சனி

List of Water Amusement & Theme Parks in Tamilnadu..

1,Athisayam Water Amusement Park


Athisayam Amusement Park is a Water Amusement Park located in Madurai.

Athisayam Waterpark has sports rides for everyone from the thrill seeker in you to the more relaxed family attractions. Athisayam is just 20 minutes drive from Madurai.

You will enjoy the wide variety of water games and rides. Visit our exciting Madurai Courtallam to experience the fun.

Prices, safety, cleanliness of Athisayam and the friendly, helpful attitude of Athisayam's employees all get credited for the park's continuing success at drawing crowds. More than 50 rides are here in the park.

Address :
Athisayam Amusement Park,
Paravai,
Madurai - Dindigul Main Road,
Madurai, Tamilnadu, India

Phone: +91 452 2463848, 2463849, 2463850

Web : http://athisayampark.com/

2,Black Thunder Water Theme Park

Black Thunder Water Theme Park is Asia's No:1 Water Theme Park, nestled in natural beauty with the green hills of the Nilgiris.

Black Thunder is fun destination for families and group entertainment.

The Park facilities includes the new Black Thunder Resort with luxurious accommodation. Set amidst a breath taking Landscape, Coconut and Betelnut trees, the 40 Deluxe Rooms and suites will make your stay memorable.

Black Thunder is situated at 41km from Coimbatore and 40 km from Ooty. The nearest railway stations are Mettupalayam, Coimbatore and Tiruppur and the airport is Coimbatore. It is well connected with all parts of the country through road and rail.

Exclusive designer T-Shirts for Kids and all, Swimming shorts, Variety of Caps, Colourful Umbrellas, Stuffed Toys, Perfumes for Men and Women, Alcohol free Jasmine Roll-On, Hologram stickers, Tattoos, Key chains and much, much more.

Address: BLACK THUNDER Water Theme Park
Ooty Main Road
Mettupalayam - 641 305
Coimbatore Dt
Tamilnadu
India

Phone : 91-4254-226632-40(9 Lines)
Mobile : 9894726640/9894020504/9894088048 9894093355
Fax : 91-4254-225737
Email : waterpark@dataone.in

Web : http://www.btpark.org



3,Kovai Kondattam


”Kovai Kondattam” is a new and exciting adventure arena combining fun & comfort relaxing the mind, body And soul.

Siruvani fun world's Kovai Kondattam has been conceived keeping in mind the long felt need for an amusement park in the cotton city.

Come and discover the different dimensions of Coimbatore… Kovai Kondattam with the Fabulous Food, Excellent entertainment and unforgettable fun.

Kovai Kondattam offers a fun filled and hassle – free way to enjoy the string of exciting activities tailored just for you.

Kovai Kondattam Pvt Ltd
2/347, Siruvani Main Road,
Kalmpalayam Post,
Coimbatore – 10,

Ph: 2606852, 2606853
email: fun@kovaikondattam.com

Web : http://www.kovaikondattam.com/



4,VGP Universal Kingdom


VGP Universal Kingdom offers spectacular Rides.

The Park is open from 11.00 a.m to 7.30 p.m (8.00 p.m. on Weekends…) From Monday to Sunday. A locker Room is near the entrance to the Park, so that your baggage and other personal effects are kept safely. You are however advised to keep your Cash, Jewellry, Credit cards & other valuables with you.

AMUSEMENT Rides can be broadly categorized as (1) Children (2) Youth (3) Family. CHILDREN RIDES are Carousels (Merry-go-round), Baby Train, Revolving Cups, Twister, Water Duck, Mini Duck, Helicopter, Jumping Frog, Water Boat, Orbiter, Alaudin, Jump-in-Star, Joy Train, Trampoline and Bouncer, Parachute Adventure, Go Racer. The Kiddies Rides Paradise which hosts an assortment of video games and more than 30 coin operated rides, in a centrally air-conditioned hall.

YOUTH RIDES are Super Trooper, Chair -o-Plane, Dashing Cars, Water Chute, Mixer, Roller Coaster, Euro Bungee, Hydro Bike Go- Karting, Rodeo Bull.

FAMILY RIDES are Aero ship, Giant wheel, Break Dance, Super jet, Balloon Racer, Roller Coaster, Orbiter.

Park Address: VGP Universal Kingdom,
VGP Golden Beach
East Coast Road,
Injambakkam,
Chennai - 600 041
Tamilnadu, India

Phone : +91 7667847847

Web : http://www.vgpuniversalkingdom.in/


5,VGP Snow Kingdom



VGP Snow Kingdom is one of the largest full-fledged indoor snow theme park in India.

VGP Snow Kingdom is adjacent to VGP Universal Kingdom. VGP Snow Kingdom has various other attractions as well, becoming a complete travel destination in a single location.

Location:
VGP Snow Kingdom
(Exclusive Entrance through Parking Area of VGP Universal Kingdom).
VGP Golden Beach Area.
Injambakkam, East Coast Road (ECR)
Chennai - 600 115, Tamilnadu, India

Email: info@vgpsnowkingdom.com
Phone: +91 73822 22222

Web : http://www.vgpsnowkingdom.com


7, Kishkinta Theme Park



Kishkinta is a popular theme water park and is an ideal destination for family and group entertainment.

The amusements, attractions, water games and rides, make Kishkinta India's No. 1 Theme Park.

Kishkinta is a household name and the favourite fun destination for kids from six to sixty.

KISHKINTA is a Theme Park set in 120 acres of specially landscaped hills and lakes. Thirty minutes south of Chennai City, the park is situated five kilometres west of Tambaram Bus stand and Suburban train station. KISHKINTA has attracted over five million visitors since its inauguration in August 1995.

Address: Kishkinta Theme Park,
82, Varadarajapuram, Darkas Ward - II,
Near Tambaram, Chennai - 600 044.
Tamil Nadu
India.

Phone : 044 - 22512001 - 005, 32910078, 32468548, 32468549
Fax : 22512007
Email : kishkinta@yahoo.com

Web : http://www.kishkinta.in/


8,M.G.M. Dizzee World


M.G.M. Dizzee World, Asia's No, 1 Amusement Park, is located on ECR, 30 kilometers away from Chennai.

M.G.M. Dizzee World has a number of attractions like Arrow Loop-Corkscrew Roller Coaster, Balloon Race, Kamikaze Ranger, Merry Go Round, Revolution and Venture River.

The futuristic fun rides will take people to the frontiers of space. The rides at Dizzee World not only entertain the adults but also the children.

Mary World, a haven for children, is full of kiddy rides and nursery rhyme characters. Giant boot, Humpty Dumpty, Pumpkins are some of the nursery rhyme characters which are in place startling as real life characters. The Zip Dip, Giant Octopus, Aqua Tube are some of the attractions in the Water World.

Address:
MGM Dizzee World
No:1/74,East Coast Road, Muttukadu,
Chennai- 600 112

Phone number : 044-27472129
Mobile number : 9500063716 / 9500063717 / 9790955554
Fax number : 044-27472487
E-mail : mgmdizzeeworld@mgm.co.in

Web : http://www.mgmdizzeeworld.com/


9.Baywatch Amusement Park


Baywatch is the only Theme park available in South Tamilnadu next to Athisayam.
This is a popular water park located 2 km from Kanyakumari on Kovalam Road. It has all kinds of land and water-based rides. There are two restaurants here, which serve delectable cuisine. Its time for some screaming, some splashing and some surprises at this park! Your kids will love it if you are bringing them with you. Get a little high with the roller-coaster ride or play with the water at the pool. Whatever you do, just see the smile on your kid’s face and everything will be worth another ride. Dry yourself and head out to the Wax Museum and acquaint yourself the life-like replicas of the famous celebrities." Equipped with water-based fun rides, Baywatch Amusement Park attracts tourists as much for its rides as for its interesting wax museum (claimed to be India’s first) that houses wax figures of famous personalities. The park is located close to Sunset Point.

Contact details of Baywatch theme park
P.B.No.99, Kanyakumari 629 702,
Tamil Nadu, India.
Tel:+ 91 4652 246565/246565/246375
E mail : park@baywatch.co.in

Website:http://baywatchpark.in/



10,Queensland Amusement Park

This park Tagged as the great amusement paradise, this theme park is one of the most popular ones in Chennai. There's a swimming pool, wave pool and a frog slide kiddie pool. Some children's rides are child bumper car, trambolin, kids taxi, wing weight and many more. The whole family can enjoy rides like mirror house, cable car, dragon fly and many more. For the fearless ones, try the free fall tower, octopus, roller coaster and other thrilling rides. Open from Tuesday to Wednesday at 10:00 am to 7:00 pm. Entry fee is Rs. 550 for adults and Rs. 450 for children. Located at: Queens Land, Bangalore Trunk Road, Palanjur Chennai 602 103.


