சனி

தொப்பை குறைய என்னன்ன சாப்பிடலாம்?

இஞ்சி சாறு தேன் கலந்து தினமும் சாப்பிட தொப்பை குறையும்.
அன்னாசிப் பழத்தை சிறு துண்டுகளாக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அன்னாசியுடன் சேர்த்துக் கிளற வேண்டும். பின் ஒரு டம்ளர் நீர் ஊற்றி இரவிலேயே கொதிக்க வைத்து இறக்கி மூடி வைக்க வேண்டும். மறுநாள் காலையில் அதை நன்கு பிழிந்து சக்கையை நீக்கிவிட்டு சாரை வெரும் வயிற்றில் அருந்த வேண்டும். தொடர்ந்து பத்து நாட்கள் மட்டும் இதை அருந்தினால் தொந்தி கரைந்துவிடும். இதோடு யோகா, உடற்பயிற்சி, அளவான சாப்பாடு இவற்றையும் தொடர வேண்டும்.
காலை காலையில் எழுந்த உடன் சூரிய குளியல் பண்ண வேண்டும். அப்புறமா 5டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.. ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீர் எடுத்து அதில் பத்து  துளசி இலைகளை போட்டு ஊறவைத்து காலையில் அந்த தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
காலையில் காப்பி குடிக்கூடாது இதுக்கு பதிலாக சுக்கு காபி குடிக்கலாம்
ஒருமணிநேரம் கழித்து எழுமிச்சை சாறுடன் தேன் கலந்து சாப்பிடலாம்.
காலை 9  மணியளவில்  1 டம்ளர் கேழ்வரகு கஞ்சி அல்லது பார்லி கஞ்சி சாப்பிடலாம். அப்புறம் சாத்துக்குடி ஜூஸை கொஞ்சம் தேன் கலந்து சாப்பிடலாம்.
காலை 10 மணி. – சாம்பல் பூசணி சாறு அல்லது முள்ளங்கி சாறு குடிக்கலாம்
காலை 11 மணி – அவலை ஊறவைத்து அதனுடன்  நாட்டுச் சர்க்கரை ,  வாழைப்பழம்,  கொஞ்சம்  ஏலக்காய் பொடி  எல்லாவற்றையும் சேர்த்து அப்படியே சாப்பிடலாம்.
 மதியம் சாப்பாட்டுக்கு  20 நிமிடத்திற்கு முன்னாடி காய்கறி சாலட் சாப்பிடலாம். அப்புறம் மதிய சாப்பாட்டுக்கு கீரையைப் பாதி வேகவைத்து  அதில் ஊறவைத்த பச்சைப் பாசிப் பருப்பை சேர்த்து அரிசியைக் குறைத்து நிறையக் காய்கறிகள் சேர்த்துச் சாப்பிடலாம்.
மாலை4 மணி : முளைவிட்ட தானியங்கள் ஏதாவது ஒன்றை 4 டீஸ்பூன் எடுத்து அதில் கொத்துமல்லி, புதினா இலைகள், எலுமிச்சைச் சாறு பிழிந்து சாப்பிடலாம். அப்புறம் காப்பிக்குப் பதில் சுக்கு, கொத்துமல்லி கலந்த காப்பி சாப்பிடலாம்.
மாலை 6 மணி : சிறிது வேகவைத்த முளைவிட்ட தானியத்தைச் சாப்பிடலாம்.
இரவு 8 மணி: சாப்பிடுவதற்கு 20 நிமிடத்திற்கு முன்பாக பச்சைக் காய்கறி சாப்பிடலாம.  பசும்பாலுக்குப் பதில் சோயா பால் சாப்பிடலாம். 

பவர்ஃபுல் ஆன்டி கேன்சர் - "காட்டு ஆத்தா"!

இன்றைய உலகில் எவ்வளவோ நவீன மருத்துவ முறைகள் இருந்தாலும், அவற்றையெல்லாம் மிஞ்சுமளவுக்கு புதுப்புது வகை நோய்களும் தோன்றிக் கொண்டுதான் இருக்கின்றன. அப்படிப்பட்ட நோய்களில் 'உயிர்க்கொல்லி நோய்'என அஞ்சப்படும் சில வகைகளில் எல்லா தரப்பு மக்களிடையேயும், வயது வித்தியாசமின்றி பரவி வருவது புற்றுநோயே! ஆரம்ப கட்ட‌த்திலேயே கண்டுபிடித்து தகுந்த சிகிச்சையை உடனுக்குடன் அளித்தால் ஓரளவுக்கு காப்பாற்றிவிடலாம் என்பது ஆறுதலான விஷயமாக இருந்தாலும், அவ்வாறு  தப்பிப் பிழைத்த ஒருசிலரின் நிகழ்வுகளைத் தவிர பல பேருக்கு உயிரைப் பறித்துவிடும் அளவுக்குதான் இதன் தாக்கம் அதிகமாக உள்ள‌து. இதனால் மக்கள் மத்தியில் புற்றுநோய் பற்றிய பயம் என்றுமே மனதில் குடிகொண்டுள்ளது. மேலும் மருத்துவர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் இந்த நோய் கடுமையான ஒரு சவாலாகவும் உள்ளது. ஒரு குறிப்பிட்ட நிலைக்குப் பிறகு அதற்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பயனற்று போய்விடுவதால் மருத்துவர்களால் ஒன்றும் செய்யமுடியாமல் கை விரித்து விடுகிறார்கள்.
பல‌ வகைகளில் உருவாகி மக்களை ஒருகை பார்த்துக் கொண்டிருக்கும் இந்த நோயானது இரத்தப் புற்றுநோய், தோல் புற்றுநோய், எலும்பு புற்றுநோய் என ஆரம்பித்து மனித உடம்பில் எதையும் விட்டு வைக்காமல் ஈரல், நுரையீரல், கணையம், சிறுநீரகம், மூளை, வாய்/பல் ஈறுகள், வயிறு(குடல்), ப்ரெஸ்ட், கருப்பை, கருப்பை வாய், உணவுக்குழாய், புரோஸ்டேட் என அநேக உறுப்புகளையும் தாக்குவதாக உள்ள‌து. இவற்றில் சிலவகை புற்றுநோய் முன் அறிகுறியே இல்லாமல் முற்றிவிட்ட‌ நிலையில் தாக்குவதும் உண்டு. அதனால் எந்த மருந்து புற்றுநோய்க்கென அறிமுகப்படுத்தப்பட்டாலும் அதை மனித நேயமுள்ள அனைவரும் உடனுக்குடன் பகிர்ந்துக் கொண்டு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது இன்றைய காலக்கட்டத்தில் மிக அவசியமான ஒன்றாகும்.


புற்றுநோய் வந்தபிறகு கொடுக்கப்படும் மருந்துகள் மட்டுமே இன்று அறிமுகத்தில் உள்ளன. ஆனால் இதற்கான தடுப்பு மருந்துகள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. அதேசமயம் உணவுப் பொருட்களில் நமக்குத் தெரிந்தவரை காலிஃப்ளவர், கேரட், தக்காளி, லெமன் கிராஸ், மாதுளம்பழம், மரவள்ளிக்கிழங்கு, பப்பாளிப்பழம், பூண்டு, ப்ரோகோலி, அப்ரிகாட் பழமும் அதன் விதையும் என இயற்கையான உணவுகளிலேயே புற்றுநோயின் எதிர்ப்புச் சக்தியை இறைவன் வைத்திருக்கிறான். அவற்றில் மிக சக்தி வாய்ந்த கேன்சர் கொல்லியாக "காட்டு ஆத்தாப்பழம்" கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. (எல்லாப் புகழும் இறைவனுக்கே!)


இந்தப் பழம், கேன்சருக்கு கொடுக்கப்படும் இரசாயன வகை (Chemo) மருந்துகளைவிட 10,000 மடங்கு வலுவான எதிர்ப்புத் திறனைக் கொண்ட ஒரு அற்புதமான இயற்கைப் புற்றுநோய் கொல்லியாக‌ உள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. அவ்வளவு சக்தி வாய்ந்த கேன்சர் கில்லராக இருக்கும் இந்தப் பழம் அமெரிக்காவின் அமேசான் மழைக்காடுகளிலும், கரீபியன் மற்றும் மத்திய அமெரிக்காவிலும், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பரவலாகவும் விளைகிறது.
சகோதர நாடான இலங்கையிலும் மற்றும் வியட்நாம், கம்போடியா, பிரேசில், போர்த்துகல் போன்ற நாடுகளில் பழங்களோடு பழமாக சாதாரண உபயோகத்தில் மட்டுமே உள்ளது. மலேஷியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளில் தெரு வியாபாரிகள்கூட பழ ஜூஸ், ஷர்பத், மில்க் ஷேக் போன்றவை தயாரிக்க சர்வ சாதாரணமாக இந்தப் பழத்தை பயன்படுத்துகிறார்கள். மெக்ஸிகோவில் ஐஸ்கிரீம் வகைகளிலும், ஃப்ரூட் ஜூஸ் பார்லர்களிலும் அதன் சுவைக்காக மிகவும் பிரபலமான‌ பழமாக பயன்படுத்தப்படுகிறது. ஏன், நம் நாட்டில்கேரளாவிலும் "ஆத்தா சக்கா" (aatha chakka) என்ற பெயரில் மக்களின் பயன்பாட்டில் உள்ளது. ஆனால் பெரும்பாலான மக்கள் அதன் பலன் தெரிந்து பயன்படுத்துவதாக தெரியவில்லை. (பலாப்பழத்திற்கு மலையாளத்தில் chakka என்பார்கள். பலாப்பழத்தைப் போன்ற முட்களும், ஆத்தாப்பழத்தைப் பழத்தைப் போன்ற தோற்றமும் கொண்டதாலோ என்னவோ 'பலா ஆத்தா' என்ற அர்த்தம் கொண்ட பெயர் இங்கு அழைக்கப்படுகிற‌து)
இதன் மரம் Graviola Tree என்று அழைக்கப்படுகிறது. பழத்தின் மேற்புறத்தில் பலாப்பழத்தைப் போன்று, ஆனால் சற்று அதிகமான இடைவெளியில் முட்கள் இருக்கும். இவை சாதாரண ஆத்தாப் பழத்தின் அளவுகளிலும், அதிக பட்சம் 20-30 செ.மீ. வரை நீளத்திலும், 2.5 கிலோ எடை வரையிலும் விளைகிறது.


அதிகமான ஊட்டச்சத்துக்களைக் கொண்ட இந்தப் பழத்தில் கார்போஹைட்ரேட், பிரக்டோஸ் மற்றும் கணிசமான அளவில் வைட்டமின் C, வைட்டமின் B1, வைட்டமின் B2 போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளன. அதன் இலைகளும், விதைகளும் வெவ்வேறு மருத்துவ உபயோகத்திற்கு பயன்படுத்தப்பட்டுக் கொண்டுள்ளன. காலை நேரங்களில் பூக்கும் இதன் வெளிர்மஞ்சள் நிறப் பூவானது அருமையான‌ வாசனையுடையதாக இருக்கும்.
மொட்டின் நிலைகளும் அதன் மலரும்:










"காட்டு ஆத்தா"வின் மருத்துவ குணம் எல்லாவிதமான கேன்சர்களையும் குணப்படுத்தக் கூடியதாக அமைந்துள்ளது இறைவன் நமக்குத் தந்த மிகப்பெரிய வரமே! அதுமட்டுமில்லாமல் கேன்சர் இல்லாதவர்கள் (அல்லது இருப்பதை அறியாதவர்கள் யாராயினும்) இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் (இறைவன் நாடினால்) அது கேன்சரைத் தடுக்கும் கேடயாமாகவும் அமைகிறதாம்!
இந்த இயற்கை கீமோ (Chemo)வினால்,
* கடுமையான‌ குமட்டல், வாந்தி, எடை இழப்பு மற்றும் மொத்த முடியும் கொட்டிப் போவது போன்றவை ஏற்படாது. இது இயற்கையான உணவாக இருப்பதால் இரசாயனச் சிகிச்சையான 'கீமோதெரபி' போலல்லாமல், பக்க விளைவுகள் இல்லாத வகையில் பாதுகாப்பான மருந்தாகவும், புற்றுநோய் செல்களை திறம்படத் தாக்கி, அவற்றை அழிப்பதாகவும் உள்ளது.
* சிகிச்சைக்காக இதை எடுத்துக் கொள்ளும் நாட்கள் முழுவதும் உடலின் பலஹீனம் குறைந்து, வலுவாகவும் ஆரோக்கியமாகவும் உணரவைக்கும்.
இதன் மற்ற பொதுவான மருத்துவ குணங்கள்:

* உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பை (Immune System) பாதுகாக்கிறது. அதனால் மற்ற‌ கொடிய நோய்களையும் எதிர்க்கிறது.

* நம் உடம்பின் ஆற்றலுக்கு பூஸ்ட்டாகவும், கண்பார்வையை மேம்படுத்தக்கூடியதாகவும் அமைந்துள்ளது.
* "பூஞ்சைத் தொற்று" என்று சொல்லப்படும் Fungal Infection களையும், பாக்டீரியா தாக்குதல்களால் ஏற்படும் நோய்களையும் குணப்படுத்துவதாக உள்ளது.
* உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.
* மன அழுத்தம், நரம்பு கோளாறுகளை நிவர்த்தி செய்கிறது.
* அனைத்து விதமான கட்டிகளையும் கரைக்கும் தன்மைக் கொண்டது.
* இதய நோய், ஆஸ்துமா மற்றும் நுரையீரல் சார்ந்த பிரச்சனைகளையும் சீர்செய்கிறது.
இந்த மரத்தின் பழங்கள் மட்டுமில்லாமல் இலைகள், வேர்கள், மரப்பட்டை, தண்டுகள், பூ, விதைகள் போன்ற பல்வேறு பாகங்களும் மருத்துவ குணம் கொண்டவையாக உள்ளன. இதன் தாவர‌வியல் பெயர் Annona muricata. இதன் பலனை அனைவரும் அடைந்துக் கொள்ளவேண்டும் என்ப‌தற்காக, இந்தப் பழம் எந்த நாடுகளில்/மொழிகளில், என்னென்ன பெயர்களில் அழைக்கப்படுகிறது என்ற விபரங்களும் தேடியெடுத்து இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. (மற்ற பெயர்களில் உங்களுக்கு தெரிந்தாலும் நன்மையை நாடி பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்)
இலங்கை: "காட்டு ஆத்தா" (சில வட்டாரங்களில் "அன்னமுன்னா பழம்"அல்லது "அண்ணவண்ணா பழம்" என்ற பெயரில் அறிமுகத்தில் இருப்பதாக சொல்கிறார்கள்)
ஆங்கிலம்: "Soursop", "Prickly Custard Apple", "Soursapi"
மலையாளம்: "Aatha Chakka"
பிரெஞ்ச்: "Corossol", "Cachiman Epineux"
அரபி: "سورسوب"
ஸ்பானிஷ்: "Guanábana ", "Anona"
ஜெர்மன்: "Sauersack", "Stachelannone", "Flashendaum"
இந்தோனேஷியா: "Sirsak" & "nangka landak"
பிரேசில்: "Graviola"
மலேஷியா: "Durian Belanda"
கிழக்கு மலேஷியா: "Lampun"
தென் வியட்நாம்: "Mãng cầu Xiêm"
வட வியட்நாம்: "Quả Na"
கம்போடியா: "Tearb Barung" ("Western Custard-apple fruit")
போர்த்துகல்: "Curassol", "Graviola"
இந்தப் பழத்தை சாதாரண ஆத்தாப்பழம் போன்று அப்படியே சாப்பிடலாம். அல்லது நம் ரசனைக்கேற்றபடி மில்க்க்ஷேக், ஷர்பத், டெஸெர்ட், ஐஸ்க்ரீம் என எப்படி வேண்டுமானாலும் தயார்பண்ணியும் சாப்பிடலாம்.




நம் வீடுகளில் போதுமான அளவு தோட்டமிருந்தால் போதும், நாமும் விதைக்கலாம். சிறிய கன்றுகளாக வாங்கியும் நடலாம். அதன் விதைகள்:




இலைகளின் பலன்கள்:
* ஜுரம் வந்தவர்கள் தூங்கச் செல்லும்போது படுக்கைக்கு கீழே அதன் இலைகளை வைத்து, அதன்மேல் மெல்லிய காட்டன் துணியை விரித்து படுத்தால் காய்ச்சலின் தீவிரத்தை பெருமளவில் குறைக்கிறது.
* தூக்கமின்மையால் சிரமப்படுபவர்களுக்கு அதன் இலைகளை சுத்தப்படுத்தி, நீரில் போட்டு கொதிக்கவைத்து (கஷாயமாக) தொடர்ந்து கொடுத்தால் அமைதியான உறக்கத்தைத் தரவல்லது.
* இலையின் சாறு வயிறு சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கும், வயிற்றுப் புழுக்களை அழிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.
* தட்டம்மை ஏற்பட்டவர்களுக்கும், குழந்தைகளுக்கு ஏற்படும்மணல் வாரி அம்மை (அல்லது விளையாட்டு அம்மை)க்கும் இதன் இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, இதமான சூட்டிற்கு ஆறியவுடன் அந்த இலைகளைக் கொண்டே மெதுவாக உடம்பில் தேய்த்து, உடம்பு முழுவதும் அந்த தண்ணீர் படுமளவுக்கு கொஞ்சம் கொஞ்சமாக‌‌ ஊற்றிக் குளிக்க வைக்கவேண்டும். இவ்வாறு செய்வதால் மிக விரைவில் குணம் ஏற்படும்.


இறுதியாக,
எந்த ஒரு நோயும் அதற்குரிய நிவாரணி இல்லாமல் இறக்கப்படுவதில்லை என இஸ்லாம் தீர்க்கமாகக் கூறுகிறது. ஆனாலும் மனிதன் எல்லா நோய்களுக்கும் நிவாரணியை முழுமையாக உடனுக்குடன் கண்டுபிடித்துவிட முடிய‌வில்லை. நோய் அறிமுகமான‌ பிறகே பலவித‌ ஆராய்ச்சிகளில் இறங்கி, கிடைக்கும் முடிவுகளை வைத்து மருந்துகளை சோதனை ஓட்டமாக முதலில் அறிமுகம் செய்து, அதிலும் வெற்றி கிடைத்த பிறகே மருந்துகள் தொடர்ச்சியாக பயன்பாட்டிற்கு வருகின்றன. அதற்குள் பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புகள்கூட ஏற்பட்டுவிடுகின்றன. இவை தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்தாலும், ஒரு நோயைக் குறிப்பிட்டு 'இதற்கு மருந்தே கிடையாது' என்று சொல்வது தற்காலிகமானதே என்று சொல்லலாம்

