்ளதால் பூண்டை உணவில் எடுத்துக் கொள்வது நல்லது.

ஒமேகா 3 சத்து அதிகம் கொண்ட பசலைக்கீரையை உணவில் எடுத்துக் கொள்வது தைராய்டு குணமாக உதவும்.
தைராய்டு சுரப்பி சரியாக செயல்பட முட்டை மற்றும் பாலில் உள்ள கால்சியம், இரும்புச்சத்து உதவுகிறது.
ஓட்ஸ், பார்லியில் உள்ள விட்டமின் பி உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து தைராய்டை குணப்படுத்தும்.

விட்டமின் சி சத்து அதிகம் நிறைந்துள்ள தக்காளியை சாப்பிடுவதால் உடலில் ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் அதிகரிக்கும்.

அயோடின் சத்து அதிகம் நிறைந்துள்ள ஸ்ட்ராபெர்ரியை சாப்பிடுவது தைராய்டு நோயில் இருந்து குணமாக நல்ல உணவு.

தைராய்டு பிரச்சினை உள்ளவர்கள் மருத்துவர்கள் பரிந்துரை பெற்று சரியான உணவு முறையை கடைபிடிக்க வேண்டும்.

ஞாயிறு

கோடை காலத்தில் உடல் சூட்டை தணிப்பதற்கு எடுத்து கொள்ளும் ஜூஸ் வகைகள்..!

 உடல் சூட்டை தணிப்பதற்கு எடுத்து கொள்ளும் ஜூஸ் 

கோடை காலத்தில் சூரியனில் தாக்கம் அதிகரித்து உடலின் ஆற்றல் நிலையை குறைத்து விடும். அதிலும்  நமது  உடலானது  உஷ்ணம் அதிகரித்து பல விதமான நோய்கள் வருகின்றன. அதாவது வயிற்று போக்கு, வயிற்று வலி, அதிகமான வியர்வை, சிறுநீரகத்தில் பிரச்சனை மற்றும் சருமத்தில் ஏற்படும்  பல விதமான நோய் பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள். அதற்காக கோடை காலத்தில் சாப்பிட கூடிய ஜூஸ்களை குடிப்பதன் மூலம் நமது உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ள உதவுகிறது. அந்த வகையில் இந்த பதிவை முழுமையாக பார்த்து உடல் சூடு குறைய  எந்தெந்த ஜூஸ்களை குடிக்கலாம் என்பதை பற்றி கீழே தெரிந்து கொள்வோம் வாங்க.

 

தர்பூசணி


தர்பூசணி உடல் சூட்டை குறைப்பதற்கு மிகவும் உதவுகிறது. தர்பூசணியில் உள்ள சத்துக்கள் உடலில் ஏற்படும் சிறுநீரக பிரச்சனை மற்றும் வயிற்று வலியை குறைக்க உதவும். நம் முகத்தின் அழகை கூட்ட கூடிய பழமாக தர்பூசணி உள்ளது. அதிலும்  கோடை காலத்தில் விற்கக்கூடியது தர்பூசணி ஆகும். தர்பூசணி சாப்பிடுவதால் உடல் சூட்டை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

வெள்ளரிக்காய் :

கோடை காலத்தில் அதிகம் விற்கப்படும் காய்களில் ஒன்று வெள்ளரிக்காய். வெள்ளரிக்காயில் அதிகம் நீர்சத்துகள் மற்றும் நார்சத்துக்களும் நிரம்பியுள்ளது. வெள்ளரிக்காய் சருமத்திற்கு அதிகம் தேவைப்படும் பழமாக உள்ளது. முடிந்த வரை வெள்ளரிக்காயை பச்சையாக சாப்பிடுவது நல்லது. வெள்ளரிக்காயை குளிர் பானமாக குடித்து வந்தால் வாயு தொல்லை, வயிற்றுப் புண்கள், வயிற்று எரிச்சல் போன்றவை குணமாகும்.

இளநீர்

உடல் சூடு உள்ளவர்களுக்கு இளநீர் சிறந்த மருந்தாக இருக்கிறது. காலையில் இளநீர் குடித்து வருவதால் உடலை எப்பொழுதும் குளிச்சியாக வைத்துக் கொள்ள உதவுகிறது. இளநீர் உடல் சூட்டை கட்டுப்படுத்தி மலசிக்கல் மற்றும் வயிற்றுப் புண்களை குறைக்க உதவுகிறது. கோடை காலத்தில் தொடர்ச்சியாக இளநீர் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்ய உதவுகிறது.