Queensland Theme Park,
Bangalore Trunk Road,
Palanjur,
Poonamallee,
Chennai – 602103
Tel No: 044- 26811124, 26811136

For more details 
https://www.queenslandamusementpark.com/


11,EVP world amusement park

This resource about EVP world amusement park will be useful for all fun lovers who are searching for a place to enjoy with their loved ones. In this resource you get all the details about EVP world theme park, the timings, the entry fee and the facilities available in EVP world.


EVP World amusement park
EVP Santhosha Nagar,
Chennai-Bangalore National Highway,
Chembarambakkam,
Chennai - 602103,
Tamil Nadu, India.
Email: evpworld@gmail.com
Website: www.evpworld.com
Mobile : +91 7373000000

11,Dash-n-Splash amusement park

This is a wonderful place where you can refresh with your family. This theme park entry Fee is very less compare to other Parks. It's located in the Mevallur Kuppam Village which is 30 kms away from Chennai city. The park was established in the year 1995 on the Chennai-Bangalore highway. Dash-n-Splash is a place where we can see visitors from 0 to 80 years. The greeneries, water pools, coconut grooves and a large shaded area of the park makes the place a tourist attraction. Enjoy your day in the coolness of the mango and coconut groves of Dash-n-Splash amusement park in Chennai.

13,Maharaja Theme Park 

This is an amusement park located in Coimbatore, The park also has movie screens attached with the park. (15 kms,30 Minutes from city)

It consists of various water Games which will be best fun and variety in entertainment - lots of games, movies, and food courts. It was opened to the public in April 2006. Tamil Actor Suriya opened this theme park.Maharaja Theme Park Timing: 10:30 am to 6:30 pm

Maharaja Theme Park
Avinashi Road, Opposite PSG Foundary,
Neelambur, Coimbatore, Tamil Nadu 641014
Tel: 0422 - 2628998
Mobile: 9842712128

தமிழகத்தில் பொறியியல் படிப்பு மதிப்பு இழந்து விட காரணங்கள் !

தொழில் நுட்பமும், பொறியியலும் மிகவும் நவீனமாக வளர்ந்து விட்ட படியால் அதற்கேற்றபடி பாட திட்டங்களும் கற்பிக்கும் முறையும் மாறி விட்டன. ஆகவே படிப்பின் மதிப்பு கூடித் தான் இருக்கிறது. அதை படித்தவர்களின் மதிப்பு தான் கூட வில்லை, மாறாக குறைந்திருக்கிறது.

பொறியியல் படிப்பு மதிப்பு இழந்து விட காரணங்கள்:படிப்பிலும், செய்முறையிலும் முழு ஈடுபாட்டோடு கவனம் செலுத்தாமை
இணையதளங்களிலும் திறன் பேசிகளிலும் நேரத்தை செலவழித்தல்
குறிக்கோள் இல்லாத கல்லூரி வாழ்க்கை
சரியான உள்கட்டமைப்பு இல்லாத கல்லூரிகளில் பயிலுதல்
தேர்ச்சி பெற்ற / அனுபவம் உள்ள விரியுரையாளர்கள் இல்லாமை
தேர்ச்சி பெற்ற / அனுபவம் உள்ள செய்முறை பயிற்சியாளர்கள் இல்லாமை
செய்முறை பயிற்சியில் மாணவர்களுக்கு அதிகம் ஆர்வம் இல்லாமை
வேண்டப்பட்ட மாணவ மாணவியருக்கு உள் மதிப்பீடு மதிப்பெண்களை வாரி வழங்குவது. மற்றவர்களை கண்டு கொள்ளாமல் விட்டு விடுவது. அதனால் நன்றாய் படிக்கும் மாணவர்கள் சோர்வடைந்து போவது
கடைசி பருவ திட்ட வேலை (PROJECT WORK) சமர்ப்பித்தலுக்கு கணனி மையங்களை சார்ந்திருப்பது
  • மாணவ மாணவியர்கள் கடைசி வருஷத்திற்கு முந்தின வருஷத்திலிருந்தே பொறியியலுக்கு சம்பந்தமில்லாத TNPSC Gr4, SSC (+2 Level), வங்கி தேர்வு இன்னும் பல வித போட்டித் தேர்வுகளுக்கு ஆயத்தப்படுவது.
  • முக்கியமான பொறியியல் பாடங்களை படித்த மாணவர்கள் அதற்கு சம்பத்தமில்லாத தகவல் தொழில் நுட்ப துறைக்கான வேலைக்கு தனியாக அர்ப்பணிப்போடு ஆயத்தப்படுவது
இதையெல்லாம் தாண்டி தங்களுடைய துறையில் அருமையான திறமையான பொறியியல் வல்லுநர்கள் ஆனவர்கள் நிறைய உண்டு.

பொறியியல் படிப்பு தரமானதாக இருக்கிறதா என்றால் 90% இல்லை. பாட ஆசிரியர்கள் பாடத்திட்டம் தாண்டி பாடம் எடுக்கின்றனரா என்றால் அதுவும் 90% இல்லை. சரி மாணவர்களாவது கற்ற விஷயங்களை இன்னும் மெருகூட்டும் வகையில் யோசிக்கிறார்களா என்றால் அதுவும் 75% இல்லை. தொழில்நுட்ப கல்வி என்ற பெயரில் சாதாரண ITI மாணவர்களுக்கு தெரிந்த அளவு கூட தங்கள் துறையின் அடிப்படை விஷயங்கள் தெரியுமா என்றால் அதுவும் இல்லை.

இப்படி பானை முழுவதும் ஓட்டை இருந்தால் எப்படி தண்ணீர் பிடிக்க முடியும்.

உண்மையில் 99% பொறியியல் வேலைகளுக்கும் படித்த பாடத்திற்கும் சம்பந்தமே இல்லை. ஒரு பொறியியல் மாணவன் ஒரு வேலையில் சேர்ந்த பின்னர் தான் பொறியியலை கற்க ஆரம்பிக்கிறான்.

பொறியியல் படிப்பில் சில மாற்றங்கள் வேண்டும் என்று நான் ஒரு திட்டம் வைத்திருக்கிறேன் அதில் ஒரே ஒரு பாயிண்ட் மட்டும் இங்கே::::

4 ஆண்டு பொறியியல் படிப்பில் நான்கு வருடங்களும் Even Semester (2,4,6,8) களில் துறைசார் நிறுவனங்களில் வேலை செய்து அந்த துறைசார் கேள்விகளுக்கு பதிலும், துறைசார் Project கண்டிப்பாக இருக்க வேண்டும்.

இன்னொன்று அடிப்படை அறிவு இல்லாமல் தான் பலர் பொறியியல் துறைக்கு வருகிறார்கள் அதனால் கண்டிப்பாக நுழைவுத்தேர்வு வைக்க வேண்டும் அதற்கு முதலில் பள்ளி பாடத்திட்டத்தை மாற்றவேண்டும்.

ஒரு துறையில் நிபுணத்துவம் பெறும் அளவுக்கு கற்றுக்கொண்டு அதை மற்றவர்களிடம் வெளிப்படுத்தும் அளவுக்கு ஆங்கில மொழியறிவு இருந்தால் கண்டிப்பாக வேலை கிடைக்கும்.

உங்களிடம் தன்னம்பிக்கை இருக்கிறதா? கண்டுபிடிக்க ஒரு சுய பரிசோதனை!!

 


வெற்றியின் ஆணிவேர் தன்னம்பிக்கை. உங்களிடம் தன்னம்பிக்கை மிகுந்திருந்தால் நீங்களும் வெற்றியாளராக வலம் வரலாம். உங்கள் தன்னம்பிக்கையை சோதிக்க ஒரு சுய பரிசோதனை இங்கே





உங்கள் உடல்வாகு எப்படிப்பட்டது?
அ. எனது உடல் அழகான `ஸீரோ சைஸ்’ கொண்டது. அதில் எனக்கு திருப்திதான்!
ஆ. மேனியழகு பொலிவாகத்தான் இருக்கிறது. இன்னும் வசீகரிக்கும் தோற்றமுடன் எனது உடலை வைத்துக்கொள்ள விரும்புகிறேன்.
இ. மக்கள் நான் வசீகரிக்கும் வனப்புடன் தோன்றுவதாகக் கூறுகின்றனர். ஆனால் நான் அப்படி நினைப்பதில்லை!

நீங்கள் வெகுநாள் விரும்பிய முக்கிய மனிதரை எதிர்பாராத விதமாக சந்திக்கிறீர்கள்? அப்போது…
அ. நானே முதலில் பேச்சைத் தொடங்கி அவருக்கும், எனக்கும் இடையே பரஸ்பர கருத்தொற்றுமை இருக்கிறதா? என்பதைக் கண்டறிவேன்.
ஆ. பார்த்ததும் ஏற்கனவே அறிமுகமானவர் மாதிரி அரட்டையடிக்கத் தொடங்கிவிடுவேன்..!
இ. அவர் என்னிடம் முதலில் பேச மாட்டாரா? என்று காத்திருப்பேன்!