தெரிந்து கொள்வோம் வாங்க! பகுதி-3

ஆய்வுகளும் கண்டுபிடிப்புக்களும்
1) தொலைநோக்கியை (Telescope) கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு தொலைநோக்கியை கண்டுபிடித்தார்?
Galileo Galilei, Italy, 1593.
2) ஆகாய விமானத்தை கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு ஆகாய விமானத்தை கண்டுபிடித்தார்?
Wright Brothers, America, 1903.
3) துவிச்சக்கர வண்டியை கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு துவிச்சக்கர வண்டியை கண்டுபிடித்தார்?
Macmillan, Scotland, Year ?.
4) மின்பிறப்பாக்கியை (Dynamo) கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு மின்பிறப்பாக்கியை கண்டுபிடித்தார்?
Michael Faraday, England, 1831.
5) டைனமைற்றை (Dynamite) கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு டைனமைற்றை கண்டுபிடித்தார்?
Alfred Nobel, Sweden, 1867.
6) ஒக்சிஜனை (Oxygen) கண்டுபிடித்தவர் யார்? அவர் எத்தனையாம் ஆண்டு ஒக்சிஜனை கண்டுபிடித்தார்?
Joseph Priestley on 01 - August - 1774.
7) தொலைக்காட்சி பெட்டியை கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு தொலைக்காட்சி பெட்டியை கண்டுபிடித்தார்?
John Logie Baird, England, 1926. (Born in Scotland)
8) தொலைபேசியை கண்டுபிடித்தவர் யார்? அவர் எத்தனையாம் ஆண்டு தொலைபேசியை கண்டுபிடித்தார்?
Alexander Graham Bell, 1876.
9) தட்டச்சு இயந்திரத்தை கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு தட்டச்சு இயந்திரத்தை கண்டுபிடித்தார்?
Henry Mill, England, 1714.
10) பென்சிலினை (Penicillin) கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு பென்சிலினை கண்டுபிடித்தார்?
Allen Fleming, Scotland, 1928.
11) மின்மாற்றியை (Transformer ) கண்டுபிடித்தவர் யார்? அவர் எத்தனையாம் ஆண்டு மின்மாற்றியை கண்டுபிடித்தார்?
Michael Faraday, 1831 -- William Stanley, 1885 (Modern Transformer)
12) மின்கலத்தை கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு மின்கலத்தை கண்டுபிடித்தார்?
Anastasio Volta , Italy, 1807.
13) குருதிச் சுற்றோட்டத்தை கண்டுபிடித்தவர் யார்? அவர் எத்தனையாம் ஆண்டு குருதிச் சுற்றோட்டத்தை கண்டுபிடித்தார்?
William Harvey, 1628.
14) புவியீர்ப்பு விசையை கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு புவியீர்ப்பு விசையை கண்டுபிடித்தார்?
Isaac Newton, England, 1687.
15) Transistor இனை கண்டுபிடித்தவர் யார்? அவர் எத்தனையாம் ஆண்டு Transistor இனை கண்டுபிடித்தார்?
மூன்று பௌதீகவியலாளர்களின் கூட்டு முயற்சியால் Transistor கண்டுபிடிக்கப்பட்டது அவர்களின் பெயர் விபரம்:- John Bardeen, Walter Brattain, William Shockley, 1947.
16) கணனியை (Automatic Calculator) கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு கணனியை கண்டுபிடித்தார்?
Wilhelm Schickard , German, 1623.
17) எவறஸ்ற் சிகரத்தை சென்றடைந்த முதல் பெண் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு எவறஸ்ற் சிகரத்தை சென்றடைந்தார்?
Junko Tabei, Japan, 16 - May - 1975.
18) இரசாயணவியலில் நோபல் பரிசு பெற்ற தம்பதிகள் யார்? அவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள்? அவர்கள் எத்தனையாம் ஆண்டு நோபல் பரிசினை பெற்றார்கள்?
Frederic Joliot & Irene Curie, France, 1935.
19) வட துருவத்தை சென்றடைந்த முதல் மனிதன் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எந்த ஆண்டில் வட துருவத்தை சென்றடைந்தார்?
Robert Edwin Peary, American, 06 - April - 1909.
20) துணைக்கோள்களற்ற (Moons) இரண்டு கோள்கள் எவை?
Mercury, Venus.
21) அணு குண்டை கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு அணு குண்டை கண்டுபிடித்தார்?
Robert Oppenheimer, America, 1945.
22) மின் விளக்கை கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு மின் விளக்கை கண்டுபிடித்தார்?
Thomas Alva Edison, America, 1879.
23) ஒலிபெருக்கியை கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு ஒலிபெருக்கியை கண்டுபிடித்தார்?
Horace Short, Britain, 1900.
24) நுணுக்குக்காட்டியை (Microscope) கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு நுணுக்குக்காட்டியை கண்டுபிடித்தார்?
Janssen, Netherlands, 1590.
25) பக்ரீரியாவை கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு பக்ரீரியாவை கண்டுபிடித்தார்?
Leeuwenhock, Netherlands, 1683.
26) வாயு அடுப்பை கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு வாயு அடுப்பை கண்டுபிடித்தார்?
Robert Wilhelm Bunsen, Germany, 1855.
27) இரும்பை கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு இரும்பை கண்டுபிடித்தார்?
Henry Bessemer, England, 1856.
28) Benzene இனை கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு Benzene இனை கண்டுபிடித்தார்?
Michael Faraday, England, 1825.
29) X - ray இனை கண்டுபிடித்தவர் யார்?அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு X - ray இனை கண்டுபிடித்தார்?
Wilhelm Conrad Rontgen, German, 1895.
30) X - ray இனை கண்டுபிடித்தவருக்கு எத்தனையாம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது?
1901 ஆம் ஆண்டு (First Nobel Prize for Physics In History)
தொடரும்...

தெரிந்து கொள்வோம் வாங்க! பகுதி-2

இருமலின் வேகம் மணிக்கு 100 கிலோ மீட்டர்.
* ஒரு சிசுவின் கையில் ரேகைகள் 3-வது மாதத்திலிருந்து உரு வாகின்றன.
* கை, கால்கள் நகங்களின் அடிப்பகுதியிலிருந்து அதன் மேல் பாகம் வரை வளர்வதற்கு 6 மாதங்கள் ஆகின்றன. கால் நகங்களை விட கைவிரல் நகங்கள் வேகமாக வளர்கின்றன.
* ஒரு மனிதனுக்கு சரியாக தினமும் 40 முதல் 100 தலைமுடிகள் உதிர்ந்து விடுகின்றன.
* கம்ப்ïட்டரில் சில மணி நேரங்கள் பணிபுரிந்து விட்டு பார்வையை சில நொடிகள் வெள்ளைநிற காகிதத்தில் செலுத்தினால் அந்தக் காகி தம் இளஞ்சிவப்பு நிறமாகத் தெரியும்.
* ஆண்களின் உடல் பாகத்தில் மிகவும் வளரக்கூடிய முடி, தாடியில் வளரும் முடிதான். ஏனென்றால் ஒருவர் தனது வாழ்நாளில் தாடியை எடுக்காவிட்டால் அது 30 அடி நீளம் வரை வளர்ந்து விடும்.
* 60 வயதாகும்போது நாக்கின் சுவை மொட்டுகளின் பெரும் பகுதி அழிந்து போய்விடுகின்றன.
* மனித தாடை 80 கிலோ எடையை இழுத்து அசைக்கக் கூடிய தாகும்.
* சிரிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.
6 வயது வரை குழந்தைகள் ஒரு நாளைக்கு 300 தடவைகள் சிரிக் கின்றன. 18 வயதைக் கடந்தவர்கள் ஒரு நாளைக்கு 100 தடவை மட்டுமே சிரிக்கிறார்கள்.
* ஒரு மனிதனின் உடம்பில் 600-க்கும் அதிகமான தசைகள் இருக்கின்றன. இது உடல் எடையில் 40 சதவீதமாகும்.
* உலகில் மனிதர்களிடம் பொதுவாக காணப்படும் ரத்த குரூப் ஓ. அபூர்வமான ரத்த குரூப் ஏ-ஹெச். இந்த ரத்த குரூப் கண்டு பிடிக்கப்பட்ட பின்னர் உலகில் மொத்தம் 10 பேரிடம் மட்டுமே இருப்பது அறியப்பட்டுள்ளது.
* மனிதனின் நரம்புகளை ஒட்டு மொத்தமாக நீளமாக்கினால் அது 45 மைல் நீளமாக இருக்கும்.
* மனிதனின் உடலில் ஒரு நிமிடத்திற்கு 300 கோடி அணுக்கள் செத்து மடிகின்றன.
* மனித மூளையில் 85 சதவீதம் தண்ணீர்தான் உள்ளது.
* ஒரு மனிதனின் தலையில் சராசரியாக ஒரு லட்சம் முடிகள் இருக் கும்.
* ஒரு மனிதன் தனது வாழ்நாளில் 16 ஆயிரம் காலன் தண்ணீர் குடிக்கிறார்.
* அமெரிக்கர்கள் தங்கள் வாழ்நாளில் 50 டன் உணவைச் சாப்பிடுகிறார்கள். 13 ஆயிரம் கேலன் திரவப் பொருளைச் சாப்பிடுகிறார்கள்.
* ஒரு கண்ணில் பார்வை போய்விட்டால் பாதி கண் பார்வை போய்விட்டது என்று அர்த்தம் அல்ல. பார்வைத் திறனில் ஐந்தில் ஒரு பங்கு பார்வைதான் குறைந்து போகிறது.
* அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் 6 டிரைவர்கள் இயேசு கிறிஸ்து என்ற பெயரில் டிரைவிங் லைசென்ஸ் பெற்றுள்ளனர்.
* கங்காருக்களால் பின்னோக்கி நடக்க முடியாது.
* ஜெடி என்றொரு மதம் ஆஸ்திரேலியாவில் இருக்கிறது. 70 ஆயிரம்பேர் இந்த மதத்தில் இருக்கிறார்கள்.
* எலித்தொல்லை அமெரிக்காவில் பெருந்தொல்லையாக இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 24 ஆயிரம் பேர் அங்கே எலியால் கடிபடுகிறார்கள்.
* இளம் பருவ ஆண்-பெண்களின் முடியில் 25 சதவீத நீளம் எந்த வித முறிவும் இல்லாமல் இருக்கும்.
* பெரும்பாலான கனவுகள் 5 முதல் 20 நிமிடம் வரை நீடிக்கின்றன.
* பெண் ஒட்டகச்சிவிங்கி குட்டியை ஈன்றெடுக்கும்போது 6 அடி கீழ் நோக்கி விழுகின்றன. ஆனாலும் குட்டிகளுக்கு எந்தக் காயமும் ஏற்படுவதில்லை.
* சுறாமீன்கள் எதிரே வரும் மீன்களை அறிந்து வேட்டையாடுவது எப்படி என்பது தெரியுமா?... வெகு தூரத்தில் இருக்கும் மீனின் இதயத்துடிப்பைக் கூட சுறா மீன்களால் கேட்க முடியும். இதனால் சுறாமீனிடமிருந்து எந்த மீனாலும் தப்பிக்க முடியாமல் போகிறது.
*பெங்குவின் பறவைக்கு ஒரு அபூர்வ மகிமை உண்டு. உப்புத் தண்ணீரைக் கூட அது நன்னீராக மாற்றிவிடும்.
*10 நிமிடம் வீசும் கடும் புயல்காற்று உலகில் உள்ள அணு ஆயு தங்களின் பாதியளவிற்கு இணையான சக்தியை வெளிப்படுத் துகிறது.
*உலகில் 50 சதவீதம் பேருக்கு தொலைபேசி அழைப்பு வரு வதில்லை. அவர்கள் வேறு யாருடனும் தொலைபேசியில் பேசு வதும் கிடையாது.
*ஒவ்வொரு காரும் தனது ஆயுள்காலத்தில் விடும் புகை 40 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுற்றுப்புறச் சூழல் பாதிப்பை உரு வாக்கும்.
அண்டார்டிகா கண்டத்தின் நிலம் மட்டும்தான் இந்த உலகில் எந்த நாடும் உரிமை கொண்டாட முடியாத இடமாகும்.
*மிக அதிகமாக மின்சக்தியை வெளிப் படுத்தும் ஈல் மீன்கள் பிரே சில், கொலம் பிய, வெனிசுலா, பெரு ஆகிய நாடுகளில் காணப் படுகிறது. இந்த ஈல் மீன்கள் வெளிப்படுத்தும் மின்சக்தியின் அளவு 400-முதல் 650 வோல்ட்டுகள் ஆகும்.
*உலகம் முழுவதும் ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக 22 ஆயிரம் செக்குகள் உரியவர்களின் பெயர்களில் வரவு வைக்கப்படாமல் வேற்று நபர்களின் கணக்கில் சேர்க்கப்பட்டு விடுகின் றன.
*மற்ற எந்த மாதங்களையும் விட ஜுலை மாதத்தில்தான் உலகம் முழுவதும் விபத்துக்கள் அதிகம் நடக்கின்றன.
*வவ்வால்கள் குகைக்குள் இருந்து வெளியேறும்போது இடது பக்கமாகவே வெளியேறும்.

தெரிந்து கொள்வோம் வாங்க! பகுதி-1

இரு கண்களுக்கு நடுவில் நெற்றிப் பொட்டில் அவ்வப்போது விரல்களால் அழுத்துவதால் நமக்கு நினைவாற்றல் அதிகரிக்கும். மறந்து போன விஷயங்களை ஞாபகத்துக்கு கொண்டுவர இது உதவும். இந்த இடத்தில்தான் நினைவாற்றலுக்கான அக்குப் புள்ளிகள் உள்ளன. இதனால்தான் மறந்துபோன விஷயங்களை நினைவுக்குக் கொண்டுவர நெற்றியில் விரல் வைத்து தட்டுகிறார்கள். இது முன்னோர்கள் வழியாக நமக்கும் வந்தது.
*வலது கைப்பழக்கம் உள்ளவர் என்றால் சாப்பிடும்போது வாயின் வலது புறத்தில்தான் உணவை மென்று சுவைத்துச் சாப்பிடுவார்கள். அதே சமயம் இடதுகைப் பழக்கம் உள்ளவர்கள் சாப்பிடும்போது வாயின் இடது புறத்தை உபயோகித்து உணவை ருசிப்பது வழக்கம்.
*வெங்காயம் உரிக்கும்போது நமக்கு கண்ணீர் வரும். காரணம் அதில் உள்ள அமிலத்தன்மை. வெங்காயத்தினை உரிக்கும்போது அதில் உள்ள அமிலம் வெளிப்பட்டு காற்றில் கரைந்து உரிப்பவர் மற்றும் அருகில் இருப்பவர் கண்களில் இருந்து கண்ணீரை வரவழைத்து விடுகிறது. வெங்காயம் உரிக்கும்போது சூயிங்கம் மென்றால் கண்களில் இருந்து கண்ணீர் வெளிவராது.
*உங்கள் நாக்கு இளம் சிவப்பு நிறத்தில் இருந்தால் உங்கள் நாக்கு பாக்டீரியா தொல்லையில்லாமல் சுத்தமாக இருக்கிறது என்று அர்த்தம். வெண்மை நிறத்தில் இருந்தால் பாக்டீரியா பாதிப்பு உள்ளது என்று பொருள்.
*வியப்பால் அவள் விழி விரிந்தது என்று கவிஞர்கள் கவிதை புனைவார்கள். விஞ்ஞான ரீதியில் இது உண்மை. அதாவது ஒரு மனிதன் மகிழ்ச்சியான ஒன்றை அல்லது ஆச்சர்யம் தரும் ஒன்றைப் பார்க்கும்போது அவனது கருவிழி 45 விழுக்காடு விரிவடைகிறது என்கின்றனர் விஞ்ஞானிகள்.
*கடலில் கிடைக்கும் சங்கை எடுத்து காதில் வைத்துக் கேட்டால் அதில் இருந்து அலை ஓசை சத்தம் வருவதுபோல கேட்கும். அதனை சிலர் கடல் அலையின் ஓசை என்று நினைப்பார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. காதுகளில் உள்ள ரத்தக் குழாயில் ரத்தம் பாய்ந்து செல்லும் சத்தம்தான் சங்கில் எதிரொலித்து நமக்கு கடலலை ஓசையாகக் கேட்கிறது.
*கேரள மாநிலம் நீலாம்பூர் என்னும் காடுகளில் ஆதிவாசி மக்களின் சில பிரிவினரில் வினோதமான பழக்கம் நிலவுகிறது. இவர்கள் பிறக்கும் குழந்தை களுக்கு உடனடியாக பெயர் வைத்துவிடுவதில்லை. 15 வருடங்கள் ஆன பிறகே பெயர் சூட்டுகிறார்கள். அதுவரை தங்களது குழந்தைகளை மோளே (மகள்), மோனே (மகன்) என்று மலையாளத்தில் அழைக்கி றார்கள். 15 வயதாகும்போது அந்தக் குழந்தையின் தந்தையின் கனவில் கடவுள் தோன்றி `இந்தப் பெயரை உன் குழந்தைக்கு வை' என்று சொல்வாராம். அதன் பிறகே பெயர் சூட்டும் படலம் நடக்கும்.
*ஆயிரக்கணக்கான சிட்டுக்குருவிகளை அறிவியல் ரீதியில் ஆராய்ச்சி செய்ததில் அவைகள் அனைத்தும் கசக்கும் சுபாவமுடைய வேப்பமரத்து இலை-குச்சிகளால் நேர்த்தியாக கட்டியிருப்பது கண்டறியப்பட்டது. மகத்தான மருத்துவ குணம் கொண்ட வேப்பிலையின் கசப்பான நெடிக்கு முட்டைகளையோ, குஞ்சுகளையோ வைரஸ் கிருமிகள் நெருங்குவது கிடையாது. ஆகவேதான் சிட்டுக்குருவிகள் வேப்பிலையால் கூடுகளை கட்டுகின்றன.
*நீரிலும் நிலத்திலும் வாழும் இயல்புடைய தவளைகள் தமது கண்களால் கேட்கவும் செய்கின்றன. தவளைகளின் கண்களே காதுகளாகவும் இயங்குகிறது. தவளைகளுக்கு அதனுடைய கண்களுக்குப் பின்புறம் மூளையிலிருந்து வரும் நுண்ணிய நரம்பு அமைந்துள்ளது. அதன் காதுகளின் பணியிணைச்செய்கிறது.
*கொடிய விஷத்தைக் கொண்ட தேள்கள் சேர்ந்தாற்போல் ஆறு மாதம் கூட உணவு உண்ணாமலே வாழக் கூடிய வல்லமை பெற்றது. விலங்கியல் ஆராய்ச்சியின் போது ஒரு தேள் 420 நாட்கள் எந்த வித ஆகாரமும் இல்லாமல் வாழ்ந்து சாதனை புரிந்தது.
*கண்கவர் நீலகிரி மலைக் காடுகளில் ஒரு வகை பச்சோந்தி வாழ்கிறது. இதனுடைய உடல் நீளம் 5 செ.மீட்டர் தான். இதில் ஒரு வியப்பான செய்தி என்னவென்றால், இதன் நாக்கின் நீளம் 1.25 மீட்டர். இதன் நாக்கு எப்போதும் சுருட்டிய நிலையிலேயே இருக்கும். இது ஒரு மரக்கிளையில் ஒய்யாரமாக உட்கார்ந்தபடியே தனது நீண்ட நாக்கினை நீட்டி மற்ற கிளைகளில் உள்ள புழு, பூச்சிகளை அதில் ஒட்ட வைத்து தின்றுவிடும்
*முதன் முதலில் நீர்மூழ்கி கப்பலுக்கான வரைபடத்தை உருவாக்கியவர் வில்லியம் போர்னே என்னும் இங்கிலாந்துக்காரர். இவர், 1578-ம் ஆண்டு நீர்மூழ்கி கப்பலுக்கான வரைபடத்தை வரைந்தார். எனினும் கார்னிலியூஸ் வான் டிரெப்பல் என்னும் நெதர்லாந்து நாட்டுக் காரர் 1620-ம் ஆண்டு முறையான நீர்மூழ்கிக் கப்பலை வடிவமைத்தவர். நீரில் மூழ்கக் கூடிய ஒரு படகைத் தயாரித்த அவர் அதில் பிராண வாயு கிடைப்பதற்காக நீண்ட குழாயை இணைத்திருந்தார். நீருக்குள் மூழ்கியிருப்பவர் துடுப்பு மூலம் படகை இயக்கவேண்டும். 12 படகோட்டிகளுடன் தான் வடிவமைத்த நீர்மூழ்கிக் கப்பலை அவர் லண்டன் தேம்ஸ் நதியில் இயக்கிக் காட்டினார். 3 மணி நேரம் இந்தக் கப்பல் நீருக்கடியில் இருந்தது.

