சனி

ரத்த குழாய் அடைப்பு நீங்க

நண்பர் ஒருவருக்கு ரத்த குழாய் அடைப்பு ஏற்பட்டதால் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய நேர்ந்தது, ஆனால் அறுவை சிகிச்சை இல்லாமல் சாதரணாமாக நாம் உண்ணும்
உணவில் (ஆயுர் வேத டாக்டர் பரிந்துரைத்த) எல்லா அடைப்புகளும் நீங்கியதுதான் ஆச்சரியம்.
தயவு செய்து கவனியுங்கள்.
உங்கள் ரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ளும்.
ஆஞ்சியோவுக்கோ, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன் நம்பிக்கையுடன் இதனைச் செய்யுங்கள். நீங்கள் குணமடைவீர்கள்.
தன் இதய வலிக்காக சிகிச்சைக்குச் சென்ற நோயாளி ஒருவர்-பைபாஸ் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
இந்நிலையில் நோயாளி ஆயுர்வேத டாக்டரை சந்தித்தார்.
தன்னுடைய ஆஞ்சியோ சோதனையில், இருதய இரத்த குழாயில் மூன்று அடைப்புகள் இருப்பதாகவும், பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு நாள் குறிப்பிட்டுவிட்டதாகவும்
தெரிவித்தார்.
ஒரு மாதத்திற்கு அடியிற்கண்ட பானத்தை அருந்தும்படி ஆயுர்வேத டாக்டர் நோயளிக்கு பரிந்துரைத்தார்.
மும்பையில் உள்ள இருதய மருத்துவமனையில் பைபாஸ் அறுவை ஆப்ரசேனுக்கு முதல் நாள் ரூ2,25,000த்தை டெபாசிட் செய்தார்.
நோயாளியை பரிசோதனை செய்த டாக்டர் அவருடைய முந்தைய பரிசோதனையை சரிபார்த்து வியந்தார்.
ஆச்சரியப்பட்டார். தன்னுடைய முந்தைய பரிசோதனைக்குப் பிறகு ஏதாவது மருந்து சாப்பீட்டீர்களா? என்று டாக்டர் வினவினார்.
இதனை கவனமுடன் படியுங்கள், நீங்களும் குணமடையலாம்.
இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானத்திற்கு உரிய மூலப்பொருள்கள்:
1 கப் எலுமிச்சை சாறு
1 கப் இஞ்சிச் சாறு
1 கப் பூண்டு சாறு
1 கப் ஆப்பிள் சைடர் விநிகர்.
எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான இளஞ்சூட்டில் (சிம்மரில்) 60 நிமிடம் கொதிக்க வையுங்கள். நான்கு கப் மூன்றாக குறையும். சூடு ஆறியவுடன் சாறு
இருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள். நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்புன் பானத்தை அருந்துங்கள் மகிழ்ச்சியுடன் பானத்தை அருதுங்கள்....சுவையாகவும் இருக்கும் நீங்களே உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்.
இயற்கையாய் இயற்கையோடு வாழ..!
இயற்கை மருத்துவத்துக்கு மாறுவோம்..!

பிர்க்கை சாகுபடி சில குறிப்புகள்

பிர்க்கை சாகுபடி செய்துள்ள வீவசாயிகள் கவனத்திற்கு பீர்க்கையில் பூ பிஞ்சு வைக்கும் பொழுது தண்ணீர் கண்டிப்பாக பாய்ச்ச வேண்டும்.
வெயில் அதிகமாக இருப்பதால் காய் வெம்பி பிஞ்சு விட்டவுடன் அவை உதிர்ந்து விடும். இவ்வாறு இருப்பதற்கு போரான் சத்து அவசியம் தேவைப்படும்.
பீர்க்கங்காய் கீழ்நோக்கி நேராகத்தான் ஓரே சீராக இருக்கும். அப்படி நேராக காய்க்காமல் கோனலாக தரமில்லாமல் இருந்தால் அவை போரான் சத்து பற்றாக்குறையாகும். 
இந்த பாதிப்பு எவ்வாறு ஏற்படுகிறது என்றால் செடியில் ஆண்பூக்களின் எண்ணிக்கை அதிகமாக பூத்து பெண்பூக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் அப்படி இருப்பதால் காய் கோனலாகவும், மகசூல் இழப்பு ஏற்படும் இவற்றை சந்தையில் விற்பனை செய்ய முடியாது வாங்கமாட்டார்கள்.
இதனை சரிசெய்ய ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி போரான் மாலை வேளையில் தெளித்து மகசூலை அதிகப்படுத்தலாம். நல்ல தரமான காய்களாக கிடைக்கும்.
வெயிலின் தாக்குதல் இருப்பதால் சாறுறிஞ்சும் பூச்சிகளும் அதிகமாக இருக்கும் இவை இலையில் உள்ள சாற்றை ஊறிஞ்சுவதால் இலைகள் வெளிரி இலையில் கரும்புள்ளிகள் தோன்றி இலைமுழுவதும் கருப்பாகி காய்ந்து விடும் 
இந்த சாறுறிஞ்சும் பூச்சியை கட்டுப்படுத்த மிக குறைந்த செலவிலேயே மஞ்சள் அட்டை ஒரு ஏக்கருக்கு 10 முதல் 20 இடங்களில் வைத்து கவர்ந்து அழிக்கலாம்
தொடர்புக்கு
8870392422

செவ்வாய்

நெல் வைக்கோல் காளான் படுக்கை தயாரிப்பு மற்றும் வளர்ப்பு

குடிசை மற்றும் மர நிழலில் நெல் வைக்கோல் காளானை வளர்க்கலாம். புதிய, நோயற்ற வைகோலை பயன்படுத்த வேண்டும். ஒரு படுக்கை தயாரிப்பதற்கு 10-15 கிலோ வைக்கோல் தேவைப்படும். சமீபத்திய காலகட்டத்தில், பாலித்தீன் குடிலில் வளர்ப்பதன் மூலம் 25-35 º செ வெப்பநிலை மற்றும் 75-80% ஒப்பு ஈரப்பதம் பராமரிக்கப்படுகிறது.
நெல் வைக்கோல் கட்டு முறை:
செயல்முறை:
1 மீட்டர் நீளம் மற்றும் 0.75 மீட்டர் அகலத்தில் மரக்கட்டைகளை கொண்டு பரண் அமைக்க வேண்டும்.
ஒரு கிலோ எடை கொண்ட வைக்கோலை உருளையாக கட்ட வேண்டும்.
வைக்கோல் கட்டுகளை 12-18 மணிநேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.
கட்டுகளை வெளியே எடுத்து நீரை வடிக்க வேண்டும்
வைக்கோல் கட்டுகளின் நுனிப்பகுதி ஒரு புரம் வருமாறு பரண்மேல் வரிசையாக அடுக்க வேண்டும்.
இரண்டாம் வரிசையில் நுனிப்பகுதி முதல் வரிசையின் எதிர்புறம் வருமாறு அடுக்கவும்.
காளான் வித்துகளை தூவிய பிறகு, மேற்கூறிய படி மூன்றாம் மற்றும் நான்காம் வரிசை அமைக்க வேண்டும்.
இந்த வரிசைக்கு மேல் காளான் வித்துக்களை தூவ வேண்டும்.
இதற்கு மேல் மீண்டும் இரண்டு வரிசை வைக்கோல் கட்டுகளை அடுக்க வேண்டும்.
இவ்வாறு அடுக்கிய படுக்கைகளை பாலித்தீன் கொண்டு மூட வேண்டும். 
குறிப்பு : வைக்கோல் கட்டுகளை நன்கு ஊற வைத்தால், படுக்கை போதிய ஈரப்பதம் கொண்டிருக்கும். இல்லையெனில், பூவாளி கொண்டு நீர் தெளிக்க வேண்டும். அதிக ஈரப்பதம் காணப்பட்டால் பாலித்தீன் மூடாக்கினை சற்று நேரம் நீக்க வேண்டும். படுக்கையின் வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தின் அளவை கொண்டு காளான் வளர்ப்பின் மகசூல் இருக்கும். காளான் மொட்டுகள் உருவாவதற்கு 30-35º செ மிதமான வெப்பநிலை தேவைப்படும்.
வித்துக்கள் இட்ட 6-10 நாளில் காளான் மொட்டுக்கள் படுக்கையின் எல்லா பகுதியிலும் தோன்றும். இதனை 4-5 நாட்களில் அறுவடை செய்யலாம். காளானை மொட்டுப் பருவத்தில் அறுவடை செய்ய வேண்டும். ஏனெனில் வெடித்த காளான்களில் அதிக அளவு நார் இருக்கும். 
மகசூல் : 10 கிலோ தளப்பொருளிலிருந்து தளப்பொருளிலிருந்து 1-2 கிலோ காளான் அறுவடை செய்யலாம்.
முறுக்கிய வைக்கோல் முறை:
செயல்முறை:
வைக்கோலை 5-8 மீட்டர் நீளம் மற்றும் 5-10 செ.மீ குறுக்கு அளவில் முறுக்க வேண்டும்.
முறுக்குகளை 12 மணிநேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.
வைக்கோலை வெளியே எடுத்து நீரினை வடிக்க வேண்டும்.
வைக்கோல் முறுக்குகளை குறுக்கும் நெடுக்குமாக பரண்மேல் அடுக்க வேண்டும்.
அடுத்த அடுக்கில் வைக்கோல் முறுக்கினை முதல் அடுக்கின் எதிர்மறையாக அமைக்க வேண்டும்.
காளான் வித்துகளை இப்படுக்கையின் மீது தூவ வேண்டும்.
பின்னர் படுக்கைகளை பாலித்தீன் கொண்டு மூட வேண்டும்.

