சனி

சித்த மருத்துவத்தில் பூவரசம் பூக்கள்!!!

சித்த மருத்துவத்தில் பூவரசம் பூக்கள்

poovarasu
பூவரசம் மரத்தில் இதய வடிவ இலைகளின் நடுவே மஞ்சள் வர்ணத்தில் பூத்துக்குலுங்கும் பூவரச மரத்தின் பூக்கள் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இந்த மலர்கள் உண்பதற்கு உகந்தவை என்று சித்தமருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பொதுவாக இந்த இலைகளை விஷத்தை போக்கும் வல்லமை உடையதால் இதனை பூச்சிக்கடி மற்றும் விஷ வண்டுகடிகளுக்கு மருந்தாக இந்த பூக்களை சித்த மருத்துவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
நீர் பாதியாக சுண்டும் போது இறக்கி வடிகட்டி காலை மாலை வேளைக்கு இரண்டு அவுன்ஸ் குடிக்கவேண்டும். தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தினமும் இதுபோல புதிதாக கஷாயம் தயாரித்து குடித்து வரவேண்டும். பின்னர் மூன்று நாட்கள் இடைவெளி விட்டு, மறுபடியில் மூன்று நாட்கள் சாப்பிடவேண்டும். இதனால் விஷக்கடி மூலம் ஏற்பட்ட ஊறல், தடிப்பு, அரிப்பு, மயக்கம், சோம்பல் போன்றவை நீங்கும்.
சொறி, சிரங்கு சொறி சிரங்கினால் அவதிப் படுபவர்கள் பூவரசம் பூவை அரைத்து அவற்றின்மீது பூசிவர தோல் மென்மையாகும், சொறி சிரங்கு குணமடையும். விஷக்கடி குணமாகும் பூச்சிக்கடி, வண்டுக்கடி, காணாக்கடி போன்ற பூச்சிகள் கடித்து அதனால் தோலில் ஊறல் நோய் ஏற்படும். அவர்கள் பூவரசம் பூ 25 கிராம் எடுத்து நசுக்கி, பழகிய மண்சட்டியில் போட்டு, 200 மில்லிலிட்டர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும்.
இந்த கஷாயம் உட்கொள்ளும் போது எண்ணெய், கடுகு தாளிக்காமல் சாப்பிடவேண்டும். மீன், கருவாடு சேர்க்கக் கூடாது. மூட்டு வீக்கம் வயதான காலத்தில் மூட்டுப் பகுதியில் நீர் கோர்த்து வீக்கத்தால் அவதிப்படுபவர்கள், பூவரசம் பூவுடன் சமஅளவு, காய் பட்டை, எடுத்து அரைத்து நல்ல எண்ணெயில் சேர்த்துக் காய்ச்சி, மூட்டு வீக்கங்கள் மேல் பூசிவர வீக்கம் குணமடையும்….

சுய தொழில்கள்-47 ஹேர் ஆயில் தயாரிப்பு :

சுய தொழில்கள் வரிசையில் முன்பு ஹேர் ஆயில் எப்படி தயாரிப்பது என்பது பற்றி மட்டும் சொல்லியிருந்தோம். இப் பதிவினில் அதை சந்தைப் படுத்துதல் போன்ற விவரங்களைக் காண்போம்.
காசு கொழிக்கும் ஹேர் ஆயில் தயாரிப்பு :

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper


‘கூந்தல் வளர்ச்சிக்காக,  தலைக்கு மூலிகை எண்ணெய் தேய்க்கும் பழக்கம் பல பெண்களிடம்  உள்ளது. ஆண்களும் முடிகொட்டுதல் போன்ற பிரச்னைகளுக்காக மூலிகை எண்ணெய்களை

பயன்படுத்துகிறார்கள். பெரிய பிராண்ட் நிறுவனங்கள் போட்டி களத்தில் இருந்தாலும், தரமான மூலிகை எண்ணெய் தயாரித்து விற்றால் நல்ல லாபம் சம்பாதிக்கலாம்  என்று கூறுகிறார்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த வாளவாடியில் ஹேர் ஆயில் தயாரித்து விற்று வரும் பத்மாவதி. அவர் கூறியதாவது: எனது கணவர், மாமனார் மூலிகை எண்ணெய், தைலம்

தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டுள்ளனர். நான் மகாத்மா காந்தி மகளிர் சுய உதவி குழுவில் சேர்ந்தபோது, மகளிர் குழுக்களுக்கு வழிகாட்டி வரும் நேசக்கரங்கள் அமைப்பினர் மூலிகை ஹேர்

ஆயில்  தொழிலை துவங்கும்படி  கூறினர்.

