ஞாயிறு

சிறுநீரக கற்களை கரைக்கும் வீட்டு வைத்தியம்

 இன்றைக்கு பரவலாக அனைவரையும் தாக்கும் நோயாக மாறி வருகிறது சிறுநீரக நோய்கள்.

நாம் உண்ணும் உணவில் கால்சியம், பாஸ்பேட், யூரியா, ஆக்சலேட் போன்ற தாது உப்புகள் உள்ளன.

உணவு செரிமானம் ஆன பின்னர் இவை சிறுநீரில் வெளியேறிவிடும், சில நேரங்களில் ரத்தத்தில் இவைகளின் அளவு அதிகரிக்கும் போது சிறுநீரில் வெளியேறுவதற்கு சிரமப்படும்.

இதன்போது இவை ஒன்று திரண்டு சிறுநீர்ப் பாதையில் கற்களை உருவாக்குகின்றன.

சிறு கடுகு அளவில் ஆரம்பித்து பெரிய நெல்லிக்காய் அளவில் கூட கற்கள் வளரும்.

சிறுநீரக பாதையில் உருவான இக்கற்கள் முதலில் சிறுநீர் ஒட்டத்தை தடை செய்யும், இதனால் சிறுநீரகத்திலோ, சிறுநீர்ப் பையிலோ சிறுநீர் தேங்கும்.

இதனை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தடுக்க வேண்டியது அவசியம், இல்லையெனில் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக்கூடும்.

வீட்டு வைத்தியம்

  • சிறுநீரகக் கல் வந்துவிட்டால் திரவ உணவுகளான இளநீர், சிட்ரஸ் பழச்சாறுகள், வாழைத்தண்டுச் சாறு, பார்லி தண்ணீர், நீர்மோர் போன்றவற்றை அதிக அளவில் அருந்த வேண்டும்.
  • நார்ச்சத்து மிகுந்த கம்பு, சோளம், குதிரைவாலி, தினை, சாமை போன்ற சிறுதானிய உணவுகளை அதிகப்படுத்திக்கொள்ள வேண்டும்.
  • தினசரி மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும், கோடை காலத்தில் தினமும் ஒரு இளநீரும், மற்ற காலங்களில் வாரத்திற்கு, 2 முறையாவது குடிக்க வேண்டும்.
  • பார்லியை நன்கு வேக வைத்து, நிறைய தண்ணீரோடு குடித்து வந்தால் அதிக சிறுநீர் வெளியேறி, சிறுநீரகத்தில் உப்பு சேர்வது தடுக்கப்படும். வாரத்தில் ஒருமுறை இதை செய்யலாம்.
  • அகத்தி கீரையுடன் உப்பு, சீரகம் சேர்த்து வேகவைத்து, அந்த நீரை அருந்தலாம்.
  • வாழைத்தண்டு முள்ளங்கி சாறு, 30 மிலி அளவு குடித்து வந்தால் சிறுநீரக கோளாறு நீங்கும். சிறுநீர் நன்றாக பிரியும்.
  • வெள்ளரிப்பிஞ்சு, நீராகாரம், சிறுநீரக பிரச்னைகளுக்கு அருமருந்து, புதினா கீரையை தொடர்ச்சியாக, சாப்பிட்டு வந்தால் சிறுநீரகங்கள் பலப்படும்.
  • பிரஞ்சு பீன்ஸின் விதைகளை நீக்கிவிட்டு நன்றாக கொதிக்க வைத்து அதை நன்றாக அரைத்து தினம் 3 நேரம் குடித்து விட்டு 15 நிமிடம் கழித்து 4 தம்ளர் நீர் அருந்தவும், சிறுநீர் கற்கள் உடைபட்டு சிறுநீருடன் வெளிவந்துவிடும்.
  • துளசி இலையின் சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து ஆறு நாட்கள் உட்கொண்டால் சிறுநீரகக்கல் உடையும்.
  • மாதுளம் பழத்தின் விதையை பிழிந்து 2 ஸ்பூன் கொள்ளு சாருடன் (ஒன்றுக்கு இரண்டு என்ற விகிதாசாரத்தில்) சேர்த்து சாப்பிட்டால் கல் கரையும்.
  • அத்திப்பழத்தை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு மாதம் காலையில் வெறும் வயிற்றில் அருந்தி வரலாம்.