ஞாயிறு

600 க்கும் அதிகமான மூளிகைசெடி வகைகள் – செ.சி.ப மூலிகை பண்ணை

னக்கு ஏற்பட்ட விசகடிக்கு மருந்து கிடைக்காததால் உண்டான தேடல் இன்று ஒரு மூலிகை பண்ணையை உருவாக்கி உள்ளது அதுதான் செ.சி.ப மூலிகை பண்ணை மற்றும் ஆராய்சி மையம், கீரமங்கலம், புதுக்கோட்டை மாவட்டம். இயற்கையாகவே மரம் வளர்ப்பு மூலிகை செடி வளர்ப்பில் ஆர்வமுடையவர்
திரு.செ.சி.பவானந்தம்(9629601855), தனது வீட்டின் அருகிலேயே மூலிகை செடி மற்றும் மரங்களை ஆர்வமுடன் வளர்த்து வந்த பவானந்தம் அவர்களை கி.பி 2000 மாவது ஆண்டு தனது தாயாரின் அஸ்தி கரைக்க கடற்கரை சென்றபோது பாம்பு கடித்து விட்டது, விசகடிக்கு சிறியநங்கை பொடி கடற்கரை பகுதி மக்களிடம் கேட்டபோது யாரும் கொடுக்க முன்வரவில்லை பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தார். குணமடைந்தவர் மூலிகை செடிகளை தேடி பயணிக்க ஆரம்பித்தார் வெற்றியும் கண்டார்.
இன்று அவரது பண்ணையில் 600க்கு மேலான மூலிகை செடி மற்றும் மரங்கள் உள்ளன 1000 மூலிகைக்கும் மேல் வளர்ப்பதே தனது விருப்பமாகக்கொண்டுள்ளார்.
மூலிகைகளின் பயனை தான்மட்டும் உணர்ந்தால் போதாது என்று பள்ளிமாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் மூலிகை செடிகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதையே தனது தலையாயகடமை என்று மாணவர்களிடம் விழிப்புணர்வு பாடம் எடுத்துவருகிறார்.
திரு.பவானந்தம் அவர்களது பண்ணையில் உள்ள மூலிகைகள் சிலவற்றின்
பெயர்கள்: சிறியநங்கை, சக்திசாரணை, நாகமல்லி, நாகநந்தி, கற்பூரவள்ளி, ரணகள்ளி, சர்பகந்தி, சித்தரத்தை, நத்தைசூரி, இன்சுலின் செடி, சர்க்கரைக்கொல்லி(சிறுகுறிஞ்சான்), அத்தி, அரசு, ஆடாதோடை, அசோகமரம், அரைரூட், அகில், செவ்அகில், அருகம்புல், அரிவாள்மனை பூண்டு, அவுரி, ஆடுதீண்டாபாளை, ஆவாரை, இஞ்சி, உத்திராட்சம், ஊமத்தைகசகசா, கண்டங்கத்திரி, கச்சாகுறிஞ்சான், கற்பூரவள்ளி, கடுகு, கடுக்காய், கரிசலாங்கண்ணி, கறிவேப்பிலை, கஸ்தூரி மஞ்சள், காசுக்கட்டி, கிராம்பு, கீழாநெல்லி, குங்கிலியம், குடசப்பாலை, குப்பை மேனி, கோரைக் கிழங்கு, சந்தனம், சாதிக்காய், சீதா, சுண்டை, செம்பருத்தி தண்ணீர்விட்டான் கிழங்கு, தவசு முருங்கை, தழுதாழை, தாழை, தாளிசபத்திரி, தான்றிக்காய், திப்பிலி, துத்தி, தும்பை, துளசி, தூதுவளை, தேற்றான்கொட்டை, நஞ்சறுப்பான், நந்தியாவட்டை, நன்னாரி, நாயுருவி, நாவல், நித்யகல்யாணி, நிலவேம்பு, நிலபனை, அய்யன்பனை நிலாவிரை, நீர்முள்ளி, நுணா, நெருஞ்சி, நெல்லி, நொச்சி, பப்பாளி, பிரண்டை, பிரின்சி, புதினா, பேரரத்தை, பொடுதலை, மஞ்சள், மணத்தக்காளி, மருதாணி, மல்லிகை, மிளகு, முடக்கறுத்தான், முட்சங்கன், முருக்கன், மூக்கிரட்டை, வசம்பு, வல்லாரை, வாதநாராயணன், வெட்டுக்காய் பூண்டு, பூனைகாலி, வெள்ளெருக்கு, வெற்றிலை, வேம்பு, கும்பகொடளி, குண்டுமணி(கருப்பு, சிவப்பு, மஞ்சள், சாம்பல்), ஆலமரம், மா, பலா, களாக்காய், வன்னி, விடுதிகொட்டை, ஊமத்தை, உதிரவேங்கை, கொடம்புளி, நற்குருந்தம், பதிமுகம், செண்பகம், யானைகுண்டுமணி, பன்னீர் கொய்யா மற்றும் பலவிதமான மூலிகைகள்
திரு.பவானந்தம் அவர்கள் கூறிய சில முலிகை குறிப்புகள்: ஆடாதோடை – காயம், ஈளை இருமல், சுரம், காமாலை, இரத்தக் கொதிப்பு இவைகளை குணமாக்கும் சித்தரத்தை நெஞ்சுவலி போக்கும் சர்க்கரைக்கொல்லி(சிறுகுறிஞ்சான்) – சர்க்கரைக் கொல்லி வாந்தி உண்டு பண்ணுவதற்கும் நெஞ்சில் உள்ள கோழையை வெளியேற்றி இருமலைக் கட்டுப் படுத்தவும், உணவுக் குழலின் செயல்திறனைக் கூட்டுவதற்கும் பயன் படுத்தப் படுகிறது. இலை பித்தம் பெருக்கும், தும்மலுண்டாக்கும்,
நஞ்சு முறிக்கும். வேர் காய்ச்சல் போக்கும். சதை நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும். இது சர்க்கரை வியாதியை குணப்படுத்தும் மருந்தாகவும் பயன்படுகிறது. இதன் இலையை மென்று துப்பிவிட்டு சக்கரையை வாயில் போட்டால் இனிக்காது மண் போன்று இருக்கும்.
நாகமல்லி பாம்பு விஷம் போக்கும் 7 வகை பால்மரம்: அத்தி, இத்தி, ஆல், அரசு, மா, பலா, கிலா மருத்துவ மரங்கள்: வேம்பு, கும்பகொடளி, ஆலமரம், மா, பலா, களாக்காய், வன்னி, விடுதிகொட்டை, ஊமத்தை, உதிரவேங்கை, கொடம்புளி, நற்குருந்தம், பதிமுகம், செண்பகம், யானைகுண்டுமணி, பன்னீர் கொய்யா, இலவங்கம்
செ.சி.ப மூலிகை பண்ணை ஆராய்சி மையம், 79,காமராசர் சாலை, கீரமங்கலம், புதுக்கோட்டை மாவட்டம் – 614 624 9629601855

கருங்கோழி மருத்துவ குணம்

அது என்ன கடக்நாத் சிக்கன்? மற்ற கோழிகளில் இல்லாத ஸ்பெஷல் இதில் இருக்கா? வாங்க பார்க்கலாம்.
கடக்நாத் கோழி
கடக்நாத் சிக்கன்
மத்தியப் பிரதேஷத்தின் நாட்டுக்கோழிகள் இவை. இந்தக் கோழிகளின் இறக்கை, கறி, ரத்தம், முட்டை என அனைத்துமே கறிய நிறம் கொண்டவை. இந்தக் கோழிகளில் மெலனின் என்ற நிறமி அதிகம் இருப்பதே இதன் கறுமைத்தன்மைக்குக் காரணம். யுனானி போன்ற வைத்தியமுறைகளில் இந்தக் கோழிகள் மருத்துவகுணம் கொண்டவையாகச் சிறப்பாகக் குறிக்கப்படுகின்றன. 
இந்தக் கோழியைச் சாப்பிடுவதால், இதன் மெலனின்தன்மை காரணமாக நரம்புகள் வலுவடைந்து, விரிகின்றன என்றும், நரம்புத் தளர்ச்சி போன்ற பிரச்னைகள் உள்ளவர்களுக்கு மிகவும் ஏற்றது என்றும் சொல்லப்படுகிறது. மேலும், மைசூரில் உள்ள உணவு ஆராய்ச்சி மையம், இதில் உள்ள கொழுப்பு தரமானது. எல்லா நாட்டுக்கோழிகளையும் போலவே இதன் ஒயிட் மீட் ஆரோக்கியமானது. இதைச் சாப்பிடுவதால் ரத்தம் அழுத்தம் கட்டுப்படும். இதய நோய்களுக்கு ஏற்றது எனக் குறிப்பிட்டு உள்ளது.
மத்தியப்பிரதேஷத்தின் மலைப்பகுதியில் உள்ள மக்கள் இந்தக் கோழியை ஆண்மை விருத்திக்கு ஏற்றது என்று பயன்படுத்துகிறார்கள். பெண்களுக்கு மாதவிடாய்க் கோளாறுகள் சீராகும் என்றும் நம்பப்படுகிறது.
கடக்நாத் கோழி முட்டை
முட்டைகள்
கடக்நாத் கோழியின் முட்டைகளும் கறுப்பு நிறத்தில் உள்ளன. எல்லா நாட்டுக்கோழிகளின் முட்டைகளைப் போலவே இதிலும் நல்ல கொழுப்பு நிறைந்துள்ளது. வளரும் குழந்தைகளுக்கு ஏற்றது. மற்ற முட்டைகளைவிடவும் இதில் அமினோ அமிலங்கள் அதிகம் என்று சொல்லப்படுகிறது. பிரசவத்துக்குப் பிறகு வரும் தலைவலி, ஆஸ்துமா, சிறுநீரக வீக்கம் போன்றவற்றுக்குச் சிறந்த மருந்தாக இந்த முட்டைகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
"இந்தக் கோழிகள் அதிக மருத்துவகுணம் வாய்ந்தவை. ஆண்மையைப் பெருக்கும். பெண்களின் மாதவிடாய்க் கோளாறுகளைக் கட்டுப்படுத்தும். இதய நோயாளிகளுக்கு ஏற்றது.  

இக்கோழி இறைச்சியை அதிக நாள்பட்ட நோய்களுக்கு மருந்தாகப் பயன் படுத்துகின்றனர்...
ஆண்களுக்கு ஆண்மைத் தன்மையை
அதிகரிப்பதோடு, வயாக்ரா மாத்திரை போல் விந்தணுக்களின் வீரியத்தையும் அதிகரிக்கும் என நம்பபடுகிறது
ஓமியோபதி மருத்துவத்தில், நரம்புத் தளர்ச்சி உள்ளவர்களுக்கு, கருங்கோழி இறைச்சியை சாப்பிட பரிந்துரைக்கின்றனர்... இக்கோழி இறைச்சி, 25 சதவிதம் அளவுக்கு புரதச்சத்து கொண்டுள்ளது... கொலஸ்ட்ரால், 0.73 -1.05 சதவீதம் மட்டுமே உள்ளதால் இந்த இறைச்சியை இரத்த கொதிப்பு, இதய நோய் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பவர்கள் நன்றாகச் சாப்பிடலாம்.
இறைச்சியில் அதிகமான அமினோ அமிலங்களும், மனிதர்களுக்குத் தேவையான ஹார்மோன் சத்துக்களும் உள்ளன...
மைசூரில் செயல்படும் உணவு ஆராய்ச்சிக் கழகம், கருங்கோழி இறைச்சி இதய நோயாளிகளுக்கு மிகவும் நன்மை தரக் கூடியது என, சான்றளித்துள்ளது...சீன நாட்டின் மருத்துவத்திலும், உணவிலும்கூட இந்தக் கருங்கோழிகள் சிறப்பாகப் பயன்படுத்தப்படுகின்றன.

வியாழன்

தோல் வியாதிகளை குணமாக்கும் 3 அற்புத மூலிகைகள்!

எளிதாக நமக்கு அருகாமையில் இருக்கும் மூலிகைகளே அற்புத மருந்துகளாக செயல்படுகின்றன. அவ்வகையில் மருதாணி, அருகம்புல், பூவரசு ஆகியவற்றை கொண்டு தோலில் ஏற்படும் பிரச்னைகளுக்கான மருத்துவத்தை பார்க்கலாம்.

இம்மூன்றுமே மருத்துவ குணங்களை கொண்டவை. ரத்தத்தை சுத்தமாக்குபவை. கீழ்கண்ட முறையில் செய்தால் உங்கள் சரும வியாதிகள் நீங்கும்.
பூவரசம் பூ, மருதாணி மற்றும் அருகம்புல் :
பூவரசு மஞ்சள் நிற பூக்களை உடையது. பம்பரம் போன்ற உருவம் உடைய காய்களை கொண்டது. ரத்தத்தை  சுத்தப்படுத்த கூடியது.
மருதாணி ரத்தத்தை சுத்திகரித்து உடலுக்கு ஆரோக்கியம் தரவல்லது. தோலுக்கு அழகை தருகிறது. நகப்பூச்சாக பயன்படுகிறது.
அருகம்புல் ரத்தத்தை சுத்தப்படுத்தும் மூலிகையாக விளங்குகிறது. தோலில் ஏற்படும் அலர்ஜி, அரிப்புக்கான மருந்தாக விளங்குகிறது.
படர்தாமரை மற்றும் சிறு கொப்புளங்களுக்கு :
மருதாணியின் துளிர் இலைகள் ஒருகைப்பிடி அளவுக்கு எடுக்கவும். இதில், 2 பல் பூண்டு, 6 மிளகு ஆகியவற்றை லேசாக தட்டிபோடவும். கால் ஸ்பூன் மஞ்சள் பொடி சேர்க்கவும். ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும்.
இதை வடிகட்டி 50 மில்லி அளவுக்கு குடித்துவர ரத்தம் தூய்மை பெறும். தோலில் ஏற்படும் அரிப்பு, தொற்று, சிறுகொப்புளங்கள், படர்தாமரை போன்றவை விலகிப்போகும்.
வெள்ளைப் போக்கு :
மருதாணி நுண்கிருமிகள், பூஞ்சை காளான்களை  போக்க கூடியது. நோயை தணிக்கும் தன்மை கொண்டது. நகங்களுக்கு மேல்பற்றாக போடுவதால் நகச்சொத்தை நீங்கும்.
நகத்துக்கு நல்ல வண்ணம், பாதுகாப்பு, அழகை கொடுக்க கூடியதாகிறது. உடல் குளிர்ச்சி பெறும். தோல்நோய்கள் வராமல் பாதுகாக்கிறது. வெள்ளைப்போக்கு பிரச்னைக்கு மருந்தாகிறது.
தோல் வியாதிகளுக்கு : 
அருகம்புல்லை பயன்படுத்தி தோலில் ஏற்படும் அரிப்புக்கான மருந்து தயாரிக்கலாம். ஒரு பங்கு அருகம்புல் பொடி, கால் பங்கு மஞ்சள் பொடி சேர்த்து கலந்து பசையாக்கி உடலில் அரிப்பு இருக்கும் இடத்தில் தேய்த்து குளித்தால் தோலில் ஏற்படும் அரிப்பு குணமாகும். தோல் மென்மை பெறும்.
தோல் வியாதிகளுக்கு : 
அருகம்புல்லை பயன்படுத்தி தோலில் ஏற்படும் அரிப்புக்கான மருந்து தயாரிக்கலாம். ஒரு பங்கு அருகம்புல் பொடி, கால் பங்கு மஞ்சள் பொடி சேர்த்து கலந்து பசையாக்கி உடலில் அரிப்பு இருக்கும் இடத்தில் தேய்த்து குளித்தால் தோலில் ஏற்படும் அரிப்பு குணமாகும். தோல் மென்மை பெறும்.
சர்க்கரை நோய்க்கு : 
பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட அருகம்புல் நோய் நீக்கியாகிறது. ஒவ்வாமையை போக்குகின்ற உன்னதமான மருந்தாக விளங்குகிறது.
காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு குடித்துவர ரத்தம் சுத்தமாகும். சர்க்கரை நோயை தணிக்க கூடியதாக உள்ளது. இதில் உள்ள புரதச்சத்து உடலுக்கு பலம் தரும்.
சிரங்கு, வெண்புள்ளிகளுக்கு : 
ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் எடுக்கவும். இதனுடன் பூவரசம் இலை பசையை சேர்த்து தைலமாக காய்ச்சவும். இதை ஆறவைத்து மேல்பூச்சாக பயன்படுத்தும்போது தோலில் ஏற்படும் அரிப்பு, தேமல், படை, சொரி, சிரங்கு, வெண்புள்ளிகள் சரியாகும்.
சரும அரிப்பிற்கு : 
பூவரசம் மரத்தின் பழுப்பு இலைகளை எடுத்து தீயில் இட்டு சாம்பலாக்கி தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து தோலில் அரிப்பு இருக்கும் இடத்தில் பூசினால் பிரச்னை சரியாகும்.
பூவரசு அற்புதமான மருந்தாக விளங்குகிறது. பூஞ்சை காளான்கள், நுண்கிருமிகளை அழிக்க கூடியது. ஒவ்வாமையை போக்கவல்லது.
பூவரசம் பட்டையை தேனீராக்கி குடிப்பதால் ரத்தம் சுத்தமாகும். வெண்குஷ்டம் விலகிப்போகும்.