அதன் பேரில்  கடந்த 3 ஆண்டு களாக மூலிகை ஹேர் ஆயில், ஓம வாட்டர், ரோஸ் வாட்டர் தயாரிப்பில் ஈடுபட்டு வரு கிறேன். அவற்றை கணவர் உதவியுடன் விற்று வருகிறேன். ஹேர்

ஆயில் 3 ஆண்டு வரை கெடாது. நீண்ட நாள் ஸ்டாக் வைத்துகூட விற்கலாம். மாதம் ரூ.2 லட்சத்துக்கு ஹேர் ஆயில் விற்று வருகிறேன். வீட்டில் இருந்தபடியே பெண்கள் செய்ய ஏற்ற

தொழில் இது. ஹேர் ஆயிலை மசாஜ் எண்ணெயாகவும் பயன்படுத்தலாம் என்பதால் நல்ல வரவேற்பு உள்ளது.


உற்பத்தி செலவு

ஹேர் ஆயில் தயாரிக்க தேவையான தேங்காய் எண்ணெய் கிலோ ரூ.180,  வெந்தயம் கிலோ ரூ.60, சீரகம் கிலோ ரூ.60, கஸ்தூரி மஞ்சள் கிலோ ரூ.110, பூலாங்கிழங்கு கிலோ ரூ.200,

வெட்டிவேர் கிலோ ரூ.140, விளாமிச்சை வேர் கிலோ ரூ.180, கருவேப்பிலை கிலோ ரூ.20, பொன்னாங்கண்ணி கிலோ ரூ.10, கீழாநெல்லி வேர் ரூ.12,  திருநீற்று பச்சிலை, கரிசலாங்கண்ணி,

சோற்று பச்சிலை, நெல்லி, சோற்று கற்றாழை ஆகியவை கிலோ ரூ.30 வரை விற்கிறது.  பாட்டில்கள் 30 மி.லி முதல் 60 மி.லி அளவு வரை ரூ.5, 100 மி.லி அளவு ரூ.5.50, 500 மில்லி

அளவு ரூ.6, ஒரு லிட்டர் அளவு ரூ.6.50க்கு கிடைக்கிறது.

 அடுப்பு எரிக்க விறகு அல்லது எரிவாயு, மூலிகை மற்றும் பச்சிலைகள், உற்பத்தி கூலி செலவு உள்பட ஒரு லிட்டர் ஹேர் ஆயில் தயாரிக்க ரூ.400 செலவாகும். ஒரு நாளில் ஒரு நபர் 20

லிட்டர் ஹேர் ஆயில் தயாரிக்கலாம். அதற்கு ரூ.8 ஆயிரம் தேவை. ஒரு மாதத்தில் 25 நாளில் 500 லிட்டர் தயாரிக்க ரூ.2 லட்சம் தேவை. வருவாய்: ஹேர் ஆயில் 30 மி.லி, 60 மி.லி, 100

மி.லி அளவுகளில் விற்பனை செய்யலாம். ஒரு லிட்டர் ரூ.525க்கு கடைக்காரர்களுக்கு விற்கப்படுகிறது. இதன் மூலம் உற்பத்தியாளருக்கு லிட்டருக்கு ரூ.125 லாபம். ஒரு மாதத்தில் 500

லிட்டர் ஹேர் ஆயில் விற்பனை மூலம் லாபம் ரூ.62,500.