*ராணுவத்திற்கான நீர்மூழ்கிக் கப்பலை 1776-ம் ஆண்டு டேவிட் புஷ்னல் என்னும் அமெரிக்கர் வடிவமைத்தார். எனினும் சகல வசதிகளுடனும் கூடிய முதல் நீர்மூழ்கிக் கப்பல் ஜான் பி.ஹாலண்ட் மற்றும் சைமன் லேக் என்னும் இருவர் 1890-ம் ஆண்டு ஒரே நேரத்தில் தயாரித்தனர். ஜானின் நீர்மூழ்கிக் கப்பலின் டிசைனை அமெரிக்காவும் சைமன் லேக்கின் வடிவமைத்ததை ரஷியா-ஜப்பான் நாடுகளும் ஏற்றுக்கொண்டு தயாரிக்க ஆரம்பித்தன.
*ஒரு மனிதன் தினமும் சராசரியாக ஒரு மணி நேரம் 6 நிமிடங்களை பயணத்தில் கழிக்கிறான். வருடத்திற்கு ஒவ்வொருவரும் சராசரியாக 12 ஆயிரம் கிலோ மீட்டர்கள் பயணம் செய்கிறார்கள்.உலக அளவில் 53 சதவீதம் பேர் கார்களிலும், 26 சதவீதம் பேர் பஸ்சிலும், 9 சதவீதம் பேர் ரெயிலிலும் இன்னொரு 9 சதவீதம் பேர் விமானங்களிலும் பயணிக்கிறார்கள். சைக்கிள் பயணம் வெறும் 3 சதவீதம்தான். 2050-ம் ஆண்டு அதிகவேக வாகனங்களின் எண்ணிக்கை பல்கிப் பெருகி விடும் என்பதால், அப்போது ஒரு நாளில் ஒருவர் பயணம் செய்யும் நேரம் 12 நிமிடங்களாகக் குறைந்து விடுமாம். அப்போது கார்களில் பயணம் செய்வோர் 35 சதவீதம் பேரும், பஸ்சில் 20 சதவீதம் பேரும் அதிகவேக வாகனங்களில் 41 சதவீதம் பேரும் ரெயிலில் 4 சதவீதம் பேரும் பயணம் செய்வார்கள் என்று மதிப்பிட்டிருக்கிறார்கள࠯?.
*உலகின் முதல் போக்குவரத்து சிக்னல் 1890-ம் ஆண்டு லண்டன் நகரில் பயன் படுத்தப் பட்டது. இதில் ஒரு ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் அப்போது பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருளில் இயங்கும் வாகனங்கள் லண்டனில் எதுவும் கிடையாது. குதிரைகள் இழுத்துச் செல்லும் பஸ்கள் மட்டுமே இயங்கின. அமெரிக்காவில் 1890ம் ஆண்டு இறுதி வாக்கில் தான் கார்கள் அறிமுகமாயின. முதல் தானியங்கி போக்குவரத்து சிக்னல் ஓகியோ மாகாணத்தில் உள்ள கிளீவ்லாண்ட் நகரில் 1920-ம் ஆண்டு பொருத்தப்பட்டது.
*வங்கி முறையிலான கடன் கொடுக்கும் பழக்கம் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஏற்பட்டு விட்டது. பணக் கடன் வழங்கியது, கடனை அடைத்தது போன்றதற்கான ஆதார ரசீதுகள் 14-ம் நூற்றாண்டில் ஏற்பட்டதாகும். காகிதப் பணம் கடன் தருவது 17-ம் நூற்றாண்டில் வேகமாக பரவியது. தானியங்கி பணம் பட்டுவாடா செய்யும் எந்திரங்களில் பணம் எடுப்பதற்கு அட்டை வழங்குவது நமது நாட்டில் 2000-ம் ஆண்டுக்குப் பின்னர்தான் வேகமாக வளர்ச்சி கண்டது. எனினும் அமெரிக்காவில் 1951-ம் ஆண்டிலேயே பணம் எடுக்கும் அட்டைகள் புழக்கத்திற்கு வந்து விட்டன. டைனர்ஸ் கிளப் தனது உணவக வாடிக்கையாளர்கள் 200 பேருக்கு நிïயார்க் நகரில் உள்ள தங்களின் 27 உணவகங்களில் எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளும் கிரடிட் கார்டுகளை வழங்கியது. காந்த பட்டைகளுடன் கூடிய கிரடிட் கார்டு 1970-ம் ஆண்டு புழக்கத்திற்கு வந்தது.
*வாலாட்டிக் குருவி எப்போதும் ஏன் வாலை ஆட்டிக் கொண்டே இருக்கிறது தெரியுமா?...
அது சுவாச உறுப்பாக பெற்றிருப்பது வாலைத்தான். எனவேதான் சுவாசிப்பதற்காக தனது வாலை இடைவிடாது ஆட்டிக் கொண்டே இருக்கிறது

பெண்களைக் குறி வைத்துத் தாக்கும் தைராய்டு!

பெண்களைக் குறி வைத்துத் தாக்கும் நோய்களில் தைராய்டும் ஒன்று. இது நோய்க் கிருமிகளால் தாக்கப்படுவதில்லை அயோடின் குறைவே இதற்குக் காரணம்.கழுத்தில் மூச்சுக் குழலின் கீழே காணப்படும் தைராய்டு சுரப்பிகள்
உற்பத்தி செய்யும் ஹார்மோன்கள் மனித உடலின் இயக்கத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. அயோடின் ஏற்ற இறக்கம் இந்த சுரப்பிகளின் செயல்பாட்டை பாதிக்கிறது. இதனால் தைராய்டு நோய் ஏற்படுகிறது.
தைராய்டு குறைபாடு காரணமாய் பெண்கள் பருவமடையும் வயது தள்ளிப் போக நேரிடலாம், குறைந்த வயதிலேயே வயதுக்கு வருவதும் உண்டாகலாம் என மருத்துவர்கள்  கூறுகின்றனர்.
இன்றுள்ள சூழ்நிலைக்கு 100 க்கு 90 பேருக்கு தைராய்டு பிரச்சினை உள்ளது. உடல் வெயிட் போடுகிறது என்று தெரிந்தவுடன் முதலில் தைராய்டு டெஸ்டு எடுத்து பார்த்துவிட்டு தைராய்டு இல்லையென்றால் வெயிட் குறைவதற்கு எந்த சிகிச்சை நல்லது? என்று தேர்வு செய்து வெயிட்டை குறைப்பது நல்லது. தைராய்டு டி.எஸ்.எச் அளவு அதிகமாக உள்ளது என்று தெரிந்தவுடன் தைராய்டு குறைய ட்ரீட்மெண்ட எடுக்க வேண்டும். டி.எஸ்.எச் அளவு ரத்தத்தில் அதிகமானால் ஹை தைராய்டு (அதிகமான தைராய்டு), கம்மியானால் லோ தைராய்டு உடலில் அயோடின் சத்து குறைந்தால் வீக்கம் வேறு வந்து விடும். சில சமயம் சிறு, சிறு கட்டிகள் தோன்றி கேன்சரா என்று பயம் ஏற்படும். கட்டிகள் என்ன என்பதை ஸ்கேன் மூலம் பார்த்து தெரிவுப்படுத்திக் கொள்ளலாம்.
தைராய்டு சுரப்பி குறைவாக இருந்தால் ஆரம்பத்தில் தெரிந்தோ, தெரியாமல் இருக்கும். முதல் மாற்றம் மாதவிலக்கில் மாற்றம் ஏற்படலாம். (அதிகமாக அல்லது குறைவாக) உடல் பருமன் அதிகமாகி விடும்.

இளம் பெண்களுக்கு கருமுட்டையில் நீர் கட்டிகள் (பாலி சிஸ்டிக் ஓவரியன் டிஸ“ஸ்) இருக்கலாம். சில பெண்களுக்கு குழந்தை பிறப்புக்கு பிறகு தைராய்டு சுரப்பி குறைவாக சுரக்கும். டெலிவரிக்கு பிறகு உடல் குண்டாவது முகம் பருமனாகிவிடும். கைகளில் வீக்கம், கழுத்து பகுதியில் வீக்கம் ஏற்படும். அதிக களைப்பு, குளிர்ச்சியை தாங்க முடியாமல் தோன்றும். கை, கால்கள் உளைச்சல், மூட்டுவலி, ஞாபக மறதி, மனச்சோர்வு அதிகமாகும். சிலருக்கு குரல் மாறும். எச்சில் முழுங்கும் போது வலி ஏற்படும். சருமம் வறண்டு பொலிவு இழந்து காணப்படும். மற்ற நாளமில்லா சுரப்பிகளும் வேலை செய்யாமல் முடி வளர்ச்சி இல்லாமல் முடி கொத்து கொத்தாக கொட்டி சிலருக்கு வழுக்கையே வந்து விடும். கரு முட்டைகள் சரியாக வளர்ச்சியில்லாமல் உடல் பருமன் காரணமாக குழந்தை பிறப்பை தடுத்து விடும்.

டென்ஷன் காரணமாய் தைராய்டு பிரச்சினைகள் வருகிறதென சொல்கிறார்கள் சிலர். சில குழந்தைகள் பிறக்கும் போதே இந்தக் குறைபாட்டுடன் பிறப்பதுண்டு. ஆனாலும் இந்நோய் ஆண்களை விடப் பெண்களை 7 மடங்கு அதிகமாய் தாக்குகிறது. எனவே பெண்கள் இது விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். பச்சைக் காய்கறிகள், பழங்கள், கீரைகள் ஆகியவற்றை தினசரி உணவில் சேர்ப்பதோடு, உடற்பயிற்சியும் செய்ய வேண்டும்.

தைராய்டு சுரப்பி, அதிகமாக சுரந்தாலும், கழுத்து வீக்கம், உடல் சூடு, படபடப்பு, வியர்வை அதிகமாகும். நாக்கு வறண்டு, குமட்டல், வாந்தி கூட வரும். சிலருக்கு குறை பிரசவம், கருச்சிதைவு போன்றவை உண்டாகும். சிலருக்கு கண்கள் பெரிதாக வெளியில் விழும் மாதிரி தோன்றும். பார்வை மங்கும். இந்த தைராய்டு பிரச்சினைக்கு வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிட வேண்டும் என்று பலர் நினைத்து கொள்கிறார்கள். இல்லவே இல்லை. சித்தா மருந்திலிருந்து 3லிருந்து 6மாதம் வரை அவரவர் அளவுக்கேற்ப மருந்து எடுத்துக் கொண்டால் மேல் சொன்ன வியாதிகளை அனைவரும் தவிர்க்கலாம்.

சத்துபவுடர்:
தனியா 100 கிராம், எள் 50 கிராம், மிளகு 10 கிராம், மிளகாய் 10, கறிவேப்பிலை போன்ற சாமான்களை வறுத்து பொடி செய்து வைத்து கொள்ளவும். உப்பும் சேர்த்துக் கொள்ளவும். தினமும் 1 பிடி சாதத்தில் 1 ஸ்பூன், நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிடவும். இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ளவும். தினமும் சாப்பிட்டு வந்தால் பசி மற்றும் பித்த மயக்கம், தலை சுற்றல், வாந்தி, ருசியின்மை குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு கல்லீரல் பிரச்சினை நீக்கி பலப்படுத்துவது உறுதி.

புதன்

கேன்சர் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது!

நீண்ட காலமாக புற்று நோய்க்கு(CANCER) கீமொதெரபீ (CHEMOTHERAPY) சிகிச்சை மட்டுமே உள்ளது என்பதை மறுத்து அதற்கு மாற்று வழி உள்ளது என்பதை ஜான்ஸ் ஹாப்‌கின்ஸ்(JOHNS HOPKINS) சொல்கிறார். இங்கே உங்களின் பார்வைக்காக ஆங்கிலத்தி்லிருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்துள்ளேன்.
கேன்சர் பற்றி ஜான்ஸ் ஹாப்‌கின்ஸ் சொல்வதை கவனியுங்கள்:
1) ஒவ்வொரு மனிதனின் உடம்பிலும் கேன்சர் செல்கள் உள்ளது, அது சாதாரண டெஸ்டில் தெரிய வராது, அவை சில பில்லியன் செல்களாக பெருக்கம் ஆன பின்புதான் தெரிய வரும். கேன்சர் சிகிச்சைக்குப் பின், டாக்டர் நோயாளியின் உடம்பில் கேன்சர் இல்லை என்று சொன்னால், இதற்க்கு உண்மையான அர்த்தம் சோதனையால் அந்த உடம்பில் உள்ள கேன்சர் செல்லை கண்டுபிடிக்கும் படியான எண்ணிக்கையில் இல்லை என்று மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.
2) ஒரு மனிதனின் வாழ்நாளில் 6 முதல் 10 க்கு மேற்பட்ட முறை கேன்சருக்கான செல் உருவாகிறது.
3) ஒரு மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தி (immune system) வலுவாக இருக்கும்போது கேன்சருக்கான செல் அழிக்கப்பட்டு, பெருக்கம் அடைவதற்கான வாய்ப்பும் தடுக்கப்பட்டு, டயுமர்(tumors) ஏற்படுவதற்கான வாய்ப்பும் தடுக்கப்படுகிறது.
4) ஒருவருக்கு கேன்சர் இருக்கிறது என்றால் அவருக்கு பலவிதமான சத்து குறைபாடு (nutritional deficiencies) உள்ளதாக அர்த்தமாகிறது. இதற்கு மரபு, சுற்றுச்சூழல், உணவு மற்றும் வாழ்க்கை முறை காரணிகளாகிறது.
5) சிறப்பான உணவு கட்டுப்பாட்டின் மூலம் நாம் இந்த ஊட்ட சத்து குறைப்பாட்டை நீக்கலாம். தேவையான சத்துள்ள உணவின் மூலமாக நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.
6) கீமொதெரபீ சிகிச்சை வேகமாக வளர்ந்து வரும் கேன்சர் செல்களை மட்டுமல்லாமல், எலும்பு, இரைப்பை போன்றவற்றில் வளரும் ஆரோக்கியமான செல்களையும் அழித்து விடுகிறது. மேலும் குடல், கிட்னி, இதயம், மூச்சுக்குழல் போன்ற பல உறுப்புகளையும் பாதிக்கிறது
7) கேன்சர் செல்லை அழிக்கும் கதிர் வீச்சானது (Radiation), ஆரோக்கியமான செல்கள், உறுப்புகள், திசுக்கள் போன்றவற்றை எரித்தும், வடுக்கள் ஏற்படுத்தியும் அழிக்கிறது
8) ஆரம்பகால கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சை கேன்சர் கட்டியின் (tumor) அளவைக் குறைக்க செய்கிறது. எனினும் நீண்டகால கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சை கேன்சர் கட்டியினை அழிக்க பெரும்பாலும் உதவுவதில்லை.
9) கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சையினால் உடம்பில் வளரும் நச்சு மூலம் நோய் எதிர்ப்பு சக்தியானது அதற்க்கு ஏற்றார் போல் சமரசம் செய்து கொள்ளும் அல்லது அழிக்கப் பட்துவிடும். இதனால் மனிதனுக்கு பலவிதமான பிரச்சனைகளும், நோய்களும் ஏற்படும்.
10) கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சையினால் கேன்சர் செல்கள் எதிர்ப்பு சக்திப் பெற்று நாளடைவில் அழிக்க முடியாமல் போய்விடுகிறது. அறுவை சிகிச்சையும் கேன்சர் செல்கள் மற்ற இடங்களில் பரவ ஒரு காரணமாகி விடுகிறது.
11) கேன்சரை எதிர்த்துப் போராட சிறந்த வழியானது, கேன்சர் செல்கள் பெருக்கம் ஆகக் கூடிய உணவுகளை நாம் உண்ணாமல் தவிர்ப்பதே ஆகும்.
12) இறைச்சியில் உள்ள புரதமானது ஜீரணிக்க கடினமாகவும், ஜீரணமாக அதிக நேரமும் எடுத்துக் கொள்கிறது. மேலும் ஜீரணமாக அதிக செரிமான நொதித் தேவைப்படுகிறது. ஜீரணமாகாத இறைச்சியானது குடலில் தங்கி அழுகி, மெதுவாக நஞ்சாகிவிடுகிறது.
13) கேன்சர் செல்லின் சுவரானது கடினமான புரதத்தால் சூழப்பட்டுள்ளது. எனவே இறைச்சி சாப்பிடுவதை தவிர்ப்பது அல்லது குறைத்துக் கொள்வதால், நொதியானது (enzymes) தனது சக்தியை கேன்சர் செல்லின் கடினமான சுவரை தாக்கி, உடலின் அழிக்கும் செல்லானது (body's own killer cells) கேன்சர் செல்லை அழிக்க உதவியாகிறது.
14) IP6, Flor-ssence, Essiac, anti-oxidants, vitamins, minerals, EFAs etc, போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியைப் பலப்படுத்தி, உடலின் அழிக்கும் செல்கள் (body's own killer cells) மூலம் கேன்சர் செல்களை அழிக்க உதவி செய்கிறது. வைட்டமின் E போன்றவை உடலில் உள்ள பாதிக்கப்பட்ட, தேவையற்ற செல்களை நீக்கும் முறையை ஊக்குவிக்கிறது. (Other supplements like vitamin E are known to cause apoptosis, or programmed cell death, the body's normal method of disposing of damaged, unwanted, or unneeded cells)
15) கேன்சர் என்பது மனம் (mind), உடல் (body) மற்றும் ஆன்மாவின் (Spirit) நோயே! நேர்மறையான, ஆரோக்கியமான எண்ணங்கள் கேன்சரை எதிர்த்துப் போராடும் வல்லமையை அளிக்கிறது. கோபம், மன்னிக்கும் மனமின்மை, எதிர்மறையான எண்ணங்கள் போன்றவை மன அழுத்தத்தையும், உடலின் அமிலத்தன்மையையும் அதிகரிக்கிறது எனவே மன்னிக்கும் குணத்தையும், அன்பு செலுத்தவும், ஆசுவாசப்படுத்திகொள்ளவும், வாழ்க்கையை அனுபவிக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
16) ஆக்சிஜென் மிகுந்த சூழ்நிலையில் கேன்சர் செல்லானது வளர வாய்ப்பில்லை. தினமும் உடற்பயிற்சி, ஆழ்ந்த சுவாசம் போன்றவை உடலின் செல்களுக்கு நிறைய ஆக்சிஜென் கிடைக்க உதவுகிறது. மூச்சுப் பயிற்சியானது (Oxygen therapy) உடலில் உள்ள கேன்சர் செல்களை அழிக்க உதவுகிறது.
உடலில் கேன்சர் செல் வளர காரணிகள்:-
1) கேன்சர் செல்லுக்கு சர்க்கரை ஒரு நல்ல உணவு. எனவே சர்க்கரையை தவிர்ப்பது கேன்சர் செல்லுக்கு தவையான ஒரு முக்கிய உணவை நிறுத்துவது போன்றது. சர்க்கரைக்கு மாற்றாக உள்ள NutraSweet, Equal, Spoonful, etc போன்றவையும் Aspartame எனும் அமிலத்தால் தயாரிக்கப்படுவதால் இவையும் பாதிப்பானாதே! எனவே குறைந்த அளவில் தேன், மொலஸஸ், Manuka போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். Table Salt-ல் வெள்ளை நிறத்திற்க்காக கெமிக்கல் சேர்ப்பதால் இதற்கு மாற்றாக Bragg's amino or sea salt போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
2) பால் உடலில் சளியை உற்பத்தி செய்கிறது, குறிப்பாக இரைப்பை-குடல் (gastro-intestinal) பகுதியில் சளியால் கேன்சர் செல் நன்கு வளரும். எனவே பாலுக்கு மாற்றாக இனிப்பில்லாத சோயாப் பாலை எடுத்துக் கொள்வதன் மூலம், கேன்சர் செல் பெருக்கத்தைக் குறைக்கலாம்.
3) அமிலத் தன்மையில் கேன்சர் செல் நன்கு வளரும். இறைச்சி சம்பந்தமான உணவுகள் அமிலத் தன்மை வாய்ந்தது. எனவே மாட்டிறைச்சி, பன்றி இறைச்சிக்குப் பதிலாக மீன், குறைந்த அளவு சிக்கன் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம் இறைச்சியானது பிராணிகளின் ஹோர்மோன், ஒட்டுண்ணிகள், ஆன்டிபயாடிக்ஸ் போன்றவற்றை கொண்டுள்ளது, இது மிகவும் ஆபத்தானது..
4) ஒரு சிறந்த உணவு (Diet) என்பது 80% ஃப்ரெஷ் காய்கறிகள், ஜூஸ், முழு தானியங்கள், விதைகள், பருப்புகள் மேலும் சிறிதளவு பழங்கள் உடலை நல்ல காரத் தன்மையில் வைத்திருக்கிறது. 20% சமைத்த உணவாக இருக்கலாம், பீன்சயும் சேர்த்து. ஃப்ரெஷ் காய்கறிகள் ஜூஸ் உயிரோட்டமுள்ள நொதிகளை அளிக்கிறது, இவை 15 நிமிடங்களில் நன்கு உறிஞ்சப்பட்டு, ஊட்ட சத்து அளித்து நல்ல செல்கள் வளர உதவுகிறது. ஆரோக்கியமான செல்கள் வளர உதவும் உயிரோட்டமுள்ள நொதிகளை பெற . ஃப்ரெஷ் காய்கறிகள் ஜூஸ் மற்றும் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை பச்சை காய்கறிகள் எடுத்துக் கொள்ளவும்! நொதிகள் (enzymes) 104 degrees F (40 degrees C) வெப்பத்தில் அழிந்து போய் விடுகிறது.
5) டீ, காஃபீ, சாக்லெட் போன்றவற்றில் அதிககளவு காஃபீன் உள்ளதால் இவைகளை தவிர்த்து விடவும். இதற்கு மாற்றாக க்ரீன் டீ (Green Tea) எடுத்துக் கொள்ளவும்! இதில் கேன்சர் செல்களை எதிர்க்க கூடிய ஆற்றல் உள்ளது. சுத்திகரீக்கப்பட்ட நீரை மட்டுமே அருந்தவும். நச்சு மற்றும் உலோக கலவை அதிகமுள்ள குழாய் நீரை தவிர்த்து விடவும். Distilled water is acidic, avoid it.

சனி

எச்சரிக்கை மணி

மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் என்று சொன்ன தமிழக முதல்வர் ஜெயலலிதா அதிரடியாகப் பேருந்துக் கட்டணம், பால் விலை போன்றவைகளை உயர்த்தி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். மின்சாரக் கட்டணத்தையும்  உயர்த்த  மின்சார ஒழுங்கு முறை ஆணையத்துக்கு அரசு பரிந்துரை செய்துள்ளது. விரைவில் மின்சாரக் கட்டண உயர்வையும் தமிழக மக்கள் தங்கள் தலையில் சுமக்க வேண்டி வரும்.

