புதன்

பசுந்தீவனம் பதப்படுத்தும் முறைகள்🥗

 கால்நடைகளுக்கு பசுந்தீவனத்தை ஆண்டு முழுவதும் தொடர்ந்து அளிப்பதன் மூலம் சீரான உற்பத்தியினை பெறலாம். பசுந்தீவனத்தில் ஊட்டச் சத்துக்கள் இயற்கையான தன்மையிலேயே உள்ளதால் அவற்றின் செரிமானத் தன்மை அதிகம். மழைக்காலங்களில் தேவைக்கு மேல் கிடைக்கும் பசுந்தீவனத்தை பதப்படுத்தி கோடையில் கால்நடைகளுக்கு அளிப்பதன் மூலம் பசுந்தீவனப் பற்றாக்குறையையும் கால்நடைகளின் உற்பத்தி இழப்பையும் தவிர்க்கலாம்.

பசுந்தீவனத்தை இரண்டு முறைகளில் பதப்படுத்தி சேமித்துக் கொள்ளலாம்.

(i) காய்ந்த புல் அல்லது உலர் புல்

(ii) சைலேஜ் அல்லது ஊறுகாய்ப்புல்

உலர் புல் தயாரிப்பு

பசுந்தீவனப் பயிரை அதன் பூ பூக்கும் தருணத்தில் அறுவடை செய்து சூரிய ஒளியில் உலர வைத்து அதன் ஈரப்பதத்தை 15 சதவிகிதத்திற்கு குறைவாக குறைத்து சேமித்து வைத்துக் கொள்ளலாம். காலையில் பனி விலகியவுடன் தீவனப் பயிரை அறுவடை செய்து அந்த நிலத்திலேயே சூரிய ஒளியில் உலர வைக்க  வேண்டும். சூரிய ஒளியின் தன்மையைப் பொறுத்து 3 முதல் 5 மணி நேரத்திற்கு ஒரு முறை தீவனப் பயிரை தலைகீழ்  திருப்பி வைக்க வேண்டும். மாலையில்  அதன் ஈரப்பதம் சுமார் 30  முதல் 40 சதவிகிதமாக இருக்கும். அவற்றை சிறு கட்டுகளாக கட்டி அடுத்த நாள் காலையில் மீண்டும் பிரித்து உலர வைக்க வேண்டும். நல்ல சூரிய ஒளியிருந்தால் மாலையில் அதன் ஈரப்பதம் 20 சதவிகிதமாக குறைந்திருக்கும். மூன்றாவது நாள் காலையில் கூம்பு வடிவத்திலோ அல்லது குதிர் போட்டு சேமித்து வைக்க வேண்டும். தரமான உலர்புல் வெளிறிய பச்சை நிறத்தில் பூஞ்சை காளான் இல்லாமல் இருக்கும்.

சைலேஜ் தயாரிப்பு

பசுந்தீவனங்களை அவற்றின் பசுமை மாறாமல் மிகவும் குறைந்த ஊட்டச்சத்து இழப்புடன் சைலோ எனப்படும் காற்றுப் புகா குழியில் பதப்படுத்தி சேமிக்கும் முறைக்கு சைலேஜ் அல்லது ஊறுகாய்ப்புல் தயாரிக்கும் முறை என்பது பெயர்.

சைலேஜ் தயாரிக்க அறுவடை செய்ய வேண்டிய தருணம்:

வீரிய புல் வகைகள் – பூக்கும் தருணம்

பயறுவகைத் தீவனங்கள் – 25 முதல் 30 சதவிகிதம் பூக்கும் தருணம்.

சோளம் கம்பு தானியங்கள் – பால் பிடிக்கும் தருணம்

மக்காச்சோளம் தானியங்கள் – பால் பிடித்த பிறகு

சைலோ

சைலேஜ் தயாரிக்க பசுந்தீவனங்களை காற்று புகாத இடத்தில் மூடி வைத்து சேமிக்க வேண்டும். இதற்கு பயன்படும் அமைப்புகள் சைலோ எனப்படுகின்றன. குழி சைலோ, கோபுர சைலோ, சரிவு சைலோ அல்லது காண்கிரீட் வளையங்கள், குதிர் மற்றும் பாலிதீன் பைகள் ஆகியவற்றையும் இதற்காகப் பயன்படுத்தலாம். குழி சைலோவை நீர் புகாத மேட்டுப் பகுதியில் பக்க வட்டில் மண் சரிவு ஏற்படாமல் அமைக்க வேண்டும். குழியின் சூலம் விட்டத்தைப் போல் இரு மடங்கு இருக்க வேண்டும்.

சைலேஜ் தயாரிக்கும் முறை

பசுந்தீவனத்தை சுமார் 2 முதல் 3 மணி நேரம் சூரிய ஒளியில் உலர்த்தி ஈரப்பத அளவை 75 முதல் 80 சதவிகிதத்திலிருந்து 60 முதல் 65 சதவிகிதம் குறைத்து அவற்றை 2 – 3 அங்குலம் கொண்ட சிறு சிறு துண்டுகளாக வெட்டி சைலோவில் இட்டு அடுக்கடுக்காக அடுக்கி வர வேண்டும்.

சுமார் 20 முதல் 30 செ மீ அடுக்கிய தீவனத்தை நன்கு அழுத்தி இடையே உள்ள காற்றை வெளியேற்றி பிறகு அதன் மீது 2 சதவிகிதம் சர்க்கரை பாகு கரைசலையும் 1 சதவிகிதம் சாதாரண உப்புக் கரைசலையும் தெளிக்க வேண்டும். பிறகு மீண்டும் பசுந்தீவனத்தை அடுக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து அடுக்கி சைலோவின்  மேல் மட்டத்தை விட 1 முதல் 1 .5 மீ உயரம் வரை நிரப்ப வேண்டும். அதன் மேல் பகுதியில் வைக்கோல் அல்லது உபரியாகக் கிடைக்க கூடிய புல் போன்றவற்றைக் கொண்டு மூடி அதன் மேல் ஈர மண்ணை பூசி காற்று மற்றும் நீர் புகாமல் செய்ய வேண்டும். பாலிதீன் பைகளையும் பயன்படுத்தலாம். இதன் பிறகு 20 நாட்களில் தரம் மிக்க சைலேஜ் உருவாகி விடும். சைலோவை திறக்கும் முன்பாக மேற்பகுதியில் உள்ள பயன்படாத பதம் குறைந்த தீவனத்தை அகற்றி விட வேண்டும்.

தரமான சைலேஜ் பழ வாசனையுடன் கூடிய நறுமணம் உடையதாகவும் பசுமை நிறத்துடனும் சாறு கலந்தும் இருக்கும். அமில தன்மை 3.5 முதல் 4.2 வரை இருக்கும்.

பூஞ்சை பாதித்த சைலேஜை கால்நடைகளுக்கு அளிக்க கூடாது. அதிக புளிப்புச் சுவையுடனுள்ள சைலேஜை ஆடுகளுக்கு கொடுக்கக் கூடாது. நாள் ஒன்றிற்கு கால்நடைகளுக்குத் தேவைப்படும் சைலேஜின் அளவு கறவை மாடு – 15 – 20 கிலோ, கிடேரி- 5 – 8 கிலோ, வளர்ந்த ஆடு – 200 – 300 கிராம். பசுந்தீவனம் பற்றாக்குறை ஏற்படும் கோடை காலத்தில் இவ்வாறு பதப்படுத்திய தீவனத்தை அளிக்கலாம்.

கட்டுரையாளர்கள்: ஜெ.சுபாஷினி மற்றும் வை.ஹரிஹரசுதன், உதவி பயிற்றுநர்கள், வேளாண்மைக் கல்வி நிறுவனம், குமுளூர்,  திருச்சி. மின்னஞ்சல்: tnauhari@gmail.com

மியாவாக்கி எனும் குறுங்காடு மர வளர்ப்பு

 உலகில் மக்கள் தொகைப் பெருக்கத்தாலும், தொழிற்சாலை பெருக்கம் மற்றும் பருவநிலை மாற்றத்தாலும் மக்கள் நகரங்களை நோக்கி தங்கள் வாழ்வாதாரத்திற்காக வருகின்றனர். ஆதலால் நகரங்கள் விரிவடைகிறது. இதன் காரணமாக வாகனப் போக்குவரத்து அதிகரிப்பு மற்றும் மக்கள் நெருக்கமாக வாழ வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர்.

வாகனப்பெருக்கத்தால் காற்று மாசுபாடு ஓர் முதன்மை பிரச்சனையாக எழுந்துள்ளது. 2019-ம் ஆண்டு கணக்கின் படி இந்தியாவில் 16.7 லட்சம் மக்கள் காற்று மாசுப்பாட்டால் இறந்துள்ளனர். இப்படிப்பட்ட சூழலில் காற்று மாசை கட்டுப்படுத்த பல சட்டங்கள் விதிகள் இயற்றப்பட்டாலும். 100 சதவீதம் தடுக்க முடியாத சூழலே உள்ளது. ஆதலால் மரங்களே ஓர் நிரந்தர தீர்வாக உள்ளன. நகரமயமாதலால் திடக்கழிவும் பெரும் பிரச்சனையாக உள்ளது. திடக்கழிவு மேலாண்மை முதன்மையாக தேவைப்படுகிறது. எனவே திடக்கழிவு மேலாண்மை, காற்று மாசு குறைக்க, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த ஓர் சிறந்த வழியாக மியாவாக்கி எனும் குறுங்காடு மர வளர்ப்பு முறை உள்ளது.