கட்டமைப்பு: மூலிகை காய்ச்ச விறகு அடுப்பு அல்லது பெரிய பர்னர் உள்ள கேஸ் சிலிண்டர் அடுப்பு, தைலத்தை பாட்டிலில் ஊற்றி பேக்கிங் செய்து இருப்பு வைக்க ஒரு அறை, பச்சிலைகள்

வளர்க்க 10க்கு 10 அடி நீள, அகல காலி இடம் (வீட்டு முற்றமாக கூட இருக்கலாம்), அதே அளவில் மூலிகை பொருட்களை காய வைக்க திறந்த வெளி தேவை. மூலப்பொருட்கள்:ஆட்டு

உரல் அல்லது கிரைண்டர், மூலிகை காய்ச்ச இரும்பு சட்டி, காய்ச்சிய தைலத்தை ஊற்றி வைக்க காலி டின்கள். உற்பத்தி பொருட்கள் : ஹேர் ஆயில் பேக்கிங் செய்ய 30 மி.லி, 60 மி.லி,

100 மி.லி உள்ளிட்ட பல்வேறு கொள்ளளவுள்ள பிளாஸ்டிக் பாட்டில்கள்,  லேபிள்கள் மற்றும் உற்பத்திக்கு தேவையான மூலிகை, பச்சிலை.

கிடைக்கும் இடம் : காலி டின்கள் ஹார்டுவேர்ஸ் கடைகளிலும், மூலிகை மற்றும் பச்சிலை நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். கிராமப்புறங்கள் மற்றும் மலைபகுதிகளில் இருந்தும்

மூலிகை, பச்சிலைகளை பெறலாம். விற்பனை வாய்ப்பு: டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள், நாட்டு மருந்து கடைகள், மளிகை கடைகள், கூட்டுறவு கடைகள் ஆகியவற்றில் ஹேர் ஆயில்

விற்கப்படுவதால் அங்கு சப்ளை செய்யலாம். தெரிந்தவர்கள், அருகில் இருப்பவர்களிடம் நாமே நேரடியாக விற்கலாம். நல்ல தரத்தோடு தயாரிக்கும் போது பலன் நன்றாக தெரியும்.

விலையும் ஏற்றபடி இருந்தால் வாடிக்கையாளர்கள் பெருகுவார்கள். அதற்கேற்ப விற்பனை அதிகரிக்கும். நல்ல லாபம் சம்பாதிக்க முடியும். பயிற்சி தேவை இல்லை: ஹேர் தயாரிப்புக்கு

என பெரிதான பயிற்சி தேவை இல்லை.

சமையலில் பக்குவம் பார்த்து சமைக்கும் பெண்கள், எளிதில் ஹேர் ஆயில் தயாரிக்கும் முறை கற்றுக் கொள்வார்கள். சில முறை பார்த்தாலே போதும். மகளிர் சுய உதவிக்குழுக்கள்,

வாழ்ந்து காட்டுவோம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் பெண்களுக்கு சுய தொழில் துவங்க வழிகாட்டப்படுவதால், அவற்றின் மூலம் மூலிகை எண்ணெய் தொழிலை மேற்கொள்ள

வங்கி கடன் பெற வாய்ப்புள்ளது.

தயாரிப்பது எப்படி?

தலா 50 கிராம் வெந்தயம், சீரகம், கஸ்தூரி மஞ்சள், பூலாங்கிழங்கு, வெட்டி வேர், விளாமிச்சை வேர் ஆகியவற்றை 24 மணி  நேரம் ஊறவைத்து, தண்ணீர் வடித்து எடுத்து கொள்ள

வேண்டும். தலா 50 கிராம் கருவேப்பிலை, திருநீற்று பச்சிலை, பொன்னாங்கண்ணி, கீழாநெல்லிவேர், கரிசலாங்கண்ணி, நெல்லி சாறு, செம்பருத்தி ஆகியவற்றை சுத்தமாக கழுவி தண்ணீர்

இல்லாமல் எடுத்து கொள்ள வேண்டும். 50 கிராம் கற்றாழை ஜெல் எடுத்து கொள்ள வேண்டும். அனைத்தையும் ஆட்டு உரல் அல்லது கிரைண்டரில் போட்டு தண்ணீர் விடாமல் அரைத்து

எடுக்க வேண்டும். உளுந்த மாவு பதத்துக்கு வந்தவுடன் அதை வடை போல் தட்ட வேண்டும்.