நுங்கு

பனை மரத்தில் இருந்து கிடைக்க கூடியது நுங்கு. இதில் அதிகம் நீர்ச்சத்துகள் மற்றும் கனிமச் சத்துக்கள் நிறைந்துள்ளது. கோடை காலத்தில் ஒரு சிலருக்கு எவ்வளவு தான் தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது. ஆனால் நுங்கு சாப்பிடுவதன் மூலம் தாகம் அடங்கி விடும்.

சிறு தொழில் - சும்மா தூக்கி போடுற பொருளை பயன்படுத்தி சம்பாதிக்கலாம்..!

 

ஆரஞ்சு பழத்தோல் பொடி தயாரித்து விற்பனை செய்யும் தொழிலை பற்றி தான் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதனை தொடங்கி உங்களுக்கு தேவையான பணத்தை நீங்களே சம்பாதித்து கொள்ளுங்கள்.

இந்த ஆரஞ்சு பழத்தோல் பொடியை பல வகையான அழகு சாதன பொருட்களை தயாரிக்க ஒரு முக்கிய மூலப்பொருளாக பயன்படுத்தபடுகிறது. அதனால் நீங்கள் இந்த ஆரஞ்சு பழத்தோல் பொடி தயாரித்து விற்பனை செய்யும் தொழிலை தொடங்கினீர்கள் என்றால் நல்ல லாபம் கிடைக்கும்.

தேவையான மூலப்பொருட்கள்:

இந்த தொழிலுக்கு தேவையான முக்கியமான மூலப்பொருட்கள் என்று பார்த்தால் நல்ல நிலையில் உள்ள ஆரஞ்சு பழத்தோல், கண்ணாடி பாட்டில்கள் மற்றும் Packing Machine ஆகியவை தேவைப்படும்.

தேவையான முதலீடு:

ஆரஞ்சு பழத்தோலினை நீங்கள் ஜூஸ் கடைகளில் இருந்து வாங்கி கொள்ளலாம். அப்படி இல்லையென்றால் நீங்களே பழத்தினை வாங்கியும் அதனுடைய தோலினை மட்டும் பயன்படுத்தி கொள்ளலாம்.

கண்ணாடி பாட்டில்களின் விலை 10 ரூபாய் முதல் உள்ளது. அதே போல் Packing Machine-ன் விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடுகிறது. இதன் ஆரம்ப விலை 1,000 ரூபாய் ஆகும்.

தேவையான ஆவணம் மற்றும் இடவசதி:

நீங்கள் தயாரித்து வைத்துள்ள ஆரஞ்சு பழத்தோல் பொடியை Online மூலமாக விற்பனை செய்ய போகிறீர்கள் என்றால் அதற்கு GST Registration கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

இந்த தொழில் தொடங்குவதற்கு நல்ல தூய்மையான 10 X 10 இடம் இருந்தால் மட்டுமே போதும்.

தயாரிக்கும் முறை:

முதலில் நாம் வாங்கி வைத்துள்ள அல்லது எடுத்து வைத்துள்ள ஆரஞ்சு பழத்தோலினை நன்கு சுத்தம் செய்து விட்டு நன்கு வெயிலில் காய வைத்து எடுத்து கொள்ளுங்கள். பின்னர் அதனை ஒரு மிக்சி ஜாரில் போட்டு நன்கு பொடியாக அரைத்து கொள்ளுங்கள்.

பிறகு அதனை நன்கு சலித்து 1 கண்ணாடி பாட்டிலுக்கு 100 கிராம் விகிதத்தில் சேர்த்து Packing Machine-னை பயன்படுத்தி பேக்கிங் செய்து கொள்ளுங்கள்.

விற்பனை செய்யும் முறை:

நாம் தயாரித்து பேக்கிங் செய்து வைத்துள்ள ஆரஞ்சு பழத்தோல் பொடியினை மளிகை கடைகள், சூப்பர் மார்க்கெட் மற்றும் அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் அல்லது விற்பனை செய்யும் இடங்கள் போன்ற இடங்களுக்கெல்லாம் நீங்களே நேரடியாக சென்றும் விற்பனை செய்யலாம்.

வருமானம்:

தோராயமாக 100 கிராம் ஆரஞ்சு பழத்தோல் பொடியின் விலை 130 ரூபாய் முதல் 150 ரூபாய் என்று விற்பனை செய்யப்படுகிறது என்றால்1 கிலோ ஆரஞ்சு பழத்தோல் பொடியின் விலை 1,300 ரூபாய் முதல் 1,500 ரூபாய் என்று விற்பனை செய்யப்படுகிறது.

நீங்கள் தோராயமாக ஒரு நாளைக்கு 20 கிலோ ஆரஞ்சு பழத்தோல் பொடியினை விற்பனை செய்கிறீர்கள் என்றால் 26,000 ரூபாய் முதல் 30,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.