சொந்தபந்தங்களுடன் உறவை பேணுவதில் நீங்கள் எப்படி?
அ. எப்போதாவது கருத்துவேறுபாடு ஏற்பட்டு உறவில் விரிசல் விழுவதுபோல தோன்றினால் நான் என் நிலையை ஆய்வு செய்து தவறுகள் இருந்தால் அதற்காக மன்னிப்புக் கோரி உறவு முறையை மேம்படுத்த முயற்சிப்பேன்.
ஆ. உறவுமுறை நன்றாகவே இருக்கிறது..! ஆனாலும் சில பிரச்சினைகள் வந்து போகின்றன.
இ. உறவுகள் என்றாலே தொல்லையும் துயரமும்தான்..! அவர்கள் என்னை புரிந்து நடந்து கொள்ளவே மாட்டார்கள்!

உங்கள் முகத்தில் திடீரென்று முகப்பரு தோன்றினால் என்ன செய்வீர்கள்..?
அ. முகப்பரு மருந்து தடவுவேன். இன்றைய முகப்பரு நாளைக்கு மறைந்துவிடும் என்கிற நம்பிக்கையோடு அடுத்த வேலையில் கவனம் செலுத்துவேன்.!
ஆ. முகப்பருவைக் கண்டதும் உடனே நல்ல டாக்டரை நாடி செல்வேன். டாக்டரிடம் செல்வதை தள்ளிப்போட மாட்டேன்.
இ. எனக்கு உடம்பு சரியில்லை என்று கூறிவிட்டு, அன்றைய அலுவலை ஒத்திப்போட்டுவிட்டு கவலையில் ஆழ்ந்து விடுவேன்!

நெருங்கிய நண்பர் ஒருவர் எதிர்பாராத துன்பத்தில் மாட்டிக்கொண்டால்…?
அ. முதல்ஆளாக ஓடிப்போய் அவருக்கு உதவி செய்வேன்..!
ஆ. அவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு என்ன தேவைப்படுகிறது என்பதைக் கேட்டறிந்து உதவி செய்வேன்!
இ. உதவி செய்ய எனக்குத் தெரிந்த இன்னொரு நண்பரை அனுப்பி வைப்பேன்..!

உங்களது வாழ்க்கை எப்படி செல்கிறது?
அ. எனக்கு உண்மையான நண்பர்கள் அதிகம். அதனால் வாழ்க்கை ஆனந்தமாய் கழிகிறது..!
ஆ. ஏதோ இருக்கிறேன். நண்பர்கள் இருக்கிறார்கள். ஆனால் அங்கங்கே தனித்தனியாக இருக்கிறார்கள். எனக்கு ஏற்படும் கஷ்டநஷ்டத்தை கண்டுகொள்ள ஆளில்லை.
இ. இது என்ன வாழ்க்கை. ஒரு சந்தோஷமும் இல்லை. வாழ்க்கையே வெறிச்சோடிப் போய்க் கிடக்கிறது!

ஒரு குழுவை வழிநடத்தும் தலைவராக உங்களை தேர்வு செய்தால்…?
அ. உடனடியாக ஒத்துக்கொள்வேன்!
ஆ. நான் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று கேட்டறிவேன். அதன்பிறகு தலைமை தாங்குவது பற்றி முடிவு செய்வேன்.
இ. நான் என்ன செய்வது என்று அறியாமல் தவிப்பேன். தலைமை தாங்க யோசிப்பேன்!

உங்கள் பஸ் பயணம் திடீரென்று ரத்தாகிறது, தனியார் பஸ் நிறுவனம் அதற்கு மாற்று ஏற்பாடு செய்யவில்லை, பணத்தையும் திருப்பித் தரவில்லை. என்ன செய்வீர்கள்…?
அ. கம்பெனி மேலாளரை சந்தித்து, இழப்பீடு தர வற்புறுத்துவேன்.
ஆ. என் கோரிக்கையை அமைதியாகத் திரும்பத் திரும்ப எடுத்துரைப்பேன்!
இ. திரும்ப திரும்ப கேட்பதால் பயனில்லையென்று கருதி, இன்னொரு பஸ்சில் ஏறி வீட்டிற்கு போய்விடுவேன்.

உங்கள் பதில்களில் `அ’ விடைகள் அதிகமாக இருந்தால் நீங்கள் தன்னம்பிக்கை மிகுந்தவர்தான். எந்தச் சூழ்நிலையையும் சமாளிக்கும் வல்லமை உங்களுக்கு உண்டு! எப்படிப்பட்ட சூழ்நிலையையும் உங்களுக்குச் சாதகமாக்கி நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்.

அதிக கேள்விகளுக்கு விடை ஆ-வை தேர்வு செய்திருந்தால் நீங்கள் எதுவும் நல்லதாகவே நடக்கும் என்று நம்புவீர்கள். சிறிது சஞ்சலங்கள் தோன்றினாலும் சூழ்நிலையை சமாளிக்கும் வல்லமை உங்களிடம் இருக்கும்.

பதில் `இ’ உங்கள் விடைகளில் மிகுந்திருந்தால் நீங்கள் நம்பிக்கை குறைவானவர். உங்கள் வாழ்வியல் முறைகளை சீர்திருத்துவதோடு மன தைரியத்துடன் செயல்படத் தொடங்குங்கள்.

Thanks : மு.அஜ்மல் கான்.

தாழ்வு மனப்பான்மையை நீக்கி வாழ்வில் வெற்றி பெற சில வழிகள்

 வாழும் நாட்களில் சந்தோஷத்தையும்,மனஅமைதியையும் தேடுங்கள்... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப் போவதில்லை...