இரும்பு சட்டியில் ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெயை ஊற்றி காய்ந்தவுடன் அதில் வடை போல் தட்டியதை போட வேண்டும். அவை எண்ணெயில் வெந்து உதிரும். சாறு முழுவதும்

எண்ணெயில் இறங்கி கலந்து விடும். எண்ணெய் ஈரப்பதம் இல்லாத நிலைக்கு மாறிவுடன் தீயை அணைத்து விட வேண்டும். சூடு ஆறியதும் எண்ணெயை வடிகட்டி தகர டின்னில்

ஊற்றினால் ஹேர் ஆயில் தயார். எண்ணெயை தேவையான அளவுள்ள பாட்டில்களில் அடைத்து, லேபிள் ஒட்டி விற்கலாம்.

பக்குவம் முக்கியம்: கொதிக்கும் எண்ணெயில் வடைபோல் போட்டவற்றை முறுகும் வரை வேக வைத்து விட்டால், வடையின் துகள்களே எண்ணெயை உறிஞ்சி கொள்ளும். எண்ணெய்

அளவு குறைந்து விடும். முறுகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக சீக்கிரமே தீயை அணைத்து விட்டால் முழுமையான மூலிகை எண்ணெயாக மாறாது.  எண்ணெய் முழுவதும் மூலிகை

எண்ணெயாக மாறிவிட்டதை அறிய, வடை வெந்து கொண்டிருக்கும் போது, ஒரு திரியை சட்டியில் உள்ள எண்ணெயில் நனைத்து பற்ற வைக்க வேண்டும். எண்ணெய் ஈரப்பதமாக

இருந்தால் சடசடவென சத்தம் வரும். சரியாக எரியாது. திரி சத்தமில்லாமல் எரிந்தால் மூலிகை எண்ணெய் பக்குவத்திற்கு வந்து விட்டது என்பதை அறிந்து உடனே தீயை அணைத்து

விடலாம்.  காசு கொழிக்கும் ஹேர் ஆயில் தயாரிப்பு : உடுமலை எஸ்.கண்ணன்

‘கூந்தல் வளர்ச்சிக்காக,  தலைக்கு மூலிகை எண்ணெய் தேய்க்கும் பழக்கம் பல பெண்களிடம்  உள்ளது. ஆண்களும் முடிகொட்டுதல் போன்ற பிரச்னைகளுக்காக மூலிகை எண்ணெய்களை

பயன்படுத்துகிறார்கள். பெரிய பிராண்ட் நிறுவனங்கள் போட்டி களத்தில் இருந்தாலும், தரமான மூலிகை எண்ணெய் தயாரித்து விற்றால் நல்ல லாபம் சம்பாதிக்கலாம்  என்று கூறுகிறார்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த வாளவாடியில் ஹேர் ஆயில் தயாரித்து விற்று வரும் பத்மாவதி. அவர் கூறியதாவது: எனது கணவர், மாமனார் மூலிகை எண்ணெய், தைலம்

தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டுள்ளனர். நான் மகாத்மா காந்தி மகளிர் சுய உதவி குழுவில் சேர்ந்தபோது, மகளிர் குழுக்களுக்கு வழிகாட்டி வரும் நேசக்கரங்கள் அமைப்பினர் மூலிகை ஹேர்

ஆயில்  தொழிலை துவங்கும்படி  கூறினர்.

அதன் பேரில்  கடந்த 3 ஆண்டு களாக மூலிகை ஹேர் ஆயில், ஓம வாட்டர், ரோஸ் வாட்டர் தயாரிப்பில் ஈடுபட்டு வரு கிறேன். அவற்றை கணவர் உதவியுடன் விற்று வருகிறேன். ஹேர்

ஆயில் 3 ஆண்டு வரை கெடாது. நீண்ட நாள் ஸ்டாக் வைத்துகூட விற்கலாம். மாதம் ரூ.2 லட்சத்துக்கு ஹேர் ஆயில் விற்று வருகிறேன். வீட்டில் இருந்தபடியே பெண்கள் செய்ய ஏற்ற

தொழில் இது. ஹேர் ஆயிலை மசாஜ் எண்ணெயாகவும் பயன்படுத்தலாம் என்பதால் நல்ல வரவேற்பு உள்ளது.