கோடைக்காலத்தில் சிறந்த உணவு, நுங்கு பயன்கள்...

 கோடைக்காலத்தில் ஏற்படும் வெய்யிலின் தாக்கத்திற்கு சிறந்த உணவு என்றால் அது நுங்கு தான். இந்த நுங்கு அனைவரும் விரும்பும் ஒன்று. நுங்கின் சுவை மிகவும் தனித்துவமானது, இதில் ஏராளமான நன்மைகள் உள்ளது.

கோடை காலத்தில் நமது உடலுக்கு அதிக நீர்ச்சத்து தேவைப்படுகிறது. பனை நுங்கில் அதிக நீர்ச்சத்து உள்ளது.

தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் இதில் நிறைந்துள்ளது, சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நுங்கு ஆரோக்கியமான உணவாகும். இதில் வைட்டமின் பி மற்றும் சி, இரும்பு, துத்தநாகம், பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ், மற்றும் தயாமின் ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளது.

நுங்கு உடலில் இருக்கும் வெப்பத்தை தனித்து உடலை குளிர்ச்சியடையச் செய்யும். கோடைகாலங்களில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் குளிர்பானங்களை தவிர்த்து, இயற்கையாக கிடைக்கும் நுங்கை சாப்பிடுங்கள். நுங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் (benefits of eating palm fruit) பற்றி காண்போம்.

palmyra fruit benefits in tamil

நுங்கின் பயன்கள்

ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது

பனை நுங்கு  வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் வளமான மூலமாகும். இதில் வைட்டமின்கள் பி மற்றும் சி, இரும்பு, பொட்டாசியம், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன, இவை அனைத்தும் நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்க இன்றியமையாதவை.

உடலுக்கு குளிர்ச்சி தரும்

நுங்கு(Nungu) ஒரு இயற்கையான குளிர்ச்சி நிறைந்த பழமாகும். இது கோடை காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. உடல் வெப்பம், நீரிழப்பு, வறண்ட சருமம், சிறுநீரக செயலிழப்பு மற்றும் முடி உதிர்தல் போன்ற பல வெப்பம் தொடர்பான பிரச்சனைகளைத் தடுக்கவும் இது உதவுகிறது.

இது உங்கள் உடலை ஹைட்ரேட் செய்வது மட்டுமல்லாமல், அதிகப்படியான வியர்வையால் இழக்கப்படும் ஊட்டச்சத்துக்களை மீட்டு தருகிறது. நுங்கு உங்கள் தாகத்தைத் தீர்த்து, நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பதற்கான ஆற்றலை உங்களுக்கு வழங்குகிறது.

தோல் சம்மந்தமான நோய்களுக்கு சிறந்தது 

நுங்கு கோடைக்காலத்தில் ஏற்படும் உஷ்ணத்தை தணிப்பதற்கு சிறந்த வீட்டு மருந்தாகும். நுங்கின் சாரை நமது தோலின் பாதிக்கப்பட்ட பகுதியில் தடவினால், அது ஒரு நல்ல விளைவைக் தரும்.

கோடைகாலத்தில் ஏற்படும் வியர்க்குரு மற்றும் அரிப்பு போன்ற தோல் சம்மந்தமான நோய்களுக்கு நல்ல மருந்தாகும். அம்மை போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

வயிற்றுப் பிரச்சனைகளுக்கு தீர்வு

கோடைக்காலத்தில் உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க பனை நுங்கு நன்மை தரும். இது உடலின் இழந்த தாதுக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களை சரிசெய்கிறது மற்றும் சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் அல்லது வலி ஏற்படுவதை குறைக்கிறது. வெயிலினால் ஏற்படும் உடல் சோர்வைத் தடுக்கிறது.