மியாவாக்கி எனும் குறுங்காடு மர வளர்ப்பு முறையில் ஒரு சதுர அடிப்பரப்பளவில் 8 முதல் 10 மர / தாவர வகைகள் நடவு செய்து வளர்க்கப்படுகிறது. குறிப்பாக உள்நாட்டு மர வகைகள்  ( Native Tree Species)  மட்டும் நடவு செய்யப்படுகிறது. இந்த மியாவாக்கி முறை குறுங்காடு வளர்ப்பு நகரங்களுக்கு மிகவும் ஏற்றதாகும். தற்போதைய சூழலில் குறைந்த இடத்தில் அதிக மரங்களை நடவு செய்து பராமரிக்க ஏற்றமுறை. இந்த முறையில் பரப்பளவு அதிகம் தேவையில்லை. குறைந்த இடத்தில் அதிக மரங்கள் நடவு செய்யப்படுகிறது. இந்த முறையில் மரம் நடவுசெய்ய நிலத்தில் உள்ள மேற்பகுதியில் 2 முதல் 3 அடி உயரம் வரை உள்ள மண்ணை அகற்றிவிட்டு எளிதில் மட்கக்கூடிய இலைகள், மர துண்டுகள், மரத்தூள் மற்றும் எளிதில் மட்கக்கூடிய பொருட்களால் 75% குழியை நிரப்பிவிட்டு மீதமுள்ள 25% குழியை மரத்தூள் அல்லது இலை தழைகள் கலந்த மேல் மண் கொண்டு நிரப்ப வேண்டும். முழுமையாக நிரப்பிவிட்டு ஒரு சதுர அடி பரப்பளவில் 8 முதல் 10 மர/ செடி நாற்றுக்கள் நடவு செய்ய வேண்டும். இதில் உயரமாக வளரக்கூடிய மரங்கள், மூலிகை செடிகள், புதர் செடிகள்,  உயரம் குறைவாக வளரும் மர வகைகள் என அனைத்தும் கலந்து நடவுச்செய்ய வேண்டும். மியாவாக்கி முறையில் அனைத்து மரங்களும் கலந்து நடவுச்செய்ய வேண்டும். மியாவாக்கி முறையில் அனைத்து மரங்களும் கலந்து நடவுச்செய்தால் 2 முதல் 3 ஆண்டுகளிலேயே மனிதர்கள் நுழைய முடியாத அளவுக்கு அடர்ந்த காடு போல் வளர்ந்துவிடும். மூன்றாண்டுக்கு மேல் பராமரிப்பு தேவையில்லை. 10 ஆண்டுகள் வளர்ச்சியை இந்த முறை நடவு மூலம் 2 முதல் 3 ஆண்டுகளில் பலனை கண்கூடாக காணலாம்.

மியாவாக்கி என்னும் குறுங்காடு மர நடவு முறையில் மரங்களின் வளர்ச்சி அபரிவிதமாக உள்ளது. மண் வளம் மற்றும் மண்ணில் நுண்ணுயிர் பெருக்கம் அதிகமாக உள்ளது. அதே சமயம் மண்புழுக்கள் வளர ஏதுவாக உள்ளது. மியாவாக்கி எனும் குறுங்காடு மர நடவு முறை ஓர் ஆக்சிஜன் பூங்காவாக வேலை செய்கிறது.

 

பூ வகை மரங்கள் மற்றும் மூலிகை தாவரங்கள் கலந்து நடப்படும் போது மக்கள் நடைப்பயிற்சிக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். மனித உடலுக்கு தேவையான சுத்தமான ஆக்ஸிஜன் கிடைக்கும். மியாவாக்கி என்னும் குறுங்காடு மர நடவு முறையானது பட்டாம்பூச்சி மற்றும் பல வகை பறவைகளை அதிகம் ஈர்கின்றது. இந்த முறைக்கு மண் தயார்படுத்துதல் மழைக்காலங்களில் மழைநீர் பூமிக்குள் செலுத்த ஓர் அருமையான முறையாக மியாவாக்கி முறை செயல்படுகிறது.

நகரப்பகுதிகளில் பசுமைப் பரப்பை பராமரிக்க மியாவாக்கி முறை ஓர் சிறந்த மரம் நடவும் முறையாகும். அதேபோல் பசுமைப் பரப்பை அதிகரிக்க மற்றும் காற்று மாசை கட்டுப்படுத்த புங்கன், பூவரசு, அரசு, நீலத்திருவத்தி, தாந்தோன்றி, நீர்மருது ஆகியவை கலந்த மியாவாக்கி முறையிலான மர நடவு முறை நகர்ப்புறப் பகுதிகளில் மிகவும் பொருத்தமாக இருக்கும் மரம் நடும் முறை. நகர்ப்புறப் பகுதிகளில் மிகவும் நல்ல முறையில் பலன் தரும். ஒளி மாசு குறைக்க ஒரு சிறந்த நடமாடவும் முறையாக இந்த மியாவாக்கி முறை அமைந்துள்ளது.

 

முனைவர்.அ.ச.கோவேந்தன்,

சுற்றுச்சூழல் அறிவியல் துறை,

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்.

கோவை- 641 003

 

திரு.ஆ.ரமேஷ்,

முதுநிலை ஆராய்ச்சியாளர்,

சுற்றுச்சூழல் அறிவியல் துறை,

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்.

கோவை- 641 003

மரங்களும் மற்றும் அதன் பயன்கள்

 மரங்கள் பல வகைகள் உள்ளன. ஒவ்வொருவரின் விருப்பத்திற்கேற்ப, பலப்பல சூழ்நிலைகளுக்கேற்ப, அவரவருக்குத் தேவையான மரங்களைத் தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். எந்தெந்த மரங்கள் நமது சூழ்நிலைக்கேற்ப மற்றும் நாம் தேவைக்கு ஏற்ப வளர்க்கலாம் என்பதை பார்ப்போம் வாருங்கள்.

கோடை நிழலுக்கு வேம்பு, தூங்குமூஞ்சி, புங்கன், பூவரசு, மலைப்பூவரசு, காட்டு அத்தி, வாத மரம். 
பசுந்தழை உரத்திற்கு புங்கம், வாகை இனங்கள், கிளைரிசிடியா, வாதநாராயணன், ஒதியன், கல்யாண முருங்கை, காயா, சூபாபுல், பூவரசு. 
கால்நடைத் தீவனத்திற்கு ஆச்சா, சூபாபுல், வாகை, ஒதியன், தூங்குமூஞ்சி, கருவேல், வெள்வேல். 
விறகிற்கு சீமைக்கருவேல், வேலமரம், யூகலிப்டஸ், சவுக்கு, குருத்தி, நங்கு, பூவரசு, சூபாபுல். 
கட்டுமான பொருட்கள் கருவேல், பனை, தேக்கு, தோதகத்தி, கருமருது, உசில், மூங்கில், விருட்சம், வேம்பு, சந்தனவேங்கை, கரும்பூவரசு, வாகை, பிள்ளமருது, வேங்கை, விடத்தி. 
மருந்து பொருட்களுக்கு கடுக்காய், தானிக்காய், எட்டிக்காய் 
எண்ணெய்க்காக வேம்பு, பின்னை, புங்கம், இலுப்பை, இலுவம் 
காகிதம் தயாரிக்க ஆனைப்புளி, மூங்கில், யூகலிப்டஸ், சூபாபுல் 
பஞ்சிற்கு காட்டிலவு, முள்ளிலவு, சிங்கப்பூர் இலவு 
தீப்பெட்டித் தொழிலுக்கு பீமரம், பெருமரம், எழிலைப்பாலை, முள்ளிலவு. 
தோல்பதனிடவும், மை தயாரிக்கவும் வாட்டில், கடுக்காய், திவி – திவி, தானிக்காய் 
நார் எடுக்க பனை, ஆனைப்புளி 
பூச்சி மருந்துகளாகப் பயன்படுத்த வேம்பு, புங்கம், ராம்சீதா, தங்க அரளி 
கோயில்களில் நட வேம்பு, வில்வம், நாகலிங்கம், தங்க அரளி, மஞ்சளரளி, நொச்சி, அரசு 
குளக்கரையில் நட மருது, புளி, ஆல், அரசு, நாவல், அத்தி, ஆவி, இலுப்பை 
பள்ளிகளில் வளர்க்க நெல்லி, அருநெல்லி, களா, விருசம், விளா, வாதம், கொடுக்காப்புளி, நாவல் 
மேய்ச்சல் நிலங்களில் நட கருவேல், வெள்வேல், ஓடைவேல், சீமைக்கருவேல், தூங்குமூஞ்சி
சாலை ஓரங்களில் நட புளி, வாகை, செம்மரம், ஆல், அத்தி, அரசு, மாவிலங்கு 
அரக்கு தயாரிக்க குசும், புரசு மற்றும் ஆல் 
நீர்ப்பரப்பில் (கண்மாய்) பயிரிட கருவேல், நீர்மருது, நீர்க்கடம்பு, மூங்கில், வேலிக்கருவேல், நாவல், தைல மரம், ராஜஸ்தான் தேக்கு, புங்கன், இலுப்பை மற்றும் இலவமரம். 