உற்பத்தி செலவு

ஹேர் ஆயில் தயாரிக்க தேவையான தேங்காய் எண்ணெய் கிலோ ரூ.180,  வெந்தயம் கிலோ ரூ.60, சீரகம் கிலோ ரூ.60, கஸ்தூரி மஞ்சள் கிலோ ரூ.110, பூலாங்கிழங்கு கிலோ ரூ.200,

வெட்டிவேர் கிலோ ரூ.140, விளாமிச்சை வேர் கிலோ ரூ.180, கருவேப்பிலை கிலோ ரூ.20, பொன்னாங்கண்ணி கிலோ ரூ.10, கீழாநெல்லி வேர் ரூ.12,  திருநீற்று பச்சிலை, கரிசலாங்கண்ணி,

சோற்று பச்சிலை, நெல்லி, சோற்று கற்றாழை ஆகியவை கிலோ ரூ.30 வரை விற்கிறது.  பாட்டில்கள் 30 மி.லி முதல் 60 மி.லி அளவு வரை ரூ.5, 100 மி.லி அளவு ரூ.5.50, 500 மில்லி

அளவு ரூ.6, ஒரு லிட்டர் அளவு ரூ.6.50க்கு கிடைக்கிறது.

 அடுப்பு எரிக்க விறகு அல்லது எரிவாயு, மூலிகை மற்றும் பச்சிலைகள், உற்பத்தி கூலி செலவு உள்பட ஒரு லிட்டர் ஹேர் ஆயில் தயாரிக்க ரூ.400 செலவாகும். ஒரு நாளில் ஒரு நபர் 20

லிட்டர் ஹேர் ஆயில் தயாரிக்கலாம். அதற்கு ரூ.8 ஆயிரம் தேவை. ஒரு மாதத்தில் 25 நாளில் 500 லிட்டர் தயாரிக்க ரூ.2 லட்சம் தேவை. வருவாய்: ஹேர் ஆயில் 30 மி.லி, 60 மி.லி, 100

மி.லி அளவுகளில் விற்பனை செய்யலாம். ஒரு லிட்டர் ரூ.525க்கு கடைக்காரர்களுக்கு விற்கப்படுகிறது. இதன் மூலம் உற்பத்தியாளருக்கு லிட்டருக்கு ரூ.125 லாபம். ஒரு மாதத்தில் 500

லிட்டர் ஹேர் ஆயில் விற்பனை மூலம் லாபம் ரூ.62,500.

கட்டமைப்பு: மூலிகை காய்ச்ச விறகு அடுப்பு அல்லது பெரிய பர்னர் உள்ள கேஸ் சிலிண்டர் அடுப்பு, தைலத்தை பாட்டிலில் ஊற்றி பேக்கிங் செய்து இருப்பு வைக்க ஒரு அறை, பச்சிலைகள்

வளர்க்க 10க்கு 10 அடி நீள, அகல காலி இடம் (வீட்டு முற்றமாக கூட இருக்கலாம்), அதே அளவில் மூலிகை பொருட்களை காய வைக்க திறந்த வெளி தேவை. மூலப்பொருட்கள்:ஆட்டு

உரல் அல்லது கிரைண்டர், மூலிகை காய்ச்ச இரும்பு சட்டி, காய்ச்சிய தைலத்தை ஊற்றி வைக்க காலி டின்கள். உற்பத்தி பொருட்கள் : ஹேர் ஆயில் பேக்கிங் செய்ய 30 மி.லி, 60 மி.லி,

100 மி.லி உள்ளிட்ட பல்வேறு கொள்ளளவுள்ள பிளாஸ்டிக் பாட்டில்கள்,  லேபிள்கள் மற்றும் உற்பத்திக்கு தேவையான மூலிகை, பச்சிலை.

கிடைக்கும் இடம் : காலி டின்கள் ஹார்டுவேர்ஸ் கடைகளிலும், மூலிகை மற்றும் பச்சிலை நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். கிராமப்புறங்கள் மற்றும் மலைபகுதிகளில் இருந்தும்

மூலிகை, பச்சிலைகளை பெறலாம். விற்பனை வாய்ப்பு: டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள், நாட்டு மருந்து கடைகள், மளிகை கடைகள், கூட்டுறவு கடைகள் ஆகியவற்றில் ஹேர் ஆயில்

விற்கப்படுவதால் அங்கு சப்ளை செய்யலாம். தெரிந்தவர்கள், அருகில் இருப்பவர்களிடம் நாமே நேரடியாக விற்கலாம். நல்ல தரத்தோடு தயாரிக்கும் போது பலன் நன்றாக தெரியும்.