பேரின்பம் வேண்டாம்...
சிறுசிறு சந்தோஷங்கள் போதும் வாழ்வை அனுபவிக்க.........
வாழ்க்கையில் கஷ்டங்களும், கவலைகளும் நமக்கு மட்டும் தான் அதிகமா வருதுன்னு நினைக்க கூடாது. வாழ்வில் போராடி ஜெயிப்பதுதான் உண்மைமையான வெற்றி...
நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான *போராட்டக் களத்திலே* வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ...
மனக்காயங்களுக்கான மருந்தை கண்டுபிடித்தால் ...
அவன் தான் உலகின் பெரிய பணக்காரன் ஆவான் ...
பணக்காரனா பல கவலைகளோட வாழ்றத விட
ஏழையாக எதோ ஒரு நினைவோட வாழ்ந்துவிட்டு போய்டலாம்,,
1.என் வாழ்க்கை சோகம் நிறைந்தது என்று நினைக்காதீர்கள். எல்லாம் நிறைவாய் இருக்கும் வாழ்க்கை இங்கு யாருக்குமே அமைவதில்லை என்பதே உண்மை.*
2. உங்கள் அன்பு எந்த இடத்தில் நிராகரிப்பட்டாலும் இழப்பு உங்களுக்கில்லை, நிராகரித்தவருக்கே என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.
3. உங்களால் எது முடியாது. உங்களுக்கு எது தெரியவில்லை என்று யாரேனும் சொன்னாலும், அதை விரைவில் கற்றுக் கொண்டு முடித்துக் காட்ட வெறித் தனமாய் முயற்சி செய்து அதில் வெற்றி பெறுங்கள்.
4. உங்களுக்கு எதுவும் தெரியாது. எதிரில் நிற்பவருக்கு எல்லாமே தெரியும் என்று ஒரு போதும் நினைக்காதீர்கள். இந்த எண்ணம் இருந்தால் நீங்கள் சொல்ல வந்ததை சரியாக சொல்ல முடியாது.
5. கேள்வி கேட்பதற்கும் உங்களை முன் நிறுத்துவதற்கும் மொழி புலமை அவசியம் என்று நினைக்காதீர்கள். உலகில் சரியாக சிந்திக்க வைத்த கேள்விகளை கேட்ட நிறையப் பேர் மொழிப்புலமை இல்லாமல் தங்களுக்கு தெரிந்த வார்த்தைகளைக் கொண்டு தங்கள் கேள்விகளை சரியாக புரியவைத்தவர்கள்.
6. எந்த மொழி சரளமாக பேச முடியவில்லை என்றாலும் கவலை கொள்ளாதீர்கள். உங்களை நக்கல் செய்பவரிடம் துணிச்சலாய் எதிர்த்துத் சொல்லுங்கள் இங்கு பலருக்கு அவரவர் தாய் மொழியையே சரியாகப் பேசத் தெரியாதென்று. நீங்கள் அந்த மொழியில் பயிற்சி செய்து சிறப்பான முறையில் பேசிக் காட்டுங்கள்.
7. அழும் போது தனியாக அழுங்கள். நீங்கள் அழைத்தாலும் சேர்ந்து அழ இங்கு யாரும் வரப்போவதில்லை என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். கண்ணீரில் துக்கத்தை கரைத்து தூர எறிந்து விட்டு முன் செல்லுங்கள். சிரித்து வாழப் பழகிக் கொள்ளுங்கள்.
8. நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள் உங்களை நம்புங்கள். நம் உடம்பிற்க்கும், உயரத்திற்கும், நிறத்திற்கும் அழகிற்கும், வயதிற்க்கும் சம்பந்தமில்லை என்பதை ஏற்று கொள்ளுங்கள். யாருடனும் யாரையும் ஒப்பிடாதீர்கள். யார் என்ன சொன்னாலும், ரசித்தாலும், வெறுத்தாலும். நாம் நன்றாகவும், ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக இருப்பதாக உணருங்கள். உங்களை நீங்களே நம்புங்கள். நீங்கள் தன்நம்பிக்கையும், மனமகிழ்ச்சியும், மாற்றத்தையும் ஒவ்வொரு முறையும் உணர்வீர்கள்.
ஆறுதலே கூற முடியாத சில கஷ்டங்களுக்கு நிச்சயமாக அழுகையும், சிரிப்பும் ஒரு மருந்தாக இருக்கும்....
வாழ்க்கை மிகச் சிறியது என்பதால்... 
அன்பை அதிகமாகவும்,கோபங்களைகஞ்சத்தனமாகவும், மன்னித்தல்களை விரைவாகவும் வெளிப்படுத்த கற்றுக் கொள்ளுங்கள்...
அறிவாளியை விலை கொடுத்து வாங்கி விடலாம்.
உணர்ச்சி உள்ள மனிதனையும், அன்பான மனிதர்களையும் விலை கொடுத்து வாங்க முடியாது...
அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ...இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்?
நாளை என்பதே நமக்கு உறுதியில்லை...
நாளும் அது நமக்கு புரிவதில்லை...
நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட ...,
இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் ....
இழப்பதற்கு மட்டும் வருந்த வேண்டுமெனில்,
வாழ் நாட்கள் போதாதது.. ஏனெனில் ...இந்த வாழ்க்கையில் இழப்புகள் தான் ஏராளம்...
இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக் கொள்கிறோம்...ஆனால் எத்தனை வயது ஆனாலும், “*எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...!
வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை.
எத்தனை காலம் கடந்தால் என்ன.... சில நினைவுகளுக்கு நரை விழுவதே இல்லை.....
 வாழ்க்கை என்னவோ நரகத்தைப் போல வலித்து விட போவது இல்லை என்றே தோன்றுகிறது ....
இனி எதற்கும் " ஏன்" என கேள்வி கேட்காதீர்கள் என்று சொன்னால் ....அதற்கும் ... "ஏன்" என்று கேட்பார்கள்
சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ...15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது.
தவறான வழியில் வெல்பவனை வாழ்த்தியும், நேர்மையான வழியில் சென்று தோற்பவனை தாழ்த்தியும் பேசும் சமுதாயம்தான் குற்றங்களுக்கு காரணம்!
சிரித்துக்_கொண்டே உன்னோடிருந்து உனை சீரழிக்கும் துரோகியை விட ... முறைத்துக் கொண்டே உன் முன்னிருக்கும் எதிரி மேலானவன்!.....
அவ்வளவு எளிதாக யாரிடமும் இருந்து பிரிந்து விட இயலவில்லை....
பிரிவு என்ற பெயரில் கொஞ்சம் ஒதுங்கி மட்டுமே இருக்க முடிகிறது
கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது!
பூனையை விட சிங்கம் வலிமையானது என்றுஎலிகள் ஒரு போதும் ஒத்துக் கொள்ளாது.
நூறு பேரின் வாயை மூட முயற்சிப்பதை விட நம் காதுகளை மூடிக்கொள்வது
மிகச் சிறந்தது.....
உனக்காக... தன் மீதான நியாயமான வாதத்தைக்கூட நிறுத்திக் கொள்ளும் பெண் கிடைத்தால் ஒருபோதும் இழந்து விடாதே..
அலைகளில் கால்களை நனைக்கும் சுகம்,கப்பலில் கடல் நடுவில் பயணப்படும்போது
கிடைப்பதில்லை...
புன்னகை பிரச்சினைகள் "வருவதை தள்ளி போடும்..!!
மெளனம் "பிரச்சினைகளே வராமல் தடுக்கும்..!
எல்லா " பிரச்சினைகளுக்கும் இந்த வாய் தான் காரணம்..!!!
வாழ்வோடு போராடிச் சாவதிலும் சாவோடு போராடி வாழ்வதிலுமே...வாழ்க்கை முடிந்துவிடுகிறது...!!
வாழ்க்கை வாழ்வதற்கே. வாழ்வோம் நலமுடன் வளமுடன் என்னாளும்...
மாற்றத்தை வெளியில் தேடாமல் உங்களுக்குள் தேடினால், தாழ்வு மனப்பான்மையை மனதில் எளிதில் போக்கி வாழ்வில் வெற்றி பெறலாம்.

பயோகேஸ் மூலமாக உங்கள் வீட்டிலேயே இலவச கியாஸ் மற்றும் மின்சாரம் !!! ஒரு சிறப்பு பார்வை..

 


தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியா முழுவதும் எல்.பி.ஜி என்னும் சமையல் எரிவாயுவின் பற்றாக்குறை இருக்கிறது.விலை உயர்ந்து கொண்டே போவதும் நேர்கிறது. இந்த நிலையில் மாற்று எரிபொருளை தேடி வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகியுள்ளது. இயற்கையில் பூமியில் கிடைக்கும் இந்த எரிவாயுவும் இன்னும் சில கால அளவுக்கு மேல் கிடைக்க போவதில்லை. இதனால் வருங்காலத்தில், எதையெல்லாம் எரிபொருளாக பயன்படுத்தலாம் என்பது பற்றி விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

அதே வேளையில் உயிர்க்கழிவுகள் என்று கூறப்படும் மனிதன் வெளியேற்றும் மலஜலம், காய்கறி கழிவுகள், இறைச்சிக் கழிவுகள், விவசாய கழிவுகள் போன்ற அழுகிவிடும் கழிவுகளிலிருந்து மின்சாரத்தையும், எரிவாயுவையும் பெற முடியும் என்று பல காலங்களுக்கு முன்பே கண்டறியப்பட்டுள்ளது. இந்த கழிவுகளிலிருந்து மின்சாரமும், எரிவாயுவும் தயாரிக்க உருவாக்கப்படும் கட்டமைப்புக்கு அரசு மானியமும் வழங்குகிறது. 

ஆனால் இதனை பயன்படுத்திக் கொள்பவர்கள் தான் குறைவு என்பது தான் துரதிர்ஷ்டம். கீழ்வரும் பயோகேஸ் என்ற மனித மலக்கழிவிலிருந்தும், வேறுபல உயிர்க்கழிவுகளிலிருந்தும் எரிவாயுவையும், மின்சாரத்தையும் எடுக்கும் திட்டம் முடுக்கிவிடப்பட்டால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் எரிவாயு பற்றாக்குறை தீரும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.




பயோகேஸ்
இது போன்ற உயிர்க்கழிவுகளிலிருந்து மின்சாரமும், எரிவாயுவும் தயாரிக்கும் முறை குறித்து தமிழ்நாடு அரசின் மரபுசாரா எரிசக்தி முகமையின் முகவரான மனோகரன் விளக்குகிறார். " மனிதனின் மலஜலம் உள்பட மடிந்து போன அனைத்து உயிர் பொருள்களிலிருந்தும் எளிதாக எரிவாயுவை பெற முடியும். இப்படி பெறப்படும் எரிவாயுவை பயோகேஸ் என்கிறோம்.

தற்போது நமக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் எல்.பி.ஜி சமையல் சிலிண்டர் வாயு, பெட்ரோல், டீசல் உள்பட பூமியில் இருந்து கிடைக்கும் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட கால அளவுக்கு தான் கிடைக்கும். இவை கிடைக்காமல் போகும் நிலையில் நாம் அடுப்பு எரிக்கவும், வாகனத்தை ஓட்டவும் என்ன செய்யப்போகிறோம் என்பது தான் இப்போது உள்ள கேள்வி. விஞ்ஞானத்தில் முன்னேறிய நாடுகள் பலவும் இதனை கருத்தில் கொண்டு தண்ணீரில் கூட கார் ஓட்டலாமா என்று ஆய்வு செய்து வருகிறார்கள்.