விவசாயக்கருவிகள் வாங்க மானியம் !

 பல்வேறு இயந்திரங்கள் மற்றும் கருவிகளுக்கான மானிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

வரிசை எண்கருவிகள் பெயர்சிறு குறு விவசாயிகள், பெண் விவசாயிகள், பழங்குடியின விவசாயிகளுக்கு வழங்கப்படும் அதிகபட்ச மானியம் (ரூபாய் மதிப்பில்)இதர விவசாயிகளுக்கு வழங்கப்படும் அதிகபட்ச மானியம் (ரூபாய் மதிப்பில்)
1.டிராக்டர் (8 முதல் ஹெச்.பி மற்றும் 15 முதல் 20 ஹெச்.பி)1 லட்சம்75,000
2.டிராக்டர் (20 முதல் 40 ஹெச்.பி மற்றும் 40 முதல் 70 ஹெச்.பி வரை1.25 லட்சம்1 லட்சம்
3.பவர் டில்லர் (8 ஹெச்.பி-க்கு கீழ்)50,00040,000
4.பவர் டில்லர் (8 ஹெச்.பி-க்கு மேல்)75,00060,000
5.நெல் நாற்று நடவு செய்யும் கருவி (4 வரிசை)94,00075,000
6.நெல் நாற்று நடவு செய்யும் கருவி (4 வரிசைக்கு மேல்)2 லட்சம்2 லட்சம்
7.சுழற்கலப்பை (ரோட்டோவேட்டர்)63,00050,000
8.விதை விதைக்கும் கருவி, உரமிடும் உழவில்லா விதைப்புக் கருவி, உரத்துடன் விதை விதைக்கும் கருவி44,00035,000
9.டிராக்டரால் இயங்கக்கூடிய வரப்பு அமைக்கும் கருவி63,00050,000
10.டிராக்டரால் இயங்கும் வைக்கோல் கட்டும் கருவி63,00050,000
11.புதர் அகற்றும் கருவி (பிரஸ் கட்டர்)25,00020,000
12.நெற்பயிரில் களையெடுக்கும் கருவியினை உள்ளடக்கிய விசை களையெடுக்கும் கருவி19,00015,000
13.தட்டை வெட்டும் கருவி (3 ஹெச்.பிக்கும் குறைவான இயந்திரம் / மின்மோட்டாரினால் இயங்க கூடியது மற்றும் 20 ஹெச்.பிக்கும் குறைவான டிராக்டர் மற்றும் பவர் டிரில்லரால் இயங்கும்)20,00016,000
14.தட்டை வெட்டும் கருவி (3 ஹெச்.பிக்கும் மேல் 5 ஹெச்.பிக்கும் குறைவான டிராக்டர் மற்றும் பவர் டிரில்லரால் இயங்கும்)25,00020,000
15.விசைத் தெளிப்பான் (பவர் ஸ்பிரேயர், பேட்டரி ஸ்பிரேயர்)10,0008,000
16.டிராக்டரால் இயங்கக்கூடிய பூம் விசைத் தெளிப்பான்கள்63,00050,000

 

      குறிப்பு: கருவிகளின் விலைக்கேற்ப மானியத்தொகை வேறுபடும். மேற்கண்டவற்றில் அதிகபட்சமான விலை குறிப்பிடப்பட்டுள்ளது. 5 ஏக்கருக்குள் நிலம் வைத்திருப்பவர்கள் சிறு குறு விவசாயிகள். அதற்குமேல் நிலம் வைத்திருப்பவர்கள் இதர விவசாயிகள்.

கம்பின் அற்புத மருத்துவப் பலன்கள்

 

சிறுதானியங்களில் அதிகம் பயிரிடப்படுவது கப்பு தான். உலகில் கப்பு மட்டும் இது 55% இடத்தை பிடித்திருக்கிறது. ஆப்ரிக்க கண்டத்தில் தான் கப்பு முதல் முறையாக பயிர் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது ஆசிய, ஆப்பிரிக்க என 40க்கும் அதிகமான நாடுகளில் கப்பு விளைவிக்கப்படுகிறது. உலகில் கப்பு கால்நடை தீவனமாகவும் மனிதனுக்கு உணவு பொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கம்பில் உள்ள உயிர்ச்சத்துகள்

சிறுதானியங்களிலேயே 11.8 சதவிகிதம் புரோட்டீன் கம்பில் மட்டும் தான் உள்ளது. வைட்டமின் ஏ சத்துகள் கம்பில் அதிகம் நிறைந்துள்ளது.

100 கிராம் கம்பில்
42 கிராம் கால்சியம் சத்து,

1 முதல் 12 மில்லி கிராம் இரும்புச் சத்து,

பி 11 வைட்டமின் சத்து 0.38 மில்லி கிராம்,

ரைபோபிளேவின் 0.21 மில்லி கிராம்,

நயாசின் சத்து 2.8 மில்லி கிராம் உள்ளது.

மற்றும் 5 சதவிகிதம் அளவு எண்ணெய் உள்ளது. இதில் உடலுக்கும் தேவையான 70 சதவிகிதம் கொழுப்பு அமிலம் நிறைந்து உள்ளது.

கம்பு பயன்கள்

நாம் தாத்தா பாட்டி காலத்தில் காலையில் தினமும் வயல்களுக்கு சென்று வேலை செய்வர்கள். அவர்களுக்கு தினமும் காலை உணவு கம்பங்கூழ் அல்லது கம்பங்களி தான். அதனால் தான் அவர்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொள்ள உதவியது. நீரிழிவு நோய் உள்ளவர்கள் சர்க்கரை சத்துக்கள் நிறைந்த அரிசி போன்றவற்றை சாப்பிட கூடாது. அதற்கு பதிலாக கம்பங்கூழ் அல்லது கம்பங்களி போன்றவற்றை சாப்பிட்டு ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும்.

கம்பில் (Bajra in Tamil) நாம் உடலுக்கு தேவையான வேதிப்பொருள்கள், வைட்டமின்கள் நிறைந்துள்ளது. கம்பை தினமும் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நாம் உடலில் நோய் எற்படமால் நம்மை பாதுகாத்து கொள்ள உதவும்.

கம்பில் நார்சத்து அதிகம் இருப்பதால் வயிற்றில் புண் செரிமான கோளாறு உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வயிறு சம்பந்தமான அத்தனை பிரச்சனைகளும் நீங்கும்.

உடல் எடை அதிகம் இருப்பவர்கள் பசி எடுக்கிறது என்பதற்காக எதையாவது வாங்கி தின்று கொண்டே இருப்பர்கள். இதனால் உடல் எடை அதிகரித்து கொண்டே போகும். தினமும் உணவில் கம்பு சேர்த்து சாப்பிட்டு வந்தால் பசியை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்க உதவும்.

செவ்வாய்

காளான் வளர்ப்பு பயிற்சி முகாம்

 ராமநாதபுரம் : சித்தார்கோட்டையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம்,முஸ்லீம் தர்மபரிபாலன ஜமாத்சார்பாக காளான் வளர்ப்பு பயிற்சி முகாம் நடந்தது.பயிற்சி நிறுவன இயக்குனர் கலைச்செல்வன், ஜமாத் தலைவர் சாகுல் ஹமீது கனி முன்னிலை வகித்தனர். காளான் வளர்ப்பு முறைகள், இதனை சந்தையிடுதல்,வங்கி கடன் உதவி பெறுதல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டது. ஜமாத் நிர்வாகிகள்,பயிற்சி நிறுவன அலுவலர்கள், பயிற்சியாளர்கள் பங்கேற்றனர்.

பொடுகு போவதற்கு

 

பொடுகு போவதற்கு


* வேப்ப எண்ணெயை தலைக்கு, புருவத்திற்கு, தாடிக்கு தேய்த்து வந்தால் பொடுகு வராமல் இருப்பதோடு, சருமமும் வறட்சி அடையாமல் இருக்கும். ஏனெனில் இவை பொடுகுகளை ஏற்படுத்தும் பூஞ்சைகளை அழித்துவிடும்.

எலுமிச்சையும் ஒரு சிறந்த எளிதான மருந்து. அதற்கு எலுமிச்சை சாற்றை பிழிந்து தாடிகளில் தேய்க்கலாம் அல்லது எலுமிச்சையின் தோலை வைத்து தாடிகளில் தேய்த்து மசாஜ் செய்யலாம். இதனால் தலைகளில், தாடிகளில், புருவத்தில் வரும் பொடுகளை தவிர்க்கலாம்.

* வெந்தயத்தை மோரில் ஊற வைத்து, அரைத்து, அந்த பேஸ்டை முகத்திற்கு, கூந்தலுக்கு தடவினால், பொடுகுத் தொல்லை வராமல் இருக்கும்.

சினை நிற்காமல் போன கால்நடைகள் சினை நிற்க இயற்கை மருத்துவம்

 சினை நிற்காமல் போன கால்நடைகள் சினை நிற்க இயற்கை மருத்துவம்.