பசு மாடுகளுக்கு தீவன மேலாண்மை:-

அடர்தீவனத்தில் கால்நடைகளுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் சரிவிகிதத்தில் இருக்க வேண்டும்.
கால்நடைகள் விரும்பி உண்ணும் பொருளாகவும் விலை மலிவாகவும் இருத்தல் நன்று. 
அடர்தீவனக்கலவையில் 100 கிலோ தயாரிக்க கீழ்க்கண்ட விகிதத்தில் பொருட்களை கலந்து தயாரிக்கலாம். 
தானிய வகைகள் - 35 கிலோ ( மக்காச்சோளம் அல்லது கம்பு அல்லது சோளம் ) + புண்ணாக்கு வகைகள் - 25 கிலோ ( கடலைப்புண்ணாக்கு அல்லது எள்ளுப்புண்ணாக்கு ) + தவிடு வகைகள் - 37 கிலோ ( அரிசித்தவிடு அல்லது கோதுமை தவிடு ) + தாது உப்புக்கள் - 2 கிலோ ( அக்ரிமின் அல்லது சப்ளிவிட் - மருந்துவ கடைகளில் கிடைக்கும் ) + சாதாரண உப்பு – 1 கிலோ ( சாப்பாடு உப்பு ).
பசுந்தீவனத்தை உற்பத்தி செய்வதன் மூலம் செலவை குறைத்து பண்ணையை இலாபகரமாக நடத்த இயலும். 
பசுந்தீவனம் அதிக நார் மற்றும் புரதசத்தை தன்னுள் கொண்டிருக்கிறது. 
பல்லாண்டு தீவனப்புல் வகைகள்:
கம்பூ நேப்பியர் வீரியப்புல் ( கோ-1, கோ-3, கோ-4 ), கினியா புல், கொழுக்கட்டைப்புல், எருமைப்புல். 
தானியப்பயிர்கள்:
தீவனச்சோளம், கம்பு, மக்காச்சோளம். பயறு வகை தீவனம் - வேலிமசால், காராமணி, குதிரைமசால், முயல்மசால், சணப்பை. 
தீவன மரங்கள்:
சவுண்டல், அகத்தி, கிளைரிசிடியா & முருங்கை.
தொகுப்பு: நாட்டு மாடுகளை வளர்ப்போம் முகநூல் குழு.

இது இயற்கை பூச்சி விரட்டி

வேப்பென்னை + புங்கென்னை கரைசல் #பொன்னீம்.இது இயற்கை பூச்சி விரட்டி 
50 MLவேப்ப எண்ணேய் + 50 ML புங்கன் எண்ணேய் + 100g காதி சோப்பை தேவையான நீரில் கரைத்து,
இந்த சோப்பு கரைசலுடன். மேல் கண்ட எண்ணேய்களையும் சேர்த்து நன்கு கலக்கினால் பொன்னியம் தயார்.
மேல் கண்ட செய்முறை 16 லி கொண்ட ஒரு தெளிப்பானுக்கான அளவுகள்.
அனைத்து பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்
நன்றி🙏
இந்த தகவல் உயிர்நாடி விவசாய குழுவில் கிடைத்தது

சனி

மூலிகைப் பூச்சி விரட்டி தயாரிக்கும் முறை:

இயற்கையில் உங்கள் தோட்டத்தில் உள்ள களைச்செடிகள் என்று அழைக்கப்படுவனவற்றில் எவையெல்லாம் பூச்சிகளால் தீண்டப்படாமல் பளிச்சென்று காணப்படுகின்றனவோ அவற்றை நாட்டு மாட்டுக் கோமியத்தில் ஊறவைத்தால் பூச்சி விரட்டி தயார்.
சுருக்கமாக ஐயா சொல்லும் முறை:
தின்றால் கசப்பவை
உடைத்தால் பால் வருபவை
முகர்ந்தால் நாற்றம் வருபவை




படங்களில் காணப்படும் இலைகளுடன் சோற்றுக் கற்றாழை, பிரண்டை போன்றவற்றையும் பயன்படுத்து.
இவற்றை தயாரிக்க 100லி கொள்ளளவு கொண்ட பேரல் பயன்படுத்து.
பெரிய பேரலாக இருப்பதால் இலைகளை வெட்டியோ ,இடித்தோ, அரைத்தோ ஊறவைக்க தேவையில்லை.
செடிகளை வேருடன் பறித்துவந்து அப்படியே ஊறவைக்கலாம்
நாட்கள் செல்லச் செல்ல பூச்சி விரட்டியின் வீரியம் அதிகரிக்கிறது
10லி தண்ணீரில் 400மிலி கலந்து தெளிப்பான் மூலம் பயன்படுத்தலாம்
எல்லா ப் பயிர்களுக்கும் ஒரே பூச்சி விரட்டியே பயன்படுத்துகிறோம்
வீட்டில் மிச்சமாகும் புளித்த மோரையம் இதே பேரலில் சேர்த்து விடு.
சோற்றுக் கற்றாழை சேர்ப்பதால் இது வளர்ச்சி ஊக்கியாகவும் பயன்படுகிறது.
கோடை வெப்பத்திலிருந்தும் பயிர்களைக் காக்கிறது

நிலவள ஊக்கி கரைசல் தயாரிக்கும் முறை

அமிர்த கரைசல்
பச்சை பசுஞ்சாணம் -10kg
பசுவின் கோமியம் -10லிட்
நாட்டு சர்க்கரை -250g
தண்ணீர் -100lit
இவைகளை ஒரு சிமெண்ட் தொட்டியில் போட்டுக் கலக்கி ஒரு நாள் வைத்திருந்தால் அடுத்த நாளே இந்த கரைசல் தயாராகி விடும்.இதை 10% கரைசலாக பாசன நீருடன் கலந்து விடலாம்.அல்லது தெளிப்பு உரமாகவும் பயன்படுத்தலாம்.பாசன நீருடன் கலந்து விட ஏக்கருக்கு 50லிட்டர் தேவைப்படும்.தெளிப்பு உரமாகவும் பயன்படுத்த 10லிட்டர் போதும்.இது மண்ணின் வளம் மற்றும் நலத்தையும் கூட்டி பயிர்கள அனைத்திற்கும் நன்மை பயக்கும்.

பிரம்மாஸ்திரா
மூன்று கிலோ அளவிலான வேப்பங்குச்சிகளை விழுதாக அரைக்கவேண்டும். இதனுடன் சீத்தா, புங்கன், ஆமணக்கு, பப்பாளி, கொய்யா, ஊமத்தை, கருவேலம், பாகல் ஆகியவற்றின் இலைகளை தலா இரண்டு கிலோ வீதம் சேர்த்து அரைக்கவேண்டும் (ஏதாவது ஐந்து இலைகள் இருந்தால் கூட போதும். இலைகளை அப்படியே போட்டால், பிரம்மாஸ்திரம் தயாராவதற்கு நாள் பிடிக்கும்). இவற்றைப் பத்து லிட்டர் பசுமாட்டு சிறுநீரில் கலந்து அடுப்பில் 10 நிமிடம் கொதிக்க வைக்கவும். பின்பு 48 மணி நேரம் குளிர வைத்து, வடிகட்டி, பயிர்களுக்கு தெளிக்கலாம். இந்தக் கரைசலை ஆறு மாதம் வரை சேமித்து வைத்திருக்கலாம்.

அக்னி அஸ்திரம்
புகையிலை அரை கிலோ, பச்சை மிளகாய் அரை கிலோ, பூண்டு அரை கிலோ, வேம்பு இலை 5 கிலோ ஆகியவற்றை அரைத்து, 15 லிட்டர் பசுமாட்டு சிறுநீரில் கரைக்கவேண்டும். இதை நான்கு முறை கொதிக்கவைத்து இறக்கிக் கொள்ளவும். 48 மணி நேரம் கழித்து சுத்தமான துணியால் வடிகட்டி பயிர்களுக்கு தெளிக்கலாம். இக்கரைசலை 3 மாதம் வரை பாட்டிலில் சேமித்து வைக்கலாம்.

சுக்கு அஸ்திரா
சுக்குத் தூள் 200 கிராம் எடுத்து, 2 லிட்டர் நீரில் கலந்து பாதியாக சுண்டும் வரை காய்ச்சவும். பின்பு குளிர வைக்கவும். பசு அல்லது எருமைப் பால் 5 லிட்டர் எடுத்து, தாமிரம் தவிர்த்த பிற பாத்திரங்களில் கொதிக்க வைக்கவும். படிந்திருக்கும் ஆடையை எடுத்து விடவும். ஆறிய பிறகு இதனுடன் 200 லிட்டர் நீர் மற்றும் சுக்கு கலந்த நீர் ஆகியவற்றைக் கலந்து பயிர்களுக்கு தெளிக்கலாம். இது சிறந்த பூஞ்சானக் கொல்லியாகும். இதை 21 நாட்கள் வரை சேமித்து வைக்கலாம்.

பீஜாமிர்தம்
தண்ணீர் 20 லிட்டர், பசு மாட்டுச் சாணம் 5 கிலோ, கோமியம் 5 லிட்டர், நல்ல நுண்ணுயிரிகள் இருக்கும் மண் ஒரு கைப்பிடி அளவு. இவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்றாக கலக்கவேண்டும். மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை நன்றாக ஊறவிட வேண்டும். இதுதான் பீஜாமிர்தம். அதன் பிறகு சுத்தமானச் சுண்ணாம்பு 50 கிராம் போட்டு அதைக் கலக்கவேண்டும். அதன்பிறகே விதையை அந்தக் கரைசலில் நனையவிட்டு, விதைக்கவேண்டும். கரைசலில் சுமார் 2 மணிநேரம் விதைகளை நனையவிட்டால் போதும். பயிர்களைத் தாக்கும் வேர் அழுகல், வேர்க் கரையான், வேர்ப்புழு நோய்கள் தடுக்கப்படுகின்றன.

ஜீவாமிர்தம்
பசுஞ்சாணம் 10 கிலோ, கோமியம் 10 லிட்டர், வெல்லம் 2 கிலோ, பயறு மாவு (உளுந்து, துவரை ஏதாவது ஒன்று) 2 கிலோ, தண்ணீர் 200 லிட்டர் இதனுடன் ஒரு கைப்பிடி உங்கள் நிலத்தின் மண் சேர்த்து பிளாஸ்டிக் கேனில் 48 மணி நேரம், அதாவது இரண்டு நாட்கள் வைத்திருக்கவேண்டும். பிளாஸ்டிக் கேனை மரத்தின் நிழலில் வைப்பது முக்கியம். காலை, மதியம், மாலை என்று மூன்று முறை கடிகாரச் சுற்றுப்படி குச்சி வைத்து இதைக் கலக்கி விட்டு வந்தால் ஜீவாமிர்தம் தயார். இது ஒரு ஏக்கருக்கான அளவு. பாசன நீரிலேயே கலந்து விடலாம்.