ஆனால் நம்மை போல் அதிகமான மக்கள் தொகை கொண்ட நாட்டில் அதிக அளவு கிடைக்கும் மூலப்பொருளை வைத்து முதலில் சமையல் உள்பட அதிமுக்கியமான தேவைக்கு எரிவாயுவையும், மின்சாரத்தையும் பெறுவதில் கவனம் செலுத்த வேண்டிய நிலையில் இருக்கிறோம். இதற்காக கண்டுபிடிக்கப்பட்டது தான் மலத்திலிருந்தும், உயிர்க்கழிவுகளில் இருந்தும் எரிவாயுவை பெறும் "பயோகேஸ்" அமைப்பு. இந்த பயோகேஸ் அமைப்பு மூலம் மின்சாரத்தையும் பெற முடியும். எரிவாயுவையும் பெற முடியும் என்பது தான் சிறப்பு.


எப்படி உருவாகிறது?
பொதுவாக மனித மற்றும் விவசாயகழிவுகள் நமக்கு எளிதாக கிடைக்கின்றன. இந்த கழிவுகள் அனைத்தும் எளிதில் மக்கிவிடக்கூடியது. இயற்கையில் இந்த கழிவுகள் மக்கும் போது ஒரு ரசாயன மாற்றம் நடக்கிறது. மலமாக இருந்தாலும், வேறு தாவர இலை,தழை, இறைச்சி உள்பட எந்த உயிர்க்கழிவாக இருந்தாலும், அது பூமியில் விழும் போது மக்கி அழுக தொடங்குகிறது. இந்த அழுகுதல் என்பது தான் ரசாயன மாற்றம்.

அதாவது இந்த கழிவுகளில் கண்ணுக்கு தெரியாத உயிரினமாக பாக்டீரியாக்கள் என்று நுண்ணுயிரகள் பரவி அவற்றை தின்று ஜீரணிக்க முயல்கின்றன. அப்போது இந்த கழிவுகளில் இருக்கும் கார்போஹைட்ரேட், கொழுப்புகள், புரதங்கள் ஆகிய பொருட்கள் வெப்பத்தினால் உலர்ந்து போகின்றன. அப்போது இவற்றிலிருந்து அசிட்டிக் அமிலம், புரோபியனிக் அமிலம், மற்றும் பிட்யூட்ரிக் அமிலம் என்ற ரசாயனங்கள் உருவாகின்றன.

இந்த மூன்று அமிலங்களும் கடைசியில் மீத்தேன் என்ற வாயுவாக மாறி விடுகின்றன. இந்த மீத்தேன் வாயு நன்றாக எரியும் தன்மை கொண்டது. இந்த வாயு மற்ற எரிவாயுக்களை விட மிகவும் வெப்பத்துடன் எரியும் தன்மை கொண்டது என்பதால் சமையல் உள்பட அனைத்து எரிக்கும் தேவைகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். இப்படி கழிவுகளை ஒரு இடத்தில் சேர்த்து அதிலிருந்து மீத்தேன் வாயுவை பெறுவது தான் "பயோகேஸ்" பிளாண்ட் என்ற எரிவாயுவை பெறும் கலன் அமைப்பு. இந்த எரிவாயு கலன்களை பெறும் அமைப்பை தான் நாங்கள் உருவாக்கி தருகிறோம்.


எரிவாயு கலன் அமைப்பு
இந்த எரிவாயு கலன் என்பது, குறிப்பிட்ட விதிமுறைகளின் படி பூமிக்கு அடியில் அமைக்கிறோம். ஏறக்குறைய இது 15 கியூபிக் மீட்டர் விட்டத்தில் சிறிய கிணறு போன்ற அமைப்பில் இது இருக்கும். நாம் எந்த பொருளிலிருந்து எரிவாயுவை தயாரிக்க நினைக்கிறோமோ அந்த கழிவுகளை இந்த கிணறு போன்ற அமைப்பில் இடவேண்டும். 

முழுவதும் காற்று புகாமல் மூடப்பட்டிருக்கும் இந்த அமைப்பினுள் இடப்படும் கழிவுகள் நொதித்தல் முறையில் மேலே சொன்ன பாக்டீரியாக்களால் அழுக வைக்கப்பட்டு அது கடைசியில் மீத்தேன் வாயுவாக உருவாகி இந்த கலனின் மேல்புறத்தை நோக்கி வந்து தேங்கும். பிறகு அங்கிருந்து குழாய்கள் மூலம் சமையலறைக்கு கொண்டு செல்லப்படும்.

மனித கழிவில் இருந்து உருவானது என்பதால், இதில் நாற்றம் இருக்குமோ என்ற சந்தேகம் இருக்கும். ஆனால் இந்த வாயுவை பற்ற வைப்பதற்காக திறக்கும் போது எந்த நாற்றமும் இருக்காது என்பது தான் உண்மை. குறைந்தபட்சம் 15 நபர்கள் இருக்கும் வீட்டில் இது போன்ற எரிவாயு கலன்களை அமைத்து வீட்டிற்கு தேவையான எரிவாயுவை பெறமுடியும். ஏன், 15 நபர்கள் வரை இருக்கும் வீட்டில் தான் இதை அமைக்க முடியும் என்று சொல்கிறோம் என்றால், எரிவாயு உருவாக தேவைப்படும் போதுமான மனிதகழிவை குறைந்தபட்சம் 15 நபர்கள் இருந்தால் தான் பெறமுடியும்.


எங்கெல்லாம் அமைக்க முடியும்?
அதாவது 15 நபர்கள் வசிக்கும் அல்லது தொடர்ந்து புழங்கும் எந்த இடத்திலும் பயோகேஸ் எரிவாயு கலன்களை அமைக்க முடியும். 15 நபர்கள் இருக்கும் இடத்தில் அமைக்கப்படும் ஒரு கலனிலிருந்து தற்போது நாம் பயன்படுத்தும் வீட்டு எரிவாயு எல்.பி.ஜி சிலிண்டர் அளவு கேஸை பெற முடியும். 

இது போன்ற இடங்கள் என்று எடுத்துக் கொண்டால், தியேட்டர்கள், தொழிற்சாலைகள், கேண்டீன்கள், கல்லூரி விடுதிகள், பேருந்து நிலையங்கள், அபார்ட்மெண்ட்கள் போன்ற அதிகம் மக்கள் பயன்படுத்தும் இடங்களில் இருக்கும் செப்டிக் டேங்குகளிலிருந்து எரிவாயுவை 24 மணி நேரமும் பெறும் வகையில் பயோகேஸ் கலன்களை அமைக்க முடியும். தமிழ்நாட்டிலேயே முதன் முறையாக மதுரையில் இருக்கும் தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் பெரிய அளவிலான 3 பயோகேஸ் கலன்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இங்கு அமைக்கப்படும் எரிவாயு கலனிலிருந்து எந்த செலவும் இல்லாமல் 100 ஆண்டுகள் வரை சமைக்க மற்றும் வேறு தேவைகளுக்கான எரிவாயுவை பெற முடியும்.

இந்த செப்டிக் டேங்கிலிருந்து பெறப்படும் மீத்தேன் எரிவாயுவின் சிறப்பம்சம் என்னவென்றால், இது மிகவும் அழுத்தம் குறைந்த வாயு என்பதால் எல்.பி.ஜி வாயுவைப் போல் அபாயகரமானதோ, வெடிக்க கூடியதோ அல்ல. மேலும் இந்த எரிவாயு கலனிலிருந்து எடுக்கப்பட்ட பிறகு இந்த கலனில் தேங்கும் தண்ணீர் அதிக அளவு சத்துக்கள் நிரம்பியதாக இருப்பதால் அதனை விவசாயத்திற்கும் பயன்படுத்தலாம். மேலும் இந்த வாயுவை பயன்படுத்தி ஜெனரேட்டரை இயக்கி மின்சாரமும் தயாரிக்க முடியும். இந்த பயோகேஸ் கலன்களை அமைக்க அரசு சார்பில் 5 ஆயிரம் முதல் 1லட்சத்து 50 ஆயிரம் வரை மானியமாகவும் தரப்படுகிறது. 

எனவே, தமிழக மாவட்டங்களில் உள்ள இது தொழில் மற்றும் கல்வி நிறுவனங்கள் உடனே பயோகேஸ் கலன்களை அமைத்து எரிவாயுவை பெற்றோ, மின்சாரம் தயாரித்தோ செலவை மிச்சப்படுத்த முன்வந்தால் மிகப்பெரிய அளவுக்கு தங்களது எரிவாயு மற்றும் மின்சார செலவை குறைக்கலாம்" என்கிறார் இவர். இவரை தொடர்பு கொள்ள 94431 86572 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

வெறும் தண்ணீரில் கொத்தமல்லி வளர்ப்பது எப்படி?