இன்னைக்கு இருக்குற அவசர உலகத்துல மாடு சினை நிக்கலைனா உடனே விற்க போயிடுறோம். அது என்ன பண்ணும் பாவம், எல்லாமே இரசாயனம் தெளிச்ச தீணி தான் போடுறோம், தீவணம் ன்னு வெளிய பெருக்கான் கழிவு மாறி எதையோ வாங்கி போடுறோம், அதெல்லாம் எதுல செய்யுறாங்க என்னென்னா கூட சேர்க்குறாங்க ன்னு நிஜமா நமக்கு தெரியுமா? பண்றதெல்லாம் தப்பு நாம தான், இதனால தான் மாட்டுக்கு தற்காலிக மலட்டுத்தன்மை வருது. இன்னைக்கு இருக்குற நிலைல தீணி பெரும் பாடு தான். இருந்தாலும் புதுசா கறவை மாடு வாங்குறதுக்கு கொஞ்ச காலம் தட்ட போட்டு மாட்டை இந்த சிகிச்சையை செஞ்சு அதோட தற்காலிக மலட்டு தன்மையை சரி செஞ்சுரலாம்.

 

சினை நிற்காமல் போன கால்நடைகள் சினை நிற்க இயற்கை மருத்துவம்

தேவையான பொருட்கள்:

1. வெள்ளை முள்ளங்கி.
2.. கற்றாளை துண்டு
3. முருங்கை இலை
4. பிரண்டை (தண்டு)
5. கறிவேப்பிலை
6. மஞ்சள் கிழங்கு

சிகிச்சை அளிக்க வேண்டிய நெறிமுறைகள்:

சினை நிற்கவில்லை என்று உறுதியாக தெரிந்ததும், அன்றிலிருந்தோ அல்லது அடுத்த நாள் முதலோ சிகிச்சையை துவங்க வேண்டும்.

1. முதல் ஐந்து நாட்களுக்கு தினமும் ஒரு வேலை முழு வெள்ளை முள்ளங்கியை வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை, உப்பும் தடவி கொடுக்கவும்.
(நாள் 1 -5)

2. அடுத்த ஆறாவது நாள் முதல் நான்கு நாட்களுக்கு அதவாது ஒன்பதாவது நாள் வரை, கற்றாழையை முட்களை சீவிவிட்டு, தினமும் ஒரு வேலை வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை, உப்பும் தடவி கொடுக்கவும். ( நாள் 6 -9)

3. அடுத்த நான்கு நாட்களுக்கு பத்தாவது நாள் முதல் பதிமூன்றாவது நாள் வரை , நான்கு கை அளவு அப்போது பறித்த முருங்கை இலையை வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை, உப்பும் தடவி கொடுக்கவும். ( நாள் 10 -13)

4. அடுத்த நான்கு நாட்களுக்கு நான்கு கை அளவு அப்போது பறித்த பிரண்டையை ( தண்டு மட்டும்) வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை, உப்பும் தடவி கொடுக்கவும். ( நாள் 14 -17)

5. இறுதியாக அடுத்த நான்கு நாட்களுக்கு நான்கு கை அளவு அப்போது பறித்த கறிவேப்பிலை உடன் மஞ்சள் ஒரு ஓரிரு கிழங்கு (பெரியாத இருப்பின் ஒன்று, சிறியது எனில் இரண்டு, கடையில்வாங்கிய பொடியை எக்காரணம் கொண்டும் உபயோகிக்க வேண்டாம்) வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை, உப்பும் தடவி கொடுக்கவும். ( நாள் 18 -21).

மேற்சொன்ன அனைத்தையும் ஒரு நாளைக்கு ஒரு வேலை மட்டுமே கொடுக்க வேண்டும், நேரடியாக உண்ண கொடுக்க வேண்டும். கட்டாயம் மாடு சினை நிற்கும், இல்லை எனில் மேலும் ஒரு முறை இதை ஓரிரு நாட்கள் இடைவெளிக்கு பிறகு தொடரவும். கட்டாயம் மலடு நீங்கி சினை நிற்கும்.

பேராசிரியர் திரு.புண்ணியமூர்த்தி

ஆர்கானிக் சான்று- organic certificate india பெறுவது எப்படி ?

 

ஆர்கானிக் சான்று- organic certificate india

 

pannaiyar_organic_certificate

இயற்கை வேளாண்மை என்பது ஒரு சில குறிப்பிட்ட முறைகளைத் தவறாது கடைபிடித்து நிலைத்த, நீடித்த வரவு பெற எடுக்க வேண்டிய எளிய செலவு குறைந்த உத்தியே. இதில் கோடை உழவு செய்தல், இயற்கை உரங்கள் தொழுஉரம், மண்புழு உரம், பண்ணைக்கழிவுகள், பிண்ணாக்கு வகைகள், தழை உரம், அசோலா, உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பேக்டீரியா, ரைசோபியம் பயன்படுத்துவது அவசியம். உயிரியல் பூஞ்சாண மருந்துகளாக சூடோமோனாஸ், ட்ரைக்கோடெர்மா விரிடி பயன்படுத்தி விதை நேர்த்தி செய்தல், கலப்புப் பயிர் சாகுபடி, ஊடுபயிர் சாகுபடி மற்றும் பொறிப்பயிர் சாகுபடி செய்யலாம்.

உயிரியல் முறையில் பூச்சி மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்த வேண்டும். இயற்கையான முறையில் தயார் செய்யக்கூடிய ஊட்டச்சத்துக் கலவைகளான பஞ்சகவ்யா, அமிர்தக் கரைசல், மீன் அமிலம், முட்டை அமிலம், சுரப்பு மோர் கரைசல், ஜீவாமிர்தம், வேம்பு அஸ்திரம் பிரம்மாஸ்திரம், கன ஜீவாமிர்தம் மற்றும் பிஜாமிர்தம் ஆகியவற்றை பயிருக்கு கொடுத்து மகசூலை அதிகரித்து நல்ல காசு பார்க்கலாம். கால்நடைகளை பண்ணையில் பராமரிக்க வேண்டும். அவற்றிற்கு தீவனமும் பண்ணையிலேயே விளைந்ததாக இருக்க வேண்டும்.

அங்ககச் சான்று பெற தனியே விண்ணப்ப படிவம் உள்ளது. பண்ணையில் பொது விவரக் குறிப்பு வரைப்படம், மண் மற்றும் பாசன நீர் பரிசோதனை முடிவுகள், ஆண்டு பயிர் திட்டம் துறையுடனான ஒப்பந்தம் நிரந்தர கணக்கு எண். (பான் கார்டு) ஆகிய விபரங்களுடன் 3 ரகங்களில் உரிய விண்ணப்பத்துடன் உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

தனி நபராக இருப்பின் சிறு குறு விவசாயிகள் ரூ.2,700/- மற்றும் இதர விவசாயிகள் ரூ.3,200/- கட்டணமாக விதை சான்று மற்றும் அங்ககச் சான்றளிப்பு இயக்குநர், கோவை-13ல் கட்டலாம். இதனை நம் குழு பதிவுக்கு ரூ.7,200/- மற்றும் வணிக நிறுவனமாக இருப்பின் ரூ.8,400/- கட்ட வேண்டும். விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்றளிப்பு இயக்குநர் 1424-ஏயில் தடாகம் சாலை, கோவை-13ல் மேலும் விபரம் பெறலாம்.

மேலும் தோட்டக்கலைப்பயிர் சாகுபடியில் சந்தேகமா? 98420 07125 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

– டாக்டர் பா.இளங்கோவன்,
தோட்டக்கலை உதவி இயக்குநர்,
உடுமலை, திருப்பூர்.

பிராணவாயு உற்பத்தி செய்யும் பூவரச மரம்

 மரங்கள்தான் மனித வாழ்வின் ஆதாரம். மரங்கள் பிராண வாயுவை மட்டும் தருவதில்லை. மனிதர்கள் ஆரோக்கியமாக வாழ தன்னால் இயன்ற அனைத்தையும் கொடுக்கிறது. பூவுக்கெல்லாம் அரசன் போல் நோய் தீர்க்கும் மாமருந்தாக இருப்பதால்தான் இதனை பூவரசு என்று அழைக்கின்றனர். நூற்றாண்டுகளுக்கு மேல் வாழக்கூடிய மரங்களுள் பூவரசும் ஒன்று.காயகல்ப மரமான பூவரசு பூமிக்கு அரசன் என்று அழைக்கப்படும் பெருமையுடையது. இதய வடிவ இலைகளைக் கொண்ட இந்த மரம் இந்தியா முழுவதும் காணப்படும். குறிப்பாக தென்னிந்தியாவில் அதிகமாகக் காணப்படுகிறது. இது கொட்டைப் பூவரசு சாதாரணப் பூவரசு என இருவகைப் படும். விதைகள் இல்லாமல் சப்பையான காய்கள் இருப்பது சாதாரணப் பூவரசு. கொட்டைப் பூவரசு காய்களை உடைத்தால் உள்ளே நிறைய விதைகள் இருக்கும். இதன் இலை, பூ, பழுப்பு, காய், வேர் மற்றும் பட்டை முதலியன மருத்துவப் பயன் கொண்டவை.