கனஜீவாமிர்தம்
பசுஞ்சாணம் 100 கிலோ, 2 கிலோ வெல்லம், 2 கிலோ பயறு மாவு போதும். இதை எல்லாம் ஒன்றாகக் கலந்து கொள்ளுங்கள் கூடவே உப்புமா பதம் வருவதற்கு எவ்வளவு தேவையோ அந்தளவுக்கு கோமியத்தைக் கலந்தால் போதும்.

நீம் அஸ்திரா
நாட்டுமாட்டுச் சாணம் இரண்டு கிலோ, நாட்டுமாட்டுச் சிறுநீர் 10 லிட்டர், வேப்பங்குச்சிகள் மற்றும் இலை 10 கிலோ இவற்றை பெரிய பாத்திரத்தில் போட்டு, 200 லிட்டர் நீரையும் ஊற்றி 48 மணி நேரம் ஊற வைக்கவேண்டும். மூடி போட்டு மூடக்கூடாது. இதை கடிகாரச்சுற்றுக்கு எதிர்திசையில் மூன்று தடவைக் கலக்கிவிடவேண்டும். பின்பு வடிகட்டி, பயிர்களுக்குத் தெளிக்கலாம்.

மீன் அமினோ அமிலம்
‘மீன் அமிலம்’ தயாரிப்பது மிகவும் எளிது. மீன் விற்கும் இடத்தில் அல்லது நறுக்கும் இடத்தில் மீதப்படும் செதில், குடல், வால், தலை போன்றவைகளுடன் சம அளவு பனை வெல்லம் சேர்த்து… நன்கு பிசைந்து… ஒரு பிளாஸ்டிக் வாளிக்குள் மூடி வைக்கவேண்டும். இருப்பத்தைந்து நாள் கழித்து, எடுத்து நன்கு கலக்கினால் டானிக் தயார். இந்த வளர்ச்சி ஊக்கியே ‘மீன் அமிலம்’. 10 லிட்டர் நீருக்கு 100 கிராம் (மில்லி) கலந்து பயிரில் தெளித்தால், பயிர் பச்சை கொடுத்து செழித்து வளர்கிறது

ஜீவாமிர்தம் தயாரித்தல்:

பசுமாட்டுசாணம் 10 கிலோ,கோமியம் 10 லிட்டர்,வெல்லம் 2 கிலோ அல்லது 4-5 லிட்டர் கரும்பு சாறு,உளுந்து,துவரை,தட்டை பயிறு போன்ற சிறுதானியங்களின் மாவு 2 கிலோ,200 லிட்டர் தண்ணீர் இதனுடன் உங்கள் நிலத்தின் (ஜீவனுள்ள) மண் ஒரு கைப்பிடி இவற்றை எல்லாம் சேர்த்து ஒரு பிளாஸ்டிக் கேன் அல்லது டிரம் அல்லது பானையில் வைத்துவிடுங்கள், இந்த கலவையை ஒரு நாளைக்கு மூன்று முறை கடிகார சுற்றுபடி கலக்கி விட வேண்டும்(எதிர் திசையில் சுற்றினால் நுன்னுயிர்கள் பாதிக்கப்பட்டு இறந்துவிடும்). இந்த கேனை கண்டிப்பாக நிழலான இடமாக பார்த்து வைக்க வேண்டும்.ஜீவாமிர்தம் 48 மணி நேரத்தில் தயாராகிவிடும். 
இது ஒரு ஏக்கர்க்கான அளவு. இதனை பாசன நீரிலும் கலந்து விடலாம்,தெளிப்பான் கொண்டும் தெளித்து விடலாம். 
இதை நெல்,கம்பு,சோளம்,காய்கறி செடிகள் போன்றவற்றிற்கு பயன்படுத்தலாம்.இதனால் சுவை மற்றும் விளைச்சல் அதிகமாகும்.

பஞ்சகவ்யம் தயாரித்தல்:

தேவைப்படும் பொருட்கள்: பசு சாணம் – 5 கிலோ, நெய் – அரை லிட்டர், 5 நாள் புளித்த தயிர் – 2 லிட்டர், பால் – 2 லிட்டர், மாட்டு மூத்திரம் – 3 லிட்டர், கரும்பு வெல்லம் – கால் லிட்டர், இளநீர் – 2, தண்ணீர் – 3 லிட்டர், ஒரு கை அளவு பயிர் செய்யும் நிலத்தின் மண், ஒரு கை அளவு சுண்ணாம்பு
குறிப்பு: தயாரிக்கும் கலனை / பிளாஸ்டிக் பாத்திரத்தை நன்கு கழுவ வேண்டும்.
தயாரிக்கும் முறை: 1. முதல் நாள் – சாணம் 5 கிலோ, நெய் அரை லிட்டர், ஒரு கையளவு பயிர் செய்யும் நிலத்தின் மண், ஒரு கையளவு சுண்ணாம்பு இந்த மூன்றையும் நன்கு பிசைந்து 5 நாள், கலன் / பிளாஸ்டிக் பாத்திரத்தின் வாயை ஈரத்துணியால் மூடவேண்டும்...
2. 6ம் நாள் – 2 லிட்டர் பாலில் மோர் கலந்து 2 லிட்டர் தயிராக புளிக்க வைக்க வேண்டும்.
3. 10ம் நாள் தனியாக வேறொரு வாளியில், கீழ்கண்டவைகளை ஊறவைக்க வேண்டும்.2ல் உள்ள புளித்த தயிர்-2 லிட்டர், பால் -2 லிட்டர், மாட்டு மூத்திரம்-3 லிட்டர், கரும்புவெல்லம்-கால் லிட்டர், இளநீர்-2, தண்ணீர்-3 லிட்டர். இவற்றையெல்லாம் வேப்பம் குச்சியைக் கொண்டு தினமும் காலை, மாலை இரண்டுதரம் 3 நிமிடங்கள் வரை (6 நாட்கள்) கலக்கிவிட வேண்டும்...
4. 10ம் நாளில் இந்த கலவையுடன் வாழைப்பழங்கள் (சுமார் 5 எண்ணிக்கை அழுகிய பழங்கள்) இதனுடன் கிடைத்தால் வேப்பம்பழங்கள், பலாப்பழம் ஆகியவற்றை சேர்த்து ஒரு துணியில் கட்டி இந்த கலவையினுள் தொங்கவிட வேண்டும். வேப்பம்பழம் கிடைக்கவில்லையென்றால் வேப்பங்கொட்டøயை இடித்து சேர்த்துக்கொள்ளலாம்.
ஆ) தொங்கவிட்டிருந்த பழங்கள் கொண்ட துணியை திறந்து பழங்களை கலவையில் நன்கு கலந்திட வேண்டும்.
21ம் நாள் முடிவில் கிடைப்பது பஞ்சகவ்ய கரைசல் ஆகும். பயன்படுத்தும் அளவு – ஒரு லிட்டர் பஞ்சகவ்ய கரைசலை 30 முதல் 50 லிட்டர் நீரில் கலந்து பஞ்சகவ்யமாக பயன்படுத்தலாம்...
பஞ்சகவ்யம் தயாரிக்கும்போது கவனிக்க வேண்டியவை:
1. தயாரிக்கும்போது பயன்படுத்தப்படும் கலன்கள், பாத்திரங்கள் கண்டிப்பாக மண்/பிளாஸ்டிக் பாத்திரங்களாகவோ அல்லது சிமென்ட் தொட்டியாகவோதான் இருக்க வேண்டும். முக்கிய குறிப்பு: பாத்திரங்களை நன்கு கழவி பயன்படுத்த வேண்டும்.
2. பாத்திரங்களின் வாய்பகுதி எப்பொழுதும் திறந்து துணியால் மூடியதாக இருக்க வேண்டும். தயாரிக்கும் வேளையில், காற்றிலுள்ள பிராணவாயு தேவைப்படுகிறது. கரைசலில் இருந்து மீத்தேன் போன்ற நச்சு வாயுக்கள் வெளியேறுகிறது. இவை நுண்ணுயிர் வளர்ச்சிக்கு உகந்தவையல்ல. எனவே இவைகள் வெளியேற தடைகள் ஏதும் இருக்கக்கூடாது.
3. மூலப்பொருட்கள் நன்கு கலக்கப்பட வேண்டும். தினம் காலை, மாலை 2 வேளை3 நிமிடங்கள் வேப்பம் குச்சியைக் கொண்டு கலக்க வேண்டும். இதன்மூலம் நுண்ணுயிர்கள் அதிகரிக்கின்றன.
4. மூலப்பொருட்கள் கலந்த பாத்திரத்தை நிழலில் வைக்க வேண்டும். இது மிக முக்கியமானது.
5. கண்டிப்பாக நாட்டு மாட்டின் வாயிலாக கிடைக்கும் சாணம், பால், கோமியம், நெய் மூலம் தான் தயாரிக்கப்பட வேண்டும்...

ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன்

வாட்ஸ்அப் உபயம்!!
நேற்று யதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..
ரொம்ப நாளா எனக்கு இருந்த ஒரு சந்தேகத்தை அவரிடம் கேட்டேன்..
" முன்பெல்லாம் ஒரு தெருவிலே நிறைய வீடுகளில் பசு இருக்கும். மேய்ச்சலுக்கு ஆள் வரும். எருமைகளும் நிறைய ... பசும்பாலுடன் எருமை பாலை கலந்து விற்பது சாதாரணமாக நடக்க கூடியது. கூடிப் போனா தண்ணீர் கலப்பார்கள்..
மக்கள் தொகை குறைவாக இருந்த அந்த காலங்களில் கூட காலை, மாலை இரு வேளைகளில் தான் பால் கிடைக்கும். ஏதாவது கல்யாணம் காட்சி என்றால் .. கோனார்களிடம் முன்பே சொல்லி வைக்க வேண்டும். சில வேளைகளில் பாலுக்கான Demand மிக அதிகமாக இருக்கும்.. குழந்தைக்கு பால் கிடைக்கவில்லை என்றால் நிறைய பால் பௌடர்கள் புழக்கத்தில் இருந்தன..
ஆனால் இப்போ நிலைமை வேறு.. எல்லா இடமும் அபார்ட்மெண்ட் வீடுகள் .. மேய்ச்சல் நிலம் எல்லாம் கான்க்ரீட் மயம்..விவசாய குடும்பங்களே மாடு வளர்ப்பதில்லை... என்னதான் வெண்மை புரட்சி , ஜெர்ஸி பசுக்கள், முர்ரா எருமைகள் என்றாலும் இப்போதுள்ள மக்கள் தொகைக்கு 24 X 7 பால் பாக்கெட் கிடைக்கிறது என்றால் logic இடிக்குதே.. கண்ணு போட்டா தானே மாடு பால் தரும். அவ்வளவு கண்ணு இருந்தா மாடுகள் எண்ணிக்கை எங்கேயோ போயிருக்கணுமே ... எப்படிங்க இவ்வளவு பால் கிடைக்குது ???
"" தம்பி.. நீங்க எந்த உலகத்திலே இருக்கீங்க.. எல்லாம் 20:50:30 தான்.."
"அப்படின்னா "
" 20 % தாங்க மாட்டு பால்.. 50% சோயா பால், மிச்சம் தண்ணி தான்.. நம்மூர்ல கூட சோயா பால் factory இருக்குதே .. தெரியாதா??.. இருக்குற மாடுகளை வச்சிட்டு மாட்டு பால் மட்டும் கொடுத்தா ஆளுக்கு ஒரு ஸ்பூன் பால் கூட கிடைக்காது.. நம்ம ஊர்ல இருந்து தினசரி 80000 லிட்டர் பால் சென்னைக்கு வேற அனுப்பனும்.. சொசைட்டி உத்தரவு.. எப்படி முடியும்??"
எந்த தண்ணிய ஊத்துவீங்க ...
ஹி .. ஹி .. ஊருணி, குளம் , கம்மா தண்ணி தான்.. பின்ன Aquafina வாங்கியா ஊத்த முடியும்..
இல்ல.. பால் சொசைட்டில இந்த லாக்டோமீட்டர் எல்லாம் வச்சு பாக்க மாட்டாங்க ??
பாப்பாங்க ..
அப்புறம்
பாப்பாங்க .. அவ்வளவு தான் தம்பி.. லாக்டோமீட்டர்லாம் பழசு.. வேற என்னென்னமோ டெஸ்ட் எல்லாம் பண்ராங்க இப்ப....
சரி.. அப்போ எல்லா பாக்கெட் பாலும் அப்படி தானா ??
அப்படி சொல்ல முடியாது..
அதெல்லாம் ratio கொஞ்சம் வித்தியாசப்படும் . அவ்வளவு தான்.. ஆனா மாட்டு பால் 20% - 30% தான் தம்பி.. அது போக detergent, ஸ்டார்ச், சோடியம் ஹைட்ராக்சைடு, கொஞ்சம் யூரியா.. இன்னும் என்னன்னவோ ..
சின்ன புள்ளைங்க இந்த பாலை குடிச்சு ... யோவ் .. சோயாக்கே நிறைய side effects இருக்குய்யா .. கொஞ்சம் கூடுச்சின்னா ஆஸ்த்மா .. அலர்ஜி .. ஆண்களுக்கு  Erectile dysfunction-விறைப்பின்மை-ஆண்மைக் குறைவு, மார்பக வளர்ச்சி, பெண்களுக்கு ஹார்மோன் imbalance ..
அதுக்கு ...??
அப்புறம் நாங்க சுத்தமான பசும் பால் சாப்பிடணும்னா ??
நீங்க தான் பசு மாடு வளர்க்கணும்..
சரி.. இதுக்கே இப்படி சொல்றீங்களே.. வெள்ளி செவ்வாய்க்கு கடை வாசல்கள்ல உடைக்கிற தேங்காய்களை அள்ளி ஹோட்டல்களுக்கு தர்ற கான்ட்ராக்ட் ., பெரிய ஹோட்டல்கள்ல ஓரு தடவை பூரி சுட்ட எண்ணெய் வாங்கி ரோட்டு கடைகளுக்கு சப்ளை பண்ற கான்ட்ராக்ட், கோழி கடைகள்ல மிச்சமாகிற தலை, குடல் வாங்கி சால்னா கடைகளுக்கு கொடுக்குற கான்ட்ராக்ட் , கிராமங்கள்ல நோய்வாய் பட்ட ஆடுகளை சல்லிசா வாங்கி கறிகடைகளுக்கு சப்ளை பண்ற கான்ட்ராக்ட் ... இப்படி நிறைய இருக்கு தம்பி.. முன்னாடில்லாம் ஊர்ல ஒருத்தன் ரெண்டு பேருக்கு கேன்சர் வரும்.. இப்போ ஒவ்வொரு பெரிய ஆசுபத்திரிலேயும் போய் பாருங்க .. எத்தனை பேரு... நான் முன்னாடி சாமி கும்பிட மாட்டேன் .. தி க குடும்பம் தம்பி.. இப்போ நான் கும்பிடாத கடவுள் இல்ல.. பயம் தம்பி..