பால் விலை, பேருந்துக் கட்டண உயர்வு குறித்துத் தொலைக் காட்சியில் தெரிவித்த தமிழக முதல்வர் 'வழக்கம் போலவே கருணாநிதி ஆட்சியைச் சாடினார்.மேலும் தமிழக அரசின் இலவசத் திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி தராததாலும் போக்குவரத்துக் கழகச் சொத்துக்கள் வங்கிகளில் அடைமானம் வைக்கப் பட்டுள்ளதாலும் பெருகி வரும் நஷ்டத்தை ஈடு கட்டக் கட்டணங்களை  உயர்த்துவதாக விளக்கமும் அளித்துள்ளார் ஜெயலலிதா.
மக்களை வசியப்படுத்த, 'தி மு கவின் தேர்தல் அறிக்கை'யைப் பார்த்துத் தாம் காப்பியடித்த தேர்தல் அறிக்கை வெளியிடும்போது மத்திய அரசின் நிதி கிடைத்தால் இலவசங்கள் தருவேன் என ஜெயலலிதா சொல்லவில்லையே! ஏதோ தம் பையிலிருந்து கொடுப்பதுபோல் அம்மி முதல் ஆட்டுக்குட்டிவரை அள்ளி வழங்குவதாக அறிவித்து விட்டு இப்போது மத்திய அரசின் நிதி கிடைக்கவில்லை எனப் பழி போடுவது வாக்களித்த மக்களை நயவஞ்சகமாக ஏமாற்றுவதாகும். தமிழக அரசின் இலவசத் திட்டங்களுக்கு நிதி தருவோம் என மத்திய அரசு ஜெயலலிதாவுக்கு வாக்குறுதி ஏதும் கொடுத்திருக்கவில்லையே? பின் ஏன் இந்தத் திசை திருப்பும் நாடகம்?
தி மு க ஆட்சியின் போது பேருந்துக் கட்டணத்தை உயர்த்துவதற்குப் பேருந்து உரிமையாளர்கள் பலமுறை முயன்றும் கருணாநிதி ஒப்புக்கொள்ளவில்லை என்பதையும் கருணாநிதியைக் குறை சொல்லும் ஜெயலலிதா எண்ணிப்பார்க்க வேண்டும்.

இலவசம் என்ற பெயரில் நாலணாவைத் தந்து விட்டு  நம்மிடம் இருந்து அரையனாவைப் பறிக்கும் அரசியல்வாதிகளின்  நயவஞ்சகம்தெரியாத அப்பாவிப் பொதுமக்கள் நிலை தான் அந்தோ பரிதாபம். பொது மக்கள் மீது அக்கறை இருப்பதைப் போன்று காட்டிக் கொண்டு   காலையில் ஒரு ரூபாயைத் தந்து விட்டு இரவில் வந்து அந்த ஒரு ரூபாயுடன் நம் பணத்தையும் சேர்த்துக் கொள்ளை அடிக்கும் செயலுக்கு ஒப்பானது இது போன்ற கட்டண உயர்வுகள்.
பொது மக்களுக்கு நன்மை பயக்கவே இலவசத் திட்டங்கள் என்ற நிலை மாறி அமைச்சர்களும் அதிகாரிகளும் கமிசன் பெற்று,  சொத்து சேர்க்கவே இலவசத் திட்டங்கள் என்ற கருத்து வலுப் பெற்று வருவதையும் மறுப்பதற்கில்லை.பொது மக்களிடம் கட்டண உயர்வு, டாஸ்மாக் வருமானம் போன்றவைகள் மூலம் கொள்ளை அடித்து அதில் ஒரு பகுதியை மக்களுக்காக பேன், மிக்சி, டி.வி என இலவசமாக வழங்குவது  சாதனை இல்லை. பொது மக்களைப் பாதிக்காத வகையில் நல்லாட்சி புரிவதே சாதனை.

பொதுத் துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்க,  பொறுப்பற்ற அமைச்சர்களும், அதிகாரிகளுமே காரணம் என்ற உண்மையை அரசு எப்போது தான் உணரப் போகின்றதோ தெரிய வில்லை. போக்குவரத்துக் கழகங்களில் டிக்கெட் அச்சிடுவதில் தொடங்கி எரிபொருள் மற்றும் உதிரி பாகங்கள்  கொள்முதல் செய்வது வரை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளால் அடிக்கப் படும் கமிசன் களை நிறுத்தினாலே  இன்னும் பல வருடங்களுக்குப்பேருந்துக் கட்டணங்களை உயர்த்த வேண்டிய தேவை இருக்காது.

ஆட்சிக்கு வந்தால் ஒரே மாதத்தில் மின் வெட்டைச் சரி செய்வோம் என்று வாக்குறுதி அளித்த ஜெயலலிதா மின்வெட்டை அதிகரித்துள்ளாரே தவிர மின்வெட்டை நீக்கிய பாடில்லை. இந்த லட்சணத்தில் அறிவிக்கப் படாத வாக்குறுதியாக கட்டண உயர்வு வேறு. மத்திய அரசு பெட்ரோல் விலையை உயர்த்தும் போதெல்லாம் ஒரு சடங்கு போல, ஏழை மக்களைப் பாதிக்கும் பெட்ரோல் விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தும் ஜெயலலிதா தமிழகத்தில் ஏழை மக்களே இல்லை என நினைத்து விட்டாரோ?

பொது மக்களுக்குச் சேவை அளிப்பதே பொதுத் துறை நிறுவனங்களில் நோக்கம், லாபம் சம்பாதிப்பதன்று, இதை  முதல்வர் உணர்ந்து திறமையான நேர்மையான அதிகாரிகளையும் செயல்திறனுள்ளஅமைச்சர்களையும் நியமித்து பொதுத் துறை நிறுவனங்களை நஷ்டத்தில் இயங்காமல் கட்டணங்களையும் உயர்த்தாமல் பொது மக்களுக்கு சிறப்பான சேவை அளிக்க அரசு முன்வர வேண்டும். இல்லையேல் ஐந்தாண்டுகளுக்குப் பின்எதிர்க்கட்சி அந்தஸ்துக்கு அல்லாட வேண்டிய நிலை அதிமுகவுக்கும் வரக் கூடும் என்பதை நினைவுறுத்துகிறோம்.

உடலில் என்ன பிரச்னை என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள் !

கண்கள்
கண்கள் உப்பியிருந்தால்...
என்ன வியாதி : சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும்.

டிப்ஸ் : உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். மேலும் அதிகப்படியான நீர் அருந்துவது சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்ய உதவும்.

கண் இமைகளில் வலி

என்ன வியாதி : அதிகப்படியான வேலை காரணமாக இந்த வலி வரலாம். மேலும் மக்னீசியம் உடலில் குறைவதால் உடல் சோர்வடைந்து கண் இமைகளில் வலி உண்டாகிறது.

டிப்ஸ்: போதுமான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும். அதோடு உணவில் முட்டைக்கோஸ் மற்றும் கீரைகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கண்களில் தெரியும் அதிகப்படியான வெளிச்சம்


என்ன வியாதி : அதிகமாக வேலை செய்து கொண்டே இருப்பது. இந்த ஸ்டிரெஸ்ஸினால் உங்கள் மூளை குழப்பமடைந்து கண்களுக்கு தவறான தகவல்களை அனுப்பிவிடுகிறது. அந்த நேரத்தில் நமக்கு சட்டென அதிகப்படியான வெளிச்சங்களும், புள்ளிகளும் பார்வைக்குத் தெரிகிறது.


டிப்ஸ்: எப்பொழுதும் நிமிர்ந்து நிற்க வேண்டும். அதிகமாக காபி குடிக்கும் பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும்.


கண்கள் உலர்ந்து போவது.


என்ன வியாதி: நாம் ஏ.சி. நிறைந்த இடங்களில் அதிக நேரத்தைச் செலவிடும் போதும், கண்கள் அதிக வேலையினால் களைப்படையும் போதும் நம் கண்கள் உலர்ந்து மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறது.


டிப்ஸ்: குறைந்தது எட்டு மணி நேர இரவுத் தூக்கம் மிகவும் அவசியம். தினமும் கண்களை மேலும்_கீழுமாகவும், பக்கவாட்டின் இருபுறமும் அசைத்தல் போன்ற எளிய உடற்பயிற்சிகளை ஒரு நாளில் இரண்டு முறை செய்யவேண்டும்.

சருமம்
தோலில் தடிப்புகள் ஏற்படுதல்

என்ன வியாதி : இருதய நோய் இருக்கலாம். குறிப்பாக இது காதுகளுக்குப் பக்கத்திலிருக்கும் தோலில் ஏற்படுமானால் உங்களுக்கு இருதய கோளாறு உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். ஆனால், இப்படி அந்த இடத்தில் ஏன் தோல் தடிக்கிறது என்று டாக்டர்களுக்கே இன்னும் சரிவர புரியவில்லை என்கிறார்கள்.

டிப்ஸ்: அதிகப்படியான மன அழுத்தம் ‘ஹார்ட்_அட்டாக்’ வருவதற்கான வாய்ப்பை உருவாக்கும். மனதை பாரமில்லாமல் லேசாக வைத்துக் கொள்ள முயற்சிப்பதும், பிரச்சினைகளை நல்ல முறையில் அணுகுவதும் இதைத் தவிர்க்கும்.


முகம் வீக்கமாக இருப்பது


என்ன வியாதி: உடலில் தண்ணீர் இழப்பு அதிகமாக இருப்பது. இப்படி ஏற்படும்போது உடலுக்குத் தண்ணீர் அதிகம் தேவைப் படுகிறது. உடலுக்குப் போதுமான தண்ணீர் கிடைக்காமல் போனால், ரத்த செல்கள் விரிவடைந்து முகம் வீக்கமாகத் தெரியும்.


டிப்ஸ்: ஒரு நாளைக்கு எட்டு கிளாஸ் தண்ணீராவது அருந்துவது அவசியம். எப்போதும் தண்ணீர் பாட்டிலை உடன் வைத்துக் கொண்டால் தண்ணீர் அருந்த வேண்டும் என்கிற உணர்வு ஏற்பட்டு அருந்துவீர்கள்.


தோல் இளம் மஞ்சளாக மாறுவது
என்ன வியாதி: கல்லீரல் நோய். கல்லீரல் பாதிப்படையும்போது உடலிலிருக்கும் பித்த நீர் போன்ற மஞ்சள் நிற திரவங்களை வெளியேற்ற முடிவதில்லை. இதனால் தோல் மஞ்சள் நிறத்திற்கு மாறுகிறது.


டிப்ஸ்: அதிகப்படியான ஆல்கஹாலின் அளவால் இப்படி கல்லீரல் பிரச்சினை ஏற்படுகிறது. குடிப்பழக்கம் இருந்தால், உடனடியாக நிறுத்தி விடுவதே நல்லது.


பாதம்


 கை கால்களில் சில நேரங்களில் சுறுசுறுவென உள்ளே ஏதோ ஓடுவது போலிருத்தல்

என்ன வியாதி: சீரான ரத்த ஓட்டமின்மை. ரத்தக் குழாயில் அடைப்பு இருந்தால் உடலின் ரத்த ஓட்டம் சீராக இருக்காது. இந்த அறிகுறி உங்கள் ரத்தமானது பாதம் வரை சீராக ஓடச் செய்யும் முயற்சியே ஆகும்.


டிப்ஸ்: வைட்டமின் ணி நிறைந்த உணவுகளும் கீரைகளும் சாப்பிட வேண்டும்.


பாதம் மட்டும் மரத்துப் போதல்


என்ன வியாதி: நீரிழிவு நோயின் பாதிப்பு. டயபடீஸ், ரத்தத்திலிருக்கும் செல்களைப் பாதிப்பதோடு, நரம்புகள் செய்யும் வேலைகளையும் தடுத்து விடுகிறது. இதன் விளைவாக சில நேரங்களில் கால்களில் செருப்புக்கள் உராய்ந்து ஏற்படுத்தும் எரிச்சலையோ வலியையோகூட உணர்ந்து கொள்ள முடியாது.
டிப்ஸ்: பிளாக் டீ அல்லது கிரீன் டீ உங்கள் இரத்தத்திலிருக்கும் குளுக்கோஸின் அளவைக் குறைத்து நீரிழிவு நோயைக் கொஞ்சம் கட்டுப்படுத்தும். உடல் பருமனும்கூட டயபடீஸ் வருவதற்கு ஒரு முக்கிய காரணமாகும். அதனால் உடல் எடை அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

பாதங்களில் உலர்ந்த வெடிப்புகள்


என்ன வியாதி : தைராய்டு பிரச்சினையாக இருக்கலாம். இந்த தைராய்டு சுரப்பிதான் நம் தோலுக்குத் தேவையான ஹார்மோன்களை ஒழுங்கு செய்கிறது. இந்த தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாதபோது, நம் பாதங்களின் தோல் உலர்ந்துபோகும். பாதங்களை சரிவரபாராமரிக்காமல் இருந்தால் அதிக அளவில் பாதிப்படைந்துவிடும்.


டிப்ஸ்: தைராய்டு பிரச்சினையின் வேறு சில அறிகுறிகள், அதிக சோர்வும் உடல்எடை அதிகமாதலும் இதில் எந்த அறிகுறிகள் இருந்தாலும் மருத்துவரைச் சந்திப்பது அவசியம்.


கைகள்

சிவந்த உள்ளங்கை


என்ன வியாதி: கல்லீரல் பிரச்சினையாக இருக்கலாம். நோய்வாய்ப்பட்ட கல்லீரலால், நம் இரத்தத்திலுள்ள ஹார்மோன்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும். அதனால் உங்கள் ரத்தத்தின் நிறம் அதிக சிகப்பாகிவிடும். கல்லீரல் சரியாக வேலை செய்யவில்லை என்பதை, அதிக சிவப்பான உள்ளங்கைகள் தான் சட்டென காட்டிக் கொடுக்கும். காரணம் உடலின் மற்ற பாகங்களைவிட உள்ளங்கையின் தோல் மிகவும் மிருதுவாக இருப்பதுதான்.


டிப்ஸ்: கீழாநெல்லியை வாரத்தில் ஒருதரம் சாப்பிடுவது கல்லீரலைச் சரிப்படுத்தும். உடம்பின் விஷத்தன்மையை மாதம் ஒரு முறையாவது போக்க, ஒரு நாள் பழம் மட்டும் சாப்பிடுங்கள்.


வெளுத்த நகங்கள்


என்ன வியாதி: இரத்த சோகை இருக்கிறது. இரத்தத்திலுள்ள சிகப்பணுக்கள் அளவில் குறையும்போது சின்னச் சின்ன வேலையைச் செய்வதற்கும் உடல் பலமின்றிப் போகும்!


ரத்தத்தின் சிவப்பணுக்கள் குறைவதால், இயல்பாக நகம் இருக்க வேண்டிய பிங்க் நிறம் போய், வெளுத்து விடுகின்றன.


டிப்ஸ்: இரும்புச்சத்து இரத்தத்திலுள்ள சிகப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும். ஈரல், கீரைவகைகள், மற்றும் இறைச்சியை உணவுடன் சேர்த்துக் கொள்ளவேண்டும். அல்லது டாக்டரின் ஆலோசனையின்படி குறிப்பிட்ட நாட்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகளோடு பி_12 மாத்திரைகளையும் எடுத்துக் கொள்வது நல்லது.


விரல் முட்டிகளில் வலி


என்ன வியாதி: ஆர்த்தரடீஸ் என்னும் மூட்டுவலி இருக்கிறது. இதனால் விரல் முட்டிகளில் வீக்கமும் வலியும் ஏற்படும். இந்த வலி அதிகமாக விரல் முட்டிகளில்தான் காணப்படும். அவை வடிவத்தில் சிறியதாக இருப்பதால், இந்த வலி உடனே வர வாய்ப்புண்டு. வயதானவர்களுக்கு மட்டுமே இந்த மூட்டுவலி வருவதில்லை. எந்த வயதுக்காரர்களுக்கும் வரலாம்.


டிப்ஸ்: உடலுக்குத் தேவையான கால்சியம் மற்றும் வைட்டமின் ஙி சரியான அளவில் எடுத்துக் கொண்டால் மூட்டு வலி வருவதைக் குறைக்கலாம். ஒழுங்கான உடற்பயிற்சிகள் மற்றும் உடல்பருமனைக் குறைத்தல் இரண்டும் மூட்டு வலி வராமல் தடுக்கும்.


நகங்களில் குழி விழுதல்


என்ன வியாதி: சோரியாஸிஸ் இருக்கிறது. இது ஒரு மோசமான தோல் வியாதி. இதன் மூலம் தோலும் நகங்களும் மிகவும் மென்மையாகி விடும். இந்த வியாதி வந்தால் மென்மையான நகங்களில் குழிகள் வரக்கூடும்.


டிப்ஸ்: உடனடியாக சரும வியாதி நிபுணரைக் கலந்தாலோசிக்கவும். ஸ்டிரெஸ்ஸைக் குறைத்துக் கொண்டாலே வியாதி அதிகமாவதைத் தடுக்கலாம்.


வாய்

 

ஈறுகளில் இரத்தம் வடிதல்.


என்ன வியாதி: பல் ஈறு சம்பந்தப்பட்ட நோய் இருக்கிறது. ஈறுகளிலும் அவற்றின் அடியிலிருக்கும் எலும்புகளிலும் தொற்று நோய்க் கிருமிகளின் தாக்குதல் இருந்தால், பற்கள் உறுதி இழந்து விழுந்துவிடும். பல் துலக்கும்போது ஈறுகளில் ரத்தம் வருவது இந்த நோயின் முதல் அறிகுறி.


டிப்ஸ்: தினமும் பற்களைச் சுத்தமாக துலக்குவதும், பற்காரைகள் வராமல் பாதுகாப்பதும் அவசியம். ஆன்ட்டி பாக்டீரியல் கொண்ட மவுத் வாஷ் கொண்டு வாய் கொப்பளிப்பது நல்லது.


சாப்பிடும்போது வாய் முழுக்க வலி ஏற்படுதல்


என்ன வியாதி: வாய்ப்புண் இருக்கிறது. அதிகமாக ஸ்டிரெஸ் செய்து கொள்வதாலும் வாய்ப்புண் வரலாம். உடலில் ஃபோலிக் ஆசிடின் குறைவு மற்றும், இரும்புச்சத்து அல்லது வைட்டமின் பி_12ன் குறைவினாலும் இப்படி ஏற்படுகிறது.


டிப்ஸ்: ‘மல்டி_விட்டமின்’ மாத்திரைகளைத் தினமும் எடுத்துக் கொள்ளவேண்டும். மேலும் தியானம் மற்றும் யோகா செய்வதால் ஸ்டிரெஸ்ஸைக் குறைக்கலாம். ஹைட்ரஜன் பெராக்ஸைடு கொண்டு வாய் கொப்பளித்து வருவதால் இன்பெக்ஷன் குறைந்து வாய்ப்புண் ஆறும்.


வாய் ஈரப்பசையின்றி உலர்ந்து போவது.


என்ன வியாதி: உடலின் போதுமான நீர்ச்சத்து குறைந்து போயிருக்கிறது. உடலில் அதிகப்படியான நீர் வெளியேறுவதால் இந்த டீஹைடிரேஷன் ஏற்படுகிறது. மேலும் அதிகப்படியாக வியர்ப்பது மற்றும் நீரிழிவு நோயும்கூட வாய் உலர்ந்து போவதற்கு காரணமாகும்.


டிப்ஸ்: நிறைய திரவ ஆகாரம் எடுத்துக் கொள்ளவேண்டும். தினமும் குறைந்தது ஒன்றரைலிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம். அதன்கூடவே பழங்களையோ பழச்சாறோ அருந்துதலும் நல்லபலன் தரும்.

செவ்வாய்

தூக்கம் ஏன்-எதற்கு-எப்படி?