இதய வடிவிலான இலைகள்… மஞ்சள் நிற மலர்கள், அடர்ந்த நிழல்… குளிர்ந்தக் காற்று… இவைதான் பூவரசு மரத்தின் அடையாளம். கிராமத்துச் சிறுவர்கள், இம்மரங்களின் இலைகள், காய்களை வைத்து விளையாடுவார்கள். இதன் போத்துகளை திருமணம் மற்றும் இறுதிச் சடங்குகளில் பயன்படுத்துவார்கள்.

அதிகளவில் பிராணவாயுவை உற்பத்தி செய்யும் ஆற்றல் படைத்தது என்பதால்… கமலை ஏற்றத்தில் நீர் இறைக்கும்போது மாடுகள் சோர்ந்து போகாமல் இருக்க, இந்த மரங்களைத்தான் கிணற்று மேட்டில் நடவு செய்திருப்பார்கள்.

இப்படிப் பண்டை காலத்திலிருந்தே தமிழர்களின் வாழ்வோடு பின்னிக் கிடக்கும் பூவரசு…

போத்து நடவு !

‘பூவரசு, அனைத்து மண்ணிலும் சிறப்பாக வளரும். வறட்சியைத் தாங்கும் தன்மையுடையது. கடும்கோடையில்கூட பசுமையாக இருக்கும். இதை போத்து (குச்சிகள்) மூலமாக நடவு செய்வது சிறந்தது.

பராமரிப்பு தேவையில்லை !

நடப்பட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு, தண்ணீர் பாய்ச்சத் தேவையில்லை

வீழ்ந்தாலும் வளரும் !

”இந்த மரம் புயல் அடிச்சாகூட கீழே சாயாது. ஒருவேளை கீழே சாஞ்சாலும் நிமித்திவிட்டா… திரும்பவும் வேகமா தழைச்சுடும். நிமிர்த்தி வைக்காவிட்டாலும் கூட, சாய்வாகவே வளரும். இதுவே தேக்கு மரமா இருந்தா, புயல்ல கீழ சாஞ்சுட்டா மறுபடியும் பிழைக்காது. அதிகளவு பிராண வாயுவை உற்பத்தி பன்ற பூவரசு மரங்களை நட்டு செஞ்சு சுற்றுப்புறத்தையும் சுத்தமாக்கி, நமது ஆரோக்கியத்தையும் வளமாக்கிக்க முடியும்.

ஆற்றோரங்களில் மிகுதியாகய்க் காணப்படுவதால் இதனை ஆற்றுப்பூவரசு என்றும் வழங்குகின்றனர்.

சிறுவர்கள் பூவரச இலையைக் கூம்புபோல் சுருட்டி கூர்ப்பகுதியில் கொஞ்சம் கிள்ளிவிட்டு அதில் வாய் வைத்து ஊதி மகிழ்வர்.

மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்..
நீர் வளம் பெருக்குவோம் விவசாய நிலங்களை காப்போம்..

புதன்

மன அழுத்தம் இன்றி வாழ பின்பற்ற வேண்டியவை !!

காலையில் பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே துயில் எழுங்கள். ஒரு காகிதத்தில் அன்றைய தினம் செய்ய வேண்டிய பணிகளையும், எப்போது செய்யப் போகிறோம் என்பதையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். செய்ய வேண்டிய வேலைகளைத் தள்ளி வைப்பது மன அழுத்தத்தை அதிகரிக்கும் எனவே .செய்யவேண்டியதை தாமதப்படுத்தாமல் செய்யுங்கள். எங்கேயாவது செல்ல வேண்டியிருந்தால் அதற்குரிய ஆடைகள், பொருட்களை முன்கூட்டியே எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். காத்திருப்பது சிரமம் என்று கருதாதீர்கள். ஒரு புத்தகத்தை கையில் வைத்திருப்பது காத்திருத்தலை சுகமாக்கும். தேவையற்ற மன அழுத்தத்தைக் குறைக்கும். முன்கூட்டியே திட்டமிடுங்கள். எதையும் கடைசி நேரம் வரை காத்திருந்தபின் செய்வதைத் தவிருங்கள். வேலை செய்யாதவைகளைக் கட்டி அழாதீர்கள். சரி செய்ய முயலுங்கள் காலணி ஆனாலும் கடிகாரம் ஆனாலும். இல்லையேல் அவை தேவையற்ற மன அழுத்தத்தைத் தரக்கூடும். எந்தவொரு இடத்திற்கும் சற்று முன்கூட்டியே செல்ல பழகிக் கொள்ளுங்கள். பத்து நிமிடத்தில் செல்லமுடிந்த இடத்துக்கு இருபது நிமிடத்திற்கு முன்பாகவே புறப்படுங்கள். டீ, காபி அதிகம் குடிப்பதைத் தவிருங்கள். புகை, மது ஆகியவற்றை முற்றிலுமாக தவிர்த்து விடுங்கள். சில மாற்று யோசனைகளைக் கைவசம் வைத்திருங்கள். உதாரணமாக பஸ் தாமதமானால் இதை - இதைச் செய்வேன் என்பது போன்றவை. இறுக்கம் தளருங்கள். சில வேலைகள் தடைபடுவதாலோ, தாமதப்படுவதாலோ உலகம் முடிந்து விடப் போவதில்லை. தவறாய்ப் போன ஒரு விஷயத்தைக் குறித்து சிந்தித்துக்கொண்டே இருப்பதை விட, சரியாய் நிகழ்ந்த பலவற்றைக்குறித்து அடிக்கடி நினைத்து மகிழுங்கள். செல்லும் இடங்கள் புதிய இடங்களாக இருந்தால் வழியை முதலிலேயேதெளிவாகக் கேட்டு வைத்துக் கொள்ளுங்கள். சற்று நேரம் கைபேசிகளையும், தொலைபேசிகளையும் அணைத்துவிடுங்கள். ஓய்வு எடுங்கள் எந்தத்தொந்தரவும இன்றி. செய்வதற்கு இயலாத பணிகளோ, நேரமில்லாமையால் நாம் செய்யமுடியாது என்று நினைக்கும் பணிகளோ இருந்தால், மன்னிக்கவும்.. என்னால் செய்ய இயலாது என்று சொல்லப்பழகுங்கள். உணவு, உடை, உறைவிடம் தவிர்த்த எதுவும் உங்களை மன இறுக்கம் கொள்ளச் செய்யாமல் பார்த்துக்கொள்ளுங்கள். முன்னுரிமை எதற்குக்கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவு அவசியம். எளிமையாக வாழுங்கள். அதிக நேரம் நண்பர்களுடன் உற்சாகமான பழகுங்கள். நன்றாகத் தூங்குங்கள். முடிந்தால் அலாரம் வைத்துத் தூங்குங்கள். தடையற்ற தூக்கத்துக்கு அது உதவும். 
 வீட்டில் பொருட்களை அதனதன் இடத்தில் ஒழுங்காக அடுக்கி வையுங்கள். அவசரமாய் தேடுகையில் அகப்படாத பொருள் மன அழுத்தத்தைத்தரும். ஆழமாக , நிதானமாக மூச்சை உள்ளே இழுத்து மெதுவாக வெளியே விடுங்கள். எழுதப் பழகுங்கள். கவலைகளை, எரிச்சல்களை, தோல்விகளை குறைக்க எழுத்து வடிகாலாகும். குழப்பம், கவலைகளை உள்ளுக்குள் புதைக்காமல் நம்பிக்கைக்குரிய நண்பர்களிடம் பகிருங்கள். தினமும் உங்கள் மனதை மகிழச்செய்யும் செயல்கள் எதையேனும் ஒன்றைச் செய்யுங்கள். அதில் பொருளாதாரப் பயன் ஏதும் இல்லாவிட்டாலும் கூட. பிறருக்காக எதையேனும் செய்யப் பழகுங்கள். செய்யும் அனைத்து செயல்களையும் ஆத்மார்த்தமான அன்போடு செய்யுங்கள். என்னை யாரும் புரிந்து கொள்ளவில்லையே எனும் முனகல்களைத் தவிர்த்து பிறரைப் புரிந்து கொள்ள முயலுங்கள். உங்கள் உடை, நடை பாவனைகளினல் தன்னம்பிக்கை மிளிரட்டும். உடைகளை நன்றாக அணிவதே தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. நிறைய வேலைகளை ஒரே நாளில் முடிக்க நினைக்காதீர்கள்.ஒவ்வொரு வேலைக்கும் இடையே சரியான இடைவெளி விடுங்கள். வார இறுதிகள், விடுமுறை நாட்களை மிகச் சிறப்பாகச் செலவிடுங்கள். வெளியே செல்வது, கடற்கரைக்குச் செல்வது என மனதைப் புத்துணர்ச்சியாக்குங்கள். இன்றைய பணிகளை செவ்வனே செய்தால் நாளைய பணிகள் செவ்வனே நடைபெறும் என்பதை மனதில் கொள்ளுங்கள். பிடிக்காத வேலை இருந்தால் அதை முதலிலேயே முடித்து விடுங்கள். அப்போது தான் தொடர்ந்து செய்யும் பிடித்தமான வேலைகள் மனதை இலகுவாக்கும். மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள், அடுத்தவர்களைக் காயப் படுத்தாமல் வாழப் பழகுங்கள். இவற்றில் சிலவற்றைப் பின்பற்றினாலே மன அழுத்தமற்ற வாழ்க்கை நமக்கு வசப்படும்.

