ஞாயிறு

சிறு தொழில் - சும்மா தூக்கி போடுற பொருளை பயன்படுத்தி சம்பாதிக்கலாம்..!

 

ஆரஞ்சு பழத்தோல் பொடி தயாரித்து விற்பனை செய்யும் தொழிலை பற்றி தான் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதனை தொடங்கி உங்களுக்கு தேவையான பணத்தை நீங்களே சம்பாதித்து கொள்ளுங்கள்.

இந்த ஆரஞ்சு பழத்தோல் பொடியை பல வகையான அழகு சாதன பொருட்களை தயாரிக்க ஒரு முக்கிய மூலப்பொருளாக பயன்படுத்தபடுகிறது. அதனால் நீங்கள் இந்த ஆரஞ்சு பழத்தோல் பொடி தயாரித்து விற்பனை செய்யும் தொழிலை தொடங்கினீர்கள் என்றால் நல்ல லாபம் கிடைக்கும்.

தேவையான மூலப்பொருட்கள்:

இந்த தொழிலுக்கு தேவையான முக்கியமான மூலப்பொருட்கள் என்று பார்த்தால் நல்ல நிலையில் உள்ள ஆரஞ்சு பழத்தோல், கண்ணாடி பாட்டில்கள் மற்றும் Packing Machine ஆகியவை தேவைப்படும்.

தேவையான முதலீடு:

ஆரஞ்சு பழத்தோலினை நீங்கள் ஜூஸ் கடைகளில் இருந்து வாங்கி கொள்ளலாம். அப்படி இல்லையென்றால் நீங்களே பழத்தினை வாங்கியும் அதனுடைய தோலினை மட்டும் பயன்படுத்தி கொள்ளலாம்.

கண்ணாடி பாட்டில்களின் விலை 10 ரூபாய் முதல் உள்ளது. அதே போல் Packing Machine-ன் விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடுகிறது. இதன் ஆரம்ப விலை 1,000 ரூபாய் ஆகும்.

தேவையான ஆவணம் மற்றும் இடவசதி:

நீங்கள் தயாரித்து வைத்துள்ள ஆரஞ்சு பழத்தோல் பொடியை Online மூலமாக விற்பனை செய்ய போகிறீர்கள் என்றால் அதற்கு GST Registration கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

இந்த தொழில் தொடங்குவதற்கு நல்ல தூய்மையான 10 X 10 இடம் இருந்தால் மட்டுமே போதும்.

தயாரிக்கும் முறை:

முதலில் நாம் வாங்கி வைத்துள்ள அல்லது எடுத்து வைத்துள்ள ஆரஞ்சு பழத்தோலினை நன்கு சுத்தம் செய்து விட்டு நன்கு வெயிலில் காய வைத்து எடுத்து கொள்ளுங்கள். பின்னர் அதனை ஒரு மிக்சி ஜாரில் போட்டு நன்கு பொடியாக அரைத்து கொள்ளுங்கள்.

பிறகு அதனை நன்கு சலித்து 1 கண்ணாடி பாட்டிலுக்கு 100 கிராம் விகிதத்தில் சேர்த்து Packing Machine-னை பயன்படுத்தி பேக்கிங் செய்து கொள்ளுங்கள்.

விற்பனை செய்யும் முறை:

நாம் தயாரித்து பேக்கிங் செய்து வைத்துள்ள ஆரஞ்சு பழத்தோல் பொடியினை மளிகை கடைகள், சூப்பர் மார்க்கெட் மற்றும் அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் அல்லது விற்பனை செய்யும் இடங்கள் போன்ற இடங்களுக்கெல்லாம் நீங்களே நேரடியாக சென்றும் விற்பனை செய்யலாம்.

வருமானம்:

தோராயமாக 100 கிராம் ஆரஞ்சு பழத்தோல் பொடியின் விலை 130 ரூபாய் முதல் 150 ரூபாய் என்று விற்பனை செய்யப்படுகிறது என்றால்1 கிலோ ஆரஞ்சு பழத்தோல் பொடியின் விலை 1,300 ரூபாய் முதல் 1,500 ரூபாய் என்று விற்பனை செய்யப்படுகிறது.

நீங்கள் தோராயமாக ஒரு நாளைக்கு 20 கிலோ ஆரஞ்சு பழத்தோல் பொடியினை விற்பனை செய்கிறீர்கள் என்றால் 26,000 ரூபாய் முதல் 30,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக