புதன்

பல நோய்களை தீர்க்கும் வாழைத்தண்டு ஜூஸ்

 இலை, காய், பழம், தண்டு என சகல பாகங்களில் இருந்தும் மனிதர்களுக்கு உணவாவதுடன், சத்துகளையும் அள்ளிக் கொடுப்பது வாழைமரம். அதன் வாழைத்தண்டை ஜூஸ் செய்து குடித்தால் சகல ஆரோக்கியத்தையும் வழங்கும்.

வாழைத்தண்டு ஜூஸ் தொடர்ந்து குடித்து வந்தால் சிறுநீரகத்தில் கல் சேர்வது தடுக்கப்படுவதுடன், சிறுநீரக கல் இருந்தால் அதையும் கரைக்கிறது.

வாழைத்தண்டு ஜூஸில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் எடை குறைக்க விரும்புவோர் காலையிலேயே ஒரு டம்ளர் வாழைத்தண்டு ஜூஸ் குடிக்கலாம்.

வாழைத்தண்டு ஜூஸில் இரும்பு மற்றும் விட்டமின் பி6 இருப்பதால் ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரித்து ரத்தசோகையை குணமாக்குகிறது.

இன்சுலினை மேம்படுத்துவதில் வாழைத்தண்டு ஜூஸ் சிறப்புமிக்கது. இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு உயர்வது தடுக்கப்படும்.

வாழைத்தண்டுடன் சிறிது இஞ்சி சேர்த்து ஜூஸ் செய்து குடித்து வந்தால் வயிற்றில் உள்ள கொழுப்புகள் குறையும்.

மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு வாழைத்தண்டு ஜூஸ் ஏற்றது. மேலும் செரிமான தன்மையை அதிகப்படுத்துகிறது.

வாழைத்தண்டு ஜூஸில் பொட்டாசியம் உள்ளிட்ட சத்துகள் அதிகம் உள்ளதால் வாரத்துக்கு மூன்று முறை அருந்து வந்தால் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கும்.

குடல் முழுவதும் சுத்தமாகி மலச்சிக்கல் இனி எப்போதும் வராமல் இருக்க இயற்கையாக வருடம் 1 முறை இத மட்டும் செய்ங்க

 எப்பொழுதும் காலையில் எழுந்ததும் முதல் வேலையாக காலை கடன் முடிக்க வேண்டும் என்பது தான் சரியான முறையாகும். இதனால் தான் காலை கடன் என்கிற பெயரும் வந்தது. காலையில் எழுந்து மலம் கழிக்கவில்லை என்றாலே, அங்கு உடம்பில் பிரச்சனை இருக்கிறது என்பது தான் அர்த்தம் ஆகிறது. இப்படி குடல் சார்ந்த பிரச்சினைகளை முற்றிலுமாக நீக்கக்கூடிய இயற்கையாக கடைபிடிக்க வேண்டிய ஒரு வழிமுறையை தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

குழந்தைகளாக இருந்தாலும் பெரியவர்களாக இருந்தாலும் காலையில் எழுந்ததும் வருகிறதோ இல்லையோ முதலில் மலம் கழிக்க பழகிக் கொள்ள வேண்டும். ஒரு டம்ளர் அளவிற்கு வெதுவெதுப்பான தண்ணீர் பருகினால் சுலபமாக காலையில் மலம் கழிக்க முடியும். அது மட்டும் அல்லாமல் உடம்பில் இருக்கும் கெட்ட கழிவுகள் அனைத்தும் வெளியேறிவிடும். எனவே காலையில் சூடாக டீ, காபி குடிக்கும் முன்பு ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரை பருகுங்கள். மலம் கழிக்கும் வரை காலை உணவை எடுத்துக் கொள்ள வேண்டாம். மலம் கழித்த பின்னர் காலை உணவை எடுத்துக் கொள்வது தான் முறையாகும். இப்படி முறை தவறி நாம் உணவு பழக்கத்தை கொண்டு வருவதால், நிறையவே பிரச்சனைகளை அனுபவிக்கிறோம். குடல் முழுவதையும் சுத்தம் செய்ய ஆறு மாதத்திற்கு ஒரு முறை குழந்தைகளுக்கு குடற்புழு நீக்கம் செய்யும் மாத்திரைகள் பள்ளிகளில் மற்றும் மருத்துவமனைகளில் வழங்கப்படுகிறது.

வயிற்றை சுத்தம் செய்ய வேண்டும் என்று தான் முன்னோர்கள் விரதம் என்கிற ஒன்றை கடைபிடித்து வந்தனர். மாதம் ஒரு முறையாவது வயிற்றை பட்டினி போட வேண்டும். இதனால் குடல் முழுவதும் மட்டும் அல்லாமல் உடல் முழுவதும் சுத்தமாகி சரீரம் புத்துணர்வு பெறுகிறது. இவ்வளவு சிரமப்பட வேண்டிய அவசியமே இல்லை, நீங்கள் வருடம் ஒருமுறை இந்த விஷயத்தை செய்து பாருங்கள், குடல் முழுவதையும் சுத்தம் செய்து விடும். இது முற்றிலும் இயற்கையான முறை என்பதால் பக்க விளைவுகள் எதுவும் இல்லை.


தீராத மூக்கடைப்பால் அவதிப்படுகிறீர்களா?

 சுவாச பிரச்சனைகள் பெரும்பாலும் தீர்வதற்கு எளிய யோகா போன்றவற்றை மேற்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளும் தீர்வதற்கு ஒரே வழி இதுதான் என்று கூற முடியும். தொடர்ந்து கபாலபாதி என்னும் பிராணயாமத்தை மேற்கொண்டு வந்தால் சுவாச பிரச்சனைகள், மூக்கடைப்பு, அலர்ஜி போன்றவற்றிற்கு நிரந்தரமாக தீர்வு காணலாம். தினமும் காலையில் எழுந்ததும் இந்த பயிற்சியை ஒரு பத்து நிமிடம் மேற்கொண்டால் போதுமானது.




கால்களை கிராஸாக பத்மாசனம் செய்வது போல மடித்து வைத்துக் கொள்ள வேண்டும். நேராக நிமிர்ந்து அமர்ந்து கொள்ள வேண்டும். முதுகு தண்டுவடம் வளையாமல் நேராக இருக்க வேண்டும். கண்களை மூடி, தோள்களை லேசாக விட்டு, இரண்டு கைகளையும் கால் மூட்டின் மீது வைத்து தியானம் செய்வது போல அமர்ந்து கொள்ள வேண்டும். பின் மூச்சை இழுக்கும் பொழுது மிக மிக மெதுவாகவும், மூச்சை விடும் பொழுது சற்று வேகமாகவும், சீராகவும் விட வேண்டும். இதுபோல தினமும் பத்து நிமிடம் செய்த பிறகு நீங்கள் அன்றாட வேலைகளை செய்யலாம். உங்களுடைய உடலில், வாழ்க்கை முறையில் நீங்கள் பல பெரிய மாற்றங்களை சந்திக்கலாம்.
அடிக்கடி மூக்கு துவாரங்கள் அடைத்துக் கொண்டு மூச்சு விடுவதில் சிரமங்கள் ஏற்படுகிறதா? சளி தேக்கம் இருக்கிறதா? சட்டுனு ஒரு சின்ன வெங்காயத்தை கையில் எடுங்கள். தோல் உரித்து அதனுடன் ஒரு இரண்டு மிளகை வைத்து கடித்து மென்று சாப்பிடுங்கள். இரண்டு பக்கமும் வைத்து சுவைக்க வேண்டும். இதனால் அதனுடைய சாறு மற்றும் நெடியானது மூக்கு துவாரங்களுக்குள் செல்லும். மூக்கை லேசாக மூடி கொள்ளுங்கள். காற்று வெளியில் போகக்கூடாது. சாப்பிட்டு முடித்ததும் திறந்து விடலாம். இதனால் மூக்கடைப்பு ஒரே நொடியில் நிவாரணம் காணும்.

ஆயுர்வேத மூலிகைகள் பயன்படுத்தி எடையை குறைக்க

 உடல் எடை அதிகரிப்பால் பல்வேறு வகையான நோய்களுக்கும் தள்ளப்படுகிறோம். ஒருமுறை உடல் எடை கூடி விட்டால் மீண்டும் அதனை குறைப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும். என்னவெல்லாமோ ட்ரை பண்ணிட்டேன் ஆனால் உடல் எடை மட்டும் குறைந்த பாடில்லை என்பவர்கள் ஆயுர்வேத மூலிகைகளை இப்படி பயன்படுத்தி பாருங்கள்.

வெந்தயம்:

ஒரு டம்ளர் முழுக்க தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் அரை டீஸ்பூன் மட்டும் வெந்தயத்தை கழுவி சேர்த்துக் கொள்ளுங்கள். இதை இரவு முழுவதும் ஊற விட்டுவிட்டு மறுநாள் காலையில் வெந்தயத்துடன் அப்படியே சேர்த்து தண்ணீரையும் வெறும் வயிற்றில் குடித்து விட வேண்டும். இதனால் உடல் எடையானது படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். வெந்தயம் செரிமானத்திற்கு உதவுவதால் கொழுப்புகளை தங்க விடாமல் பாதுகாக்கும். பொய் பசியை உண்டாக்காமல் தடுக்கும். வளர்சிதை மாற்றத்தின் விகிதத்தை அதிகரிக்கும். இதில் இருக்கும் கேலக்டோமைன் உடல் எடையை குறைக்க உதவுகிறது. 

திரிபலா:

திரிபலா என்பது தான்றிக்காய், கடுக்காய் மற்றும் நெல்லிக்காய் இந்த மூன்றையும் குறிப்பது ஆகும். இந்த மூன்றும் உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி, உடலை சுத்தப்படுத்துகிறது. மேலும் செரிமானத்தை அதிகரிக்க செய்து எடை இழப்பை ஏற்படுத்துகிறது. வெதுவெதுப்பாக இருக்கக்கூடிய வெந்நீர் அரை டம்ளர் எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் அரை டீஸ்பூன் அளவிற்கு திரிபலா பொடியை சேர்த்து அப்படியே கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து விட வேண்டும். திரிபலா சூரண பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

சாதவரி:

ஆயுர்வேத மருத்துவர்களின் பரிந்துரைப்படி சாதவரிப் பொடியை எடுத்துக் கொள்ள வேண்டும். இதை வெதுவெதுப்பாக இருக்கக்கூடிய தண்ணீர் அல்லது ஒரு டம்ளர் பாலில் கலந்து பயன்படுத்த வேண்டும். இதனால் உடல் எடை கணிசமாக குறைய ஆரம்பிக்கும். நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கும். 

அஸ்வகந்தா:
அஸ்வகந்தா ஆயுர்வேத மூலிகைகளில் மிகச் சிறந்த பலன்களை கொடுக்கக்கூடிய ஒரு அற்புதம் வாய்ந்த பொருளாக இருக்கிறது. இதை மாத்திரை மற்றும் பொடி வடிவங்களில் கிடைக்கிறது. எடை குறைப்பிற்கு பயன்படுத்துபவர்கள் மருத்துவரின் ஆலோசனையை கேட்டு தாராளமாக பயன்படுத்தலாம். பாக்டீரியா, அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் எப்பொழுதும் உடம்பை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ளும். மன அழுத்தத்தை தடுக்கும்.