தூக்கம் மனிதனுக்கு அவசியத் தேவை. ஒருவருடைய ஆழ்ந்த தூக்கமே அவனை எப்போதும் விழிப்புடையவனாக இருக்கச் செய்யும்.  குறைந்த நேரம்  தூங்கி அதிகம் உழைப்பவர்கள் பலர் உள்ளனர்.  ஆனால் இவர்கள் குறைந்த நேரத்தில் நல்ல தூக்கம் பெறுவதால் தான் இவர்களால் நன்கு உழைக்க முடிகிறது.அளவான தூக்கம்தான் மனிதனை ஆரோக்கியத்துடன் இருக்கச் செய்யும்.
தூக்கம் எவ்வாறு ஏற்படுகிறது
தூக்கம் என்பது ஒரு இயற்கையான திரும்பத்திரும்ப நடைபெறக்கூடிய ஒரு நிகழ்வாகும்.    இந்த தூக்கம்தான் உடலில் வளர்சிதை மாற்றம் நன்கு நடைபெற்று உடல் வளர்ச்சி அடைய பெரிதும் உதவுகிறது.  அனைத்து உறுப்புகளும் புத்துணர்வும்  பலமும் பெற ஏதுவாகிறது.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.  நரம்பு, தசை, எலும்பு சம்பந்தப்பட்ட மண்டலங்களை பலப்படுத்துகிறது. பொதுவாக தூக்கம் என்பது  களைப்புற்ற உடல் உறுப்புகள் மற்றும் மனதிற்கு இயற்கை கொடுத்த ஓய்வுதான்.உடல் உழைப்பு அதிகம் உள்ளவர்கள் நன்கு தூங்குவார்கள். ஆனால் உழைப்பின்றி மன உளைச்சல் உள்ளவர்கள் தூக்கமின்றி தவிப்பார்கள்.சிலர் தூக்கம் வருவதில்லை எனக்கூறி இரவு மது, புகை பிடித்தல் போன்ற செயல்களை செய்வார்கள்.  மது ஆரம்பத்தில் மயக்கத்தைத் தருமே ஒழிய நல்ல தூக்கத்தைத் தராது.மனப்பாதிப்பு, தீராத சிந்தனை, பயம், கோபம், தாழ்வு மனப்பான்மை, இயலாமை போன்ற குணம் கொண்டவர்கள் தூக்கமின்றி தவிப்பார்கள்.

உடல் உழைப்பு
உடலும் மனமும் ஒருங்கே ஓய்வு எடுத்தால் தான் சிறந்த தூக்கம் உண்டாகும்.  உடல் உழைப்பு என்பது தற்போது மறந்தே போய்விட்டது.  இவர்களிடம் உடற்பயிற்சி செய்யுங்கள் என்றால் நான் அலுவலகத்திற்கு நடந்தே போகிறேன்.  அதனால் எனக்கு எதற்கு தனியாக உடற்பயிற்சி என்று கேட்பார்கள்.  ஆனால் இவர்கள் தூக்கத்திற்காக மருத்துவரை தேடுவார்கள்.
எவ்வளவு நேரம் தூங்கலாம்
ஒவ்வொரு மனிதனுடைய உடல் மற்றும் வயதைப் பொறுத்து  தூக்கம் வித்தியாசப்படும்.  இளம் வயதினருக்கு ஒரு நாளைக்கு 7-8 மணிநேரம் தூக்கம் தேவை.  ஆனால் பிறந்த குழந்தை 16-18 மணி நேரம் தூங்கவேண்டும்.  பள்ளிக்குச் செல்லாத வயதில் உள்ள குழந்தைகளுக்கு  10-12 மணி நேரம் தூக்கம் அவசியம்.  பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும் டீன்ஏஜ் பருவத்தில் உள்ளவர்களுக்கும் 9 மணி நேரத் தூக்கம் அவசியம்.  முதியவர்களுக்கு 7-8 மணி நேரம் தூக்கம் தேவை.
உடலில் உள்ள கடிகாரம்
நம் உடலில் நம்மை அறியாமல் ஒரு கடிகாரம் இருக்கிறது.  இதுவே நம்மை தூக்கத்திற்கு அழைத்துச் செல்கிறது.  குறிப்பிட்ட நேரத்திற்குப் பின் விழிப்படையவும் செய்கிறது.  இந்த நேரக்காப்பாளர் செயலை உடலில் செய்ய மெலடோனின் (Melatonine) என்ற மூளையில் சுரக்கும் வேதிப் பொருள் உதவுகிறது.  நாள் முழுக்க இதனுடைய அளவு சீராக இருக்கும்.  இரவு ஆனவுடன் இதன் அளவு அதிகரிக்கும்.  பின் இது தூக்கத்தைத் தூண்டும்.  அதனால் சரியான நேரத்தில் தூங்கச் செல்வர்.  இதேபோன்றுதான் விழிப்பு நிலையும்.இரவுப் பணிக்கு செல்பவர்கள் பகலில் தூங்குவார்கள்.  பகலில் தூங்குவதால் இவர்களின் உடல்நிலை இயற்கைக்கு மாறான நிலையை அடையும்.பகலில் தூங்கும்போது உடலை இயக்கும் வாத, பித்த, கபத்தில் பித்தமானது அதிகரித்து ரத்தத்தில் கலந்து ரத்தத்தை சீர்கேடடையச் செய்கிறது.  இதனால் உடல் பல்வேறு பாதிப்புக்கு ஆளாகிறது.  இயன்றவரை பகல் தூக்கத்தைத் தவிர்ப்பது நல்லது.
தூக்கம் கெடுவதால் ஏற்படும் தீமைகள்
தூக்கமின்மையால் மன உளைச்சல், ஞாபக மறதி உண்டாகும். உடல் பலவீனம் அடையும்.
தூக்கத்தின் பயன்கள்
ஆழ்ந்த தூக்கம் மற்றும் விட்டு விட்டு விழிப்பு நிலை இல்லாத தூக்கம் தான் சரியான தூக்கம்.நல்ல தூக்கம் ஒருவரின் செயல்திறமையை அதிகப்படுத்துகிறது.  ஆராய்சியாளர்களின் கருத்துப்படி மூளையை உபயோகித்து செய்யக் கூடிய கடினமான வேலைகள் அனைத்தும் நல்ல இரவுத் தூக்கத்திற்குப்பின் நன்றாக செய்ய முடிகிறது.  புதியதாக உருவாக்கப்படுகிற எண்ணங்கள் (Creative thinking)  நல்ல தூக்கத்திற்குப் பிறகே உதயமாகின்றன.நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு ஆழ்ந்த தூக்கம் அவசியம்.  நாள்பட்ட சரியான தூக்கமில்லாதவர் களுக்கு ரத்தக்கொதிப்பு மற்றும் இதய நோய்கள் வரும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.  தூக்கத்தில்தான் நம்முடைய உடல் வளர்ச்சி ஹார்மோன்கள் சுரக்கின்றன.  இந்த ஹார்மோன்கள்தான் குழந்தைகளின் தசை மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உதவுவதோடு மட்டு மல்லாமல் நோய் எதிர்ப்புத் திறனையும் அதிகப் படுத்துகிறது. ஆக.. நல்ல ஆரோக்கியத்திற்கு ஆழ்ந்த அமைதியான தூக்கம் அவசியம். (மருத்துவம்.காம்)
உடல் நலத்துக்கு என்ன அவ்வளவு முக்கியத்துவம்?
உடல்தான் எல்லாவற்றுக்கும் ஆதாரமாக இருக்கின்றது. உடல் சீரழிந்து போய்
விடுமேயானால், பிறகு மற்ற செல்வங்கள் எல்லாம் இருந்து பயனில்லை.
ராபின்சர்மா என்கிற ஒரு அமெரிக்கர் எழுதியுள்ள புத்தகம் மேன்மைக்கான
வழிகாட்டி அண்மையிலே வெளிவந்திருக்கிறது. பல சின்னச் சின்னச் செய்திகள்,
வாழ்க்கையின் பெரிய பெரிய உண்மைகளை உணர்த்துவதாக இருக்கிறது.
இன்றைக்கு உலகத்திலே இருக்கிற பன்னாட்டு நிறுவனங்களான அமெரிக்கன்
எக்ஸ்பிரஸ், இன்போசிஸ் முதலான பல நிறுவனங்களினுடைய மேலாளர்களுக்குப்
பயிற்சி வகுப்பெடுக்கிறபோது ராபின்சர்மா பேசியது ஒரு கட்டுரையாக
வெளிவந்துள்ளது. அந்தக் கட்டுரையினுடைய தலைப்பு, செல்வத்தின் ஏழு
விதங்கள் என்பது.
நாம் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டிய செல்வமாகவே அது இருக்கிறது.
பொதுவாக யார் பணம் வைத்திருக்கிறார்களோ அவர்களைத்தான் நாம் செல்வந்தர்
என்று சொல்கிறோம். ராபின்சர்மா சொல்கிறார். பணம் வைத்திருக்கிறவர்கள்
செல்வர்கள்தான் செல்வத்துக்குப் பணம் ஒரு அடிப்படைக் காரணம் மறுக்க
முடியாது. ஆனால்  நம்மிடம் இருக்க வேண்டிய ஏழு செல்வங்களில் பணம் ஒன்று.
அது ஏழில் ஒரு பகுதியே தவிர, முற்றும் அதுதான் என்று கருதுவதும், அந்தப்
பார்வையும் சரியானதில்லை என்பதுதான் அவருடைய பேச்சு. அப்படியானால் மீதம்
இருக்கிற ஆறு செல்வங்கள் என்ன என்பதை அவர் வரிசைப்படுத்துகிறார்.

ஒருவனைச் செல்வந்தன் என்று நாம் சொல்ல வேண்டும் என்று சொன்னால்,
அவனிடத்திலே இந்த ஏழு செல்வங்களும்  இருக்க வேண்டும்.
முதல் செல்வம் உடல் நலம்தான்.இரண்டாவது செல்வம் மனநலம்.மூன்றாவது செல்வம்
குடும்ப நலம்.நான்காவது செல்வம் தொழில் நலம்.ஐந்தாவது செல்வம் பண
நலம்.ஆறாவது செல்வம் இலட்சிய நலம்.ஏழாவது செல்வம் புகழ் நலம்என்று ஏழு
நலன்களை அவர் வரையறுக்கிறார்.

உடல் நலத்துக்கு என்ன அவ்வளவு முக்கியத்துவம் என்றால், இந்த உடல்தான்
எல்லாவற்றுக்கும் ஆதாரமாக இருக்கின்றது. உடல் சீரழிந்து போய்
விடுமேயானால், பிறகு மற்ற செல்வங்கள் எல்லாம் இருந்து பயனில்லை.
மிக அழகான வரியை அவர் குறிப்பிடுகிறார். மிகப் பெரிய பணக்காரனாக
இருக்கலாம். ஆனால் மருத்துவமனையிலே இருக்கிற பணக்காரனைக் காட்டிலும்,
சுதந்திரமாக உலவ முடிகிற உடல் நலம் உள்ள உழைப்பாளி மகிழ்ச்சியாக
இருப்பான் இல்லையா என்று கேட்கிறார். எவ்வளவு கோடீசுவரனாக இருந்தாலும்
மருத்துவமனையிலே படுத்திருக்கிறபோது, அவன் மகிழ்ச்சியாக இருக்க முடியாது.
மற்ற செல்வங்கள் எல்லாம் இருக்கலாம். உடல் நலம் என்கிற ஒரு செல்வம்
இல்லாம் போய் விடுமானால் மற்ற செல்வங்களை எல்லாம் அவனால் துய்க்க
முடியாது.

மறைந்த கவிஞர் கண்ணதாசன் அவர்கள்தான் ஒருமுறை மிக அழகாக ஒரு விடையைச்
சொன்னார். உலகத்திலே மிகப் பெரியது எது என்று கேட்டபோது, அவர் பணம் என்று
சொல்லியிருக்கலாம். ஆனால் அப்படிச் சொல்லாமல் கண்ணதாசன் சொன்னார், உடல்
நலம் மட்டும் இருந்து விடுமானால், பிறகு உலகத்திலே உள்ள எல்லாச்
செல்வங்களையும் பணம் காலடியிலே கொண்டு வந்து குவிக்கும் என்று சொன்னார்.
நீ போகவேண்டியதுகூட இல்லை பணம் எல்லாவிதமான நலன்களையும் உன் காலடியிலே
கொண்டு வந்து குவிக்கும். ஆனால் ஒரு நிபந்தனை மட்டும் இருக்கிறது அது
உடல் நலம்.
உடல் நலம் என்பது பெரிய ஒரு செல்வம்.அடுத்ததாக மனநலம் என்பதை அதைவிடப்
பெரிய செல்வம் நமக்கு மனம் ஆரோக்கியமாக இருக்கிறது. அதிலே குறைபாடு இல்லை
என்பது மட்டுமல்ல. அந்த மனம் அன்பினால் நிறைக்கப்பட்டிருக்க வேண்டும்.
நுட்பமான அறிவைக் கொண்டதாக இருக்க வேண்டும். மனிதநேயம் உடையதாக இருக்க
வேண்டும். தொலைநோக்குப் பார்வை உடையதாக இருக்க வேண்டும். அமைதியை
நாடுவதாக இருக்க வேண்டும். இத்தனையும் இருந்தால்தான் அது மனநலம். மனநலம்
உடையவர்களால்தான் மற்ற காரியங்களை எல்லாம் செய்ய முடியும்.மூன்றாவதாக
ராபின்சர்மா சொல்கிறார்,

குடும்ப நலம் என்பது இன்னொரு செல்வம். அருமையான செல்வம். நீங்கள்
என்னதான் அறிவாளியாக இருந்தாலும், என்னதான் செல்வாக்கு உடையராக
இருந்தாலும், வீடு என்பது நிம்மதியற்றுப் போகுமேயானால், உங்களால் இயங்க
முடியாது. வீடுதான் உங்களினுடைய தொடக்கம். வீடு என்பது உங்களுடைய
குடும்பம் மட்டுமல்ல, உங்களைச் சுற்றியிருக்கிற உறவினர்கள், நண்பர்கள்
என்று நீங்கள் வைத்துக் கொள்ளலாம். எனவே நமக்கு உடல் நலம் வேண்டும். மன
நலம் வேண்டும். உறவுகளோடு... குடும்பத்தோடு... மகிழ்ச்சியான தொடர்பு
இருக்க வேண்டும். எந்த நேரமும் வீட்டுக்குள்ளே நுழைந்தால் ஒரு சிக்கலும்
பிரச்சினையுமாக இருக்குமென்று சொன்னால், நம்மால் வெளியிலும்கூடச்
சரியாகச் சிந்திக்க முடியாது. எனவே குடும்பத்தோடு ஆகிய தொடர்பு என்பதை
நாம் எப்போதும் கவனமாய் வைத்துக் கொள்ள வேண்டும். இங்கே வெளியிலேயே கவனம்
செலுத்துகிறோம் என்பதினாலே  குடும்ப உறவுகள் சிதைந்து போய்விடாமல்
பார்த்துக் கொள்ள வேண்டும்.

பிறகு தொழில் நலம் என்று சொல்கிறார். அது ஒரு செல்வம். எந்த இடத்தில்
நம்முடைய தொழில் நடக்கிறதோ அல்லது எங்கே நாம் வேலை பார்க்கிறோமோ, அங்கே
நம்முடைய உறவும், அங்கே நம்முடைய மனநலமும் எப்படி இருக்கின்றன என்பது,
ஏறத்தாழ வீட்டில் கழிக்கிற நேரத்திற்கு இணையாகத் தொழில் சார்ந்த
இடங்களிலேயும் நம்முடைய நேரம் கழிகிறது. ஆகையினாலே தொழிலகம் என்பதும்கூட
நமக்கு மிகக் கவனமாக  இருக்க வேண்டிய இடம். எனவே அது நான்காவது செல்வம்.

ஐந்தாவது செல்வமாகத்தான் ராபின்சர்மா பணத்தைக் குறிக்கிறார். அது ஒரு
செல்வம்தான். இல்லை என்று யார் சொல்ல முடியும். பணம் இல்லாமல் இந்த
உலகத்தில் யாரால் வாழ முடியும். பணம் என்பதுதான் நம்முடைய வேட்கைகளை
நிறைவேற்றுகிறது. பணம் என்பதுதான் நம்முடைய வாழ்க்கையை எளிதாக்குகிறது.
பணம் இல்லை என்றால் நீங்கள் பத்து மைல் நடக்க வேண்டும். பணம் இருந்தால்
மகிழ்வுந்திலே  போகலாம். வாழ்க்கையை அது எளிமையாக்குகிறது. நேரத்தை
மிச்சமாக்குகிறது.
எனவே பணம் ஒரு செல்வம்தான் ஆனால் அது ஐந்தாவது செல்வம்.

ஆறாவதாக ஒரு செல்வத்தை அவர் குறிப்பிட்டார். எவன் ஒருவன் லட்சிய வெளியோடு
இருக்கிறானோ அவன்தான் தொடர்ந்து காரியங்களைச் செய்வான். முடிந்து
போயிற்று என்று கருதுகிறவன் எவனும் தொடர்ந்து பணியாற்றமாட்டான்.
எவரையாவது இமயம் என்றும் சிகரம் என்றும் சொன்னால் அவருடைய வேலை
முடிந்துவிட்டது என்று பொருள். சிகரத்திற்கு மேலே என்ன இருக்கிறது. எனவே
அதையும் தாண்டிப் போக வேண்டும் என்கிற வெறியைத் தனக்குள் வளர்த்துக்
கொள்கிறபோது மட்டும்தான் நம்மாலே இயங்க முடிகிறது. எப்போது இயக்கம்
என்பது அடுத்த கட்டத்தை நோக்கியதுதான். கடந்து வந்த பாதையை நினைத்துப்
பார்ப்பது இயக்கமன்று. அடுத்த கட்டத்தை நோக்கியதான். எழுத்தாளருக்கு
இன்னொரு புத்தகம் எழுத வேண்டும். ஒரு கலைஞருக்கு  இன்னொரு படைப்பை
உருவாக்க வேண்டும். விஞ்ஞானிக்கு இன்னொன்றைக் கண்டுபிடித்தே ஆக வேண்டும்
என்கிற அடுத்த கட்டத்தை நோக்கிய நகர்வு இருக்கிறது பாருங்கள்... அதிலே
இருக்கிற ஒரு வெறி இருக்கிறதே... அது ஒரு செல்வம் என்று ராபின்சர்மா
சொல்கிறார். அந்த உணர்வு உந்துதல் நம்முடைய வாழ்க்கையிலே ஒரு செல்வம்.

ஏழாவதாக இருக்கிற செல்வம் என்ன என்று கேட்டால், ஏழாவது கடைசி இடத்திலே
இருந்தாலும்கூட அதுதான் எல்லாச் செல்வங்களுடைய சாரமாக இருக்கிறது. புகழ்
என்பது ஒரு செல்வம். ஆறு செல்வத்தைக் கொண்டுதான் இந்த ஏழாவது செல்வத்தைப்
பெற முடியும். ஆனால் ஏழாவது செல்வத்தைப் பெற்று விட்டால் இந்த ஆறு
செல்வங்களும் என்றைக்கும் மிஞ்சும்.

உடல் நலம். மனநலம்; குடும்ப நலம், தொழில் நலம்., மனநலம், லட்சிய நலம்,
புகழ் நலம் என்கிற இந்த ஏழு நலன்களும் ஏழு செல்வங்கள். இந்த ஏழு
செல்வங்களும் யாரிடம் இருக்கிறதோ அவரை நீங்கள் செல்வந்தர் என்று
அழைக்கலாம் என்பது அந்தக் கட்டுரையினுடைய சாரம்.
Our beloved Prophet (saw said:
ஐந்து நிலைகளுக்கு முன் ஐந்து நிலைகளை பெரும் பேறாக கருதுங்கள்.
வாழ்க்கையை,  மரணத்திற்கு முன்
ஆரோக்கியத்தை, நோய்க்கு முன்
செல்வத்தை, வறுமைக்கு முன்
இளமையை,  முதுமைக்கு முன்
ஓய்வை, கடும் வேலைக்கு முன்

ஞாயிறு

கிட்னி அறிந்ததும் அறியாததும்..!