மலச்சிக்கலை போக்கும் பீர்க்கங்காய்

புற்றுநோய் வராமல் தடுக்க கூடியதும், மலச்சிக்கலை போக்கும் தன்மை கொண்டதும், சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சலை தடுக்க கூடியது பீர்க்கங்காய்
பீர்க்கங்காய் நீர்ச்சத்து மிக்கது. மலச்சிக்கலை போக்கும் தன்மை கொண்ட பீர்க்கங்காய், சிறுநீரை பெருக்கும் அற்புத மருந்து. கண் நோய்களை தீர்க்கும். உடல் எடையை குறைக்க கூடியது. அடிக்கடி உணவில் சேர்ப்பதால் உடலுக்கு அதிக நன்மை கிடைக்கும். தோலை நீக்காமல் சமைக்க வேண்டும். நார்ச்சத்தை உடைய பீர்க்கங்காய் புற்றுநோயை தடுக்கும். நச்சுக்களை வெளியேற்றும்.  பீர்க்கங்காய் தோலை பயன்படுத்தி நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும் மருந்து தயாரிக்கலாம். 
2 ஸ்பூன் நல்லெண்ணெயில் உளுத்தம் பருப்பை லேசாக வறுக்கவும், பெருங்காயப்பொடி, பூண்டு, புளி, பீர்க்கங்காய் தோல், மிளகு பொடி, உப்பு சேர்த்து சட்னிபோல் தயார் செய்து சாப்பிடவும். இது மலச்சிக்கலை தடுக்கிறது. பீர்க்கங்காயை பயன்படுத்தி நீர்கடுப்பு, சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சலை தடுக்கும் மருந்து தயாரிக்கலாம். பீர்க்கங்காய் சாறு 50 மில்லி எடுத்துக்கொள்ளவும். அதனுடன் சிறிது எலுமிச்சை சாறு, பனங்கற்கண்டு, தேவையான அளவு நீர் சேர்த்து கலந்து குடிக்கலாம். 
இது சிறுநீரக கற்கள் ஏற்படாமல் தடுக்கும். தேங்கிய சிறுநீரை வெளியேற்றும். சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல், வலியை போக்கும். சிறுநீரகத்தின் ஆயுட்காலம் கூடும். எலுமிச்சையில் வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளது. எலுமிச்சை சாற்றை அதிகமாக எடுத்துக் கொள்வதால் கற்கள் உருவாகும் என கூறப்படுவது தவறு. எலுமிச்சைக்கு ராஜ கனி என்று பெயர். அது எந்த வகையிலும் தீங்கு செய்யாது. நன்மை தரக்கூடியது.
பீர்க்கங்காயை பயன்படுத்தி அல்சருக்கான மருந்து தயாரிக்கலாம். பீர்க்கங்காயை சிறு துண்டுகளாக்கி உப்பு சேர்த்து வேகவைத்து, அதனுடன் புளிப்பில்லாத தயிர் சேர்த்து கலந்து எடுத்து வைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெயுடன் 2 சிட்டிகை மஞ்சள் பொடி சேர்க்கவும், அதனுடன் சிறிது சீரகத்தை போடவும். சீரகம் பொறிந்ததும், தயிருடன் சேர்ந்த பீர்க்கங்காயை சேர்க்கவும். இதை சாப்பிட்டால் அல்சர் குணமாகும். 
பீர்க்கங்காயில் இரும்புச்சத்து, தாது உப்பு, துத்தநாகம், வைட்டமின் சி சத்து உள்ளது. கண்களுக்கு அற்புதமான மருந்தாகிறது. இதில் கொழுப்பு சத்து மிகவும் குறைவாக உள்ளது. எரிசக்தி வெகு குறைவாக இருப்பதால் உடல் எடை அதிகரிக்காது.  ரத்தத்தில் பித்தத்தின் அளவை குறைக்கக்கூடிய தேனீர் தயாரிக்கலாம். பீர்க்கங்காய் தசையை துண்டுகளாக்கி சுமார் 50 கிராம் அளவுக்கு எடுத்துக்கொள்ளவும். அதில் 2 சிட்டிகை மஞ்சள் பொடி போடவும். 
நீர்விட்டு கொதிக்க வைத்து தேன் சேர்த்து குடிக்கலாம். இது மஞ்சள் காமாலைக்கு நல்ல மருந்து. உயர் ரத்த அழுத்தம், கொழுப்பு குறையும். பீர்க்கங்காய் ஈரலை பாதுகாக்கிறது. மது குடிப்பதால் ஈரலை பாதிக்கும் நச்சுக்களை அகற்றுகிறது.பீர்க்கங்காய் தோலை வீசிவிடாமல், அதனுடன் உப்பு, புளி, பருப்பு சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டால் மலச்சிக்கல் சரியாகும். ஈரல் பலம் பெறும்.

அசோலா வளர்ப்பு

பெரணி வகையைச் சேர்ந்த நுண் தாவரம் அசோலா. கறவை மாடுகளுக்குச் சிறந்த தீவனம். பசுக்களுக்குத் தினமும் இதைக் கொடுத்துவந்தால், 2 லிட்டர் கூடுதல் பால் கிடைக்கும் என்கின்றனர் கால்நடை வளர்ப்பு ஆர்வலர்கள்.
அசோலா என்றால்?
அசோலா என்பது பெரணி வகையைச் சார்ந்த நுண்தாவரம். அசோலாவைக் கால்நடைகள் ருசித்து உண்ணும். உடல் ஆரோக்கியத்துக்குத் தேவைப்படும் அமினோ அமிலங்கள், உடல் வளர்ச்சிக்குத் தேவைப்படும் தாதுக்களான கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து, துத்தநாகம், மாங்கனீஸ், வைட்டமின்கள் போன்றவற்றையும் உள்ளடக்கிய அற்புதச் சக்தி படைத்தது அசோலா. அது மட்டுமல்லாமல் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து, புரதச் சத்து நிறைந்தது.
அசோலாவால் என்ன பலன்?
அசோலாவைக் கறவை மாடுகளுக்குக் கொடுக்கும்போது, ஏறத்தாழ இரண்டு லிட்டர்வரை கூடுதலாகப் பால் பெற முடியும். கறவை மாடுகள் மட்டுமின்றி முயல், பன்றி, வெள்ளாடு, செம்மறி ஆடு, கோழி, மீன் போன்றவையும் விரும்பி சாப்பிட்டால், எடை கூடும். கோழிகளுக்கு அசோலா கொடுக்கும்போது முட்டையிடுவது அதிகரித்து, உடல் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உதவும்.
அசோலாவை முதன்முதலில் கறவை மாடுகளுக்குக் கொடுக்கும்போது தினம் 100 முதல் 200 கிராம் என்ற அளவில் ஆரம்பித்து, படிப்படியாக 1 முதல் 1½ கிலோ வரை கொடுக்கலாம்.
அசோலா வளர்ப்பது எப்படி?
முதலில் 5-க்கு 6 அடி நீளமும், 3-க்கு 4 அடி அகலமும் ஒன்று முதல் 1½ அடி வரை ஆழமும் கொண்ட குழிகளை வெட்டிக்கொள்ள வேண்டும். அதனுள் கெட்டியான பிளாஸ்டிக் பேப்பர், தார்ப்பாயை விரித்துக் கொள்ள வேண்டும். முதலில் அரை அடி உயரத்துக்குச் செம்மண் கலந்த தோட்டத்து மண்ணைப் போட்டு, இரண்டு கைப்பிடி பாறைத் தூள் அல்லது குவாரி மண் அல்லது ஆழ்துளைக் கிணறு தோண்டும்போது கிடைக்கும் பாறைத் தூளைத் தூவ வேண்டும்.
நாட்டுப் பசுஞ் சாணம் ஒன்று முதல் 2 கிலோவரை, வேப்பம் புண்ணாக்கு 50 முதல் 100 கிராம்வரை போட்டு, சுமார் ½ அடி தண்ணீர் இருக்குமாறு விட வேண்டும். தண்ணீர், மண், புண்ணாக்கு ஆகியவற்றைச் சிறிது நேரம் கிளறிவிட வேண்டும். அதன்பின் சுமார் ½ முதல் 1 கிலோ வரை அசோலா விதைகளைத் தூவ வேண்டும். 10 முதல் 15 தினங்களில் தொட்டி முழுவதும் அசோலா வளர்ந்துவிடும்.
இதிலிருந்து தினமும் ½ கிலோ தொடர்ந்து எடுத்துக்கொள்ளலாம். கால்நடைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அசோலா படுக்கைக் குழிகளைத் தயார் செய்துகொள்ளலாம்.
வாரம் ஒரு முறை ஒரு கிலோ நாட்டுப் பசுஞ் சாணம், ஒரு கைப்பிடி ஆழ்துளைக் கிணறு மண் அல்லது பாறை மண் போட வேண்டும். அத்துடன் மாதத்துக்கு ஒரு முறை அடி மண்ணைக் கொஞ்சம் எடுத்துவிட்டு, புது மண் போட வேண்டும். தண்ணீரின் அளவு 7 முதல் 10 செ.மீ. இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
10 - 15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீரைப் பாதி அளவுக்கு வெளியேற்றிப் புது நீரை மாற்ற வேண்டும். 6 மாதங்களுக்கு இதிலிருந்து தினமும் அசோலா அறுவடை செய்யலாம். அதிவேகமாக வளரும் தன்மை கொண்ட காரணத்தால், தினமும் அசோலாவை எடுத்துக்கொண்டு புதிதாக வளர்வதற்கு இட வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். எந்த நிலையிலும் தண்ணீர் இல்லாமல் காய்ந்து போக விட்டுவிடக் கூடாது.
அதிக செலவு பிடிக்குமா?
அசோலா வளர்ப்பது சுலபமானது மட்டுமல்ல, கால்நடைகளின் தீவனத் தேவையைப் பூர்த்திசெய்வதுடன், அடர் தீவனத்துக்குச் செய்யும் செலவும் குறைய வாய்ப்புள்ளது.
கறவை மாடுகளுக்குக் கொடுக்கிற அடர் தீவனமான பருத்திக்கொட்டை, தவிடு, புண்ணாக்கு போன்றவற்றைப் பாதியாகவோ அல்லது மூன்றில் ஒரு பங்காகவோ குறைத்துக் கொள்ளலாம். அசோலா உற்பத்தி செய்ய 1 கிலோவுக்கு 50 பைசாவுக்கும் குறைவாகவே செலவாகும். 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் நன்கு செழித்து வளரும்.
கடுமையான பகல் நேர வெயில் நேரடியாகப் படும் வகையில், அசோலா வளர்ப்புக் குழிகளை அமைக்கக் கூடாது. பகல் நேர வெயில் படாத வகையில், மேலே பச்சை துணி கட்டி நிழல் படுமாறு அமைக்க வேண்டும். காலை, மாலை நேரச் சூரியனின் இளம் வெயில் அசோலாவுக்கு மிக மிக நல்லது.
அப்படியே கொடுக்கலாமா?
அசோலாவைக் கால்நடைகளுக்குக் கொடுக்கும் முன்பு, நான்கைந்து முறை தண்ணீரில் அலசிக் கொடுக்க வேண்டும். அசோலாவில் சாணத்தின் மணம் இருந்தால், கால்நடைகள் உண்ணாமல் போய்விடக்கூடும். சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரில் அலசும்போது வரும் சிறிய செடிகளை, மீண்டும் அசோலா வளர்ப்பு தொட்டியிலேயே விட்டுவிட வேண்டும்.
கால்நடைகள் அசோலாவை சுலபமாக ஜீரணித்துக்கொள்ளும். அடர் தீவனத்துடன் கலந்தும் தனியாகவும் பசுந்தீவனத்துடன் கலந்தும் கொடுக்கலாம்.
அசோலா விதைகளை நெல் நாற்று வயல்களில் தூவிவிட்டால், வயலில் தண்ணீர் தேங்கி இருக்கும்போது நன்கு செழித்து வளரும். தண்ணீர் இல்லாமல் வற்றிப்போகும்போது, அசோலா மக்கி உரமாகிப் பயிருக்கு ஊட்டம் கொடுக்கும். அதன் மூலம் உரச் செலவைக் குறைக்கலாம்.
புதிய அசோலா விதைகளை 5 - 6 மாதங்களுக்கு ஒருமுறை போட வேண்டும். அப்படிப் போடும் முன்பு தண்ணீரில் உள்ள இலை, தழை குப்பைகளை அகற்றிவிட வேண்டும்.