ஆரோக்கியம் தரும் பாரம்பரிய நெல் ரகங்கள்

சுண்டியிழுக்கும் சுவை, மறக்க முடியாத ருசி, ஏகப்பட்ட மருத்துவகுணங்கள் கொண்டவை நம் பாரம்பரிய அரிசிகள்! அந்தந்த மண்ணுக்கேத்த தரம், ருசி, மணம், வடிவம் கொண்டவை நம் பாரம்பரிய அரசி ரகங்கள்! இன்றைக்கும் பாரம்பரிய நெல்ரகங்களை மட்டுமே பயிரிடும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தமிழ்நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள்! அப்படிப்பட்ட பாரம்பரிய அரிசிகளைத் தவிர மற்றவற்றை விரலாலும் தீண்டமறுக்கும் பல ஆயிரக்கணக்கான குடும்பங்களும் உள்ளன! பாரம்பரிய நெல் என்பவை இந்த தமிழ்மண் நமக்குத் தந்த வரம்! அதற்கு தேவையில்லை ரசாயண உரம்! அவை அத்தனையும் உன்னதத்தரம்! அரிசி என்றால் பச்சரிசி அல்லது புழுங்கலரிசி என்பதைக் கடந்து, வேறொன்றும் தெரியாத - தங்களை மெத்த படித்த அறிவாளிகளாக கருதிக்கொண்டிருக்கும் - ஆனால் அடிப்படையில் அறியவேண்டியவற்றை அறியாமல் உழன்று கொண்டிருக்கும் - கோடிக்கணக்கானவர்கள் இன்று உள்ளனர். ஐயோ பரிதாபம்...! இந்த தேசத்தின் உண்மையான சொத்து என்ன? சுகம் என்ன? இயற்கை தந்துகொண்டிருக்கும் கற்பகத்தரு என்ன? என்பதைத் தெரியாமலே பலர் வாழ்ந்தும் மடிந்தும் போய் விடுகின்றனர்! 50 வருஷத்திற்கு முன்பு வரை கூட நாம் பாரம்பரிய அரிசி ரகங்களை மட்டுமே உண்டு வாழ்ந்தோம் என்பது பொய்யாய் பழங்கதையாய் போனதுவோ....? மணப்பாறை மாடுகட்டி மாயவரம் ஏரு பூட்டி... பாடலில், "ஆத்தூரு கிச்சிலிச்சம்பா பாத்து வாங்கி விதைவிதைச்சு..." என்ற வரி ஞாபகம் இருக்கிறதா? தைப்பிறந்தால் வழிபிறக்கும் தங்கமே தங்கம் தங்கச்சம்பா நெல்விளையும் தங்கமே தங்கம் பாடல் ஞாபகம் இருக்கிறதா? இந்தத் தலைமுறையில் எத்தனைபேர் கிச்சலிச்சம்பா, தங்கச்சம்பா சோறு சாப்பிடும் வாய்ப்பு பெற்றுள்ளனர்? அடடா, அந்தச்சுவையை எழுத்தில் சொல்லக் கைகூடுமா? அதையெல்லாம் சாப்பிட்டு வந்தால் நமக்கு நோய்நொடி தான் வருமா? எப்போது நம் பாரம்பரிய நெல்ரகங்கள் முழுமையான பயன்பாட்டுக்கு வருகிறதோ? அன்றைக்கு தான் தமிழர்களின் ஆரோக்கியம் சிறக்கும்! அப்போது இங்கே மருத்துவர்களுக்கும், மருத்துவ மனைகளுக்குமான வேலை ரொம்ப குறைஞ்சி போயிடும். பசுமைபுரட்சியும், ரேஷன்அரிசி விநியோகத்திட்டமும் பாரம்பரிய அரிசப்பயன்பாடு பறிப்போக காரணங்களாகி விட்டன! விலையில்லா அரிசியை பெற்று வாழக்கூடிய ஒரு சமூகத்தை இன்று அரசியல்வாதிகள் உருவாக்கிவிட்டனர். ஆனால், தங்கள் ஆரோக்கியத்தை காப்பற்றுவதற்காக பெரும் விலையை கொடுத்தாக வேண்டிய கட்டாயத்திற்கு நம் சமூகம் தள்ளப்பட்டுவிட்டதே! ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் தருபவர்கள் பாரம்பரிய அரிசி ரகங்களை தேடி வாங்கிச் சாப்பிடுங்கள். அப்படிச் சாப்பிடத்தொடங்கினால் பாரம்பரிய நெல்பயிரிடும் விவசாயிகளின் எண்ணிக்கையும் கூடிவிடும்! நமது பாரம்பரிய நெல்ரகங்கள் பெரும்பாலானவை நீண்டநாள் பயிர்களாகும். அதில் தான் நீடித்த ஆயுளுக்கான வாய்ப்பையும் நாம் பெறலாம்! 
 மாப்பிள்ளை சம்பா , தங்கச்சம்பா, சம்பாமோசனம், சண்டிகார், கைவரச்சம்பா போன்றவை 160 முதல் 170 நாட்கள் பயிர்களாகும். 

நெல்ரகங்கள் - 
நாட்கள் கருடன் சம்பா - (170 -180)  
குடவாழை - (140 -145) 
 நீலச்சம்பா - (175 - 180) 
 கிச்சிலிச்சம்பா - (140 - 145) கருப்புகவுணி - (140 - 150) 
 காட்டுயாணம் - (180 - 185) 
 ஓட்டையான் - 190 நாட்கள் 
 கரைநெல் - 270 நாட்கள் 
 மூங்கிலரிசி - 12,24,30,40 என வருடக்கணக்காகும் பயிர்களாகும்! 

பாரம்பரிய அரிசிகள் பயன்கள் பிசினி அரிசி, வாலான் அரிசி - பருவ வயது பெண்ணுக்கு உகந்தத ு பூங்கார், வாலான், சிகப்புக்கவுணி - கர்பிணி பெண்களுக்கு உகந்தத கிச்சிலிச்சம்பா, நீலச்சம்பா, குழிவெடிச்சான் - தாய்பால் சுரப்புக்கு உகந்தது மாப்பிள்ளை சம்பா - நரம்புகளை பலப்படுத்த, உயிரணுக்களை அதிகரிக்க, நீரழிவைதடுக்க காட்டுயாணம் - இதயபாதுகாப்பு, புற்றுநோய் எதிர்ப்பு, மூட்டுவலிதீர்வு, நீரழிவு தடுப்பு நீலசம்பா ; ரத்தசோகை விலக குள்ளக்கார், பெருங்கார், கருத்தகார் ; மலச்சிக்கல்தீர, மூலம்விலக வாடான் சம்பா ; அமைதியான தூக்கத்திற்கு கோரைச்சம்பா ; பித்தசூடுவிலக, உடல்குளிரவிக்க கட்டச்சம்பா ; கடும் உழைப்பாளிகளுக்கு மூங்கிலரிசி, மிளகி, கல்லுடைசம்பா,கவுணி ; எலும்பு பலப்பட கருங்குறுவை ; இழந்த சக்தியை மீட்டெடுக்க, கொடிய நோய்களிலிருந்து மீள, புற்றுநோய், தோல்நோய் சீராக குடவாழை ; குடலை வாழவைக்கும் இலுப்பை பூ சம்பா ; பக்கவாதம் விலக, கால்வலி சரியாக தூயமல்லி ; உடலின் உள் உறுப்புகளை வலுப்படுத்தும் சேலம் சன்னா ; தசை, நரம்பு, எலும்பு பலப்பட... சூரக்குறுவை ; உடலிலுள்ள கெட்ட கொழப்பை வெளியேற்ற... தங்கச்சம்பா ; இதயம் வலுப்படும், கால்சியம் அதிகமுள்ளது நீலச்சம்பா ; ரத்தசோகைவிலகும் 

பாரம்பரிய நெல்ரகங்களை பயிரிட விரும்பும் விவசாயிகளுக்கு அவை கிடைக்கும் இடங்கள் 
 ஸ்ரீசாராதா ஆஸ்ரமம், விவேகானந்தா நகர், உளுந்தூர்பேட்டை -9943064596 
'நெல்' இரா.ஜெயராமன் திருத்துறைப்பூண்டி - 9443320954 பி.துரைசிங்கம் பரமகுடி -9443381816 
இரா.பொன்னம்பலம் நாகர்கோவில் - 9443482599 
கோ.சித்தர் தஞ்சாவூர் - 04362 233788 
ரோஸ்தொண்டு நிறுவனம் புதுக்கோட்டை -9842093143 
ஆர். ரெங்கநாதன் டி.இ.டி.இ டிரஸ்ட் சென்னை -9443346369 
ஆர். ஸ்ரீராம் - கதிராமங்கலம் -9467188531 
இந்திய பாரம்பரிய அறிவியல்மையம் சீர்காழி புதுச்சேரி இயற்கை வேளாண் சங்கம் இலுப்பூர் வென்சர் டிரஸ்ட் பாரம்பரிய விதைகள் மையம் கலசபாக்கம் திருவண்ணாமலை பாரம்பரிய நெல்ரகங்களை பயிரிடுவோம். தமிழ் மக்களின் இழந்த ஆரோக்கியத்தை மீட்டெடுப்போம்.