"ஒரு வீட்டின் சுத்தம் எப்படிப்பட்டது என்பது அந்த வீட்டின் ஹால், கிச்சன், பெட்ரூம் போன்றவற்றைப் பார்ப்பதைவிட அந்த வீட்டின் கழிப்பறையைப் பார்த்தால் தெரிந்துவிடும். அதுபோலத்தான் நம் உடலும்... நாம் முழுமையான ஆரோக்கியத்தோடு இருக்கிறோமா என்பதை நம் சிறுநீரகத்தின் செயல்பாட்டை வைத்துச் சொல்லிவிடலாம்..." என்று எளிமையான உதாரணத்தோடு பேசத் தொடங்கினார் டாக்டர் சௌந்தரராஜன். சிறுநீரகத் துறையில் உலகின் மிக முக்கியமான மருத்துவரான டாக்டர் சௌந்தரராஜன்தான் நடிகர் ரஜினி ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்தபோது அவரை மருத்துவக் கண்காணிப்பு செய்து வந்தவர். சிங்கப்பூர் வரைக்கும் ரஜினியோடு போய்வந்த மருத்துவரும் இவர்தான். சிறுநீரகத்தைப் பற்றிய கேள்விகளுக்கு அவருடைய பதில்கள் இதோ:-
யாருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்படும்?
சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம், உப்பு நீர் வியாதி, சிறுநீர் அழற்சி, சிறுநீரகக் கற்கள், சிறுநீர் அடைப்பு மற்றும் வலி நிவாரண மாத்திரைகளை அதிகமாக எடுத்துக் கொள்பவர்களுக்கு சிறுநீரகம் நிரந்தரமாக செயலிழக்க வாய்ப்புள்ளது.
பாதிப்பு உண்டாக்கும் காரணங்கள் வேறென்ன?
வயிற்றுப் போக்கு மற்றும் வாந்தியால் உடலில் நீர் வற்றிப் போவதாலும், பாம்புக்கடி, விஷப் பூச்சிக் கடி, எலி ஜுரம் மற்றும் வலி நிவாரணிகளால் ஏற்படும் ஒவ்வாமையாலும் சிறுநீரகம் தற்காலிகச் செயலிழப்பு ஏற்படும்.
சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படாமல் தடுக்க முடியுமா?
முடியும். எடுத்த எடுப்பிலேயே ஒருவருக்கு நிரந்தரச் செயலிழப்பு ஏற்படாது. படிப்படியாகத்தான் பாதிக்கப்படும். அதனால், ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால் நிரந்தர செயலிழப்பிலிருந்து தப்ப முடியும்.
அதை எப்படி கண்டுபிடிப்பது..?
வருடத்துக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்துகொள்ளும்போது சிறுநீரகத்தையும் சோதிக்க வேண்டும். பிரச்சினை இருந்தால், இதில் தெரிந்துவிடும். ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால், பின்னால் அவஸ்தை இருக்காது. சிறுநீர், ரத்தம், அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் இணைந்த விளக்கமான சிறுநீரக இயக்கச் சோதனை (Detailed Kidney Function Test) செய்துகொள்வது நல்லது.

அறிகுறிகள் இருக்குமா..?
இருக்கும். கைகால்களில் வீக்கம் ஏற்படும். சிறுநீரக பாதிப்பால்தான் வீக்கம் ஏற்படுகிறது என்பதை கண்டு அறிந்துவிட்டால் அளவுக்கு அதிகமாக தண்ணீ­ர் அருந்துவது, உப்பு சேர்த்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். பொதுவாக எந்த வீக்கமாக இருந்தாலும் தண்­ணீரையும் உப்பையும் குறைப்பதன் மூலம் வீக்கத்தை குறிக்க முடியும்.
எதனால் கைகால் வீக்கம் ஏற்படுகிறது..?
தண்­ணீரை வெளியேற்ற முடியாமல் சிறுநீரகம் தவிக்கிறது என்பதற்கான அறிகுறிதான் கைகால் வீக்கம்.
தற்காப்பு நடவடிக்கைகள் என்ன?
அசைவ உணவுகளைத் தவிர்த்துவிட்டு சைவத்துக்கு மாறவேண்டும். போதுமான அளவு நீர் அருந்த வேண்டும், சிறுநீரை அடக்கிக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும், சுய வைத்தியம், வலி நிவாரண மாத்திரைகள் உட்கொள்வதை தவிர்ப்பது, காலாவதியான மருந்துகளை உட்கொள்ளாமல் இருப்பது, பிறருக்கு மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை எடுத்துக்கொள்ளாமல் இருப்பதாலும், அதிக உடற்பருமன் ஏற்படாமல் பார்த்துக்கொள்வதாலும், புகை மற்றும் மதுப் பொருட்கள் உபயோகிப்பதை தவிர்ப்பதாலும் சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படுவதைத் தடுக்க முடியும்.
உணவு முறைகள் என்ன?
எதையும் அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும். அசைவ உணவுகளை கூடுமான வரை தவிர்ப்பது நல்லது. கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளும் கூடாது. சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டவர்கள் உணவில் உப்பு, பொட்டாசியம் நிறைந்த உணவுகளையும் சுத்தமாக தவிர்க்க வேண்டும். ரத்த அழுத்தம், சிறுநீரகக் கல் இருப்பவர்கள் பொட்டாசியம் சேர்த்துக்கொள்ளலாம்.
எந்தெந்த உணவுகளில் பொட்டாசியம் அதிகமாக இருக்கிறது..?
வாழைப்பழம், இன்ஸ்ட்டன்ட் காஃபி, டீ, செயற்கை பானங்கள் (கூல்டிரிங்ஸ்), பேரீச்சம் பழம், இளநீர், ஆரஞ்சு, இவற்றிலெல்லாம் பொட்டாசியம் அதிகமாக இருக்கிறது.
சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டவர்கள் எல்லாருமே பொட்டாசியம் சாப்பிடக்கூடாதா..?
அப்படியில்லை. டயாலிஸிஸ் செய்துகொள்ளும் நிலைவரைக்கும் போனவர்கள் பொட்டாசியத்தை முழுமையாக தவிர்க்க வேண்டும். ஆரம்பக்கட்டத்தில் இருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி நடந்துகொள்ள வேண்டும்.
வாழைத்தண்டு சாறு, முள்ளங்கிச் சாறு சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் என்கிறார்களே...?
வாழைத்தண்டு, முள்ளங்கி இரண்டும் சிறுநீரகப் பெருக்கிகள். அவற்றை உட்கொள்வதால் சிறுநீர் பெருக்கம் ஏற்பட்டு சிறுநீரகத்தில் அடைத்து இருக்கும் கல் சிறுநீரில் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
சிறுநீரகக் கற்கள் வராமல் தடுக்க முடியுமா?
முடியும். தவறான உணவுப் பழக்கவழக்கம், தேவைக்கு ஏற்ற நீர் அருந்தாமல் இருப்பது, அதிகமான அளவில் அசைவ உணவுகளை உட்கொள்வது, கால்சியம் மற்றும் வைட்டமின் 'டி' உணவுகளை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்வதால் சிறுநீரகக் கற்கள் ஏற்படுகின்றன. எனவே, இவற்றைத் தவிர்ப்பதால் சிறுநீரகத்தில் கற்கள் உண்டாவதை தடுக்க முடியும்.
சிகிச்சை முறைகள் பற்றி சொல்லுங்கள்...
நிரந்தர சிறுநீரகச் செயலிழப்பை ஆரம்பத்திலேயே கண்டறிந்து விட்டால் டயாலிஸிஸ், கிட்னி டிரான்ஸ்பரன்ஷன் போன்ற எல்லை வரை போகாமல் தவிர்க்கலாம். அல்லது தள்ளிப் போடலாம்.
இல்லாவிட்டால்...
நிரந்தர சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டுவிட்டது என்பது உறுதியாகிவிட்டால், வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை டயாலிஸிஸ் செய்துகொள்ள வேண்டும். வீட்டிலேயே செல்ஃப் டயாலிஸிஸ் செய்துகொள்வதென்றால், தினமும் மூன்று முறையாவது டயாலிஸிஸ் செய்வது நல்லது.
அப்புறம்...
இளைய வயதினராக இருந்து நிரந்த சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டு இருந்தால், அவர்கள் டயாலிஸிஸ் செய்துகொண்டு காலத்தைக் கழிப்பதைவிட சிறுநீர் மாற்று அறுவைசிகிச்சை செய்துகொள்வதுதான் நல்லது. அதற்கு ஆகும் செலவையும் அவர்களால் எளிதில் ஈடுசெய்ய முடியும்.
இளைஞர்கள் மட்டும்தான் செய்துகொள்ள முடியுமா..?
இளைஞர்களுக்கு புதிய கிட்னி பொருந்திப் போகவும், சிறப்பாக வேலை பார்க்கவும் வாய்ப்புகள் அதிகம். ஆனால், வயதானவர்களுக்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு. அதனால், 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்வது உசிதம் இல்லை. அதனால், தொடர்ந்து டயாலிஸிஸ் செய்துகொள்வதன் மூலமாகவும் ஆயுளை நீட்டிக்கலாம். கிட்னி மாற்று சிகிச்சைக்கு பல லட்சம் செலவாகும்.
கிட்னி டிரான்ஸ்பரன்ஷன் செய்வதால் என்ன பயன்..?
என்னுடைய அனுபவத்தில் கிட்னி டிரான்ஸ்பரன்ஷன் செய்தவர்களின் ஆயுள் கூடியிருக்கிறது. டிரான்ஸ்பரன்ஷன் செய்யாதவர்களைவிட செய்தவர்கள் 20லிருந்து 30 ஆண்டுகளுக்குக் கூடுதலாக வாழ்ந்து இருக்கிறார்கள்.
நிரந்தர செயலிழப்பு ஏற்பட்டவர்கள் எல்லோருக்கும் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்ய முடியுமா?
முடியாது. தற்சமயம் இந்தியாவில் 100 பேரில் 5 பேருக்குத்தான் அந்த வாய்ப்பு கிடைக்கிறது. அதிலும் நெருங்கிய உறவினர்கள் தானம் செய்வதன் மூலமாகத்தான் கிடைக்கிறது. காரணம், பொருத்தமான சிறுநீரகம் பலருக்குக் கிடைப்பதில்லை. அதுவும் இல்லாமல், இந்தியாவின் பல மாநிலங்களில் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்வதற்கான வசதி வாய்ப்புகள் என்பதே இல்லை. அப்படியே இருந்தாலும் பெருநகரங்களில் மட்டுமே இருக்கும். இந்தத் துறையில் நிபுணர்களும் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களும் குறைவு. அதனால், எல்லோருக்கும் சாத்தியமாவதற்கு இன்னும் சில காலம் ஆகலாம். சிறுநீரகத்தை எடுத்து தேவைப்படுபவர்களுக்கு அளிக்கலாம். இது அவருடைய நெருங்கிய உறவினரின் சம்மதத்தோடு மட்டுமே செய்யமுடியும். அதுவும் சிறுநீரகம் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே செய்ய முடியும்.

நிரந்தர சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டவர்கள் உடலுறவு கொள்ள முடியுமா..?
முடியாது. அவர்களுடைய பாலினத்துக்கேற்ப ஆண்மைக்குறைவு, பெண்மைக்குறைவு, குழந்தை பிறப்பதில் மலட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் சாத்தியம் இல்லை. ஆனால், சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சைக்குப் பிறகு எல்லோரையும் போல் அவர்களும் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்.
நிரந்தர செயலிழப்பு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன?
நிரந்தர செயலிழப்பு ஏற்பட்டவர்களில் மூன்றில் இரண்டு பங்கு நோயாளிகள் மாரடைப்பு ஏற்படுவதாலேயே இறந்துபோகிறார்கள். அதேபோல இதயநோயாளிகளுக்கு நிரந்தர சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம். அதனால், சிறுநீரகம் நிரந்தரமாக செயலிழந்தவர்கள் இதயத்தையும், இதயநோயாளிகள் சிறுநீரகத்தையும் அடிக்கடி முழுமையான பரிசோதனை செய்துகொள்வதால் மரணத்தை தள்ளிப்போட முடியும்.

செவ்வாய்

ஏ. டி. எம். இயந்திரங்களை பயன்படுத்தும்போது எச்சரிக்கையாக இருப்பது எப்படி?



ஏ. டி. எம். என்று சொல்லப்படும் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரகளைப் பயன்படுத்துவது பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் இருப்பதில்லை.  அரைகுறையாய், ஏதோ தெரிந்ததை செய்து அவதிப்படுபவர்கள் தான் அதிகம்.  சின்ன சின்ன நுணுக்கங்களை தெரிந்து கொண்டால் சிக்கல் இல்லாமல் ஏ. டி. எம். இயந்திரத்தை பயன்படுத்தலாம்.
பணம் வழங்கும் இயந்திரங்கள் பலவகைப்பட்டவை. சிலவற்றில் அடையாள அட்டையை அதற்குரிய துளையில் சொருகி, உடனே வெளியில் எடுத்து விட வேண்டும்.  வேறு சில இயந்திரங்கள் அட்டையை உள்ளே இழுத்துக்கொண்டு ஒரு சில நொடிகள் கழித்தே வெளியே தள்ளும்.
அடையாள அட்டையின் ஓரத்தில் கருப்பு நிறப்பட்டை ஒன்று இருக்கும்.  அட்டையின் மேல், கீழ் பக்கங்களை எப்படி வைத்துக் கொண்டு இயந்திரத்திற்குள் கொடுக்க வேணும் என்பதற்கு ஓர் அம்புக்குறி அடையாளம் இருக்கும்.  அதைக் கவனித்து அதன்படி செருக வேண்டும்.
நீங்கள் வைத்திருக்கும் கணக்கு எந்த வகையைச் சேர்ந்தது என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ளுங்கள்.  பெரும்பாலும் சேமிப்புக் கணக்கிற்கான அட்டையைதான் அதிகம் வைத்திருப்பார்கள்.  சிலர் நடப்புக் கணக்கிற்கான அட்டையை வைத்திருக்கலாம்.  பணம் வழங்கும் இயந்திரம் உங்களுடைய கணக்கு எந்த வகையைச் சேர்ந்தது என்று கேட்கும்.  குறிப்பிட்ட கணக்கிற்கு நேராக உள்ள பொத்தானை அழுத்த வேண்டும்.  இயந்திரத்தின் முன் பக்கவாட்டில் நின்று கொண்டு இயக்குபவர்களுக்குப் பார்வைக் கோணம் வேறுபாடும்.  சேமிப்புக்கணக்கு என்பதற்குப் பதில் நடப்புக்கணக்கு என்பதற்குரிய பொத்தானை அழுத்திவிடுவார்கள்.  இயந்திரம் பணத்தை அளிக்காது.
சில நேரங்களில், இயந்திரத்திற்குள் வைக்கப்பட்டிருந்த பணம் மொத்தமும் கொடுக்கப்பட்டுத் தீர்ந்து போயிருக்கலாம்.  அம்மாதிரியான வேளைகளில் இயந்திரத்தில் சிறிய சிவப்புப் பட்டை ஒன்றில் விளக்கு எரியும்.
இதைக் கவனிக்காமல் தொடர்ந்து பணம் எடுப்பதற்கு முயற்சிக்கக்கூடாது.
மேலும், எந்த வகை நாணயத்தாள்கள் இயந்திரத்தின் உள்ளே வைக்கப்பட்டு இருக்கின்றனவோ அவற்றை மட்டும்தான் இயந்திரத்தால் வழங்க முடியும்.
இயந்திரத்திற்குள் ஐம்பது ரூபாய்த் தாள்களே வைக்கப்படாமல் இருக்கு.  பணம் எடுக்க விரும்புகிறவர், இயந்திரத்தை இருநூற்றைம்பது ரூபாய் கொடு என்று கேட்டால் அது எப்படிக் கொடுக்கும்?
இதேபோல் பெரிய தொகைக்கான தாள்களும் தீர்ந்து போய் இருக்கலாம்.  நமக்கு ஆயிரம் ரூபாய்த் தாள்கள் தான் வேண்டும்.  இந்த இயந்திரம் ஐந்நூறு ரூபாய் தாள்களைதானே கொடுகிறது என்று குறைபட்டுக் கொள்ளக்கூடாது.
இயந்திரத்தை விட்டு வெளியேறுவதற்கு முன்பாக, அடையாள அட்டையை எடுத்துக் கொண்டோமோ என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
எடுக்கப்பட்ட பணத்தை அம்மையத்தில் உள்ள காமிராவின் முன் நின்று சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.  பின்னாளில் எடுக்கப்பட்ட பணத்தில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் காமிராவில் பதிந்திருக்கும் காட்சிகள் நம் தரப்பு நியாயங்களை சொல்ல உதவும்.
பணம் எடுக்கும் அறைக்குள் வேறு யாரும் இருக்கிறார்கள் என்றால் நீங்கள் உள்ளே நுழைய முயற்சிக்க வேண்டாம்.
நீங்கள் உள்ளே இருக்கும்போது உங்களுக்கு பின்னால் வேறு யாரேனும் நின்று கொண்டிருக்கக்கூடும்.  எச்சரிக்கையாக திரும்பிப் பார்த்து யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்ட பிறகே இயங்குங்கள்.

ஞாயிறு

கற்பூரவள்ளி

குழந்தைகளுக்கு
சிறு குழந்தைகளுக்கு அடிக்கடி சளிப் பிடித்துக்கொண்டு இருமல் உண்டாகும். இது அவர்கள் உடல் நிலையை பல்வேறு வகைகளில் பாதித்து பல நோய்களை உண்டாக்கிவிடும்.
கற்பூர வள்ளியின் இலையைச் சாறெடுத்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் இருமல் நீங்கும். மேலும் குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தமும் விலகும்.
ஆஸ்துமா பாதிப்பிலிருந்து விடுபட
இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிப்புக்குள்ளாக்கும் நோய்களில் ஆஸ்துமாவும் ஒன்று. ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக மூச்சிரைப்பு ஏற்படும். இளைப்பு நோய் உருவாகும். மேலும் இருமலும் ஏற்படும்.
இவர்கள் தினமும் காலையில் கற்பூரவள்ளி இலையின் சாறெடுத்து அதனுடன் பனங்கற்கண்டு அல்லது தேன் கலந்து அருந்திவந்தால் ஆஸ்துமாவினால் உண்டான பாதிப்புகளிலிருந்து படிப்படியாகக் குணமடையலாம்.
சளித் தொல்லை நீங்க
மூலத்தில் சூடு இருந்தால் மூக்கினில் நீர் வரும் என்பது சித்தர் வாக்கு.
மூக்கில் நீர் வடிந்து அது சில நாட்களில் சளியாக மாறி இருமலை ஏற்படுத்திவிடும். இவர்கள் கற்பூரவள்ளி இலையின் சாறை எடுத்து தேன் கலந்து அருந்தி வந்தால் சளி மற்றும் இருமல் தொல்லையிலிருந்து விடுபடலாம்.
புகை பிடிப்பவரா ....?
புகை நமக்குப் பகை என்ற வாசகம் போட்டு இருந்தும் புகைப்பவர்கள் எண்ணிக்கை குறைந்த பாடில்லை. அரசு பொது இடங்களில் புகை பிடித்தலுக்கு தடை பிறப்பித்தும் அதற்கு சரியான பலன் கிடைக்கவில்லை. புகையினால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி போதிய விழிப்புணர்வு ஏற்பட்டும் இந்நிலை மாறவில்லை. புகைப்பவர்கள் அதிகம் நுரையீரல் நோயினால் பாதிக்கப்படுகின்றனர். இதே நாளடைவில் புற்று நோயாக மாறுகின்றது.
இவர்கள் கற்புரவள்ளி இலையினை சாறெடுத்து அதை நன்கு சுண்டக் காய்ச்சி பாதியான அளவு எடுத்து வடிகட்டி அருந்தி வந்தால் புகையினால் உண்டான பாதிப்புகளிலிருந்து விடுபடலாம்.
வியர்வை பெருக்கி
சிலருக்கு வியர்க்காமல் உடம்பு முழுவதும் படிவம் போல் காணப்படும். நமது உடலில் தோலில் பல கோடி துளைகள் உள்ளன. இவற்றின் மூலம்தான் வியர்வை சுரப்பிகள் வியர்வையை வெளியேற்றுகின்றன. இந்த வியர்வையின் மூலம் உடலில் உள்ள அசுத்த நீர் வெளியேறுகிறது.
இந்த வியர்வை நன்கு வெளியேறவும், வியர்வை சுரப்பிகள் நன்கு செயல்படவும் கற்பூரவள்ளியின் இலையை நிழலில் காயவைத்து பொடி செய்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் வியர்வை பெருகும்.
காசநோய்
காசநோயால் உண்டான பாதிப்புகள் குறைய கற்பூரவள்ளி சிறந்த மருந்தாகும். கற்பூரவள்ளி இலையை சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து அருந்தி வந்தால் காச நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் குறையும்.
கற்பூரவள்ளி ஒரு கிருமி நாசினியாகும். கற்பூரவள்ளி செடியை தென்னை மரத்தைச் சுற்றி நட்டு வைத்தால் ஈறாடுகால் (12 அடி விட்டம்) வரை எந்த விதமான பூச்சிகளையும் அண்ட விடாது.
சித்தர்கள் இதனை கற்பக விருட்சத்துடன் ஒப்பிடுவார்கள். இதனால் கூட இதற்கு கற்பூரவள்ளி என்று பெயர் வந்திருக்கலாம்.
வீட்டைச் சுற்றி கற்பூரவள்ளியை நட்டு வளர்த்தால் விஷப் பூச்சிகள் தொல்லையிலிருந்து தப்பலாம். நாட்டைப் பாதுகாக்கும் போர்ப்படை வீரர்களைப் போல் மனிதனை இந்த கற்பூரவள்ளி பாதுகாக்கிறது.
நாமும் நம் வீட்டில் கற்பூரவள்ளியை வளர்த்து அதன் பயனைப் பெறுவோம்.