விலையும் ஏற்றபடி இருந்தால் வாடிக்கையாளர்கள் பெருகுவார்கள். அதற்கேற்ப விற்பனை அதிகரிக்கும். நல்ல லாபம் சம்பாதிக்க முடியும். பயிற்சி தேவை இல்லை: ஹேர் தயாரிப்புக்கு

என பெரிதான பயிற்சி தேவை இல்லை.

சமையலில் பக்குவம் பார்த்து சமைக்கும் பெண்கள், எளிதில் ஹேர் ஆயில் தயாரிக்கும் முறை கற்றுக் கொள்வார்கள். சில முறை பார்த்தாலே போதும். மகளிர் சுய உதவிக்குழுக்கள்,

வாழ்ந்து காட்டுவோம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் பெண்களுக்கு சுய தொழில் துவங்க வழிகாட்டப்படுவதால், அவற்றின் மூலம் மூலிகை எண்ணெய் தொழிலை மேற்கொள்ள

வங்கி கடன் பெற வாய்ப்புள்ளது.

தயாரிப்பது எப்படி?

தலா 50 கிராம் வெந்தயம், சீரகம், கஸ்தூரி மஞ்சள், பூலாங்கிழங்கு, வெட்டி வேர், விளாமிச்சை வேர் ஆகியவற்றை 24 மணி  நேரம் ஊறவைத்து, தண்ணீர் வடித்து எடுத்து கொள்ள

வேண்டும். தலா 50 கிராம் கருவேப்பிலை, திருநீற்று பச்சிலை, பொன்னாங்கண்ணி, கீழாநெல்லிவேர், கரிசலாங்கண்ணி, நெல்லி சாறு, செம்பருத்தி ஆகியவற்றை சுத்தமாக கழுவி தண்ணீர்

இல்லாமல் எடுத்து கொள்ள வேண்டும். 50 கிராம் கற்றாழை ஜெல் எடுத்து கொள்ள வேண்டும். அனைத்தையும் ஆட்டு உரல் அல்லது கிரைண்டரில் போட்டு தண்ணீர் விடாமல் அரைத்து

எடுக்க வேண்டும். உளுந்த மாவு பதத்துக்கு வந்தவுடன் அதை வடை போல் தட்ட வேண்டும்.

இரும்பு சட்டியில் ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெயை ஊற்றி காய்ந்தவுடன் அதில் வடை போல் தட்டியதை போட வேண்டும். அவை எண்ணெயில் வெந்து உதிரும். சாறு முழுவதும்

எண்ணெயில் இறங்கி கலந்து விடும். எண்ணெய் ஈரப்பதம் இல்லாத நிலைக்கு மாறிவுடன் தீயை அணைத்து விட வேண்டும். சூடு ஆறியதும் எண்ணெயை வடிகட்டி தகர டின்னில்

ஊற்றினால் ஹேர் ஆயில் தயார். எண்ணெயை தேவையான அளவுள்ள பாட்டில்களில் அடைத்து, லேபிள் ஒட்டி விற்கலாம்.

பக்குவம் முக்கியம்: கொதிக்கும் எண்ணெயில் வடைபோல் போட்டவற்றை முறுகும் வரை வேக வைத்து விட்டால், வடையின் துகள்களே எண்ணெயை உறிஞ்சி கொள்ளும். எண்ணெய்

அளவு குறைந்து விடும். முறுகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக சீக்கிரமே தீயை அணைத்து விட்டால் முழுமையான மூலிகை எண்ணெயாக மாறாது.  எண்ணெய் முழுவதும் மூலிகை

எண்ணெயாக மாறிவிட்டதை அறிய, வடை வெந்து கொண்டிருக்கும் போது, ஒரு திரியை சட்டியில் உள்ள எண்ணெயில் நனைத்து பற்ற வைக்க வேண்டும். எண்ணெய் ஈரப்பதமாக

இருந்தால் சடசடவென சத்தம் வரும். சரியாக எரியாது. திரி சத்தமில்லாமல் எரிந்தால் மூலிகை எண்ணெய் பக்குவத்திற்கு வந்து விட்டது என்பதை அறிந்து உடனே தீயை அணைத்து விடலாம். 

கண் பார்வைக்கு ஜாதிக்காய்!!!!!