சித்த மருத்துவம் கூறும் இளம்பெண்களுக்கான ஊட்டச்சத்து மிக்க உணவுகள் !!

ஒரு பெண் குழந்தை பூப்படைவது, அவள் மங்கை பருவம் அடைந்ததை குறிப்பதாகும். இக்காலகட்டத்தில் உடல் மற்றும் மனதில் ஏற்படும் மாற்றங்களுக்கு தகுந்தாற்போல் சில ஊட்டச்சத்துக்களின் தேவை அதிகரிக்கிறது. இக்காலத்தில் இரும்புச்சத்து மிக மிக அத்தியாவசிய ஒன்றாகும். அத்தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக மிக எளிதானதும், அதிக ஊட்டச்சத்து நிறைந்ததுமான உணவுப்பொருட்களை பற்றி சித்த மருத்துவம் குறிப்பிடுகிறது.

அவற்றில் சில - சிவப்பரிசி - எள்ளு - பனைவெல்லம் சிவப்பரிசி(Red rice) : இவ்வரிசியின் மாவில் புட்டு செய்து வழங்குவர். இதன் சிவப்பு நிறத்திற்குக் காரணமான பாலிபீனால் (polyphenol) மற்றும் ஆந்தோசயனின் (anthocyanin) நோய் எதிர்ப்பாற்றல் தன்மை உடையவை. இவ்வரிசியில், மற்ற அரிசிகளை விட இரும்புச் சத்து (Iron) மற்றும் நாகச் சத்தானது (Zinc) மூன்று மடங்கு அதிகமாக உள்ளது. 

எள்ளு(Sesame seeds) : 
இதனை வறுத்து பொடி செய்து அல்லது எள்ளுருண்டையாக செய்து வழங்குவர். இதில் வைட்டமின்கள் B & E மற்றும் தயாமின் உள்ளது. மேலும் 20% புரதச் சத்தும், 55% எண்ணெய்ச் சத்தும் நிறைந்துள்ளது. மேலும் செம்பு, நாகம், இரும்பு, கால்சியம், செலினியம், மாங்கனீஸ், மக்னிசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்கள் உள்ளன. 

பனைவெல்லம்(Palm jaggery) : 
இதனை தனியாகவோ அல்லது உளுந்து மாவுடன் சேர்த்துக் களியாகவோ செய்து வழங்குவர். 
பனைவெல்லத்தில், இரும்புச்சத்து (2.5mg/gm), வைட்டமின் B1 (24mg/100mg), நிகோட்டினிக் ஆசிட் (5.24 mg/100gm), ரிபோப்லெவின் (432 mg/100mg) மற்றும் வைட்டமின் C (11mg/100mg) முதலிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

ஞாயிறு

காடை வளர்ப்பு

 

காடை வளர்ப்பு

காடை வளர்ப்பு தமிழ்நாட்டில் பிரபலமாகிக் கொண்டு வருகின்றது. காடைகள் பெரும்பாலும் இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றன. டெல்லி, சென்னை, பெங்களூரு, திருச்ிச, மதுரை மற்றும் கோவை போன்ற மாநகரங்களிலும் தமிழகத்தின் ஏனைய நகரங்களிலும் காடை வளர்ப்புப் பண்ணைகள் பெருமளவில் நடத்தப்படுகின்றன.

இறைச்சிக் காடை வளர்ப்பின் முக்கிய அம்சங்கள்

மிகக் குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் ஜப்பானிய காடையை வளர்க்கலாம். கோழிவளர்ப்பினைப் போன்று, அதிக அளவில் முதலீடு தேவையில்லை. இத்தொழிலில் குறைந்த மூலதனத்துடன் சிறிது பயிற்சி பெற்ற யாரேனும் ஈடுபடலாம். ஜப்பானிய காடைகளுக்கு நோய் எதிர்ப்புத் திறன் அதிகம். இதனால் எந்த ஒரு தட்பவெப்ப நிலையிலும் காடைகள் நன்கு வளர்கின்றன. கோழிகளைப் போல் பல தடுப்பூசிகள் அளிக்கவேண்டிய அவசியம் இல்லை. ஜப்பானியக் காடைகள் ஐந்து முதல் ஆறு வாரத்திற்குள் விற்பனைக்குத் தயாராகி விடுகின்றன. இதனால் முதலீடு செய்த குறைந்த நாட்களிலேயே லாபத்தைப் பெற முடியும். ஜப்பானியக் காடை ஆறுவார காலத்தில் அதிகபட்சமாக 500 கிராம் அளவே தீவனம் உட்கோள்வதால் தீவனச் செலவு அதிகமின்றி குறைந்த முதலீட்டில் காடை வளர்ப்பை மேற்கொள்ள முடிகின்றது.

ஜப்பானியக் காடை இறைச்சி

சுத்தம் செய்யப்பட்ட காடை இறைச்சியின் எடை உயிருள்ள காடை எடையில் சுமார் 65 முதல் 70 சதவிகிதம் வரை இருக்கும். சுமார் 140 கிராம் எடை உள்ள காடையைச் சுத்தம் செய்தால் 100 கிராம் எடையுள்ள இறைச்சி கிடைக்கும். காடை இறைச்சி மிகவும் சுவையாக இருப்பதால் நல்ல விற்பனை விலை கிடைக்கின்றது. காடை இறைச்சியில் அதிகப் புரதமும் (20.5 சதவிகிதம்) குறைந்த அளவு கொழுப்பும் (5.8 சதவிகிதம்) இருப்பதால் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் ஏற்ற உணவாய் கருதப்படுகின்றது.

ஜப்பானியக் காடை விற்பனை

ஒரு காடை வளர்ப்புக்கு ரூ. 7 வீதம் செலவாகும். ஒரு நாள் காடை குஞ்சு ரூ. 2 ஆகும். தீவனம் அதிகபட்சமாக 450 கிராம் கொடுக்க வேண்டியிருப்பதால் ரூ. 5 ஆகும். மற்றைய செலவு 50 காசு ஆக மொத்தம் ரூ. 7.50 ஒரு காடையை உற்பத்தி செய்து ரூ. 9க்கு விற்கலாம். ஆகவே ஒரு காடை வளர்ப்பு மூலம் ரூ. 1.50 கிடைக்க வாய்ப்புள்ளது. காடையை இறைச்சிக்காக விற்பனை செய்தால் அதிக இலாபம் கிடைக்கும்.

காடை இனங்கள்

  1. நியூசிலாந்து காடை
  2. பாப் வெள்ளைக் காடை
  3. சைனாக் காடை
  4. மடகாஸ்கர் காடை
  5. கலிபோர்னியா காடை
  6. நியூகினியா காடை
  7. ஜப்பானிய காடை
Quail 002 Quail 004

ஜப்பானிய காடை

ஜப்பானியக் காடை வளர்ப்பு முறை

காடை இனங்களில் ஜப்பானியக் காடை மட்டுமே நம் நாட்டில் இறைச்சிக்காக அதிக அளவில் வளர்க்கலாம். காடைகளைத் தரையில் அதாவது ஆழ்கூள முறை அல்லது கூண்டு முறையில் வளர்க்கலாம்.

ஆழ்கூள முறை

ஒரு சதுர அடியில் ஐந்து காடைக்ள வரை ஆழ்கூள முறையில் வளர்க்கலாம். காடைகளை முதல் இரண்டு வாரம் வரை ஆழ்கூள முறையில் வளர்த்துப் பின் கூண்டுகளுக்கு மாற்றி ஆறு வாரம் வரை வளர்க்கலாம். ஆழ்கூள முறையில் இரண்டு வாரத்திற்கு மேற்பட்டு, காடைகளை வளர்த்தால் அவை அதிகம் அலைந்து திரிந்து, உட்கொண்ட தீனியின் எரிசக்தியை வீணாக்கி, குறைந்த எடையுடன் அதிகத் தீனிச் செலவு ஏற்படுத்தும். எனவே காடைகளை ஆழ்கூள முறையில் இருவாரங்களுக்கு வளர்த்து, பிறகு கூண்டுக்குள் மாற்றி வளர்ப்பதே சிறந்த பராமரிப்பு முறையாகும்.

கூண்டு முறை வளர்ப்பு

இறைச்சிக்காகக் காடைகளை வளர்க்கும் பொழுது முதல் இரண்டு வாரம் வரை 3 அடி நீளம் இரண்டரை அடி அகலம் உள்ள கூண்டுகளில் வளர்க்கவேண்டும். கூண்டு ஒன்றுக்கு 100 காடைக் குஞ்சுகள் வரை வளர்த்துப் பின் அவற்றை 3 முதல் 6 வாரம் வரை 4 அடி நீளம் இரண்டரை அடி அகலம் 18 அங்குல உயரம் உள்ள கூண்டுகளில், கூண்டு ஒன்றுக்கு 50 காடைகள் வரை வளர்க்கலாம்.
குஞ்சுப்பருவக் கூண்டுகள் ஒவ்வொன்றும் 20 செ.மீ உயரம் இருத்தல் வேண்டும். கூண்டின் அடிப்பகுதி மற்றும் பக்கவாட்டு கம்பிவலை 1.5க்கு 1.5 செ.மீ உள்ளதாக இருக்கவேண்டும். கம்பிவலைக்கடியில் தகடுகள் பொருத்தவேண்டும். அப்போது தான் மேல் அடுக்கில் உள்ள காடைகளின் கழிவு கீழ் அடுக்கில் உள்ள காடைகளின் மீது விழாது. இந்தத் தகடுகளில் விழும் கழிவுகளை தினந்தோறும் அகற்றும் படியான வடிவமைப்பு கொடுக்கவேண்டும். ஒவ்வொரு கூண்டும் 4 அல்லது 5  அடுக்குகள் கொண்டவையாக அமைத்துக் கொள்ளலாம்.