வாழைத்தண்டி​ன் மருத்துவ குணங்கள்

   வாழைத்தண்டின் மருத்துவ குணங்கள்  சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்களால் துன்பப்படுகிறவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. உடலில் உள்ள கழிவுகள் சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகின்றது.சிறுநீரைக் கட்டுப்படுத்துவதாலோ அல்லது நோய் பாதிப்புகளாலோ சிறுநீர் சரிவர உடலை விட்டு வெளியேறாமல் இருக்குமானால் அது பல பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும்.சிறுநீரகத்தில் கல் உருவாவது இன்று மிக பரவலாகக் காணப்படும் நோய். அதிக காரமான உணவு, மிகக் குறைவாக நீர் அருந்துதல், வறட்சியான உணவு, மது அருந்தும் பழக்கம், அடிக்கடி சிறுநீரை அடக்குதல் போன்ற காரணங்களால் சிறுநீர் தடைபட்டு சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றது.சிறுநீரக கற்களை வெளியேற்ற மருந்துகளும், மருத்துவ முறைகளும் இருந்தாலும் நாம் உட்கொள்ளும் உணவு மூலமும் சிறுநீரக கற்களை வெளியேற்றலாம்.வாழைத்தண்டுக்கு சிறுநீரக கற்களை வெளியேற்றும் தன்மை உண்டு. வாழைத்தண்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் ஆரம்ப நிலையில் உள்ள கற்களை மிக எளிதாகக் கரைத்து விடலாம். சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் வாழைத்தண்டை வாரம் மூன்று முறை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.வாழைத்தண்டு நார்ச்சத்து மிக்க உணவாதலால் அதிக உடல் எடையால் அவதிப்படுகிறவர்கள், நீரிழிவு நோயாளிகள், ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகரித்து இருப்பவர்களுக்கு இது மிகச் சிறந்த மருந்து. இது ரத்தத்தை தூய்மை செய்யும் இயல்புடையது.உடலைக் குளிர்ச்சியடையவைக்கும் தன்மையிருப்பதால் கோடை காலத்திற்கு மிகவும் ஏற்றது. வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்தும் சக்தி இருக்கிறது.உடல் எடை குறைய உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்பவர்கள் வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கண்களின் அற்புதம் .

புலன்களில் முதன்மையானது பார்வை. கண்கள் மூலம் பார்க்கப்படும் காட்சிகள், மின் ரசாயனத் துடிப்புகள் மாற்றப்படுகின்றன. பின் தலையில் உள்ள 'ஸெரிப்ரல் கார்டெக்ஸ்' பகுதியின் மூலம் அறிந்து கொள்ளப்படுகிறது . மூளையின் முதல் ஆச்சரியம் இதுதான். கண் என்பது ஒரு கேமராதான். அதற்கும் லென்ஸ் இருக்கிறது. ஒளிக்கதிர்கள் கார்னியா வழியாகக் கண்ணுக்குள் நுழைகின்றன. ப்யுப்பில் என்று அழைக்கப்படும் பாப்பா கேமராவின் அப்பெர்ச்ச்சர் போல செயல்படுகிறது. தானாகவே 'அட்ஜஸ்ட்'செய்து கொள்ளக் கூடியது. குறைந்த வெளிச்சத்தில் பெரியதாகும். அதிக வெளிச்சத்தில் குறுகும்.
கண் லென்ஸ் இந்த ஒளிக்கதிர்களை வளைத்து, உள்ளே உள்ள கண்ணாடி போன்ற திரவத்தின் வழியாக 'ரெட்டினா' என்ற திரையின் மேல் படிய வைக்கிறது. 'ரெட்டினா' என்றால் வலை. நரம்பு செல்களின் வலை. இந்த செல்களுக்கு 'ஒளி வாங்கி செல்கள்' என்ற பெயரும் உண்டு. இந்த ஒளி வாங்கி செல்கள் இரண்டு வகைப்படும். ஒன்று கோன் வடிவம், அதாவது கூம்பு. மற்றொன்று ராடு வடிவம். அதாவது குச்சி. கூம்பு வடிவ செல்கள் 60 லட்சம் உள்ளன. சிறிய கெட்டியான கூம்பு போன்ற வடிவம் கொண்ட இந்த செல்கள்தான் வண்ணங்கள நமக்கு தெளிவாக காட்டுகின்றன. இதனுடன் சேர்ந்து பன்னிரெண்டரை கோடி மெல்லிய குச்சிகள் போன்ற செல்களும் உண்டு. இவை தான் மெல்லிய வெளிச்சத்திலும் நம்மை பார்க்க வைக்கின்றன. இவைகள் வண்ணத்தை உணராது வெறும் கருப்பு, வெள்ளையை மட்டும் தான் உணர வைக்கும்.
இந்த கூம்பு செல்களிலும், குச்சி செல்களிலும் விழுந்த ஒளிக்கதிர்கள், ஒளி உணரும் சில ரசாயனங்கள் மூலம் ரசாயன மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதில் ட்ரான்ஸ்ட்யுசின் என்ற புரதம் ஒளி - செய்தி மாற்றத்தில் பயன்படுகிறது. இதிலிருந்து பார்வை நரம்பு மூலம் செய்தி உள்ளே போகிறது. கண் திரையில் படும் ஒவ்வொரு விவரமும் ஒழுங்காக பார்வை கார்டெக்ஸ் பகுதிக்கு அனுப்பபடுகிறது. அங்கே அந்த பிம்பம் மறுபடி கோர்க்கப்ப்படுகிறது.
கார்ட்டெக்ஸ் பகுதிக்கு செய்திகள் நேராகப் போவதில்லை. பார்வை நரம்புகள் இரண்டும் இடம், வலம் மாறுகின்றன.
கண்ணின் சில ஆச்சரியங்களுக்கு இன்னமும் விடை கிடைக்கவில்லை. கண்ணின் விழித்திரை பகுதி எதற்க்காக மூளையின் பின்னால் அமைக்கப்பட்டிருக்கிறது? எதற்க்காக இடது வலம் என்று பிம்பங்கள் மாறுகின்றன? கண் திரையில் விழும் பிம்பம் தலிகீழானது. அது எங்கே, எப்படி நேராக நிமிர்த்தப்படுகிறது? என்பது போன்ற கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்காமல் ஆராய்ச்சியாளர்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தக்காளி பழத்தின் மகிமை என்ன?

 தக்காளி என்பதும் ஏதோ குழம்பு வைப்பதற்குத் தேவையான ஒன்று என்றே அனைவரும் கருதுகின்றனர். தக்காளியும் பழ வகைகளில் ஒன்றுதான் என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.
பழங்களைச் சாப்பிடுவதைப் போலவே தக்காளிப் பழத்தையும் அப்படியே சாப்பிட்டால் உடலிற்கு வளத்தையும் நல்ல பலத்தையும் கொடுக்கும்.
தக்காளிப் பழத்தை அப்படியே சாப்பிடுவது என்பது கிட்டத்தட்ட டானிக் குடிப்பதற்கு ஒப்பானது. அதுமட்டுமல்லாமல், தக்காளிப் பழத்தை எந்த வகையில் பக்குவப்படுத்திச் சாப்பிட்டாலும், அதன் சக்தி அப்படியே நமக்குக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தக்காளிப் பழத்தில் அதிகபட்சமாக வைட்டமின் ஏ சத்து 91 மில்லி கிராம் உள்ளது. வைட்டமின் பி1 சத்து 34 மில்லி கிராம், பி2 வைட்டமின் 17 மில்லி கிராமும், சி வைட்டமின் 9 மில்லி கிராமும் உள்ளது. மிகக் குறைவாக சுண்ணாம்புச் சத்து 3 மில்லி கிராமே உள்ளது.
தக்காளிக்கு இரத்தத்தை சுத்திகரிக்கும் ஆற்றல் உண்டு. இரத்தத்தையும் இது உற்பத்திச் செய்யக் கூடியது. நல்ல இரத்தத்திற்கு வழி செய்வதால் இரத்த ஓட்டமும் சீராக இருக்க உதவுகிறது.
பொதுவாக இரத்த ஓட்டம் சீராகவும், சுத்தமாகவும் இருந்தாலே உடலில் நோய்த் தொற்று ஏற்படுவது எளிதான காரியமல்ல.
தக்காளிப் பழத்தை எந்தவிதத்திலாவது தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமானது.
தக்காளிப் பழத்தை சூப்பாக வைத்து காலை, மாலையில் சாப்பிட்டு வந்தால் உடல் சருமம் நல்ல ஆரோக்கியத்தைப் பெறுவது மட்டுமல்லாமல் சருமம் மென்மையாகவும், ஒருவித பொலிவுடன் திகழும்.
இதுமட்டுமல்லாமல், சரும நோய்கள் வராமலும் பார்த்துக் கொள்ளும்.
தக்காளிப் பழத்தைக் கொண்டு ஜாம் செய்து வைத்துக் கொண்டால், அதனை இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி என காலை உணவுகளில் சேர்த்துக் கொள்ளலாம். குழந்தைகளும் விரும்பி உண்பார்கள். அவர்களுக்குத் தேவையான சத்தும் எளிதில் கிடைத்துவிடும்.
விலை உயர்ந்த பழங்களை உட்கொள்ள முடியாத ஏழை, எளிய மக்கள் தக்காளிப் பழத்தை சாப்பிடலாம் என்று சொல்லலாம். ஆனால், தற்போதைய விலைவாசியில் தக்காளிப்பழமும் ஒரு விலை உயர்ந்த பழமாக மாறிவிட்டுள்ளது என்பதே உண்மையாக இருக்கிறது.

இதய நோயை கட்டுப்படுத்தும் தக்காளி!


அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் நடத்திய இது தொடர்பான ஆய்வை ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. அதில், கூறியுள்ளதாவது:
 தக்காளியில் உள்ள ‘லைக்கோபென்’ சத்து பெண்களின் இதய நோயை கட்டுப்படுத்தும். காய்கறிகளில் முக்கிய சத்துகளாக பொட்டாசியம், பீட்டா கரோட்டின், மக்னீசியம், கால்சியம், இரும்பு, போலேட் (பி வைட்டமின்), வைட்டமின் சி, இ, கே, நார்சத்து ஆகியவை உள்ளன.அதிக உடல் எடை ‘டைப் 2’ சர்க்கரை நோய்க்கு அழைத்து செல்லும். இது பின்னர் இதய நோய், கிட்னி செயலிழப்பு, விரைவில் இறப்பு போன்றவற்றுக்கு காரணங்கள் ஆகின்றன. காய்கறிகள் வயிற்றை நிரப்பி, பசியை குறைக்கின்றன. காய்கறிகளில் உள்ள நார்சத்து இதய நோய்க்கு காரணமாகும் கொழுப்பை குறைக்கிறது. மலச்சிக்கலை போக்கும்.
தக்காளியில் உள்ள பொட்டாசியம் மற்றும் காய்ந்த பீன்ஸ், இனிப்பு உருளைக் கிழங்கு, கீரைகளில் உள்ள சத்து உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். இதய நோய்க்கும், ‘ஸ்ட்ரோக்’ ஏற்படவும் முக்கிய காரணம் உயர் ரத்த அழுத்தம். கீரையில் உள்ள சத்துக்கள் கண் பார்வைக்கு நல்லது.தக்காளியில் உள்ள லைக்கோபென் சுரப்பி புற்று நோய்க்கான வாய்ப்பை குறைக்கும். பெண்களுக்கு இத்துடன் தொடர்புடைய இதய நோயையும் குறைக்கும்

திங்கள்

தென்னை நார்க்கழிவில்விவசாயம்

நிறைவேறிய 'இயற்கை' சபதம் !
முயற்சி
பளிச்... பளிச்...
தென்னை நார்க்கழிவில்விவசாயம்.
மண்புழுக்கள் பெருக்கம்.
பூச்சி, நோய்கள் தாக்குவதில்லை.
இயற்கை விவசாயத்துக்குள் காலடி வைக்கும் பெரும்பாலானோர், பாரம்பரிய ரகங்கள், புதிய சாகுபடி முறைகள்... என ஏதாவதொரு புதுமையைக் கையிலெடுத்து, தங்களது நிலத்தையே பரிசோதனைக் கூடமாக மாற்றி விடுவார்கள். அத்தகையோரில் ஒருவர்தான், ரஃபீக். இவர், திருச்சி-தஞ்சாவூர் மாவட்டங்கள் சந்தித்துக் கொள்ளும் கல்லணை அருகில் உள்ள உத்தமர்சீலி கிராமத்தில், பெருமுயற்சியோடு இயற்கை விவசாயம் செய்து வருகிறார்.


பசுமை விகடன் 10.02.2009 தேதியிட்ட இதழில், 'ஒருங்கிணைந்தப் பண்ணையம் லட்சியம்... மாசத்துக்கு ஒரு லட்சம் நிச்சயம்' என்ற தலைப்பில் இவரைப் பற்றிய கட்டுரை ஏற்கெனவே வெளியாகியிருக்கிறது.
''விவசாயம், ஒருங்கிணைந்த கால்நடைப் பண்ணை இதுக்காக மட்டுமே இந்த பத்து ஏக்கர்ல பத்து லட்ச ரூபாய் வரைக்கும் முதலீடு செஞ்சிருக்கேன். இன்னும் ஒரு வருஷம் கழிச்சி. எல்லா செலவும் போக, மாசத்துக்கு ஒரு லட்ச ரூபாய் லாபம் சம்பாதிக்கணும்கிறதுதான் என்னோட இலக்கு. கட்டாயம் அதைவிட அதிகமாத்தான் கிடைக்கும்''
-இப்படி சபதம் போட்டபடி, 'தென்னை தவிர, வேறு சாகுபடிக்கு சரிப்பட்டு வராது' என்று ஒதுக்கிவிடப்பட்ட மணல் மேவிய வண்டல் மண் நிலத்தை விலைக்கு வாங்கிய ரஃபீக், இயற்கைத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, மண்ணையே மாற்றி, நெல் சாகுபடி மற்றும் கால்நடை வளர்ப்பு மூலம் 'பத்து ஏக்கரில் ஒரு மாதத்துக்கு ஒரு லட்ச ரூபாய்' எனும் சபதத்தை தற்போது நிறைவேற்றிக் கொண்டுவிட்டார்.
அடுத்தக் கட்டமாக, தென்னை நார்க்கழிவுகளைப் பயன்படுத்தி 'ஜீரோ பட்ஜெட்முறையில் வாழை சாகுபடியிலும் இறங்கியிருக்கும் இவர், தற்போது 'பத்து ஏக்கரில் மாதம் 2 லட்ச ரூபாய் லாபம்' எனும் புதிய சபதத்தோடு களத்தில் பரபரத்துக் கொண்டிருக்கிறார்!
6 அடி உயரத்துக்கு நெல்!
தன்னுடைய அனுபவங்களை ரசிக்கச் ரசிக்கச் சொல்லும் ரஃபீக்கை பார்க்கும்போது, நமக்கும்கூட உற்சாகம் பற்றிக் கொள்கிறது. ''இந்தப் பகுதியில நான் நிலம் வாங்கினப்போ... 'தென்னையைத் தவிர எந்த விவசாயத்துக்கும் சரிப்பட்டு வராத மண்ணுனு எல்லாரும் சொன்னாங்க. இருந்தாலும், 'இயற்கை வேளாண் விஞ்ஞானி' நம்மாழ்வார் ஆலோசனைப்படி அமுதக்கரைசல், பஞ்சகவ்யா; 'ஜீரோ பட்ஜெட் பிதாமகர்' சுபாஷ் பாலேக்கரோட ஜீவாமிர்தம்னு எல்லாத்தையும் பயன்படுத்தி நிலத்தை வளப்படுத்தினேன்.
வரப்புல எல்லாம் வாழை, தென்னை, தீவன மரங்கள்னு நட்டு வெச்சுட்டு, நெல் சாகுபடியில இறங்கினேன். நாட்டு ரகமான வெள்ளைப் பொன்னி நெல்லைத்தான் போட்டேன். எந்த மருந்தும் அடிக்கல.. துளி ரசாயன உரமும் போடல. அருமையான விளைச்சல். பக்கத்துல தோட்டம் போட்டிருந்தவங்கள்லாம் ஆச்சரியமா பார்த்துட்டுப் போனாங்க.
ஒவ்வொரு நெல்லுப்பயிரும் சும்மா ஆறடி உயரத்துக்கு வளந்து நின்னுச்சு. இதுதவிர நான் வளர்க்கற கால்நடைகளும் சரியான முறையில கைகொடுக்க... நான் எதிர்பார்த்தபடியே பத்து ஏக்கர்ல இருந்து மாசம் ஒரு லட்ச ரூபாய் வீதம் லாபம் வர ஆரம்பிச்சுடுச்சு'' என்று சந்தோஷம் பொங்கச் சொன்ன ரஃபீக், தொடர்ந்தார்.
'வரப்புவாழை கொடுத்த நம்பிக்கை!
''வரப்புல சும்மா சோதனைக்காக போட்டிருந்த 500 வாழையும் ரொம்பவே நல்லா வந்திருந்துச்சு. அதனாலதான் தோட்டம் முழுக்கவே வாழை போட்டா என்னா?னு அடுத்த கட்டமா வாழை சாகுபடியில இறங்கினேன்.
நிறைய பேர், 'சரியா வராது... யோசிச்சு செய்யுங்கனு சொன்னாங்க. அதுக்குக் காரணமா மறுபடியும் அவங்க சுட்டிக் காட்டினது... என்னோட மண்ணைத்தான். 'இந்த மண்ணுல நெல்லு விளைய வெச்சாச்சு... அடுத்தாப்புல வாழையையும் நல்லபடியா வர வைக்கறதுக்கு என்ன பண்றது?'னு யோசிச்சுக்கிட்டு இருந்தேன்.
விவசாய பயிற்சிகளுக்குப் போயிருந்தப்ப தென்னை நார்க்கழிவு விவசாயம் பற்றி கேள்விப் பட்டிருந்தேன். அதையே பண்ணிப் பார்த்தா என்னான்னு தோணிச்சு. உடனே செயல்ல இறங்கிட்டேன்.
தென்னைநார் கம்பெனிகள்ல, 'எப்படி காலி பண்றது'னு தெரியாம அதை சும்மாப் போட்டு வெச்சிருப்பாங்க. போய் கேட்டதுமே 'இடம் காலியாகிடும்'னு சந்தோஷமா அள்ளிட்டுப் போகச் சொல்லிட்டாங்க.
நாலு அங்குல உயரத்துக்கு நார்க்கழிவு!
அஞ்சு ஏக்கர் நிலத்தை உழுது, 50 டிராக்டர் குப்பை அடிச்சு, இன்னொரு உழவு ஓட்டி, நாலு அங்குல உயரத்துக்கு தென்னை நார்க்கழிவைக் கொட்டினேன். வரிசைக்கு வரிசை 8 அடி, மரத்துக்கு மரம் 5 அடி இடைவெளி கொடுத்து ரஸ்தாளி, மொந்தன், பூவன், கற்பூரவள்ளி, ஏழரசினு வாழைக்கட்டைகளை நடவு செஞ்சேன். இடைவெளியில நவதானியத்தை விதைச்சு, 40 நாள் கழிச்சு, எல்லாத்தையும் பறிச்சு வாழைத்தூர்ல போட்டு திரும்பவும், நாரைப் போட்டு மண் அணைச்சு விட்டேன். இந்தப்பகுதியில வாழைக்கு கிடங்கு எடுக்கறதுதான் வழக்கம். நான் மேட்டுப்பாத்தியில இருக்கற மாதிரி வெச்சிருக்கேன். அதனால மழை கொட்டினாலும், நிலத்துல தண்ணி நின்னாலும், வாழைத்தூருக்கு பாதிப்பு வராது.
பாசனத்தோடு சாணம், மூத்திரம்!
பாசனம் பண்ணும்போதெல்லாம் தண்ணியோட சாணத்தையும் மாட்டுச் சிறுநீரையும் கலந்து விடுறேன். பதினஞ்சு நாளைக்கு ஒரு தடவை ஜீவாமிர்தத்தை இலை வழி ஊட்டத்துக்காகத் தெளிச்சு விடுறேன். மாசத்துக்கொரு தடவை புளிச்சமோரையும், தேங்காய் தண்ணியையும் தனித்தனியா தெளிச்சு விடுறேன்.
வாழைக்கட்டை நட்டு, அஞ்சரை மாசத்துலயே ஆறு அடி, ஏழடிக்கு மேல வளர்ந்துடுச்சு. சிலது பத்தடிக்கு மேல போயிடுச்சு. தூரே ரெண்டடி விட்டத்துக்கு இருக்கு. இதுவரை ஒரு பூச்சி, பொட்டு தாக்கல. நோய்த் தாக்குதலும் இல்ல. பச்சைக் கட்டி அருமையா வளர்ந்து நிக்குது. ஆச்சரியமா பார்க்கறாங்க அக்கம் பக்கத்து விவசாயிங்க.
ஒரு மழை பெய்தால் ஒரு மாதத்துக்கு ஈரப்பதம்!
நார்க்கழிவு கொஞ்சம் கொஞ்சமா மக்கிக் கிட்டே இருக்கு. அதோட நவதானியச் செடிகளும் சேர்ந்து மக்கி நல்ல உரமா மாறியிருக்கு. தோட்டமே 'ஸ்பான்ஞ்ச்மாதிரி மெத்து மெத்துனு இருக்கு. ஒரு தடவை உழவு மழை பெஞ்சாக்கூட போதும். ஒரு மாசத்துக்கு நிலம் காயாது. அந்தளவுக்கு ஈரப்பதத்தை நார் பிடிச்சு வெச்சுக்குது. மண்ணை எந்த இடத்துல கிளறினாலும், மண்புழுதான். ஒரு புழுவைக்கூட நான் வெளியில இருந்து கொண்டுவரல. ஆனா... லட்சக்கணக்குல புழுக்கள் இருக்கு. களைகளும் பெருசா முளைக்கிறதில்லை.
நவதானியச் செடிகள்தான் உரம்!
இன்னொரு ஒன்றரை ஏக்கர்ல தென்னைநார் போடாமலே வாழை ரகங்களைக் கலந்து நட்டு பரிசோதனை பண்ணிக்கிட்டிருக்கேன். ஜீவாமிர்தம், புளிச்சமோர், தேங்காய் தண்ணி எல்லாத்தையும் தெளிக்கிறேன். இடையில நவதானியத்தையும் விதைச்சுக்கிட்டிருக்கேன். ஒரு தடவை நவதானியச் செடிகளைப் பிடுங்கிப் போட்டதும், திரும்ப விதைகளைத் தூவி விட்டுவேன். இதேமாதிரி தொடர்ந்து செஞ்சு மண்ணை வளப்படுத்திக்கிட்டிருக்கேன். ஜீரோ பட்ஜெட் முறைப்படி நல்ல இடைவெளி கொடுத்திருக்கறதால, ஊடுபயிர் சாகுபடியும் பண்ணிக்கலாம். நான் தட்டைப்பயறு போட்டுப் பாத்தப்போ நல்லா வந்திருந்துச்சு.
இப்ப ரெண்டு தோட்டத்துலயும் வளர்ந்து நிக்கற வாழைகளைப் பார்த்துட்டு, 'பெரிய பெரிய தார்களாத்தான் போடும்'னு எல்லாரும் சொல்றாங்க. நானும் அப்படித்தான் எதிர்பார்க்கிறேன்'' என்று சிலாகித்த ரஃபீக், தொடர்ந்து இயற்கை விவசாயத்தில் தான் பெற்ற அனுபவங்களைப் பற்றிப் பேச ஆரம்பித்தார்.
தெளிப்புக்கு மட்டும் ஜீவாமிர்தம்!
''ஜீரோ பட்ஜெட் பயிற்சிக்குப் போயிருந்தப்போ, சுபாஷ் பாலேக்கர், 'மனிதர்களே பட்டினியிலே கிடக்கிறப்போ... அவங்களுக்கு உணவா பயன்படுகிற பால், நெய், தயிர்... எல்லாத்தையும் கலந்து பயிருக்குக் கொடுக்கலாமா?’னு ஒரு கேள்வி கேட்டார். அது எனக்கு மனசுல ரொம்ப ஆழமா பதிஞ்சுடுச்சு. அதனால, பஞ்சகவ்யா உபயோகப்படுத்துறதை நிறுத்திட்டேன். ஜீவாமிர்தத்துலயும் பயறு மாவு, நாட்டுச்சர்க்கரை பயன்படுத்துறதால அதையும் குறைக்கணும்னு முடிவு பண்ணினேன். இலை வழித் தெளிப்புக்கு மட்டும்தான் ஜீவாமிர்தம்னு முடிவு செய்த நான், நிலத்துக்கு ஊட்டம் கொடுக்கணும்கிறதுக்காக ஒரு தொட்டியைக் கட்டி அதுல சாணத்தைக் கொட்டி பாசனம் பண்ணும்போது கொஞ்சம் கொஞ்சமா சாணி கரைஞ்சு போற மாதிரி ஏற்பாடு பண்ணியிருக்கேன். மாட்டுப் பண்ணையில இருந்து மாட்டுச் சிறுநீர் தொட்டிக்கு வர்ற மாதிரி ஏற்பாடு பண்ணியிருக்கேன்.
வரப்பிலேயே பசுந்தீவனம்!
வரப்பு முழுக்க மரங்கள நட்டு வெச்சுருக்கதால மாறி மாறி நிழல் விழுந்து நிலம் பெரியளவுல சூடாகுறதில்ல. அதேபோல தீவன சாகுபடிக்காக நிலத்தை வீணடிக்காம வரப்புலேயே மாடுகளுக்கான தீவனப்புல்லை விதைச்சு விட்டுருக்கேன். இதுவும் பாலேக்கரோட முறைதான். என்கிட்ட இருக்குற மாடுகளுக்கு இதுவே போதுமானதா இருக்கு. பத்து ஏக்கர் வரப்பு முழுக்க விதைச்ச தீவனப்புல்லே... கிட்டத்தட்ட ஒரு ஏக்கர் அளவுக்கு மேல மகசூல் கொடுக்குது. கால்நடைகளுக்கு உணவாகாத எந்தப் பயிரையும் நான் விளைவிக்கிறதில்லை. பயிரோட கழிவு கால்நடைக்கு உணவாகணும். கால்நடைகளோட கழிவு, பயிருக்கு உணவாகணும்கிறதுல கவனமா இருக்கேன்'' என்று சொன்ன ரஃபீக்,
சம்பளம் மட்டும்தான் செலவு!
''இயற்கை முறையில் ஒருங்கிணைந்தப் பண்ணையம்', இதுதான் என்னோட வெற்றிக்கு மூல மந்திரம். 'பத்து ஏக்கர் நிலத்துல பண்ணையம் பண்ணி, ஒரு மாசத்துக்கு ஒரு லட்ச ரூபாய் சம்பாதிக்கணும்'னு விவசாயத்துல இறங்கினேன். நான் எதிர்பார்த்த மாதிரி அது கை கூடிடுச்சு. இப்போ மாசம் ரெண்டு லட்சம் சம்பாதிக்கணும்னு அடுத்த அடியெடுத்து வெச்சிருக்கேன்.
ஏற்கெனவே வரப்புல நடவு செஞ்ச வாழைக்கே தார் ஒண்ணுக்கு 200 ரூபா வீதம் கிடைச்சுது. இப்ப, மொத்தம் ஆறரை ஏக்கர்ல 7,000 வாழை மரம் வெச்சுருக்கேன். முழு இயற்கையில விளையுறதால ஒரு தாரை எப்படியும் 200 ரூபாய்க்கு விக்க முடியும். அதுலயே வருஷத்துக்கு 14 லட்சம் ரூபாய் வருமானம் கிடைச்சுடும். இதுபோக மீன், பால், நெல், கோழி, மாட்டுக் கன்றுகள் விற்பனையிலயும் கணிசமா லாபம் கிடைக்கும். கூடுதலா செம்மறி ஆடு வாங்கி வளர்க்கறதுக்காக கொட்டகை போட்டாச்சு. அதன் மூலமாவும் ஒரு லாபம் கிடைக்கும்.
எனக்கு இடுபொருள், பூச்சிக்கொல்லி எதுக்குமே செலவு கிடையாது. பெரியளவுல உபகரணங்களும் வாங்க வேண்டிய அவசியமில்லை. வேலைக்கு 2 குடும்பங்கள் இருக்கு. அவங்களுக்கு வருஷத்துக்கு 2 லட்சத்து
40 ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுக்குறேன். என் கணக்கெல்லாம் சரியா வந்தா... பத்து ஏக்கர்ல மாசம் 2 லட்ச ரூபாய் வீதம்... வருஷத்துக்கு 24 லட்ச ரூபாய் லாபம் எடுத்துடுவேன்'' என்று உற்சாகமாகச் சொன்னார் ரஃபீக்.