கர்ப்பிணிகள் நுங்கு சாப்பிட்டால், செரிமானம் அதிகரிப்பதுடன், மலச்சிக்கல் மற்றும் அசிடிட்டி போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

எடையைக் குறைக்க உதவுகிறது

நுங்கு குறைந்த கலோரி உள்ள பழமாகும், இது உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு நன்மை தரும். நுங்கில் நீர்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது, இது உங்கள் வயிற்றை நீண்ட நேரத்திற்கு முழுமையாக வைத்திருக்க உதவுகிறது. இது ஆரோக்கியமான உடல் எடையை பராமரிப்பதில் அதிக பங்களிக்கிறது. அடிக்கடி சிற்றுண்டி சாப்பிடுவதைத் தடுக்க உதவுகிறது.

நுங்கின் மருத்துவ குணம்

நுங்கு, ஐஸ் ஆப்பிள், பனை பழம் அல்லது தால் என்றும் அழைக்கப்படுகிறது, இது இந்தியா, இலங்கை மற்றும் தென்கிழக்கு ஆசியா உள்ளிட்ட உலகின் வெப்பமண்டல பகுதிகளில் பிரபலமான பழமாகும். இது ஒரு புத்துணர்ச்சியூட்டும் கோடைகால பழமாகும், இது அதன் தனித்துவமான சுவை மற்றும் ஆரோக்கிய நன்மைகளுக்கு பெயர் பெற்றது. இந்த கட்டுரையில், நுங்குவின் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை பற்றி தெரிந்துகொள்வோம்.

நீரேற்றத்திற்கு உதவுகிறது

நுங்கு நீர் மற்றும் தாதுக்களின் சிறந்த மூலமாகும், இது வெப்பமான கோடை நாட்களில் தாகத்தைத் தணிக்க ஒரு சிறந்த பழமாக அமைகிறது. இது ஒரு இயற்கை குளிர்விப்பான் என்று அறியப்படுகிறது மற்றும் உடல் வெப்பத்தை குறைக்க உதவும்.

செரிமானத்தை மேம்படுத்துகிறது

நுங்குவில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது, இது செரிமானத்திற்கு ஒரு சிறந்த உணவாக அமைகிறது. நார்ச்சத்து செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது மற்றும் மலச்சிக்கலைத் தடுக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

நுங்குவில் வைட்டமின்கள் சி மற்றும் ஏ நிறைந்துள்ளது, இவை இரண்டும் ஆரோக்கியமான நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு அவசியம். நுங்குவை தவறாமல் சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், பல்வேறு நோய்களிலிருந்து உடலைப் பாதுகாக்கவும் உதவும்.

சருமத்திற்கு நல்லது

நுங்குவில் உள்ள வைட்டமின் சி ஒரு ஆக்ஸிஜனேற்றியாக அறியப்படுகிறது, இது ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து சருமத்தைப் பாதுகாக்க உதவுகிறது. இது ஆரோக்கியமான சருமத்திற்கு அவசியமான கொலாஜன் உற்பத்திக்கு உதவுகிறது.

எடை இழப்புக்கு உதவுகிறது

நுங்கு ஒரு குறைந்த கலோரி பழமாகும், இது நார்ச்சத்து அதிகம், இது எடை இழப்பு உணவில் ஒரு சிறந்த கூடுதலாக அமைகிறது. நுங்குவில் உள்ள நார்ச்சத்து வயிற்றை நீண்ட நேரம் நிரப்ப உதவுகிறது, மேலும் சாப்பிடுவதற்கான தூண்டுதலைக் குறைக்கிறது.

இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது

நுங்குவில் பொட்டாசியம் நிறைந்துள்ளது, இது இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது. நுங்குவை தவறாமல் சாப்பிடுவது உயர் இரத்த அழுத்தம் மற்றும் பிற இருதய நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவும்.

தாதுக்கள் நிறைந்தது

நுங்கு கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்பு போன்ற தாதுக்களின் நல்ல மூலமாகும். இந்த தாதுக்கள் உடலின் சரியான செயல்பாட்டிற்கு அவசியம் மற்றும் ஆரோக்கியமான எலும்புகள், பற்கள் மற்றும் தசைகளை பராமரிக்க உதவுகின்றன.

வீக்கத்தைக் குறைக்கலாம்

பனை பழத்தில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருக்கலாம் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன, இது உடல் முழுவதும் வீக்கத்தைக் குறைக்கவும் நாள்பட்ட நோய்களைத் தடுக்கவும் உதவும்.