பசுக்கள் மற்றும் ஆடுகளுக்கு ஏற்படும் முக்கிய நோய்:

நமது நாட்டு பசுக்கள் மற்றும் ஆடுகளுக்கு ஏற்படும் முக்கிய நோய்களையும் அதற்க்கான இயற்க்கை மருத்துவ தீர்வுகளையும் இந்த பதிவில் காணலாம்..
ஆடு மாடுகளுக்கு சரியான தீவனம் கிடைக்காமல் இருக்கும் போதும் வெப்பநிலை அதிகமாக இருக்கும் போதும் கழிசல் நோய் அதிகமாக ஏற்படுகிறது.
கழிசல் நோய்க்கு தீர்வு:
இந்த கழிசல் நோய்க்கு முக்கிய மருந்து துவர்ப்பான பொருள்களில் தான் உள்ளது அதனால் மாதுளம் பிஞ்சு,சப்போட்டா பிஞ்சு, அத்தி,நாவல்,கருவேப்பிலை,ஜாதிக்காய் தோடு, போன்ற எதாவது ஒன்றை 3 நாளைக்கு தொடர்ச்சியாக குடுத்து வந்தால் சரியாகிவிடும்..
வாய்ப்புண்:
ஆடு மற்றும் மாடுகளுக்கு வாய்ப்புண் ஏற்பட்டால் உடனே மருத்துவமனைக்கு சென்று செலவு செய்யாமல் நமது நிலத்தில் கிடைக்கும் மணதக்காளிக் கீரையை சாப்பிட கொடுத்தால் வாய்ப்புண் விரைவில் குணமாகும்.
உடலில் புண்:
ஆடு மற்றும் மாடுகள் ஒன்றோடு ஒன்று மோதுவதாலும் இடறி கிழே விழுவதாலும் உடலில் காயம் ஏற்படும். இதற்க்கு அம்மன் பச்சரிசி செடியின் தண்டை எடுத்து கசக்கினால் வரும் பாலை புண் மேல் தடவி விட்டால் புண் விரைவாக குணம் அடையும்..
நஞ்சுக்கொடி:
ஆடு மற்றும் மாடு கன்று போட்ட பின்பு நஞ்சுக்கொடி விழ அதிக நேரம் எடுத்துக்கொண்டால் இருபது நடுத்தர வெண்டைக்காய்,ஒரு கைப்பிடி எள்ளு, ஒரு கைப்பிடி பனக்கற்கண்டு ஆகியவை எடுத்து சாப்பிட கொடுத்தால் நஞ்சு விரைவில் வெளியேறிவிடும்...
இவை அனைத்தும் நமது முன்னோர்கள் காலம் காலமாக பின்பற்றிய மருத்துவ முறைகள் ஆகும்.. செலவில்லா வைத்தியம் செய்து நமது நாட்டின் செல்வங்களான ஆடு மற்றும் பசுக்களை பாதுகாப்போம்...

பசு எருமை கருவூட்டல்... கவனிக்கவேண்டியவைகள் :

சரியான சினைத் தருணத்தை அறிந்து கருவூட்டல் செய்வதன்மூலம் பெரும்பாலான மாடுகளின் சினைப் பிடிக்கும் தன்மையை அதிகரித்து விடலாம். மேலும் பசு கிடாரியை 2 வயதிலும், எருமைக் கிடாரியை 3 வயதிலும் கன்று ஈன வைக்க வேண்டும். கன்று ஈன்ற பசுவை 2 மாதத்திற்குள்ளும், எருமையை 3 மாதத்திற்குள்ளும் சினை பிடிக்க வைக்க வேண்டும்.இப்படிச் செய்வதே இலாபகரமான பண்ணை மேலாண்மையாகும்.

சினைத் தருண அறிகுறிகள் :

1.அடிக்கடி கத்திக்கொண்டே இருக்கும்.

2.பிறப்பு உறுப்பிலிருந்து, எண்ணெய் போன்ற வழவழப்பான திரவ ஒழுக்கு காணப்படும்.

3.மாடுகள் அமைதியற்று காணப்படும்.

4.இருப்புக்கொள்ளாமல் ஓடும், சில சமயங்களில் கயிற்றை அறுத்துக்கொண்டு ஓடிவிடுவதும் உண்டு.

5.உட்கொள்ளும் தீவனத்தின் அளவு குறையும்.

6.வாலைத்தூக்கிக் கொண்டு, அடிக்கடி சிறுநீர் கழிக்கும்.

7.பிற மாடுகளை நுகர்ந்து பார்க்கும்.

8.அருகில் உள்ள மாடுகளின் மீது தாவுவதோடு மற்ற மாடுகளை தன்மீது தாவ அனுமதிக்கும்.

9.பிறப்பு உறுப்பின் உதடுகள் தடித்தும், சிவந்தும், வழவழப்புடனும் காணப்படும்.

10.பால் மாடுகளில் பாலின் அளவு குறைந்து சினைத் தருணம் முடிந்த உடன் அதிகரிக்கும்.

ஊமை சினைப் பருவம்: 21 நாட்களுக்கு ஒருமுறை பருவத்திற்கு வந்துகொண்டிருக்கும். ஆனால் பருவ அறிகுறியை வெளிக்காட்டாது. கிடாரிகளிலும், கன்று ஈன்ற எருமைகளிலும் இப்பிரச்னை அதிகம் இருக்கும்.வெயில் காலங்களில் இப்பிரச்னை அதிகம் இருக்கும்.

இந்த சினைத்தருண அறிகுறிகள் மாட்டிற்கு மாடு வேறுபட்டும், பருவகாலம், பாலின் அளவு, தீவனத்தின் தன்மை போன்ற காரணிகளால் வேறுபட்டும் காணப்படும். பொதுவாக மாடுகள் பருவ அறிகுறிகளை வெளிப்படுத்தும் தனமையானது வெப்பநிலை குறைந்த நேரமான காலை மற்றும் மாலை நேரங்களில் அதிகமாக காணப்படும். எனவே, மாடுகளை காலை மற்றும் மாலை வேளைகளில் 10 நிமிடங்கள் கவனமாக கண்காணித்து பருவ அறிகுறிகள் தென்படுகிறதா என்பதை உற்று நோக்குவது அவசியம். பலரது கறவை மாடுகளின் பராமரிப்பை வேலையாட்கள் கவனிப்பார்கள். இச்சூழ்நிலையில் சினை தருணம் கண்டுபிடிக்க முடியாமல் போய்விடும்.

வருடம் முழுவதும் எருமைகள் சினைக்கு வந்தாலும், பொதுவாக வருடத்தில் 8 மாதங்கள் மட்டுமே சினைத்தருண அறிகுறிகளை மிகவும் வெளிப்படுத்தும். மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை 4 மாதங்களுக்கு அவை சினை தருண அறிகுறிகளை அவ்வளவாக வெளிக்காட்டாது. மழைக்காலங்களில் அதிகப்படியாக சினைத் தருண அறிகுறிகளைக் கொண்டிருக்கும்.

எருமைகள் சினைப் படிக்காமல் போவதற்கு முக்கியக் காரணம் எருமை மாடு வளர்ப்போர் சினைத் தருணத்தைக் கண்டறிந்து சரியான நேரத்தில் அதற்கு சினை ஊசி போடுவது கிடையாது. எருமைகளில் ஊமை சினை பருவம் அதிகம் இருக்கும். ஆகவே சினை தருண அறிகுறிகளை அனைத்தையும் தெரிந்துகொண்டு இக்கட்டுரையில் கொடுக்குப்பட்டுள்ள

சினை தருணத்தை கண்டுபிடிக்க சில வழிகள் பகுதியை பின்பற்றினால் சினை தருணத்தை எளிதில் கண்டுபிடித்துவிடலாம்.

சினை தருணத்தை கண்டுபிடிக்க சில வழிகள் :

ஒரு பருவத்தை தவறவிட்டால் 20 நாட்களை இழக்கிறோம். ஏனெனில் பசுக்கள் 17-20 நாட்களுக்கொருமுறையும், எருமைகள் 20-24 நாட்களுக்கொருமுறையும் பருவத்திற்கு வருகின்றன. ஆகவே எக்காரணத்தைக்கொண்டும் சினை தருணத்தை தவற விடக்கூடாது. கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றினால் சினை தரணத்தை தவறவிடவமாட்டோம்.

1. அறிகுறிகள் அனைத்தையும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். அதில் ஏதேனும் 2 அல்லது 3 அறிகுறிகள் தென்பட்டாலும் கால்நடை மருத்துவரிடம் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

2. மாதக் காலண்டர் அல்லது ஒரு சிறிய நோட் போட்டு பருவத்திற்கு வந்த அல்லது சினை ஊசி போட்ட நாளை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். அன்றிலிருந்து பசுவாக இருந்தால் 18வது நாளையும், எருமையாக இருந்தால் 21வது நாளையும் குறித்துக்கொள்ளுங்கள். அந்த நாளுக்கு 2 நாள் முன்பாகவே பருவ அறிகுறிகள் தெரிகிறதா என பாருங்கள். பின் தொடர்ந்து 5 நாட்கள் பாருங்கள்.

ஒரு பசு சினை ஊசி போட்ட தேதி 1 என்றால், சினை பிடிக்காவிட்டால் அடுத்து பருவத்திற்கு வரும் நாள் 18ம் தேதி. ஆகவே 16ம் தேதியிலிருந்து 20ம் தேதி வரை பருவ அறிகுறிகள் தென்படுகிறதா என பார்க்க வேண்டும்.