 மண் இல்லாமல் வெறும் தண்ணீரிலேயே கொத்தமல்லி வளர்க்க முடியும். தனியா விதைகள் மூலம் கொத்தமல்லி விளைகிறது. கொத்தமல்லி விலை என்னவோ எப்போதுமே ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். ஐந்து ரூபாயில் இருந்து ஐம்பது ரூபாய் வரை ஒரு கொத்தமல்லி கட்டு சீசனுக்கு ஏற்றார் போல் விற்கப்படுகிறது. அதை நாமே வீட்டில் வெறும் தண்ணீரில் உருவாக்கி விடலாம். அதற்கு என்ன செய்வது? கொத்தமல்லி, புதினா, இஞ்சி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் போன்றவற்றை எப்படி அதிக நாட்கள் வரை குளிர்சாதன பெட்டியில் பாதுகாப்பாக வைப்பது? என்பதைப் பற்றியும் இப்பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம்.

தனியா விதைகளை முந்தைய நாள் இரவே ஊறவைத்து மறுநாள் தண்ணீர் இல்லாமல் வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். கொத்தமல்லி விதைகளை விதைக்க ஒரு சிறிய பிளாஸ்டிக் பக்கெட் மற்றும் பிளாஸ்டிக் கூடை போல் ஓட்டை ஓட்டையாக இருக்கும் அல்லவா? அது தான் பிளாஸ்டிக் பில்டர் அல்லது மாவு சலிக்கும் சல்லடை கூட எடுத்துக் கொள்ளலாம். அதில் டிஷ்யூ பேப்பர் வைத்து ஊற வைத்து எடுத்த முழு தனியா விதைகளை தூவி விடவும். அதை அப்படியே எடுத்து அந்த பக்கெட்டில் தண்ணீர் ஊற்றி கீழே டிஷ்யூ பேப்பரில் லேசாக கூட படாதபடி வைத்து விடவும்.

விதைகள் தண்ணீரில் மூழ்கி விடக்கூடாது அதை மட்டும் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். மேலே இன்னொரு டிஷ்யூ பேப்பரை வைத்து விதையை மூடி வைக்கவும். ஐந்து நாட்களுக்குள் விதைகள் முளைக்க செய்திருக்கும். இப்போது வெயில் அதிகம் படாமல் ஓரளவுக்கு வெயில் படும் படியான இடத்தில் வைக்க வேண்டும். முளைவிட்ட பின் மேலே இருக்கும் டிஷ்யூ பேப்பரை எடுத்துக் கொள்ளலாம்.

10லிருந்து 12 நாட்களுக்குள் கொத்தமல்லி இலை நன்றாக வளர்ந்திருக்கும். இந்த சமயத்தில் அடியில் வைக்கப்பட்ட நீரை புதிதாக மாற்றி விட வேண்டும். அதன் பின் 2 லிருந்து 3 நாட்களுக்குள் அறுவடை செய்யும் அளவிற்கு கொத்தமல்லி வளர்ந்து செழிப்பாக நிற்கும். உரக்கலவையை பயன்படுத்தி கொத்தமல்லி விதைப்பவர்கள் அதனை ஒன்றிரண்டாக நசுக்கி தூவிவிட்டு அதன் மேல் லேசாக அரை இன்ச் அளவிற்கு மண்ணை தூவி விட்டால் போதும். இதே போல் 5 நாட்களுக்குள் முளைவிட்டு 15 நாட்களில் அறுவடை செய்து விடலாம். இடையிடையே ஈரப்பதம் வற்றி விடாமல் தண்ணீர் தெளித்தால் போதுமானது.

கொத்தமல்லி, புதினா இலை, கறிவேப்பிலை ஆகியவற்றை அதிக நாட்கள் வரை பிரஷ்ஷாக வைத்திருக்க சாதாரண கவரில் வைப்பதை விட திக்கான பிளாஸ்டிக் கவர் அல்லது ஜிப்லாக் கவர்கள் உபயோகப்படுத்தலாம். மொத்தமாக வாங்கி வைப்பவர்கள் நல்ல இலைகளையும், நிறம் மாறி இருக்கின்ற இலைகளையும் தனியாக பிரித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் இலைகள் பிரஷ்ஷாக இருக்கும். நல்ல இலைகளை மட்டும் கவரில் வைத்து காற்றை நீக்கி விட்டு லாக் செய்து கவரை நன்கு மடித்து ஃபிரிட்ஜில் வைத்து விட்டால் போதும். பத்து நாட்களுக்கு மேல் அப்படியே பிரஷ்ஷாக இருக்கும். கொத்தமல்லி இலைகளை வேர் நீக்கி வைக்க வேண்டும்.

மூட்டுவலி, முதுகுவலி, கை கால் வலியால் ரொம்ப அவதிப்பட்டு வருகிறீர்களா?

 சில பேருக்கெல்லாம் மூட்டு வலி, முதுகு வலி, கை கால் வலி, இடுப்பு வலியால் தரையில் உட்கார்ந்து கூட எழுந்திருக்க முடியாத அளவிற்கு வேதனையைக் கொடுக்கும். இதற்கு காரணம் உடலில் சரியான ஊட்டச்சத்து இல்லாததுதான். எலும்பு தேய்மானம் இப்போதெல்லாம் சீக்கிரமே வந்துவிடுகிறது. 90 வயது பாட்டி கூட சுறுசுறுப்பாக வேலையைச் செய்யும். 30 வயது உள்ள பெண்ணால் அந்த வேலையை செய்ய முடியாது. என்னசெய்வது காலமும் சூழ்நிலையும் மாறி விட்டது. நாம் சாப்பிடும் சாப்பாட்டில் ஊட்டச்சத்து இல்லை. செயற்கையான முறையில், பதம் செய்யப்பட்ட பொருட்களை சாப்பிடுவதும் இப்படிப்பட்ட வலிகள் வருவதற்கு ஒரு காரணமாக இருந்து வருகிறது.

வெறும் அரிசி சம்பந்தப்பட்ட உணவை மட்டும் சாப்பிடுவதை தவிர்த்து விட்டு, மற்ற தானிய வகைகளையும் நம் உணவோடு சேர்த்துக் கொண்டால், உடல் ஆரோக்கியம் மேன்மை அடையும். சரி, இப்போது மூட்டுவலி, இடுப்பு வலி, கைகால் வலி வந்துவிட்டது என்ன செய்வது? கடைகளில் விற்கும் ஏதாவது ஒரு தைலத்தை வாங்கி வலி உள்ள இடத்தில் தேய்த்து கொடுக்கின்றோம். அதிலும் கட்டாயம் கெமிக்கல் கலந்திருக்கும். எந்த வகை செயற்கை பொருட்களும் சேர்க்காத, நம் கையாலேயே இந்த எண்ணையை தயாரித்து, ஒரு ஸ்பூன் அளவு எடுத்து வலி உள்ள இடத்தில் தேய்த்து கொடுத்தாலே போதும். வலி மெல்ல மெல்ல குறைய ஆரம்பிக்கும். அது எந்த எண்ணெய்? அந்த எண்ணெயை எப்படி செய்வது என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்.

இந்த எண்ணெயை செய்வதற்கு தேவையான பொருட்களை முதலில் பார்த்துவிடுவோம். நல்லெண்ணெய் –  200 ml, முடக்கத்தான் கீரை – 2 கைப்பிடி அளவு, சிறிய துண்டு இஞ்சி, பூண்டு – 6 பல், லவங்கம் – 5, பட்டை – 2 துண்டு, கற்பூரம் – ஒரு சிறிய கட்டி (ஒரு ஸ்பூன் கற்பூரத் தூள் வருமளவிற்கு போதும்), மஞ்சள் தூள் – கால் ஸ்பூன். ஒரு மிக்ஸி பௌலில் இந்த பொருட்களை எல்லாம் போட்டு, கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். ரிவர்ஸ் பட்டன் வைத்து பொடி செய்து கொண்டால் போதும். கற்பூரத்தூளையும் மஞ்சள் தூளையும் மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுப்பில் ஒரு அகலமான பாத்திரத்தில் 200ml சுத்தமான நல்லெண்ணெயை ஊற்றி சூடு படுத்திக் கொள்ளுங்கள். அது கொஞ்சம் சூடான பின்பு, மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் இந்த விழுதை சேர்த்து, எண்ணெயில் சிடுசிடுப்பு அடங்கும் வரை கொதிக்கவிட்டு, அதன் பின்பு அடுப்பை அணைத்துவிட்டு, இறுதியாக கற்பூரத்தையும், மஞ்சள் தூளையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த எண்ணெயை நன்றாக ஆற வைத்துவிடுங்கள்.

அடுத்தபடியாக ஒரு வெள்ளை காட்டன் துணியில் இந்த எண்ணெயை நன்றாக வடிகட்டி பிழிந்து, ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளலாம். இந்த எண்ணெயிலிருந்து ஒரு ஸ்பூன் எடுத்து எந்த இடத்தில் வலி உள்ளதோ அந்த இடத்தில் லேசாக தடவவேண்டும். அழுத்தி மசாஜ் செய்து விடாதீர்கள். லேசாக தடவி கொடுத்தாலே போதும்.