எலும்பு ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது

பனை நுங்கு  கால்சியம் மற்றும் மெக்னீசியத்தின் நல்ல மூலமாகும், இவை இரண்டும் ஆரோக்கியமான எலும்புகளை பராமரிக்க முக்கியமானவை. இந்த தாதுக்கள் எலும்புகளை வலுப்படுத்த உதவுகின்றன மற்றும் ஆஸ்டியோபோரோசிஸைத் தடுக்க உதவும்.

நுங்கு ஒரு சுவையான மற்றும் சத்தான பழமாகும், இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு சிறந்தது. அதன் அதிக நீர் உள்ளடக்கம், நார்ச்சத்து மற்றும் தாதுக்கள் செரிமானம், எடை இழப்பு மற்றும் நீரேற்றத்திற்கு ஒரு சிறந்த உணவாக அமைகிறது.

கூடுதலாக, அதன் வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும் ஆரோக்கியமான சருமத்தை மேம்படுத்துவதற்கும் ஒரு சிறந்த பழமாக அமைகின்றன.

Thanks Thiru

உங்கள் வீட்டில் இருக்கும் மின் சாதனங்கள் எவ்வளவு யூனிட் கன்ஸ்யூம் பண்ணுதுனு தெரிஞ்சுக்கணுமா?

வீட்டில் உள் மின் சாதனப் பொருட்களான கிரைண்டர், மிக்ஸி, மைக்ரோவேவ் ஓவன், வாட்டர் கீட்டர், மோட்டார் மற்றும் ஏர் கண்டிஷனர் போன்ற சாதனங்கள் தனித்தனியாக எவ்வளவு யூனிட் கன்ஸ்யூம் பண்ணுதுனு தெரிஞ்சுக்கணும்னு எல்லோரும் நினைப்போம். எந்த மின் சாதனம் அதிக யூனிட் கன்ஸ்யூம் பண்ணுதுனு தெரிந்துகொண்டால் அதை சற்று குறைத்து மின் கட்டணத்தை குறைக்க முடியும். ஆனால் ஒவ்வொரு சாதனத்தையும் தனித்தனியா பார்த்து தெரிஞ்சுக்கறது என்பது சவாலான ஒன்று.

இதற்க்கு ஒரு ஸ்மார்ட் பிளக் அறிமுகமாகியுள்ளது. உதாரணத்திற்கு Wipro Smart Plug அந்த ஸ்மார்ட் பிளக்கை பயன்படுத்தி எந்த மின் சாதனம் எவ்வளவு யூனிட் கன்ஸ்யூம் பண்ணதுன்னு தெரிந்துகொள்ளலாம்.
16A ஸ்மாட் பிளக் பாயிண்ட் வாங்கி வீட்டில் இருக்கும் மின் சாதனங்கள் ஒவ்வொன்றும் என்ன மாதிரி மின் நுகர்வு செய்துன்னு தெரிஞ்சுக்கலாம்.

இந்த ஸ்மார்ட் பிளக்கை எங்கிருந்து வேண்டுமானாலும் உபயோகிக்கலாம். உங்களது ஸ்மார்ட் போனில் ஆப் மூலம் கட்டுப்படுத்த முடியும். உங்கள் மின் சாதனங்கள் தேவையில்லாமல் ஆன்ல இருந்தால் அதை உங்கள் ஸ்மார்ட் போன் மற்றும் வாய்ஸ் கண்ட்ரோல் மூலம் ஆஃப் செய்ய முடியும். இதனால் உங்கள் மின் கட்டணத்தை குறைக்க முடியும்.

இன்னொரு முக்கியமான விஷயம் ஒன்று இருக்கு , அது என்னனா உங்க வீட்டு மின் சாதனம் எத்தனை மணிக்கு ஆன் ஆகணும் எப்ப ஆஃப் ஆகனும்னு என்பதை இந்த ஸ்மார்ட் ஆப் மூலமா schedule பண்ணிக்கலாம். இதை உபயோகிக்க இன்டர்நெட் வசதி வேண்டும்.