கண் பார்வைக்கு ஜாதிக்காய்
கண் பார்வை மங்கலாக இருந்தால் அதற்கு கண்ணாடி போடுவது, மாத்திரைகள், காய்கறிகள் சாப்பிடுவது என்று எல்லோரும் பல முறைகளை கையா‌ள்வா‌ர்க‌ள்.

பொதுவாக க‌ண்க‌ளி‌ல் ஏ‌ற்படு‌ம் ‌சி‌றிய ‌பிர‌ச்‌சினைகளை உடனடியாக ‌தீ‌ர்‌க்க வே‌ண்டியது‌ ‌மிகவு‌ம் மு‌க்‌கிய‌ம். ஏனோ தானோ வெ‌ன்று ‌வி‌ட்டு‌வி‌ட்டா‌ல்தா‌‌ன் க‌ண் பா‌ர்வை‌க்கே ‌பிர‌ச்‌சினையா‌கி‌விடு‌கிறது. 

கண் பார்வை மங்கலாக இருப்பவர்கள், ஜாதிக்காயை பசும்பாலில் இழைத்து இரவில் கண்ணை சுற்றி பற்றுப் போட்டு காலையில் கழுவி விடவும்.

இதனுடன் திரிபலா சூரணத்தை தேனில் கலந்து உட்கொண்டு வர கண்பார்வை விரைவில் தெளிவடையும்.

கண் பார்வை சீராக இருக்க ஜாதிக்காய் பெருமளவு பயன்படுகிறது.

மேலும், கண்ணை சுற்றி இருக்கும் கருவளையத்தையும் நீக்க இது போன்று ஜாதிக்காயைப் பயன்படுத்தலாம்.

எலுமிச்சையின் 13 அற்புதமான நன்மைகள்

தினமும் உண்ணும் உணவில் ஏதேனும் ஒரு பழ வகையை சேர்த்து கொள்ளுதல் மிகவும் சிறந்தது. ஏனெனில் பழங்களானது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடிய கடவுள் தந்த ஒரு பெரிய வரப்பிரசாதம். அதே போல் எலுமிச்சை பழமும் உடலுக்கு பல நலன்களை கொடுக்க கூடியது ஆகும். மேலும் இது விலை மலிவான பழமும் கூட. மஞ்சள் நிறத்தில் மங்களகரமாய் காணப்படும் இப்பழம், பூஜைக்கு மட்டுமல்ல, உணவில் அவசியம் சேர்த்து கொள்ள வேண்டிய, நன்மைகள் பல நிறைந்த ஒரு பழ வகையாகும்.உணவில் ஃபிரஷ்ஷான எலுமிச்சையை சேர்த்து கொள்ளாதவரும் கூட, இங்கு கூறப்படும் எலுமிச்சை, எலுமிச்சை சாறு, அதன் சதை பகுதி மற்றும் அதன் தோல் ஆகியவற்றின் நலன்களை அறிந்து கொண்டு, எலுமிச்சையை உணவில் சேர்த்து கொள்ளலாமா என்று மறுபரிசீலனை செய்வர். எலுமிச்சை என்றாலே அனைவருக்கும் அதன் புளிப்புச்சுவை தான் நினைவுக்கு வரும். ஆனால் அந்த புளிப்புச்சுவை நிறைந்த சாற்றில் நிறைய மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. மேலும் எலுமிச்சை உடல் நலத்தை மட்டுமல்லாமல் சரும அழகையும் பாதுகாக்க கூடியது. இப்படி பல மருத்துவ பயன்பாடுகளை உள்ளடக்கிய எலுமிச்சையின் சில நன்மைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அதைத் தெரிந்து, இனிமேல் அதனை உணவில் அதிகம் சேர்த்து, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.
 
 
 
1. குடலை சுத்தப்படுத்துதல்: எலுமிச்சையின் கசப்பு சுவை, குடல் தசையின் இயக்கம் திறனை அதிகரித்து, குடலில் இருந்து கழிவை அகற்றும் முறையை மேம்படுத்துகிறது. அதற்கு எலுமிச்சையின் சாற்றை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து, தினமும் காலையில் முதல் வேலையாக குடிக்க வேண்டும்.
 