Care and management

கூண்டு முறை வளர்ப்பு


குஞ்சு பருவக் கூண்டுகளை 90 செ.மீக்கு 60 செ.மீ (3க்கு 2 அடி) என்ற அளவில் உள்ள பிரிவுகளாக அமைக்கலாம். இந்தக் கூண்டில் 100 காடைகளை இரண்டு வாரம் வரை வளர்க்கலாம். இரண்டு வாரத்திற்கு பிறகு விற்பனை ஆகும் வரை (ஆறு வாரம் வரையில்) 125-150 ச.செ.மீ இடவசதி ஒவ்வொரு காடைக்கும் அளிக்கப்படவேண்டும். 14க்கு இரண்டரை அடி அளவுள்ள கூண்டில் 50 காடைகள் வரை வளர்க்கலாம்.

காடைத்தீவனம்

காடைகளுக்கும் கோழித் தீனியில் பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களே உபயோகப்படுத்தப்படுகின்றன. காடைக்குஞ்சுப் பருவத்தில் வழங்கும் தீவனம் 26-28 சதவிகிதம் புரதமும், 2700 கி கலோரி / கிலோ எரிசக்தியும் கொண்டதாக இருக்கவேண்டும். இவ்வகைத் தீவனத்தை 0-6 வாரம் வரை உபயோகிக்கலாம். ஆனால் இந்த வயதிற்குள் இருவகைத் தீவனங்களை மாற்றி பயன்படுத்த திட்டமிடும் பொழுது முதல் மூன்று வாரங்கள் வரை 24 சதம் புரதமும் 2800 கிலோ கிலோரி / கிலோ எரிசக்தி உள்ள தீவனத்தையும் உபயோகிக்லாம். காடைகளுக்கென சில நிறுவுனங்கள் தீவனம் தயாரித்து விற்கின்றன. காடைத்தீவனம் கடையில் வாங்க இயலாத போது காடை வளர்ப்போர் இறைச்சிக் கோழிக்கான ஆரம்பகால தீவனத்தை (Broiler Starter Mash) வாங்கி 75 கிலோ தீவனத்துடன் 5 கிலோ வீதம் பிண்ணாக்கு தூளை கலந்து கொடுக்கலாம். இத்தீவனத்தில் தானியங்கள் அளவு பெரிதாக இருப்பின் மீண்டும் ஒரு முறை அரைத்து தூளின் அளவைக் குறைத்து உபயோகிக்கலாம்.

Quail feeding

காடைத்தீவனம்

100 கிலோ காடைத் தீவனம் தயாரிக்க தேவைப்படும் தீவனப்பொருட்கள்

தீவனப்பொருட்கள்

குஞ்சுப்பருவம்

வளரும் காடைத் தீவனம் (கிலோ)

மக்காச்சோளம்

27

31

வெள்ளைச் சோளம் (அ) கம்பு

15

14

எண்ணெய் நீக்கிய  அரிசி தவிடு

8

8

கடலைப் பிண்ணாக்கு

17

17

சூரிய காந்தி பிண்ணாக்கு

12.5

12.5

சோயா மொச்சை தூள்

8

-

மீன்தூள் (உப்பு  இல்லாதது)

10

10

தாது உப்புக்கள்

2.5

2.5

கிளிஞ்சல் தூள்

-

5.0

 

100

100

வைட்டமின்

தேவையான அளவு கலக்கப்படவேண்டும.

ஐந்து வார வயது வரை ஒரு காடை 500 கிராம் வரை தீவனத்தை உட்கொள்ளும் சராசரியாக ஆண்காடை 180-190 கிராமும் பெண் காடை 190-210 கிராம் உடல் எடையும் அடைந்திருக்கும். இதுவே விற்பனைக்கு தயாரான நிலை. பெண்காடை ஆண்காடையை விட எடை அதிகமாக இருக்கும். கழுத்து மற்றும் அதன் கீழ் உள்ள மார்புப் பகுதியில் வெளிர் பழுப்பு நிற இறகுகளில் கறுப்பு நிறப் புள்ளிகள் காணப்படும். ஆண்காடைகளின் கழுத்து மற்றும் அதன் கீழ் உள்ள மார்புப்பகுதி இறகுகள் பழுப்பு நிறத்தில் இருக்கும்.

இனப்பெருக்கம்

காடைகள் 7 வார வயதில்  முட்டையிட ஆரம்பித்து, 8வது வாரத்தில் முட்டை உற்பத்தி 50 விழுக்காடு நிலையை அடையும். பொதுவாக காடைகள் மாலை நேரத்திலேயே முட்டைகளை இடும். கோழிக்குஞ்சுப் பொரிப்பகத்தை சரியானபடி மாற்றம் செய்தால் அதிக காடை முட்டைகளை அடை வைக்கலாம். அடைவதைத 18வது நாள் காடைக்குஞ்சுகள் வெளிவரும். 500 பெண் காடைகளைக் கொண்டு வாரத்திற்கு 1500 காடைக்குஞ்சுகளை உற்பத்தி செய்யலாம்.

Quail Egg

காடை முட்டைகள்


கோடைக்காலத்தில் காடை அடை முட்டைகளைக் குளிர்ந்த சூழ்நிலையில் சேமித்து வைக்கவேண்டும்.

குஞ்சு பராமரிப்பு

காடைக்குஞ்சுகள் பொரித்தவுடன் அளவில் மிகச் சிறியவையாக 8 முதல் 10 கிராம் வரை எடையுள்ளதாகத்தான்  இருக்கும். இதனால் கோழிக் குஞ்சுகளுக்குப்  புரூடர் வெப்பம் அதிகம் தேவைப்படும். போதுமான வெப்பம் மின்விளக்ிகன் மூலம் கிடைக்காவிட்டால் அவை கூட்டமாக ஒன்றன் மீது ஒன்று ஏறி நெருக்கி மூச்சுத் திணறி இறப்பு ஏற்படும். வேகமான குளிர் காற்று வீசும் போதும் சன்னல் கதவுகள் திறந்து வைக்கப்பட்டிருந்தாலும், பக்கவாட்டில் தொங்க விடப்பட்டுள்ள மறைப்பு விலகி விட்டாலும், மின்சாரத் தடையேற்படும் போதும் இவ்வாறு நேர்வதற்கு வாய்ப்புகள் உண்டு.

ஊட்டச்சத்துப் பற்றாக்குறை நோய்கள்

காடைக்குஞ்சுகளில் கால் வலுவிழந்த குஞ்சுகளும், நோஞ்சான் குஞ்சுகளும் அதிகம் இருக்கக்கூடும். குஞ்சு பொரிப்பகங்களில் முட்டையிடும் காடைகளுக்குப் போதுமான அளவில் தாது உப்புக்களும், வைட்டமின்களும் அளிக்கப்படாததால் இவ்வாறு நேரலாம்.

நுண்ணுயிரிகளால் ஏற்படும் நோய்கள்

  • தொப்புள் அழற்சி
  • ஈகோலி நோய்
  • காடைக்கழிச்சல் மற்றும் காளான் நோய்கள்
  • நுரையீரல் அழற்சி
  • பூசண நச்சு.

மேலும் மேரெக்ஸ் வாத நோய், இராணிக்கெட் கழிச்சல் நோய் போன்ற வைரஸ் நச்சுக் கிருமிகளால் ஏற்படும் நோய்களும், காக்சிடியோசிஸ் எனப்படும் இரத்தக் கழிச்சல் நோயும் காடைகளைப் பாதிக்கலாம். இருப்பினும் கோழிகளை விடக் காடைகள் இந்நோய்களை எதிர்க்கும் சக்தி அதிகம் கொண்டவையாக இருப்பதனால், இவ்வகை நோய்களுக்கு எதிராகத்தடுப்பு முறைகள் ஏதும் எடுக்கவேண்டிய அவசியம் இதுவரை ஏற்படவில்லை.

எனவே குஞ்சுகளுக்குப் போதுமான வெப்பம், குளிர் காற்று வீசாமல் இளம் பருவத்தில் பாதுகாப்பு, முறையான கிருமி நீக்கம் எப்பொழுதும் தூய்மையான குடிநீர், தரமான கலப்புத் தீவனம் அளித்தல் போன்றவற்றைக வகையாகக்  கையாண்டால் காடைகளில் ஏற்படும் இறப்பு விகிதத்தைப் பெருமளவு குறைத்து நோயின்றி அவைகளைப் பாதுகாக்கலாம்.

 

(Thanks தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்)