உரக்குழி...
ரஃபீக், தன்னுடைய யோசனையில் உரக்குழி ஒன்றையும் பராமரித்து வருகிறார். இதிலிருந்து கிடைக்கும் உரத்தையே அடியுரமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்!
இதற்கான தொழில்நுட்பம் இதுதான்-மாட்டுக்கொட்டகைக்கு அருகிலேயே 50 அடி நீளம், 20 அடி அகலம், 8 அடி ஆழம் உள்ள கிடங்கு வெட்டி, அதில் ஓரடி உயரத்துக்கு தென்னை நார்க்கழிவை பரப்பி, அதன் மீது ஆட்டுச்சாணம் மற்றும் மாட்டுச்சாணம் இரண்டையும் ஓரடி உயரத்துக்கு போடவேண்டும். இப்படி, தென்னைநார்க்கழிவு, ஆட்டுச்சாணம் மற்றும் மாட்டுச்சாணம் ஆகியவற்றை கிடங்கு நிறையும் வரை மாற்றி மாற்றிப் போடவேண்டும். இது நன்கு மட்கி, அருமையான உரமாக மாறிவிடும். ஆண்டுக்கு ஒரு தடவை இதை எடுத்து நிலத்துக்கு அடியுரமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்!
நாட்டுக்கேற்ற ரகம் நாட்டுரகம்தான்!
'இயற்கை விவசாயம் என்று தீவிரமாக இறங்கிய பிறகு, பயிராக இருந்தாலும் சரி... கால்நடையாக இருந்தாலும் சரி... அது நாட்டுரகமாக இருந்தால்தான் விவசாயி தற்சார்படைய முடியும்' என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கிறார், ரஃபீக். அதைப் பற்றி பேசும்போது...
''நாட்டுரகங்கள்தான் நோய் எதிர்ப்புச் சக்தியோட இருக்குது. ஆரம்பத்துல வான்கோழி, நாட்டுக்கோழி, தலைச்சேரி ஆடு, கழிவுகளுக்காக ஒரு நாட்டுமாடு, பாலுக்காக கலப்பின மாடுகள்னு வெச்சிருந்தேன். அதையெல்லாம் இப்போ மாத்திட்டேன்.
ஒரு வினாடி கூட வீணாகக் கூடாது!
வான்கோழி வளர்ப்பை சுத்தமாக் கைவிட்டுட்டேன். எந்தத் தொழில் செய்தாலும், அதுல லாபம் மட்டும்தான் குறிக்கோளா இருக்கணும். விவசாயமும் அதுக்கு விதிவிலக்கு கிடையாது. நம்மளோட ஒவ்வொரு வினாடி உழைப்பும் வீண் போகக்கூடாது. வான்கோழி வெச்சிருந்தப்போ குஞ்சுகளைக் காப்பாத்த, ரொம்ப மெனக்கெட வேண்டியிருந்துச்சு. அதுல நேரம் வீணாகவே... தேவையில்லாம எதுக்கு இதுல முட்டிக்கிட்டு கிடக்கணும்னு மொத்தமா எல்லாத்தையும் வித்துட்டேன். அதேசமயம் நாட்டுக்கோழி வளர்க்கிறேன். இதுங்களுக்காக ரொம்ப மெனக்கெட வேண்டியதே இல்ல. தன்னாலயே வளர்ந்துடும். இருந்தாலும், ஒரு கொட்டகை, போட்டுத்தான் வளர்க்கிறேன்.
இப்போ, ஜமுனாபாரி நாட்டு ஆடுகளோட கலப்பின ஆடுகள்லதான் 25 ஆடுகளை வெச்சிருக்கேன். முக்கால் ஏக்கர்ல இருக்குற குளத்துல சாப்பாட்டுக்கான மீன்களை வளர்த்துக்கிட்டிருக்கேன்
பால் பாசம் தேவையில்லை!
கலப்பின மாடுக எல்லாத்தையும் கொடுத்திட்டு இப்போ நம்ம நாட்டு ரகமான கிர், ரெட் சிந்தி மாடுகளை மட்டும்தான் வெச்சுருக்கேன். எல்லாரையும் மாதிரி நானும் 'பால் பாசம்காரணமாத்தான் கலப்பின மாடுகளை வாங்கினேன். லிட்டர் லிட்டரா கறக்கணும்னு நினைக்கறது தப்புனு பிறகுதான் தெரிஞ்சுக்கிட்டேன். நாட்டுமாடு இல்லாம விவசாயமே கிடையாது. அதோட சாணமும் மாட்டுச்சிறுநீரும்தான் நமக்கு முதல் வருமானம். ரெண்டாவது வருமானம் கன்றுகள். மூணாவதாத்தான் பால் வருமானத்தை வெச்சுக்கணும். பால் வருமானத்தை முதலிடத்துல வெச்சுதான், கலப்பின மாடுகளுக்கு நாம பலியாகிக் கிடக்கிறோம்.
கலப்பின மாடுகளில் நஷ்டம்தான்!
நான் ஹோல்ஸ்டியின் ஃபிரீஸியன் கலப்பின மாடுகளைத்தான் வெச்சிருந்தேன். அதுல பாலுக்கு பஞ்சமில்லைங்கறது எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம்தான். ஆனா, கிடேரிக்கன்னு சரியான வயதுல பருவத்துக்கு வர்றது கிடையாது. பருவத்துக்கு வந்தபிறகு 20 முறையாவது ஊசி போட்டாத்தான் சினை பிடிக்குது. டாக்டரோட உதவியில்லாம பிரசவமும் நடக்கிறதில்ல. ஆகக்கூடி... விவசாயி கலப்பின மாடு வளர்க்கறதால... டாக்டர், மருந்துக் கம்பெனி, தீவனக் கம்பெனி... இவங்களுக்குத்தான் வருமானம். விவசாயிக்கு நட்டம்!
பாலைவிட கன்று விற்பனையில் லாபம் அதிகம்!
நாட்டுமாடு வளர்க்கறப்போ பிரச்னையே கிடையாது. கலப்பின மாடு வளர்த்து பால் மூலமா சம்பாதிக்கிறதைவிட, நாட்டு மாட்டுக் கன்னுக்குட்டியை விக்கிற காசுல அதிக லாபம் கிடைக்கும். அதோட நாம் கொடுக்குற புல், பூண்டைச் சாப்பிட்டுட்டு நாலு மணி நேரத்துல உரமா மாத்திக் கொடுக்குற உரத்தொழிற்சாலைகளா நாட்டு மாடுக இருக்கு. கன்னுக்குட்டியை நல்லா செழிம்பா பால் குடிக்க வெச்சு அதுக்குப் போக மிச்சம் இருக்குற பாலைத்தான் நான் கறந்துக்குறேன். குட்டி ஒன்பது மாசத்துல சினைக்கு தயாராயிடுது. வருஷா வருஷம் ஒரு கன்னுக்குட்டி நமக்குக் கிடைச்சிடுது. இதுக்கு மேல என்ன வேணும்?'' என்று நியாயமானக் கேள்வியை எழுப்புகிறார் ரஃபீக்!
நாட்டுக்கோழி வளர்ப்பில் வேலையே இல்லை!
சுலபமான முறையில் நாட்டுக்கோழி வளர்த்து வரும் ரஃபீக், அதற்கென நூறு சதுர அடியில் கொட்டகை அமைத்துள்ளார். உள்புற தரைப்பகுதியில ஒன்றரை அடி உயரம், ஒன்றரை அடி அகலத்தில் சிறுசிறு அறைகளாக
18 அறைகளைக் கட்டியிருக்கிறார். தரைப்பகுதி, சிறு அறைகள் என அனைத்திலும் நெல் உமியைப் பரப்பியிருக்கிறார்.
கொட்டகையின் அடிப்பகுதியில் கோழிகள் வெளியே வருவதற்காக சிறுதுளை அமைத்து அதற்கும் ஒரு மூடி போன்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளார். காலை நேரத்தில் கீழ்புறத்துளையை மட்டும் திறந்து விட்டால்... ஒவ்வொரு கோழியாக வெளி வந்து வயல்வெளிகளில் மேய்ந்து இரை எடுத்துக் கொள்கின்றன. சூரியன் மறையத் தொடங்கும் நேரத்தில் தாங்களாகவே வந்து திரும்ப அடைந்து கொள்கின்றன (கீழ்ப்புறத் துளையை எப்போதும் அடைத்து வைக்கவேண்டும். இல்லாவிடில், பாம்பு போன்ற உயிரினங்கள் உள்ளே சென்றுவிடுவதற்கான வாய்ப்பு உண்டு).
கொட்டகையில் உள்ள அறைகளுக்குள்ளேயே முட்டையிட்டு, அடைகாத்து குஞ்சுகளைத் தாங்களாகவே வெளியே அழைத்து வந்து விடுகின்றன கோழிகள். அடை காக்கும் கோழிகள் மற்றும் வெளியே சரியாக தீவனம் எடுக்காத கோழிகளுக்காக கொட்டகைக்குள் தண்ணீர் மற்றும் தீவனத் தொட்டிகளை அமைத்துள்ளார். தேவைப்படும்போது இவற்றில் கம்பு, சோளம், நெல் போன்றவற்றை நிரப்பி வைக்கிறார்.
''ஒரு கொட்டகையில 20 கோழி வரை வளர்க்கலாம். இப்ப 13 பெட்டை, ஒரு சேவல் என்கிட்ட இருக்கு. குஞ்சுகளோட எண்ணிக்கை பெருகுறப்ப தனியா கொட்டகை போட்டுக்கலாம்னு இருக்கேன். இல்லனா... குஞ்சுகளா விக்கவும் செய்யலாம். ரொம்ப எளிமையான இந்த முறையில... பராமரிப்பு, தீவனம் இதுக்கெல்லாம் செலவு குறைவாத்தான் இருக்கு'' என்கிறார் ரஃபீக்
மாதம் ஒரு லட்சம்...வந்தது இப்படித்தான்!
பத்து ஏக்கர் நிலத்தில் ரஃபீக் சொல்லும் வருமானக் கணக்கு இதுதான்-
''எங்க பகுதியில வருஷத்துக்கு ரெண்டு போகம் நெல் சாகுபடி செய்யலாம். நான் ஆறு ஏக்கர்ல நெல் சாகுபடி செஞ்சேன். ஒரு போகத்துக்கு ஏக்கருக்கு 2,400 கிலோ நெல்லுங்கற கணக்குல ஆறு ஏக்கர்லயும்
14 ஆயிரத்து 400 கிலோ கிடைச்சுது. ரெண்டு போகத்துக்கும் 28 ஆயிரத்து 800 கிலோ. அதை அரிசியா அரைச்சப்போ... 19 ஆயிரத்து
200 கிலோ கிடைச்சுது. இயற்கையில் விளைஞ்ச வெள்ளைப் பொன்னி அரிசினு 25 கிலோ பையில போட்டு, கிலோ 35 ரூபாய்னு நண்பர்கள், உறவினர்கள்னு விற்பனை செஞ்சேன். அது மூலமா 6 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் வருமானம்.
ஒரு வருஷத்துக்கு 80 தலைச்சேரி ஆட்டுக்குட்டிகளை வித்ததுல ஒன்றரை லட்ச ரூபாய்; 35 தென்னை மூலமாக 40 ஆயிரம் ரூபாய்; 500 வாழைத்தார்கள ஒண்ணு 200 ரூபாய்னு வித்ததுல 1 லட்ச ரூபாய்னு கிடைச்சுது.
அப்புறம், 20 பால் மாடுகள் மூலமாக தினமும் எழுபதுல இருந்து 130 லிட்டர் பால் கிடைச்சுச்சு. நேரடி விற்பனை மூலமாக ஒரு லிட்டர் 24 ரூபாய்னு வித்தேன். சராசரியா ஒரு நாளைக்கு 100 லிட்டர்னு கணக்குல தினசரி 2,400 ரூபாய் வருமானம் கிடைச்சது. அதன்படி வருஷத்துக்கு 8 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைச்சுது.
ஆகக்கூடி பத்து ஏக்கர்ல கிடைச்ச மொத்த வருமானம் 18 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய். ரெண்டு குடும்பங்களுக்கான சம்பளம் 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய், நடவு, அறுவடைக்கூலி, இடுபொருள் தயாரிப்புச் செலவு, போக்குவரத்து, அடர்தீவனம், அரிசிக்கான பைகள்னு எல்லாச்செலவும் சேர்த்து 4 லட்ச ரூபாய் வரைக்கும் ஆச்சு. மீதி 11 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் லாபமாகக் கிடைச்சுது. மாசத்துக்கு ஒரு லட்ச ரூபாய்னு வெச்சுக்கலாம்.''
தொடர்புக்கு
ரஃபீக், அலைபேசி: 94444-03662.