2. புற்றுநோய்: லிமொனின் (Limonene) உட்பட 26 வகை புற்றுநோய் எதிர்ப்பு கலவைகள் எலுமிச்சையில் உள்ளன. இவற்றில் இயற்கையாகவே இருக்கும் எண்ணெய், உடலில் புற்றுநோய் கட்டிகள் வராமல் தடுக்கின்றன. எலுமிச்சையில் உள்ள ஃப்ளேவோனால் க்ளைகோசைட் (Flavonal Glycoside) புற்று கட்டியில் உள்ள அணுக்கள் அதிகரிக்காமல் தடுக்கின்றன.

3. ஜலதோஷம் மற்றும் காய்ச்சல்: எலுமிச்சையில் வைட்டமின் சி மற்றும் ஃப்ளேவோனாய்டு (Flavanoid) அதிகம் உள்ளன. இவைகள் நோய் தொற்றுக்கு எதிரான கலவைகள். ஆகவே எலுமிச்சையை அதிகம் சேர்த்தால், ஜலதோஷம் மற்றும் காய்ச்சலை தடுக்கலாம்.
4. கல்லீரல் பிரச்சனைகள்: ஒரு டம்ளர் அளவு தண்ணீரில் எலுமிச்சை சாற்றை கலந்து, காலையில் குடித்து வந்தால், கல்லீரலில் இருக்கும் நச்சுதன்மை நீங்கும்
5. ஊட்டச்சத்துக்கள்:  எலுமிச்சையில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை வைட்டமின் சி, சிட்ரிக் அமிலம், ஃப்ளேவோனாய்டுகள், பி காம்ப்ளக்ஸ் வைட்டமின், கால்சியம், தாமிரம், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், நார்ச்சத்து போன்றவை.
6. உடல் வேதியியல் இருப்புகள்: எலுமிச்சை அதிக அமிலத்தன்மை உடையது என்பதால், ஜீவத்துவ பரிணாமத்துடன் சேர்ந்து உடல் திரவங்களின் கார நிலையை சமன்படுத்துகிறது.
7. ஒவ்வாமை/அலர்ஜி: எலுமிச்சையில் உள்ள பைட்டோ நியூட்ரியன்ட்டுகள், உடலில் ஏற்படும் அலர்ஜி அறிகுறிகளை தடுக்க உதவுகிறது என்று ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
 
8. மூளை மற்றும் நரம்பு மண்டல சீர்குலைவுகள்: எலுமிச்சையின் தோல் பகுதியில் உள்ள பைட்டோ நியூட்ரியன்ட்டு டாங்கரெட்டின் (Phytonutrient Tangeretin) பார்கின்சன் நோய் (Parkinson's Disease) போன்ற மூளை கோளாறுகளை சரிசெய்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
 
9. கண் / பார்வை கோளாறுகள்: எலுமிச்சையில் காணப்படும் இரசாயன கலவையான ருட்டின் (Rutin), நீரிழிவால் ஏற்படும் விழித்திரை நோயை கூட குணபடுத்தும்.
 
10. ஆன்டி வைரஸ் (Anti Virus): எலுமிச்சை ஜலதோஷம் மற்றும் காய்ச்சலுக்கு எதிராக இருப்பதைத் தவிர, அதில் இருக்கும் டெர்பின் லிமினாய்டு (Terpin Liminoids) எனப்படும் தாவர இரசாயனங்கள் மற்ற வகை வைரஸ்களுக்கு எதிரானவை என்று ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது
11. நீரிழிவு நீரிழிவு: நோயால் ஏற்படும் கண் கோளாறுகளை குணப்படுத்துவது மட்டுமல்லாமல், எலுமிச்சையில் இருக்கும் ஹேஸ்பரெட்டின் (hesperetin) இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது, அதை குறைக்க உதவுகிறது.
12. பித்தப்பை மற்றும் சிறுநீரக கற்கள்: எலுமிச்சையில் காணப்படும் சிட்ரிக் அமிலம் பித்தப்பை கற்கள், கால்சியம் படிகங்கள் மற்றும் சிறுநீரக கற்களை கரைக்க உதவுகின்றது.
 
13. முதுமை தடுக்கும்: எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி, முதுமையை ஏற்படுத்தும் அணுக்களை சமன்படுத்தி, இளமையை நீண்ட நாட்கள் தக்க வைக்கும்