3. பருவ அறிகுறிகள் இருக்கிறதா என பார்க்க வேண்டிய நேரம் காலை மற்றும் மாலை வேலை. வாலில், மாட்டின் பின்புறத்தில் எண்ணேய் போன்ற வழவழப்பான திரவம் ஒட்டியிருக்கிறதா, மாட்டின் பிறப்பு உறுப்பு தடித்து, சிவந்து காணப்படுகிறதா, மேலே கூறிய மற்ற பருவ அறிகுறிகள் இருக்கிறதா என பார்க்க வேண்டும். ஏதேனும் 2 அறிகுறிகள் தென்பட்டாலும், பருவம் இருக்கிறதா என சந்தேகம் எழுந்தாலும் கால்நடை மருத்துவரிடம் பரிசோதனை செய்துகொள்ளுவது நல்லது.

4. கன்று ஈன்ற மாட்டில், கன்று ஈன்ற நாளை குறித்துக்கொள்ளுங்கள். அந்த நாளிலிருந்து 20வது நாள் பருவத்திற்கு வரும். ஆனால் அது ஊமை சினை தருணமாக இருக்கும். ஆகவே பருவ அறிகுறிகள் எதுவும் வெளியே தெரியாது. சில மாடுகளில் மட்டும் பருவ அறிகுறிகள் தெரியும். அப்படித் தெரிந்தாலும் சினை ஊசி போட வேண்டாம். மீண்டும் 40வது நாள் பருவத்திற்கு வரும். இந்த நாளை தவறவிடாதீர்கள். நன்கு சினை பிடிக்கக்கூடிய தருணம் இது.

இம்முறை சினை பிடிக்காவிட்டால் மீண்டும் 60வது நாள் சினை தருணத்திற்கு வரும். அப்பொழுது சினை ஊசி போடலாம். அதாவது கன்று ஈன்றவுடன் வருகின்ற சினை பருவத்தில் சினை பிடக்கக்கூடிய தன்மை அதிகமாக இருக்கும். நாள் செல்ல செல்ல சினை பிடிக்கக்கூடிய தன்மை குறைந்து கொண்டே போகும். ஆகவே கன்று ஈன்ற 60 நாட்களுக்குள் சினை பிடக்க வைத்து விட வேண்டும்.

கருவூட்டலுக்கு ஏற்ற காலம் :

மாடுகளில் பருவச் சுழற்சியானது பசுவில் 17-20 நாட்களுக்கு ஒருமுறையும், எருமைகளில் 21-24 நாட்களுக்கு ஒருமுறையும் ஏற்படுகின்றது. சினைத்தருணமானது பசுக்களில் 12 முதல் 24 மணிநேரமாகவும், எருமைகளில் 8 முதல் 18 மணி நேரமாகவம் இருக்கும்.

மாடுகள் காலையில் முதலில் பருவ அறிகுறிகள் காட்டினால் மாலையிலும், மாலையில் முதல் பருவ அறிகுறிகள் காட்டினால் அடுத்த நாள் காலையிலும் கருவூட்டல் செய்யப்படவேண்டும். சில மாடுகள் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு பருவ அறிகுறிகள் காட்டினால் 12 முதல் 24 மணிநேர இடைவெளியில் இரண்டு முறை கருவூட்டல் செய்வது அவசியம். சுருக்கமாக மாடுகளுக்கு நடுச்சினைத் தருணத்தில் கருவூட்டல் செய்வதே உகந்தது.

பசுக்களை அதிக வெப்பம் அல்லது அதிக குளிர் தாக்கும்பொழுது அது அவற்றின் இனவிருத்தித் திறனை பாதிக்கும். முக்கியமாக வெயில் காலங்களில் காலை அல்லது மாலை நேரங்களில் ஊசி போடலாம்.

கிடாரிக் கன்றை இனவிருத்தி செய்யும்போது அது சினைத்தருணத்திற்கு வரும் வயதைக் கணக்கிடுவதோடு மட்டுமல்லாது தகுந்த உடல் எடையினை அடைந்துவிட்டதா என்று பார்க்க வேண்டும்.

கறவை மாடுகள் கன்று போட்ட மூன்று மாதத்திற்குள் தான் நன்கு சினை பிடிக்கும். இதை உணராது பலர் மாடு சினை பிடித்தால் பால் குறைந்துவிடும் என்பார்கள்; மாடு சினை பிடிப்பதை தவிர்ப்பார்கள். சினைக்கு வந்த மாட்டிற்கு கருவூட்டல் செய்ய மாட்டார்கள். நாட்டு மாடுகள் பல சினைப்பட்டதும் பால் கொடுப்பதை குறைத்துவிடும் அல்லது நிறுத்திவிடும். பல எருமைகளும் அப்படியே. இந்த எண்ணத்தில் பலர் கலப்பின பசுக்களுக்கும் காலத்தில் கருவூட்டல் செய்வதில்லை. ஆனால் கலப்பின பசுக்கள் சினை பிடித்தவுடன் பாலை நிறுத்துவதில்லை, பாலை குறைப்பதுமில்லை. இயற்கையாகவே கன்று ஈன்று 2 மாதங்கள் பாலின் அளவு அதிகரித்துகொண்டே செல்லும், பின் 1 மாதம் பாலின் அளவு மாறாமல் இருந்துவிட்டு, பின் 3 மாதத்திற்குமேல் பால் குறைய ஆரம்பிக்கும். இது கருவூட்டல் செய்தாலும், செய்யாவிட்டாலும் இயற்கையாக நிகழக்கூடியது. ஆகவே 3 மாதத்தில் சினை பிடிக்கும்போது, சினை பிடித்ததால் தான் பால் குறைகிறது என நினைக்கத் தேவையில்லை.

பலர் எண்ணெய் போன்ற திரவம் (கோழை) வடிவதால், பருவம் அடங்கிய பிறகு சினை ஊசி போடலாம் என நினைத்து பருவம் ஆரம்பித்து 2 நாள் கழித்தே சினை ஊசி போட வருகின்றனர். அப்பொழுது பருவமே இருப்பதில்லை. அவர்கள் நினைப்பது கோழையுடன் சேரத்து விந்துவும் வெளியே வந்துவிடும் என்பதே. உண்மை என்னவெனில், சரியான பருவத்தில் கர்ப்பபையில் செலுத்திய விந்து கோழையுடன் சேர்ந்து வெளியே வராது. ஏனெனில் கோழை உற்பத்தியாகும் இடம் கர்ப்பையின் வாய்ப்பகுதியாகும்.. அந்த இடத்தை கடந்து கர்ப்பப்பைக்குள்தான் விந்தணு செலுத்தப்படுகிறது. ஆகவே கோழை அதிகமாக அடித்தாலும் பரவாயில்லை, முதல் பருவ அறிகுறி தெரிந்ததும் 12 மணி நேரத்திற்குள் முதல் கருவூட்டல் செய்துகொள்ளுங்கள், மேலும் பருவம் 24 மணி நேரத்திற்கு நீடித்தால் மீண்டும் ஒரு கருவூட்டல் செய்துகொள்ளுங்கள்.

கருவூட்டலுக்கு முன் மாடுகள் பராமரிப்பு :

கருவூட்டலுக்கு கொண்டு செல்லும் மாடுகளை அடித்தோ உதைத்தோ துன்புறுத்தியோ அல்லது அதிக பயத்திற்கு உட்படுத்தியோ கொண்டு செல்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், அவ்வாறு கொண்டு செல்லப்படும் மாடுகளில் அட்ரீனலின் எனப்படும் கனநீர் (Hormone) சுரந்து கருப்பையின் இரத்த நாளங்களை சுருங்கச் செய்துவிடும். இதன் விளைவாக பிட்யூட்டரி எனப்படும் நாளமில்லாச் சுரப்பியன் கனநீரான ஆக்சிடோசின் இரத்த நாளங்கள் வழியாக கருப்பையை அடைவது தடைப்பட்டுவிடும். இதன் விளைவாக கருப்பையின் சுருங்கி விரியும் தன்மை பாதிப்படைந்து விந்தணுக்கள் கரு முட்டையோடு இணைவது தடைபடும். மேலும், கருவூட்டல் தளத்திற்கு கொண்டு செல்லப்பட்ட மாடுகளுக்கு உடனடியாக கருவூட்டல் செய்யாமல் பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் கட்டி வைத்து பின்பு கருவூட்டல் செய்வதன் மூலம் மேற்கூறிய பாதிப்பில் இருந்து பாதுகாக்கலாம்.

கருவூட்டல் செய்வதற்கு முன்பு மாடுகளின் பிறப்பு உறுப்பினை சுத்தமான நீரினைக் கொண்டு கழுவி சுத்தப்படுத்துவது அவசியம். ஏனெனில், பிறப்பு உறுப்பில் சாணம், சிறுநீர் போன்றவை ஒட்டி இருப்பதோடு நுண் கிருமிகளும் இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. இவைகள் கருவூட்டல் உபகரணத்தின் வாயிலாக கருப்பையினுள் செல்வதால் கருப்பை அழற்சி ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

கருவூட்டலுக்கு பின் மாடுகள் பராமரிப்பு :

கருவூட்டல் செய்த மாடுகளை உடனடியாக ஓட்டிச் செல்லாமல் 10 நிமிடங்கள் மர நிழலில் கட்டி வைத்த பின்பு ஓட்டிச் செல்வது நலம். ஏனெனில் உடனடியாக ஓட்டிச் செல்வதால் முன்பே குறிப்பிட்டது போல ஆக்சிடோசின் என்ற கனநீர் தடைபட வாய்ப்பு உள்ளது. சிலர் கருவூட்டல் செய்த மாடுகளின் தலையை உயரமாக உயர்த்தி மரக்கிளை போன்றவற்றில் கட்டி மாட்டை படுக்கவிடாமல் செய்வதோடு தண்ணீர், தீவனம் போன்றவற்றையும் தராமல் பட்டினிபோட்டு விடுவர். இப்படிச் செய்வதன்மூலமாக செலுத்தப்பட்ட விந்தணுக்கள் திரவ ஒழுக்கின் மூலம் வெளியே வரவிடாமல் தடுத்து விடலாம் என்ற கருத்து நிலவுகிறது. இது முற்றிலும் தவறான கருத்தாகும்.

ஏனெனில் , விந்தணுக்கள் கருப்பையின் நடுப்பகுதியில் செலுத்தப்படுவதால், பிறப்பு உறுப்பிலிருந்து வெளிப்படும் திரவ ஒழுக்கு மூலமாக விந்தணுக்கள் வெளிவர வாய்ப்பு இல்லை. மாறாக மாடுகளை மேற்கூறிய கொடுமைகளுக்கு உட்படுத்துவதே அதன் சினைப் பிடிப்புத் தன்மையை பாதித்துவிடும். எனவே, கருவூட்டல் செய்த மாடுகளுக்கு போதுமான அளவு தீவனம், குடிநீர் போன்றவற்றை அளிப்பது அவசியம்.

வெயில் நேரங்களில் மாட்டின் மேல் குளிர்ந்த நீரைத் தெளிப்பதன் மூலம் சினைப் பிடிப்பு விகிதத்தை அதிகரிக்கலாம். மேலும் மாட்டிற்கு கருவூட்டல் செய்துவிட்டோம், சினைப் பிடித்துவிடும், மூன்று மாதங்கள் கழித்து சினைப் பரிசோதனை செய்துகொள்ளலாம் என்று இருந்துவிடாமல், கருவூட்டல் செய்தபின் 21 நாட்களுக்குள் ஏதாவது சினைத் தருண அறிகுறிகள் தென்படுகிறதா என்பதைக் கவனித்து கருவூட்டல் செய்வது மிகவும் அவசியம்.

சினை ஊசி போட்டு 3 மாதம் கழித்து சினை பிடித்துள்ளதா என பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். ஏனெனில் சினை ஊசியில் 40 முதல் 60 சதவீதம் வரை மட்டுமே சினை பிடிக்கும். நிறைய பேர் சினை பிடித்துவிட்டது என்ற நம்பிக்கையில் 7-8 மாதம் வரை இருந்துவிட்டு, தற்செயலாக 'எதற்கும் சந்தேகத்திற்கு பார்க்க வந்தேன்' என வருகிறார்கள். அப்பொழுத சில மாடுகள் சினையாக இருப்பதில்லை. இவர்கள் சினை ஊசி போட்டு 3 மாத த்திலேயே சினை பார்த்திருந்தால் 4 மாதம் வீணாவதை தவிர்த்திருக்கலாம்.