காலை ஒரு முறை, மாலை ஒரு முறை இந்த எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்தி வாருங்கள். நிச்சயமாக மூட்டு வலியா இருந்தாலும், இடுப்பு வழியாக இருந்தாலும், கழுத்து வழியாக இருந்தாலும் அந்த வலி நிரந்தரமாக, படிப்படியாக குறைவதை உங்களால் உணர முடியும். ஒவ்வொரு முறை இந்த எண்ணெயைப் பயன்படுத்தும் போதும் நன்றாக குலுக்கி விட்டு பயன்படுத்த வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள். இந்த எண்ணையை தடவுவதன் மூலம், 100 சதவிகிதம் எந்த ஒரு பக்கவிளைவும் வராது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

பொடுகுத் தொல்லை நீங்க வீட்டில் இருக்கும் உளுத்தம் பருப்பு போதும்!

பொடுகு பிரச்சனை முடி உதிர்வை தீவிரப்படுத்தும். பொடுகு என்பது தலையில் மண்டை ஓட்டுப் பகுதியில் வெள்ளை வெள்ளையாக ஒட்டிக் கொண்டிருக்கும் திட்டுக்கள் தான் பொடுகு என்று கூறுகிறோம். பலருக்கும் பொடுகு என்றால் இது தான் என்பது கூட தெரிவதில்லை. பொடுகு இருப்பவர்கள் தலையை சொரிந்து விட்டு அந்த கைகளை முகத்திற்கு கொண்டு சென்றால் முகத்தில் முகப்பருக்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. இப்படி தலை முடியையும், முக அழகையும் கெடுக்கும் பொடுகு பிரச்சனையை வீட்டில் நாம் பயன்படுத்தும் உளுத்தம்பருப்பை வைத்தே ஒரே மாதத்தில் சரி செய்து விட முடியும். அதை எப்படி செய்வது? என்பதை இனி பார்ப்போம். நம் தலையில் இருக்கும் செல்கள் இறந்து உதிர்ந்து போவதைத் தான் பொடுகு என்கிறோம். இவை பொதுவாக அனைவருக்குமே நடக்கும் நிகழ்வு தான். ஆனால் வழக்கத்திற்கு மாறாக ஒரு சிலருக்கு அவை அதிகமாக நடக்கும் பொழுது பிரச்சனையாக மாறுகிறது. தொடர்ந்து சொரிந்து கொண்டே இருந்தால் தலையில் எரிச்சலும், தோல் சிவந்து போகவும் செய்யும். எப்போதும் தலையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். எண்ணெய் பிசுபிசுப்பு உள்ள சருமம் கொண்டவர்கள் அடிக்கடி தலைக்கு குளிப்பது இதற்கு தீர்வாக வீட்டில் இருக்கும் உளுத்தம் பருப்பை சிறிதளவு எடுத்துக் கொண்டு வேக வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் வேக வைத்த உளுத்தம் பருப்பை பசையாக செய்து கொள்ளுங்கள். இந்த பசையை தலை முழுவதும் வேர் கால்களில் படும்படியாக தடவி விட்டு பின்னர் ஒரு மணி நேரம் அப்படியே உலர விடவும். உளுத்தம் பருப்பு உலர்ந்ததும் தலையை அலசி விட்டால் போதும். தலையில் இருக்கும் பொடுகு, பேன் தொல்லைகள் முற்றிலுமாக நீங்கி விடும். பொடுகு பிரச்சனை இருப்பவர்கள் அடிக்கடி செயற்கை பொருட்களை தலைக்கு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இயற்கையாக கிடைக்கும் சீயக்காய் பயன்படுத்தி தலையை அலசினால் பொடுகு பிரச்சினையிலிருந்து விடுபடலாம். அடிக்கடி ஷாம்பூ அதிகமாக உபயோகிப்பவர்களுக்கு பொடுகு பிரச்சனை அதிகமாகும் என்பதை நினைவில் வையுங்கள். எப்பொழுதும் ஷாம்புவை நேரடியாக தலைக்கு தேய்க்கக் கூடாது. சிறிதளவு தண்ணீரில் கலந்து கொண்டு தான் பயன்படுத்த வேண்டும். ஏன் என்றால் அதில் இருக்கும் கெமிக்கல்கள் ஒரு சிலரின் கூந்தலுக்கு பாதிப்பை உண்டாக்கக் கூடியவை. மேற்கூறிய இந்த வழிமுறையைப் பின்பற்றினால் ஒரு மாதத்தில் பொடுகுத் தொல்லை முற்றிலுமாக நீங்கி விட்டிருக்கும். இதனை வாரம் ஒருமுறை என்று நான்கு முறை பயன்படுத்தினால் போதும். மிக மிக சுலபமான முறையில் பொடுகை நாம் விரட்டி அடித்து விடலாம். உளுத்தம் பருப்பில் இருக்கும் பசை போன்ற தன்மை கூந்தலுக்கு இயற்கையான கண்டிஷனராகவும் அமைந்து விடும். இதனால் கூந்தல் பட்டுப் போல் பளபளவென மின்னும் துவங்கும்.

எப்படிப்பட்ட தீராத மன அழுத்தமும் உடனே தீர்வதற்கு சுலபமான 8 வழிகள்

மன அழுத்தம் என்பது இயல்பான ஒரு விஷயம் தான். சாதாரணமாக உடல் அளவிலும், மனதளவிலும் நமக்கு பிரச்சனைகள் ஏற்படும் பொழுது மன அழுத்தம் உண்டாகிறது. இந்த மன அழுத்தம் தான் நமக்கு தன்னம்பிக்கையை மற்றும் எதிர் வரும் பிரச்சனைகளை சமாளிக்கக் கூடிய தைரியத்தை கொடுக்கிறது. ஆனால் இது அதிகமாகும் பொழுது மன உளைச்சலாக மாறி விடுகிறது. அங்கு தான் பிரச்சனையே ஆரம்பமாகிறது. சாதாரணமான ஒரு விஷயத்தை எதிர்கொள்ளும் தைரியம் இல்லாத சமயத்தில் மன அழுத்தம் அதிகரிக்கிறது. அதனால் அது பிரச்சனையாக தோற்றமளிக்கிறது. அவ்வளவு தானே தவிர மன உளைச்சல் என்பது ஏதோ கொடிய நோய் ஒன்றும் அல்ல என்பதை முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று. இதனை புரிந்து கொண்ட பின்னர், அதனை எப்படி விரட்டி அடிப்பது? என்பதை தீர்க்கமாக யோசிக்க வேண்டும். அதற்காக சுலபமான 8 வழிகள் உங்களுக்காக இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து பதிவை படியுங்கள். வாருங்கள் பதிவிற்குள் போகலாம். பணிச்சுமை அதிகரித்தாலும், நாம் நினைத்தது ஒன்று நடப்பது ஒன்றாக இருந்தாலும், நாம் எதிர்பார்த்தவை நடக்கா விட்டாலும் மன அழுத்தம் அதிகரிக்கிறது. மன அழுத்தத்தை குறைப்பதற்கு முதலில் அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். மன அழுத்தம் நோயாக இல்லாவிட்டாலும் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியவை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். வழி 1: மன அழுத்தம் குறைய லாஃபிங் தெரபி எனப்படும் வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும் பாலிசியை கடைபிடிப்பது சிறந்த பலனை தரும். வாயைத் திறந்து சத்தமாக சிரிக்க வேண்டும். இப்படி சிரிக்கும் பொழுது நம் உடலுக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைக்கப் பெறும். இதனால் ரத்த ஓட்டம் சீராகி மன அழுத்தம் குறைந்து விடுகிறது. வழி 2: மன அழுத்தம் சீராக இருக்க வீட்டில் செல்லப் பிராணிகளை வளர்ப்பது மிகவும் நல்லது. செல்லப் பிராணிகள் உடன் விளையாடும் பொழுது ஒருவிதமான ஹார்மோன்கள் நமது உடலில் வெளியாகிறது. இதனால் மன அழுத்தம் நீங்கி விடுவதாக கூறப்படுகிறது. எனவே செல்லப் பிராணிகளுடன் நேரத்தை அதிகமாக செலவிடுங்கள். வழி 3: மன அழுத்தத்துடன் நீங்கள் உணரும் பொழுது வீட்டில் இருக்கும் பொருட்களை துடைத்து சுத்தம் செய்து அதற்குரிய இடங்களில் சரியாக சீர்படுத்துவது மூலம் மன அழுத்தத்தை குறைத்துக் கொள்ள முடியும். வீட்டிற்கு அழகு சேர்க்கும் பொருட்களை தேர்ந்தெடுத்து வாங்கி வைக்கலாம். வழி 4: வீட்டில் நீங்கள் வேலை செய்யும் பொழுது உங்களுக்கு பிடித்தமான இசைகளை கேட்டுக் கொண்டே வேலை செய்வதால் அதிகப்படியான கலோரிகள் எரிக்கப்படுவது உடன், மன அழுத்தமும் குறைகிறது. இசைகள் மன அழுத்தம் குறைவதற்கு பெருமளவு உதவுவதாகக் கூறப்படுகிறது. அதற்காக சோகப் பாடல்களை கேட்காதீர்கள். வழி 5: தினமும் ஏதாவது ஒரு சிட்ரஸ் நிறைந்த பழச்சாறை எடுத்துக் கொள்ளுங்கள். பழச்சாறை பருகுவதன் மூலம் உடலின் ஆற்றல்கள் அதிகரிப்பதுடன் மன அழுத்தமும் குறையுமாம். அப்போ டெய்லி ஒரு ஜூஸ் தான் இனிமே வழி 6: வீட்டில் தனிமையை உணரும் பொழுது உங்களுக்கு பிடித்தமான பாடல்களை ஒலிக்க விட்டு நடனம் ஆடுவதும் மன அழுத்தத்தை வெகுவாக குறைக்கும். பாடிக் கொண்டே நடனமாடுவது மனதிற்கு உற்சாகத்தையும், மனதை லேசாகவும் மாற்றக்கூடும். வழி 7: அமைதியான சூழ்நிலையில் அமர்ந்து தியானம் செய்வதும் மன அழுத்தத்தைக் குறைக்கும். மூச்சை ஆழ்ந்து சுவாசித்து வெளிவிடும் பொழுது ரத்தத்தில் ஆக்ஸிஜன் கலந்து ரத்த ஓட்டத்தை சீராக்கி மன அழுத்தத்தை குறைக்கிறது. தினமும் ஒரு 10 நிமிடமாவது தியானம் செய்யுங்கள். வழி 8: மாதக்கணக்கில் மன அழுத்தத்தில் இருப்பவர்கள் அதிலிருந்து வெளியேறுவதற்கு உங்களுக்கு பிடித்தமான புதிய விஷயங்களை, தெரியாத விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வத்தை காட்டுங்கள். புதியதாக தெரியாத விஷயத்தை செய்யும் பொழுது உங்களுடைய கவனம் முழுவதும் திசை திரும்பி விடுகிறது. இதனால் மன அழுத்தத்தில் இருந்து எளிதாக விடுபட முடியும். எந்த ஒரு விஷயத்தையும் ஸ்போர்டிவாக எடுத்துக் கொண்டால் மன அழுத்தம் என்கிற ஒரு விஷயமே நமக்கு ஏற்படாது. என்ன நடந்தால் என்ன? நம் பக்கம் நியாயம் இருக்கிறது, என்பதை முதலில் நாம் நம்ப வேண்டும். தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வது, மற்றவர்கள் கையில் இல்லை என்பதை முதலில் உணர வேண்டும். அது நம் கையிலேயே உள்ளது என்பதைக் கூறி பதிவை முடித்துக் கொள்வோம்.