Electricity bill-யை அதிகமாக்கும் ஒரு சாதனம் AC. இதை கவனமாக பயன்படுத்தினாலே நமது மின் கட்டணத்தை குறைக்க முடியும். AC உபயோகிக்கும் போது கதவு மற்றும் சன்னலை நன்றாக மூடி வைக்க வேண்டும். ஏ.சியை 24°C செட் செய்ய வேண்டும். தூங்கிய பிறகு ஆப் ஆகுற மாதிரி டைமர் செட் செய்ய வேண்டும். அதனுடன் இந்த ஸ்மார்ட் பிளக்கை பயன்படுத்தினால் மேலும் கரண்ட் பில்லை பாதியாக குறைக்க முடியும்.




சனி

முழு ஆரோக்கியத்துடன் வாழ உங்களுக்கு ஆசையா?

 வேக வேகமாக இயங்கிக் கொண்டிருக்கும் இந்த உலகத்தில் ஆரோக்கியத்தின் மீது அக்கறை காட்டுபவர்களுடைய எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. 

இரவு உணவிற்கு பின் செய்ய வேண்டியது என்ன? இரவு சாப்பிட்ட பிறகு சிறிது நேரம் கூட கேப் கொடுக்காமல், சில பேர் அப்படியே படுத்து உறங்கி விடுவார்கள். இது ஆரோக்கியத்திற்கு ரொம்ப ரொம்ப கேடு விளைவிக்கும் விஷயம். சாப்பிட்ட பிறகு சிறிது நேரமாவது நடை பயிற்சி செய்ய வேண்டும். வெறும் பத்து நிமிடம் இருந்தால் கூட போதும். இரவு உணவிற்கும், தூங்கும் நேரத்திற்கும் இடையே நீங்கள் செய்யக்கூடிய இந்த சின்ன நடை பயிற்சி நிறைய அளவில் நன்மையை கொடுக்கும். அது என்னென்ன நன்மைகள் என்று இந்த பதிவை படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள். 

வயிறு உப்புசம் மற்றும் மலச்சிக்கலை தவிர்க்க: இரவு சாப்பிட்ட பின்பு நடப்பதன் மூலமாக நமக்கு செரிமானம் சீர்படுத்தப்படுகிறது. நாம் சாப்பிட்ட உணவில் இருந்து கிடைக்கப்பெற்ற ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் சரியான வகையில் ரத்தத்தை சென்றடையும். இதனால் வயிறு சம்பந்தப்பட்ட எந்த ஒரு பிரச்சனையும் வராமல் இருக்கும். செரிமானம் ஆகாமல் வயிறு உபாதைகள் எதுவும் ஏற்படுவதற்கு வாய்ப்பே இல்லை. தேவையற்ற எடை குறைய: சாப்பிட்ட பிறகு நடப்பதால் உடலில் மெட்டபாலிசம் அதிகரிக்கும். கல்லூரிகள் குறையும். இதனால் உடம்பில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகள் சுலபமாக கரையும். அதிக எடை உள்ளவர்கள் சாப்பிட்ட பிறகு தூங்க செல்லக்கூடாது. சரியான அளவு எடை கொண்டவர்கள் சாப்பிட்ட பிறகு தினமும் தூங்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால், சீக்கிரம் குண்டாவதற்கு வாய்ப்பு உள்ளது. இரவு சாப்பிட்ட பிறகு நடப்பதன் மூலம் தேவையற்ற எடையை குறைப்பதற்கும் ஒரு வழி கிடைக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க: இரவு சாப்பிட்ட பிறகு நடப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதாகவும் நமக்கு சொல்லப்பட்டுள்ளது. காரணம் நாம் இரவு சாப்பிட்ட பின்பு நடக்கும்போது, நம் உடலில் இருக்கும் நச்சுக்கள் வெளியேற்றப்படுவதால் உள் உறுப்புகள் எல்லாம் சரியான முறையில் செயல்படும். ரத்த ஓட்டம் சீராகும். இதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கப்படும். சீக்கிரமாக காய்ச்சல், சளி, இரும்பல் என்று நோய்வாய்ப்படாமல் உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ளலாம்.