சினைத் தருண முடிவில் உதிரப்போக்கு :

சில மாடுகளில் சினைத் தருணம் முடிவுற்ற 48 முதல் 96 மணி நேர இடைவெளியில் பிறப்பு உறுப்பு வழியாக உதிரப் போக்கிற்குப்பின் கருவூட்டல் செய்வதை தவிர்க்க வேண்டும். கருவூட்டல் செய்த மாடுகளில் காணப்படும் உதிரப்போக்கிற்கும், சினை பிடிப்புத் தன்மைக்கும் தொடர்பு இல்லை. இருந்தபோதிலும், இத்தகைய உதிரப்போக்கு கண்ட மாடுகளில் நோய்க்கிருமிகள் எளிதில் கருப்பையினை அடைய வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே இத்தகைய மாடுகளின் பிறப்பு உறுப்பை நன்றாகக் கழுவி மாட்டுக் கொட்டகையை சுத்தமாக வைத்தல் அவசியம் ஆகும்.

கிடாரிகள் :

சினை ஊசி போட வரும் பல கிடாரிகள் கர்ப்பப்பை வளர்ச்சி இருப்பதில்லை. இதற்கு முக்கிய காரணம் கன்றாக இருக்கும்போது தேவையான பால் தராததே ஆகும். கர்ப்பபை வளருவதற்கு காலம் கடந்து நாம் செய்யும் முயற்சிகள் அதிகம் தோல்வியையே தழுவுகின்றன. இதுவே கன்றாக இருக்கும்போது தேவையான பால் மற்றும் தீவனம் அளிக்கும் பெரிய பண்ணைகளில் 2 ஆண்டுகளில் பசுங்கிடாரிகள் கன்று ஈன்று விடுகின்றன. ஆகவே கன்றாக இருக்கும்போதே தேவையான பால் மற்றும் தீவனம் அளித்து கர்ப்பபை வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். காலம் கடந்து அதாவது கிடாரியின் 2 வயதில் இதற்கான முயற்சி செயவதை தவிர்க்க வேண்டும்.

கிடாரிகளுக்கு சினை ஊசி போடும்பொழது கீழ்க்கண்ட மூன்று விதிகளும் பின்பற்றப்படவேண்டும்.

கிடாரியின் எடை, அதன் தாயின் எடையில் 3ல் 2 பங்கு எடை அடைந்த பிறகே கருவூட்டல் செய்ய வேண்டும்.

கிடாரியின் வயது பசுவிற்கு 1½ வயதும், எருமைக்கு 2-2½ வயதும் அடைந்த பிறகே கருவூட்டல் செய்ய வேண்டும்.

கர்ப்பப்பை தேவையான வளர்ச்சி அடைந்துவிட்டதா என பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

இந்த 3 விதிகளும் ஒத்துப்போனால் மட்டுமே கிடாரிகளுக்கு சினை ஊசி போட வேண்டும்.

பருவ அறிகுறிகள் காட்டாமை 

அதிக பால் கொடுக்கும் மாடுகள் பருவ அறிகுறிகள் காட்டும் தன்மையை தற்காலிகமாக இழந்துவிடுகின்றன.

மெலிந்த உடல் நிலையில் உள்ள (உதாரணமாக எலும்புருக்கி நோய் தாக்கிய) மாடுகளில் பருவ அறிகுறி காட்டாமை அதிகமாகக் காணப்படும்.

சத்துப் பற்றாக்குறை காரணமாக இனப்பெருக்கத்தில் பங்கு கொள்ளும் கனநீரின் குறைபாடு ஏற்பட்டு இத்தகைய தன்மை ஏற்படுகிறது.

வயதான மாடுகளில் இந்நோய் அதிகமாகக் காணப்படுகிறது.

கருப்பையின் சூலகத்தல் கடினக்கட்டி ஏற்படுவதால் இந்நோய் ஏற்படுகிறது.

அதிக வெப்பநிலை உள்ள காலங்களில் சினைப் பருவம் தோன்றாமை அதிகமாகக் காணப்படுகிறது.

மேற்கண்ட அறிகுறிகள் தென்பாட்டால் கால்நடை மருத்துவரின் ஆலோசனையுடன் கால்நடைகளைக் கையாளுவது நல்லது.

தகவல் - மரு. R.V.விஜயக்குமார், கால்நடை உதவி மருத்துவர், கால்நடைமருந்தகம், திருமலைப்பட்டி,நாமக்கல்.

முக்கிய குறிப்பு : மாடுகளுக்கு சினை ஊசி போடுவதை முடிந்தவரை குறைத்து காளையுடன் சேருங்கள்.. நன்றி!!!  

லாபம் கொடுக்கும் நாட்டு மாடுகள்...

 நாட்டு மாடுகளை வளர்த்து லாபம் ஈட்டி வரும் பலர் உண்டு. அத்தகையோரில் ஒருவர்தான், சென்னையைச் சேர்ந்த அகமது.

‘‘தீவனத்துக்காகவும் பராமரிப்புக்காகவும் அதிக தொகை செலவிட்டு அதிக பால் கறந்து சம்பாதிப்பதை விட, நாட்டு மாடுகளை வளர்த்து குறைவான செலவில் நிறைவாக சம்பாதிப்பதுதான் புத்திசாலித்தனம். அத்துடன், நம்ம பாரம்பர்ய மாடுகளையும் அழியாம காப்பாத்த முடியும்’’ என்று சொல்லும் அகமதுவின் பால் பண்ணை, விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்துக்கு அருகே உள்ள ஆவணிப்பூர் கிராமத்தில் உள்ளது


நான், ஒரு நாள் பண்ணைக்கு வந்தப்போ, அங்க இருந்த ஆடு, மாடுகளோட எண்ணிக்கையை கணக்குப் போட்டேன். வாங்கின எண்ணிக்கையும் அப்போ இருந்த எண்ணிக்கையையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அபரிமிதமான அளவுக்கு ஆடு, மாடு, கோழிகள்னு பெருகியிருந்தது. எனக்கு ஆச்சர்யமா இருந்துச்சு. அப்பதான், கால்நடை வளர்ப்புல முறையா ஈடுபட்டா நல்ல லாபம் கிடைக்கும்னு புரிஞ்சது. அதுக்குப் பிறகு நிறைய தகவல்களைச் சேகரிக்க ஆரம்பிச்சேன். வெளிநாடு, வெளி மாநில விவசாயிகள்கிட்டயும் பேசி நிறைய விஷயங்களைத் தெரிஞ்சிக்கிட்டேன். அப்போ, கலப்பின மாடுகளை விட நாட்டு மாடுகள்தான் பல விதத்துலயும் நல்லதுனு புரிஞ்சுக்கிட்டு... நாட்டு மாடுகளைத்தான் வளர்க்கணும்னு முடிவு செய்தேன். நம்ம ஊர்ல இருக்கிற நாட்டு மாடுகள் அதிகளவு பால் கொடுக்காது. அதனால, வடமாநிலங்கள்ல இருந்து, காங்கிரேஜ், தார்பார்க்கர், சாஹிவால், கிர், சிவப்பு சிந்தி, ராட்டினு ஆறு ரகங்கள்ல 30 மாடுகளை வாங்கிட்டு வந்து... 2011-ம் வருஷம் பண்ணையை ஆரம்பிச்சேன். அப்பறம் கொஞ்ச கொஞ்சமா மாடுகளை வாங்கினது, இங்க கிடைச்ச குட்டிகள்னு... இப்போ, மொத்தம் 160 மாடுகள் இருக்கு இதுல கன்னுகளும் அடக்கம்என்ற அகமது, பண்ணையில் இருக்கும் மாடுகளை ரக வாரியாக நமக்கு அடையாளம் காட்டினார்.

மாடுகளுக்காக மொத்தம் 35 ஏக்கர்ல கோ-4, அகத்தி கீரை, முயல்மசால், சுபாபுல்னு தீவனம் இருக்கு. வழக்கமா, கோ-4 தீவனத்தை சாகுபடி செய்யும் போது, 2 அடிக்கு 2 அடி இடை வெளியில் சாகுபடி செய்வாங்க. ஆனா, இங்க 50 சென்டி மீட்டருக்கு 50 சென்டி மீட்டர் இடைவெளியில நடவு செய்திருக்கோம். ஒவ்வொரு பாத்தியையும் தனித்தனியாக அடையாளப் படுத்தியிருக்கோம். அதனால, புல்கரணை இழப்பு, வளர்ச்சிக் குறைவு...னு பிரச்னை வந்தா, எந்தப் பாத்தினு பார்த்து உடனே சரி செய்ய முடியுது. அதனால, தீவன உற்பத்தி குறையவே குறையாது

கோமாரியிலும் தாக்குப் பிடித்த நாட்டு மாடுகள்!

காலை, சாயங்காலம் ரெண்டு வேளையும் பசுந்தீவனம், வைக்கோல், அடர்தீவனம்னு கொடுப்போம். தினமும் 3 மணி நேரம் மேய்ச்சலுக்கும் விடுறோம். அதனால, மாடுகள் நல்லா நோயில்லாம வளருது. நாட்டு மாடுகளுக்கு இயற்கையிலேயே நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமா இருக்கு. போன வருஷம் இந்தப் பகுதியில கோமாரி நோய் பரவி, பல மாடுகள் இறந்தப்பவும், எங்க நாட்டு மாடுகளுக்கு பெரியளவுல பாதிப்பில்லைஎன்ற அகமது, நிறைவாக வருமானம் பற்றிச் சொன்னார்.

மாதம் 12,500 லிட்டர் பால்!

“160 மாடுகள்ல 50 கன்றுக்குட்டிகள். 50 மாடுகள் பருவத்துல இருக்கு. எப்பவும் 60 மாடுகள் வரை கறவையில இருக்கும். ஒரு மாடு 8 லிட்டர் பால்ல இருந்து, 13 லிட்டர் வரை பால் கொடுக்குது. தினம் சராசரியா 400 லிட்டர் பால் கிடைக்குது. மாதம் 12 ஆயிரம் லிட்டர் பால். அதை வியாபாரிகள் மூலமாகவும், நேரடியாகவும் விற்பனை செய்றோம். ஒரு லிட்டர் பால் 70 ரூபாய்னு விற்பனையாகுது. இதன் மூலம் மாதம், 8 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். இதில், தீவனம், பராமரிப்புச் செலவுகள் போக 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை லாபமா கிடைக்கும். வருஷத்துக்குனு கணக்கு பார்த்தா 42 லட்ச ரூபாய் லாபம்.

கிடா கன்னுகளை 2 வருஷம் வளர்த்து விற்பனை செய்றப்போ, ஒரு மாடு 30 ஆயிரம் ரூபாய்னு விலை போகும். அந்த வகையில வருஷத்துக்கு 20 மாடுகளை விற்பனை செய்றோம். அதுல 6 லட்ச ரூபாய் வருமானம் வருது. இதுல தீவனம், பராமரிப்புச் செலவுகளைக் கழித்தால், வருஷத்துக்கு 3 லட்ச ரூபாய் லாபம். மொத்தமா பார்த்தா மாடுகள் மூலமா, வருஷத்துக்கு இப்போதைக்கு 45 லட்ச ரூபாய் லாபம் கிடைச்சுக்கிட்டு இருக்கு


பால்பண்ணையை வெற்றிகரமாக நடத்த அகமது சொல்லும் ஆலோசனைகள் இங்கே...

அதிகமான எண்ணிக்கையில் மாடுகள் வைத்திருப்பவர்கள், மாடுகளைக் கட்டி வைக்காமல் மேய்ச்சலில் விட்டு வளர்த்தால், மாடுகள் ஆரோக்கியமாக இருக்கும். பசுந்தீவனங்களை மாடுகளுக்கு நேரடியாகக் கொடுக்காமல், வலையில் கட்டி தொங்க விட்டால், மாடுகள் நாக்கால் இழுத்து உண்ணும். இதன் மூலம் தீவன சேதாரத்தை வெகுவாகக் குறைக்கலாம். தினமும் கறவை மாடுகள் மீது தண்ணீர் தெளித்து பிரஷ் மூலம் தேய்த்து சுத்தப்படுத்திய பிறகு தண்ணீர் விட்டு கழுவும்போது, குளிக்க வைக்கும் தண்ணீர் அதிகளவில் மிச்சமாகும்.


கோ-4 தீவனத்துக்கு இடையில் ஊடுபயிராக உளுந்து பயிரிட்டால் களை பிரச்னை இருக்காது. ஒரு மாட்டுக்கு 40 முதல் 50 சதுர அடியில் கொட்டகையும், 250 சதுர அடி உலாவுவதற்கான இடமும் கொடுத்து, சுற்றிலும் தடுப்பு அமைக்க வேண்டும். மாடுகளுக்குத் தேவையான போது மூலிகை மருத்துவத்தைப் பயன்படுத்தினால், எதிர்ப்புச் சக்தி அதிகமாவதுடன், செலவும் குறைவாக இருக்கும்”.