படுக்கை அறையில் வெளிச்சமாக இருந்தால் ஏன் தூக்கம் வருவதில்லை தெரியுமா?

தூக்கமின்மை பிரச்சனைக்கு ஆயிரம் காரணங்கள் நம்மை சுற்றி இருந்தாலும், இந்த நவீன யுகத்தில் முதல் காரணம், விஞ்ஞான வளர்ச்சி என்று தான் கூற வேண்டும். ஆளாளுக்கு ஒரு மொபைல் போனை கையில் வைத்துக் கொண்டு நோண்டிக் கொண்டே இருந்தால் எப்படிங்க தூக்கம் வரும்? ஒரு சிலருக்கு சிறிய வெளிச்சம் இருந்தாலும் தூக்கமே வராது. இதற்கு அறிவியல் ரீதியாக காரணம் உண்டு. இருட்டான அமைதியான சூழ்நிலை இருந்தாலே, பகலிலும் நமக்கு தூக்கம் எளிதாக வந்து விடுகிறது. ஆக இருட்டிற்கும், தூக்கத்திற்கும் என்ன தான் சம்மந்தம்? என்பதை தெரிந்துக் கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள். தூக்கம் வருவதற்கும், வராமல் இருப்பதற்கும் பல காரணங்கள் கூறப்படுகிறது. தூக்கம் வராமல் இருப்பதற்கு இருக்கும் காரணங்களில் பெரும்பாலும் வெளிச்சத்தை நீங்கள் நேரடியாக பார்க்கக்கூடிய தொலைக்காட்சி மற்றும் கணினி, செல்போன் போன்றவைகள் அதிக நேரம் பயன்படுத்துவது தான் என்று கூறப்படுகிறது. நாங்கள் அதையெல்லாம் பயன்படுத்துவது இல்லை, தூங்க தான் செய்கிறோம். ஆனாலும் தூக்கம் மட்டும் வரமாட்டேன் என்கிறது அது ஏன்? என்று கேள்வி கேட்பவர்களுக்கு பதிலாக அமைவது உளவியல் காரணங்கள் தான். ஒருவருக்கு உளவியல் ரீதியாக பிரச்சனைகளும், கவலைகளும் இருந்தால் நிச்சயம் தூக்கம் வருவது தடைப்படும். உதாரணத்திற்கு ஒருவருக்கு ஏகப்பட்ட கடன்கள் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அவருக்கு இரவில் தூக்கம் வருமா என்ன? எப்படிடா அந்த கடனை அடைப்பது? என்கிற ஆழ்ந்த சிந்தனை அவர்களை தூங்க விடுவதில்லை. நீங்கள் அதைப் பற்றி யோசிப்பதால் கடன்கள் அடையாது என்பதை முதலில் உணர வேண்டும். அதற்கு பதிலாக உங்களுடைய உடல் நிலை தான் மோசமாகிக் கொண்டே இருக்கும். பிறகு எப்படி கடனை அடைப்பீர்கள்? நிம்மதியான உறக்கமே அடுத்த நாளைய உற்சாகத்தை நமக்கு உறுதி செய்து கொடுக்கிறது. உற்சாகமாக இருந்தால் தான் பணத்தையும் நம்மால் சம்பாதிக்க முடியும் என்பதை நினைவில் கொண்டு தூக்கத்திற்கு தயவுசெய்து முக்கியத்துவம் கொடுங்கள். இரவு நேரத்தில் நீங்கள் தூங்கும் அந்த அறையில் சிறிது வெளிச்சம் இருந்தால் கூட ஆழ்ந்த உறக்கம் என்பது எப்பொழுதும் வராது. உடலில் இருக்கும் மெலடோனின் என்னும் ஹார்மோன் தான் தூக்கத்தை வரவழைக்கிறது. வெளிச்சமாக இருக்கும் சமயத்தில் இந்த ஹார்மோன் குறைவாகவே சுரக்கிறது. இதனால் தூக்கம் வருவது தடைபடுகிறது. முழுவதும் இருட்டாக இருக்கும் பொழுது மெலட்டோனின் அதிகமாக சுரந்து இயல்பாகவே உங்களுக்கு தூக்கத்தை வரவழைத்து விடுகிறது. இதனால் தான் வெளிச்சமாக இருக்கும் சமயத்தில் நம்மால் தூங்க முடிவதில்லை. அப்படியும் சிலர் தூங்கினால் அதற்கு அவர்கள் உடலில் இருக்கும் சோர்வு தான் காரணமாக அமையும். அதுவும் ஆழ்ந்த உறக்கமாக இருப்பதில்லை. எனவே உங்கள் அறையில் வெளிச்சம் குறைவாக வைத்துக் கொண்டு தூங்கி பாருங்கள், நிச்சயமாக தூக்கம் வரும். இதை விட ஒரு சிறந்த வழி இருக்கிறது. அதைவிட தூக்கமின்மைக்கு எதுவுமே சிறந்ததாக இருக்க முடியாது என்று கூறலாம். தூக்கமின்மைக்கு பல விஷயங்களை நாடி செல்வதில் ஒரு பயனும் கிடைக்கவில்லையா? இறுதியில் நாம் சிறு வயதில் அனுபவித்த ஒரு பாடத்தை செய்து பாருங்கள். சிறுவயதில் புத்தகத்தை எடுத்தால் நமக்கு தூக்கம் வந்துவிடும். எங்கிருந்து தான் அந்த தூக்கம் வரும் என்றே தெரியாது. இரண்டாவது பத்தி படிப்பதற்குள் நாம் தூங்கியே விடுவோம். இது யுத்தியை தான் தூக்கமின்மைக்கு கையாள வேண்டும். நல்ல புத்தகங்களை இரவு நேரத்தில் அமைதியாக அமர்ந்து படித்து பாருங்கள். பத்து நிமிடத்தில் உங்களுக்கு தூக்கம் வரவில்லை என்றால் ஏனென்று கேளுங்கள்!