சர்க்கரை நோய் வராமல் தடுக்க: இன்று சர்க்கரை நோய் இல்லாதவர்களே இந்த உலகத்தில் இல்லை என்ற சூழ்நிலை வந்துவிடும் போல. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வரம்பு இல்லாமல் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். நாம் உணவு சாப்பிட்ட அடுத்த அரை மணி நேரத்தில், உடம்பில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவுகள் அதிகமாக ஆரம்பித்து விடும். ஆகவே சாப்பிட்ட பிறகு இரவு நேரத்தில் நீங்கள் நடைப்பயிற்சியை மேற்கொண்டால் ரத்தத்தில் இருக்கும் குளுக்கோஸின் அளவு கட்டுக்குள் வரும். இதன் மூலம் சர்க்கரை நோயை வரவிடாமல் தடுக்கவும் வாய்ப்பு உள்ளது. 

மன அழுத்தம் நீங்க: பொதுவாகவே இன்றைய சூழ்நிலையில் இரவு மன அழுத்தம் காரணமாக படுத்தவுடன் நல்ல தூக்கம் வராமல் அவதிப்பட கூடிய நிலைமை நிறைய பேருக்கு உள்ளது. இப்படி இரவு சாப்பிட்ட பிறகு நடப்பதால் உடலுக்கு ஆரோக்கியம் கிடைப்பதோடு சேர்த்து, மனதிற்கு அமைதியும் புத்துணர்ச்சியும் கிடைக்கும். ஒரே கல்லில் இரண்டு மாங்காய். இரவில் சரியாக ஆழ்ந்த தூக்கம் வராதவர்கள் கூட, ஒரே ஒரு நாள் மட்டும் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு 10 லிருந்து 15 நிமிடங்கள் நடந்து விட்டு, வந்து தூங்கி பாருங்களேன். உங்களுடைய மன அழுத்தம் குறைந்து, இரவில் நல்ல தூக்கம் கிடைக்கும். நிம்மதியான ஆழ்ந்த தூக்கத்திற்கு, இரவு நடை பயிற்சி நிச்சயம் உங்களுக்கு கை கொடுக்கும். 

நள்ளிரவில் வரும் பசியை குறைக்க: சில பேர் நடுராத்திரியில் கூட எழுந்து சாப்பிடுவார்கள். நடுராத்திரி பசிக்கும் போது ஸ்னாக்ஸ் சாப்பிடும் இந்த பழக்கம் ரொம்ப ரொம்ப தப்பு. நடு ராத்திரி எழுந்து ஸ்னாக்ஸ் சாப்பிடவே கூடாது. அதுவும் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையில்லாத ஒரு பிரச்சனையை கொண்டு வரும். இப்படி சாப்பிடுவதன் மூலம் உடல் எடையும் அதிகரிக்க தான் செய்யும். இரவு சாப்பிட்ட பிறகு சிறிது நேரம் நடந்து விட்டு தூங்கச் சென்றால், நல்லிரவில் வரும் பசியை கூட கட்டுப்படுத்த முடியும் என்று சொல்லப்பட்டுள்ளது. 

முயற்சி செய்து பாருங்கள். இரவு சாப்பாட்டுக்கு பிறகு நடப்பதன் மூலம் இவ்வளவு நன்மைகள் இருப்பது உங்களுக்கு புரிந்ததா. இதையும் படிக்கலாமே: நல்லபடியாக குழந்தை பிறக்க, கர்ப்பிணி பெண்கள் எந்த திசையில் தலை வைத்து தூங்க வேண்டும்? பிரசவ காலத்தில் பிரச்சனை வராமல் இருக்க, இந்த தவறுகளை கர்ப்பிணி பெண்கள் செய்யவே கூடாது. நிச்சயம் இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். எந்த ஒரு பழக்கத்தையும் செய்ய தொடங்குவதற்கு முன்பு தான் சிரமம் தெரியும். சிரமம் பார்க்காமல் இந்த நடை பயிற்சியை மேற்கொண்டு வாருங்கள். நிச்சயம் நிறைவான ஆரோக்கியத்தை பெறுவீர்கள் என்ற தகவலோடு இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.